Monday, July 2, 2018

மதம் மனிதனை அழுக்காகிறது

தனிவாழ்க்கையில் பரிசுத்தமானவராக இல்லாதபட்சத்தில் அவரின் கடந்த கால போதனைகள் கொள்கைகள் கோட்பாடுகள் குப்பை என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.. ஆம்.. தனிமனித ஒழுக்கம் அவன் சார்ந்த கொள்கையை பாதிக்கிறதோ இல்லையோ அவனை பின்தொடர்பவர்களை .. நிச்சயமாக பாதிக்கும் அதுவும் மதபோதகர்கள் எனில் சொல்லவே வேண்டாம்.. ராம்ரஹீம்,ஆசிராம்பாபு பி.ஜெய்லுலாபுதீன்.. கிருஸ்துவ பாதிரிகள்.. எல்லோருமே காம இச்சைக்கு பலியானதோடு அதை திரும்ப திரும்ப செய்து.. யாரும் கவனிக்காதவரை தவறில்லை தூயவன் வேசம் கட்டலாமென்ற அயோக்கியத்தனத்தை செய்தார்கள்.. இவர்கள் பொருள் ஈட்ட மதம் அவர்களுக்கு பயன்பட்டதே தவிர இந்த சமூகத்தில் நல் மாற்றத்திற்கு வழிவகுக்கவில்லை பிரிவினையை மதமோதலை.. தீண்டாமையை ஒருவித மூளைச்சலவை செய்ததே தவிர இந்த சமூக மேம்பாடிற்கோ ..அல்லது அவரை பின்தொடர்கிற ஆட்டுமந்தைகளை நல்வழிபடுத்தவோ இல்லை .. .. மதம் என்பது ஒருவகை போதை ..பிறக்கிறபோதே ஒவ்வொரு மனிதனின் மீதும் திணிக்கபடுகிற அல்லது இயல்பாக ஒட்டிக்கொள்கிற விடயம்.. இதில் யாரும் மீறமுடியாதவாறு செய்திருக்கிறது.. அவன் தானாக சிந்தித்து மறுப்போ அல்லது மாறவோ முடியுமே தவிர இயல்பாக ஒட்டிக்கொண்ட மதம் அவனை ஆட்டிவைக்கும்.. இதில் கொடுமை என்னவென்றால் அதில் உட்பிரிவுகள் ..எல்லை மதத்திலும் இந்த அடுக்குமுறை உண்டு.. அது சாதியாகவோ அல்லது வழிபாட்டுமுறையில் மாறுபட்ட பிரிவாகவோ இருக்கும்.. அது அப்படி இருந்துவிட்டால் இங்கே எந்த விளைவுகளும் ஏற்பட போவதில்லை.. மாறாக நான் சரி அல்லது எங்கள் பிரிவே உயர்ந்தது .. மற்றவர்கள் வழிகேட்டில் அல்லது எங்களை விட தாழ்ந்தவர்கள் என்கிற போதுதான் பிரச்சனை வருகிறது அதைதான் இந்த மண்ணாங்கட்டிகள் (மதபோதகர்கள்) பயன்படுத்தி கொள்கிறார்கள்.. தங்கள் சமூக மக்களை அறியாமையாக வைத்திருப்பது ஒருவகை .. மற்றொன்று ..பேசி பேசி வளைத்து திரித்து வலைப்பின்னி தலையாட்டி பொம்மையை போல எல்லாவற்றிக்கும் எதிர் கேள்வி கேட்காமல் .. சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலைக்கு சுய சிந்தனையற்றவர்களாக ஆக்குவது.. இதில் மிகவும் ஆபத்தானது இரண்டாவது வகை.. முதலில் கருத்துகளை சொல்லி பின் சலனபடும்போது பொருள் ஆசைகாட்டி .. அதை மீறுகிற போது கடவுள் பெயரில் பயமுறுத்தி ஒருவகை அடிமையைப்போல நிலைநிறுத்தி வைத்திருக்கிறார்கள்.. .. எந்தவொரு மனிதனும் தன் ஆசைகளை விருப்பங்களை தன் உணர்வுகளை கட்டுபடுத்தி வைத்திருக்கிறேன் என்று சொன்னால் அதாவது துறவறம்/ மிக யோக்கியன் என்றால் அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள். எந்தவொரு போதகனும் தான் சொல்வது மட்டும் சரியென்கிறானா அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள் .. சொல்லவந்ததை சுற்றிவளைத்து பேசுகிறானை அவனை நம்பாதீர்கள்.. ஏனெனில் மிகவும் ஆபத்தானவர்கள் இவர்கள்.. மதத்தை சாதியை துணைக்கழைத்தால் எதுவேண்டுமானாலும் செய்யலாமென்ற எண்ணம் ..எப்படியும் தன் மதமோ சாதியோ இனமோ கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இவர்கள் துள்ளுகிறார்கள்.. அதுதான் இவர்களை ஆடவைக்கிறது.. .. கடவுளும் மதமும் நன்மைக்கான ஏற்பாடு என்றால் கூட அது தேவையில்லை ஒழிக்கபட வேண்டியதென்றார் #பேராசான்_பெரியார்.. ஆம்.. மதங்கள் மனிதநேயத்தை போதிப்பதில்லை அது ஒரு போதையை தந்து வெறியோடு பிற மத சாதியினரை பகை கொள்ளவே செய்கிறது.. அது உழைக்காமல் உண்ணும் பிரசங்கிகளை .. வேதம் சொல்லும் போதகனாக்கி .. இயல்புகளை மீறிய பொய்யான கட்டமைப்பை செய்கிறது.. பித்தலாட்டம் பொய் புரட்டு மூளைச்சலவை .. காமலீலை அடுத்தவர் உரிமையில் தலையிடுதல்.. கொள்ளை கொலையென.. மக்களின் மனதில் ஒருவித அழுத்தத்தை தந்து அவனை அழுக்காக்கிறது .. உண்மையில் மனிதம் தொலைகிறது மனதை பாழ்படுத்துகிறது.. .. #மதம்_தவிர்த்து_மனிதம்_காப்போம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment