Thursday, July 26, 2018

கலைஞர் 50... ஆண்டு தலைவராக..

திமுகவின் தலைவராக கலைஞர் பொறுப்பேற்று இன்றோடு 49 ஆண்டுகள் முடிவடைகிறது. நாளை 50ஆவது ஆண்டு தொடக்கம். இந்திய அரசியலில் தலைவர் கலைஞருக்கு மட்டுமே தனித்துவமான சாதனைகள் உண்டு, அதில் ஒன்று ஐம்பதாண்டு தொடர்ந்து ஒரு இயக்கத்தின் தலைவராக இருப்பது.. அண்ணா மறைவிற்கு பிறகு ஆட்சியும் கட்சியும் கலைஞரை தேடி வந்தது .. யார் முதல்வர் என்ற வினா எழுந்த போது நாவலர் பெயரும் கலைஞர் பெயரும் மட்டுமே இருந்தது.. கட்சி சட்டமன்ற உறுப்பினர் தேர்வு செய்கிறவர் முதல்வராக வரவேண்டுமென முடிவு செய்யபட்டபோது .. கலைஞரை மதியழகன் முன்மொழிய சத்தியவாணிமுத்து வழிமொழிந்தார்.. போட்டி என வந்துவிட்டால் நான் பின்மாறிக்கொள்கிறேன் என்று நாவலர் சொல்ல கலைஞர் ஏகமனதாக தேர்வானார்.. அப்போது பேசிய கலைஞர் நாவலரும் தன் ஆட்சியில் பங்குபெற வேண்டுமென்றார் ஆனால் நாவலர் அமைச்சராக விருப்பமில்லை என்று சொல்லிவிட்டார் .. பிறகு அமைச்சரானது வேறு கதை.. .. பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு திமுகவின் தலைவர் யாரென்ற கேள்வி எழுந்தபோது, பெரியாரின் ஆதரவோடு தலைவரானவர் கலைஞர்! அதுவரை கட்சிக்கு பொதுசெயலாளர் பதவிதான் இருந்தது கலைஞர் தான் சட்டவிதிகளை மாற்றி தலைவர் பதவியை உருவாக்கி போட்டியிட்டார் அன்று முதல் இன்று வரை ஐம்பதாண்டுகள் ஒரு இயக்கத்தின் தலைவராக .. கடும் சோதனையான காலகட்டத்திலும் அரசியல் புயல்வீசிய நேரத்திலும் .. தொடர் தோல்விகளின் போதும் .. ஆட்சி அதிகாரத்தை ஏற்ற போதும்.. தொடர்ந்து தலைவராக இருந்துவருகிறார்.. இதுவரை யாரும் நிகழ்த்திராத சாதனை.. .. ஒரு ஜனநாயக இயக்கத்தை .. அதிகம் விமர்சனம் செய்யபடுகிற .. அடிதட்டுமுதல் தேர்தலை சந்திக்கிற.. கிளைகழக செயலர் முதல் தலைவர் பதவி வரை தேர்தலை சந்திக்க வேண்டுமென்ற விதிகளுக்குட்பட்டு இந்தியாவிலேயே ஒரு கட்சி உட்கட்சி ஜனநாயகத்தோடு செயல்படுகிறதென்றால் அது திமுக மட்டுதான் என அன்றைய தேர்தல் ஆணையர் டி.என்.ஷேசன் சொன்னார்.. தேர்தல் ஆணைய விதிகளின் படி திமுக மட்டுமே அரசியல் கட்சியாக இருக்கும் யோக்கியதை இருக்கிறதென்றார்.. அந்தளவு ஜனநாயகதன்மை உடைய கட்சி திமுக.. இதெல்லாம் கலைஞர் பெருமகன் ஜனநாயத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக சாத்தியமாயிற்று .. ஒருகட்சியின் தலைவனுக்கான இலக்கணம் எதுவென கேட்டால் கலைஞர் கைகாட்டலாம்.. பல்வேறு கருத்துடையவர்கள் கடும் விமர்சனங்களை பொதுக்குழுவில் பேசலாம் இது எந்த கட்சியிலும் காணகிடைக்காத நிகழ்விது வீரபாண்டி ஆறுமுகம் நெல்லிகுப்பம் கிருஷ்ணமூர்த்தி...மதுராந்தகம் ஆறுமுகம் கோ.சி.மணி ..நிறைய பேர் மிக கடுமையாக கட்சி நடவடிக்கை விமர்சனம் செய்திருக்கிறார்கள் ..சிலவற்றை கலைஞர் ஏற்று தீர்மானத்தில் திருத்தங்களை செய்திருக்கிறார்.. பல விடயங்களில் பொதுக்குழு உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து அவர்களை ஏற்றுக்கொள்ள செய்திருக்கிறார்.. இதெல்லாம் பொதுவுடை இயக்கத்தில் கூட கிடையாது.. கலைஞர் முழுமையான ஜனநாயகவாதி.. மிக சிறந்த தலைவர் .. ஒரு தலைவன் எப்படி கட்சிகாரர்களிடையே ஏற்படும் பிணக்கங்களை சரிசெய்து இருவரையும் சமமாக நோக்கி வழி நடத்தவேண்டுமென்பதில் கலைஞரின் திறமை வெளிப்படும்.. .. ஐம்பதாண்டுகள் ஒருவர் தலைவராக கட்டுகோப்போடு ஒரு இயக்கத்தை அதுவும் ஜனநாயகத்தில் என்பது வியப்பூட்டும் செய்தி.. எதிர்த்தவன் இடம் தெரியாமல் போனான்.. சதி செய்தவன் சகலமும் இழந்தான்.. விமர்சித்தவர்களே பாராட்டுகிறார்கள்.. இன்று வசை பாடுவோர்.. நாளை வாழ்த்தி வணங்கலாம்.. அதுதான் கலைஞர்.. .. பொன் விழா ஆண்டு.. பொன்னாய் மின்னும் பொதுத்தொண்டு.. பொன் எழுத்தால் பொறிக்கபடும் உனது வரலாறு.. தமிழே வாழிய..வாழிய.. நூற்றாண்டு.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment