Wednesday, February 28, 2018

தளபதி

#தமிழினத்தின்_தளபதி.. .. அகவை அறுபத்தாறில் நீண்ட நெடிய அரசியல் பயணம் சட்டென்று ஒற்றை இரவில் நடந்துவிடவில்லை.. நட்டதும்பூத்ததில்லை.. நல்விதையாய் மண்ணில் விதைத்து நீரூற்றி காத்து.. செழித்து வளர்ந்து வானுயற எழுந்து நிற்கும் வைரம்பாய்ந்த தேக்குமரமாய்.. வழிநெடுக முள்களால் ஆனது.. ஆனாலும் ரோஜாவைபோல மக்கள் மனம்கவர்ந்த தலைவனாய்.. .. ஆரம்பம் தொட்டே விமர்சனங்களோடு அரசியல் பயணத்தை தொடர்ந்தாலும் எங்கும் எதிலும் சமரசரம் செய்துக்கொள்ளாத போராளியாய்.. கிடைக்கிற வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திக்கொள்ளும் பேராற்றலாய்.. எடுத்த காரியத்தை சிரத்தையோடு நடத்திமுடிக்கிறவராய் .. கடும் உழைப்பை, வெற்றி தோல்வி பற்றி கவலைக்கொள்ளாமல் மக்கள்பணியாற்றுகிற தொண்டனாய் வலம்வருகிறார் தளபதி.. .. தளபதி சாலச்சிறந்த பெயர் .. திராவிட இயக்கத்தின் தளபதியாய் கலைஞரின் கரமாய் சுழன்று வரும் சூரியனாய்.. தமிழகத்தின் இருள் போக்க வந்த கதிரவனாய்.. தமிழர்களின் தளபதியாய் தமிழகத்தின் ஒரே நம்பிக்கையாய் தன்னை உருவாக்கியிருக்கிறார்.. அரசியலில் மாற்றுகருத்தை கொண்டோர் கூட திரு.ஸ்டாலின் அரசியலை ஏற்கிறார்கள்.. மிக நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார்.. நேர்மையான, ஒளிவுமறைவற்ற அரசியலை தமிழகத்தில் கொண்டுவர பாடுபடுகிறார்.. மிகச்சிறந்த தலைவர்கள் வரிசையில் இடம்பெற கூடிய அனைத்து தகுதிகளையும் கொண்டிருக்கிறார்.... .. கட்சி அரசியலை தாண்டி இவரது அரசியல் நேர்மை தனித்துவம் வாய்ந்தது.. கமிழகம் கண்ட நீண்டகால பகை அரசியலை.. அதாவது சரியாக சொல்லவேண்டுமெனில் எம்ஜிஆர் தனது கட்சிகாரர்கள் பொதுவெளியில் கலைஞரை சந்தித்தாலே கட்டகட்டி கழட்டிவிடுகிற செயலை செய்தார் பிறகு அதிமுகவினர்கள் திமுககாரர்களை கண்டாலே காததூரம் ஓடுவார்கள்.. அந்த நிலையை மாற்றி .. கடுமையான வினையாற்றியவர்களிடம் கூட நயமாக நடந்துக்கொள்ளும் விதம் அரசியலைதான் கடுமையாக எதிர்க்கிறேனே தவிர தனி நபரை அல்ல என்ற உயர்கோட்பாடோடு செயல்படுகிற தளபதி அவர்கள் .. நீண்டநாட்களுக்கு பிறகு ஆரோக்கியமான அரசியல்களத்தை வடிமைக்கிறார்.. புதியபாதை இது.. .. தமிழகம் எதிர்ப்பார்க்கிற நல்லதொரு விடியலை தர இவரால்தான் முடியுமென மக்கள் நம்புகிறார்கள்.. அனைத்துதரப்பு மக்களும் ஏற்றுக்கொள்கிற ஒருவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறார்.. மிக நிதானமான அதேநேரம் தெளிவான தீர்க்கமான அரசியல் பயணத்தை மேற்கொள்கிறார்.. திடீரென ஒருவெற்றியை/பதவியை அவர் விரும்பவில்லை மாறாக மக்கள் அங்கீகரித்து வழங்குகிற சிம்மாசனத்திற்காக காத்திருக்கிறார்.. காலம் தரும் அந்த சிம்மாசனம் நீடித்து நிலைத்து நிற்கும் மக்கள் போற்றும் மாபெரும் தலைவராக வருவார் நல்லதொரு விடியலை தருவார்.. கிழக்கு வெளுக்கும் கீழ்வானம் சிவக்கும்.. கதிரவனின் ஒளி வீசும் தளபதி தரணி ஆள்வார்.. .. #தமிழின_தளபதி..ஆம். எம்இனத்தின் தளபதி.. .. #வாழ்த்துகள் .. Aalanci Spm

Tuesday, February 27, 2018

அடிமாடுகள்

அதிமுக அமைச்சர்கள் கீழ்ப்பாக்கம் செல்லும் அளவுக்கு முற்றிய நிலையை அடைந்துள்ளார்கள் - டிடிவி தினகரன்.. .. என்ன பேசுவதென்றே அமைச்சர்களுக்கு தெரியவில்லை.. எதை பேசவேண்டும் எதை பேசகூடாதென்ற சராசரி அறிவுகூட இல்லை.. ஜெயலலிதா கை காட்டியவரை மதிப்போம் மற்றவரை மிதிப்போம் என்கிறார் ஒரு அமைச்சர்.. கட்டம் சரியில்லை அதனால் ஸ்டாலின் முதல்வராக முடியாதென்கிறார் மற்றொருவர்.. ஜெயலலிதா சிலையை மாற்றி சொன்னால் அழுகிப்போகி விடுவீர்களென்றெல்லாம் பேசுகிறார்கள் .. தினகரன் ஆட்கள் அதிமுக வேட்டி கட்டியிருந்தால் அவிழ்த்துவிடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் .. அமைச்சர் மணிகண்டன்.. தினகரன் பைத்தியம் அது பத்தும் சொல்லும் ஜெயகுமார்.. தினகரன் ப்ராய்லர் கோழி ..வைகை செல்வன்.. அவர் பெட்டைக்கோழி தினகரன் அனைத்தையும் கேட்டுபாருங்கள்.. பைத்தியங்களிடம் மாட்டிக்கொண்டோமோ என எண்ண தோன்றும் .. முன்பெல்லாம் அறிவில் சிறந்த பல்வேறுத்துறையின் ஆளுமைகளை அமைச்சராக்கினார்கள் ..அமைச்சர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களின் செயல்பாடுகள் கட்சி செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு சிறந்ததாக இருக்கும் அவரவர் வகிக்கும் துறைப்பற்றிய அறிவை பெற்றிருப்பார்கள் .. திரு.எம்ஜிஆர் வரவிற்கு பிறகுதான் அமைச்சர்கள் தன் ரசிகர்மன்றத்திலே தேடினார்.. அப்போது கூட திருநாவுகரசர் போன்றவர்கள் இதுபோன்று பேதைகளாக இல்லை ஒரளவு கற்றுக்கொள்ள முயற்சித்தார்கள்.. எம்ஜிஆர் திடீரென்று தன் ரசிகர் மன்ற மாநாட்டை கூட்டி ஜேப்பியாரிடமிருந்து பதவியை புடுங்கி திருநாவுகரசை மன்ற தலைவராக நியமித்தபோது.. தன் தொண்டர்களை கத்தி வைத்துக்கொள்ள சொன்னார்.. வழக்கம்போல் சோ .. திருநாவுகரசை சந்தித்து மூன்று விதமான அளவுகளை கொண்ட கத்தியை காட்டி எதை வைத்துக்கொள்ள சொன்னார் முதல்வரென கேட்டார்.. திருநாவுகரசிற்கு தர்மசங்கடமாக போனது.. உடனே ரசிகர்களை வைத்துக்கொள்ள சொன்னாரென சொன்னார்..சோ நக்கலாக தொண்டர் வேறு ரசிகர் வேறில்லை .. எந்த கத்தி என்று கேட்டது சிரிப்பை உண்டாக்கியது.. .. ஆனால் ஜெயலலிதா வரவிற்கு பிறது தாயகட்டை உருட்டி எந்த எண் வருகிறதோ அவர் அமைச்சரென்றவுடன் அவர்களுக்கு எதற்கு நம்மை அமைச்சராக்குகிறார்களென தெரியாமல் அமைச்சராகிவிட்டார்கள்.. ஏன் நாங்களெல்லாம் பூஜ்யம் என்று வெளிப்படையாகவே மூத்த அமைச்சர் சொன்னதெல்லாம் உண்டு.. அமைச்சரென்ற சொல்லின் பொருள் தெரியாமலேயே அமைச்சராகி இருக்கிறார்கள்.. அமைச்சரவை கூட்டமெல்லாம் இப்போது கூட்டபடுவதே இல்லை .. முன்பெல்லாம் கலைஞர் அமைச்சரவை கூட்டி கருத்துகேட்பார் மூத்த அமைச்சர் பேராசிரியரோடு கலந்து முடிவெடுப்பார் அதெல்லாம் ஜெயலலிதாவிடம் கிடையாது .. அழைத்து கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பி விடுவார்கள் எதற்காக கூட்டமென்று .. செய்திகளில் தெரிந்துக் கொள்ளும் அவலமெல்லாம் நிகழ்ந்தது .. ஏன் .. நம் பிரதமர் மோடி கூட பண மதிப்பிழப்பை அறிவிக்கும் போது அது நிதியமைச்சருக்கே தெரியாதென்றும் அமைச்சரவை கூட்டி ஒரு இடத்தில் உட்கார வைத்துவிட்டு மோடி ஊடகங்கள் வாயிலாக மக்களிடம் பேசினார் தான் தோன்றித்தனம் சிறந்த ஜனநாயகமில்லை.. .. அமைச்சரென்பவன் ஆலோசனைகளை சொல்பவனாக.. ஆக்கபூர்வமாக செயல்படுபவனாக .. சமயோசித புத்தியுடையவனாக .. அறிவில் சிறந்தவனாக .. மக்களின் குறைகளை ஆய்ந்து களையும் ஆற்றலுடையோனாய் இருத்தல் வேண்டும்.. பூஜ்யங்களும்.. அடிமைகளும்.. அறிவிலிகளும் அமைச்சர்களாக்கி .. பேசாமடைந்தையாய் எதற்கும் தலையாட்டும் ஆட்டுமந்தையாய் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாய்.. எப்போது பதவி போகுமென்றறியாது எப்போதும் பதைபதைப்போடு ஒருவித நடுக்கத்தோடே இருந்து பழக்கப்பட்டவர்கள்.. பாவம்.. அடிமாடுகள் உழவிற்கு உதவாது.. .. Aalanci Spm

Monday, February 26, 2018

48 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி செய்யாததை பாஜக 48 மாதத்தில் செய்து முடித்துள்ளது. மோடி பெருமிதம்.. இந்தியா இந்த 48 மாதங்களில் பட்ட துயரை.. கடந்த 48 ஆண்டுகளில் கூட பெறவில்லை என்பது தானே நிஜம்.. மோடியை கொண்டுவருவதற்கு முன் குஜராத் போல இந்தியாவை ஆக்கி காட்டுவதாக சொன்னார்.. அப்போது யாருமே ஏன் குஜராத் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் முதலில் இல்லையென கேட்கவில்லை .. இந்தியாவை ரட்சிக்க வந்தவன் என ஊடகங்கள் கட்டமைத்த பொய் ..மெல்ல பல்லிளிக்க சரிந்தது மாய பிம்பம்.. திறமையானவரை போல காட்டியதெல்லாம் கையிருப்பில்லாததால் கேலிப்பொருளைப்போல ஆனது. .. எடுத்தேன் கவிழ்த்தேனென்று ஒரு இரவில் பணமதிப்பிழப்பு சொந்த நாட்டுமக்களை நடுத்தெருவில் நிறுத்தி அவர்கள் உழைத்து சேமித்ததை எடுக்க காலநிர்ணயமும் அளவீடும் செய்து இதோ ஒழிந்தது கருப்புபணம் என்று கூப்பாடு போட்டவர்கள் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.. யாருக்கு தெரியாமல் அறிவித்ததாக சொல்லி திரிந்தவர்கள் உண்மை முகம் வெளுச்சத்திற்கு வந்துவிட்டது .. மோடி அறிவிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு பஞ்சாப் நேஷனல் பாங்கில் ₹90 கோடியை செலுத்தியிருக்கிறார் நிரவ் மோடி.. எப்படி அவருக்கு முன்பே தெரிந்தது.. கருப்புபணத்தை ஒரு சில தொழில் அதிபர்கள் வெள்ளையாக மாற்றவே பயன்பட்டதே தவிர அதனால் மக்களுக்கு என்ன பயன் சிரழிவை தவிர.. .. தூய்மை இந்தியா என்ற பெயரில் அடித்த கொள்ளை எவ்வளவு.. எங்காவது குப்பை கொண்டுவந்து கொட்டி பிறகு சுத்தம் செய்ததாக காங் ஆட்சியில் கண்டதுண்டா.. காங்கிரஸ் முதல் கல்வி அமைச்சர் செய்த ஒரு சாதனையை .. காவி அரசு செய்ததுண்டா.. இந்த 48 மாதங்களில் மாட்டுக்கறிக்கா மனிதனை கொன்றது .. அவன் என்ன தின்ன வேண்டுமென வேறொருவர் தீர்மானிப்பது இதெல்லாம் காங் 48 ஆண்டில் நடக்கவில்லை.. ஊழலை சொல்லலாம் அது 48 மாதத்தை கணக்கில் கொள்ளும் போது விகிதாச்சாரம் மிக குறைவு... விடுதலை இந்தியாவின் முதல் ஊழல் .. கிருஷ்ணமாச்சாரி (டிடிகே)என்கிற பார்பனர்தான் பதவி விலக நேரிட்டது ஹரிதாஸ் முந்த்ரா வின் பங்குகளை LIC க்கு விற்றதில் முறைகேடு செய்து பதவி விலகினார். முதல் ஊழல் அதுதான்.. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் குற்றசாட்டிற்கு ஆளானாலே பதவி விலகுவதும் சிறையில் அடைப்பதுமென சட்டநெறிகளுக்குள் நடந்தது ஆனால் பாஜகவின் 48 மாத ஆட்சியில் ஒன்று வெளிநாட்டிற்கு ஓடி போகிறான் அல்லது அரசு மரியாதையோடு வலம் வருகிறேன் இது தான் இரண்டிற்குமான வேறுபாடு.. .. வாயை திறந்தால் பொய்யை தவிர வேறெதும் தெரியாததால் வார்த்தை ஜாலம் கொண்டு ஏற்றி இறக்கி பேசும் தந்திரத்தால் நெடும் காலம் வண்டி ஓடாது.. அன்று இதோ வந்துவிட்டாரென இந்தியாவின் நவீன புதல்வன் என்றவர்களே.. கல்லெறிய காத்திருக்கிறார்கள்.. அறிவுடையோரை வேண்டாமென வைத்ததின் பலன் .. $110 ஐ தொட்ட போதும் ₹60 தாண்டாமல் வைத்திருந்த எரிப்பொருளின் விலையை.. $48 என இறங்குமுகமாக இருக்கும் போது ₹75 ல் வைத்திருபிபதிலேயே யாருக்கான அரசு இது என்று மக்கள் அறிந்துக்கொண்டார்கள்.. பெரும் முதலாளிகளுக்காக சாமானியனின் சட்டைப்பையில் உள்ளதை அவனை கேட்காமலே எடுத்து கொடுக்கிற ஈனப்புத்திகாரென அறிவர்.. இதோ உயர்ந்து வந்த இந்திய பொருளாதாரத்தை சரிவில் கொண்டுபோய் நிறுத்தியும்.. தன் கட்சியில் உள்ளவனே காரி துப்பியும் இன்னமும் மசல் பிடித்து நிற்பதை காணும் போது .. கோமாளியாகவே தெரிகிறது.. கர்நாடக சித்தராமையா சொன்னதைப்போல மோடி நாட்டைவிட்டு ஓடி போனாலும் வியப்பில்லை .. ஆம் ஆட்சி அவலம் அப்படிதானிருக்கிறது இப்போது தான் மக்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள் .. இந்த அரசு பெரும் முதலாளிகளுக்கு அவர்களுக்கு சேவகம் செய்யும் பார்பனர்களுக்குமானது.. வேலைவாய்ப்பு பக்கோடா விற்பதில் இருக்கிறதென்ற பெரும் மேதாவித்தனம் ஒன்றே இந்த கேடுகெட்ட ஆட்சியை தெரிந்துக்கொள்ள போதுமானது. .. 48 ஆண்டுகளில் கொள்ளை போகாத மக்கள் பணம் 48 மாத ஆட்சியில் கொள்ளைப்போனது அதுவும் அரசின் அனுமதியோடு.. கடைசியில் உங்கள் ஆட்சியின் லட்சணம் .. கலைஞர் முப்பது வருடங்களுக்கு முன்பே செயல்படுத்திய திட்டங்களை இந்தியாவிற்கே கொண்டு வந்ததில் தெரிந்தது.. மொத்தத்தில் சுயம் சிந்திக்க தெரியாத அறிவிலிக்கூட்டம் அவ்வளவுதான் .. இனியும் பொய்களை நம்ப இந்தியர்கள் தயாரில்லை.. .. Aalanci Spm

Sunday, February 25, 2018

கமல் கௌதமி

தசாவதாரம் விஸ்வரூபம் படத்தில் ஆடை அலங்கார நிபுணராக பணியாற்றியதற்கான நிலவை தொகையை கமல் தரவில்லை.. .. கமலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை அரசியலை நான் ஆதரிக்கவில்லை கௌதமி.. இதற்கு உடனே எச் ராசா சர்மா well said sister என டுவிட் செய்திருக்கிறார்.. .. அவர்களின் சொந்த விவகாரங்களில் நாம் ஏன் தலையிட வேண்டுமென ராசா சர்மாவிற்கு தெரியவில்லை மாறாக அதை அரசியலாக்குகிறார்.. கமலின் அரசியல் பயணத்தை எங்கிருந்து வடிவமைக்கபட்டதென எல்லோருக்கும் தெரியும் கௌதமி பிரதமரை சந்தித்த போதே அதற்கான தொடக்கம் குறிக்கபட்டதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள் .. தொடக்கத்தில் கௌதமியோடிருந்த நெருக்கம் அவரது சொந்த விடயம் ஆனால் அவர்களின் ஒப்பந்த முறிவுக்கு கௌதமி சொன்ன காரணம் கவனத்திற்குரியது .. தன் மகளின் எதிர்காலம் கருதி விலகுகிறேன் என்றார்.. .. கமலிடமிருந்து பிரிந்து வந்தபோது அவர் மீது நிலவை தொகை தரவேண்டுமென குற்றசாட்டவில்லை மாறாக அவரின் ரசிகையாக தொடர்ந்திருப்பேன் என்றவர்.. மய்யத்தில் தனக்கு உயர்மட்ட வாய்ப்பு வழங்கபடாததால் கமல் மீது குற்றம் சுமத்துவதாக சொல்லபடுகிறது.. படத்திற்கான நிலவை தொகை தராது குறித்து கௌதமி வெளியில் சொன்னபிறகும் கமல் வாய் திறக்கவில்லை.. தனிமனித ஒழுக்கம் அரசியலில் மிக கவனமாக கவனிக்கபடும் .. அது கமல் எனும் நடிகரிடம் எப்போதுமிருந்ததில்லை.. வெளிப்படையாகவே அவரது லீலைகள் தொடர்ந்து விமர்சிக்கபட்டிருக்கிறது .. இன்று கூட கௌதமியின் வெளியேற்றம் குறித்து சில பதிவுகளில் அவரின் மகளின் பாதுகாப்பு குறித்த கவலையில் தான் பிரிந்தாரென கருத்துகள் வருகிறது.. இதுபோல முன்பும் ..திருமதி சந்தியா ஜெயராம் பற்றியும் வந்ததுண்டு அதன் பின் கடைசியில் மகளை இழந்துநின்றாரென்றும் .. தான் அடையமுடியாத கதாநாயகி அந்தஸ்த்தை மகள் அடைய விட்டுகொடுத்ததாகவும் செய்திகள் வந்தன.. இங்கே கமலின் தனிப்பட்ட செயல்களை விமர்சிப்பது நமது நோக்கமல்ல என்றாலும் தொடர்ந்து வரும் குற்றசாட்டுகளுக்கு பொதுவாழ்விற்கு வந்த பிறகு பேசபடுவது குறுத்து கமல் பதில் தரவேண்டும்.. .. சினிமா ரகசியங்கள் பலவற்றில் பல்வேறு வதந்திகளும் பொய்களும் கலந்து வரும் நிழல் உலகம் அது.. நிழலை நிஜமெனும் நம்பும் ரசிகனினை ஒருவித மாய மயக்கத்திலேயே வைத்திருக்க கையாளப்படும் உக்தி .. உண்மையில் பொய்யை கலந்து ரசிகனின் ரசனையை மட்டமாக வைத்திருந்தாலே .. அதில் கொஞ்சம் கவர்ச்சியையும்.. செக்ஸ் கலந்த கிளுகிளுப்போடு கூடிய வதந்திகளை பரவவிட்டாலே நட்சத்திரங்களின் வாழ்வு நீடிக்கும் .. அது தான் சினிமா..அதே உக்தியை அரசியலிலும் முன்னெடுக்கிறார்கள் .. கமலின் கடந்த கால லீலைகள் நமக்கு ஏதற்கு.. அவரின் அரசியல் பிரவேசம் எந்த புள்ளியில் தொடங்குகிறதோ அதிலிருந்தே நமது விமர்சனமும் எதிர்ப்பும் இருக்கும்.. கௌதமியின் பழைய பாக்கியை பற்றி நமக்கு தெரியவேண்டிய அவசியமில்லை .. கமல் தேவைப்பட்டால் பாஜகவோடு கூட்டணி என்கிறார்.. அவர்கள் தேவையே அதுதானே .. எதற்காக உருவாக்கபட்டாரோ அதற்காக தானே அவர் இயங்க முடியும்.. .. வெளிப்படையாக அறிவித்துவிட்டு பாஜகவின் ஆதரவில் நிற்கட்டும்.. அதுதான் நேர்மையும் கூட வேசத்தை திரையோடு வைத்துக்கொள்ளுங்கள் .. .. Aalanci Spm

Saturday, February 24, 2018

சிலை..

சிலை.. யாருக்கு வைக்கவேண்டும்.. தன் வாழ்நாளில் இந்த மண்ணில் நல்லதை விதைத்த சான்றோர்கள்... வாழும் காலமெல்லாம் மனிதநேயத்தை வளர்த்த ஞானிகள்.. மாபெரும் புரட்சிக்கு வித்திட்ட பெருந்தகைகள்.. பேரறிவாளர்கள்.. மக்களை நேசித்த மாமணிகள்.. மொழியை இனத்தை உயிரினும் மேலாய் சுவாசித்த அறிஞர்கள்.. தலைவர்கள் நாட்டுமக்களுக்காக உழைத்த உன்னதர்கள்.. இவர்களை வரும்காலம் நினைவுகூறவேண்டுமென்பதற்காக வாழும்போது நல்லதை செய்தவர்களை நானிலம் அறிய வேண்டுமென்பதற்காக சிலை Statue வைக்கவேண்டும்.. .. இங்கே ஜெயலலிதாவிற்கு சிலை வைத்திருக்கிறார்கள்... வாழும் காலத்தில் ஏதேனும் செய்திருக்கிறாரா என பார்க்கிறேன் பெருமை மிகு விடயங்களை காணோம்.. கோபமும் ஆத்திரமும் பேராசையும் அலட்சியமும்..தீண்டாமையும்.. தானென்ற அகந்தையும் கொண்டவர் .. செய்த தப்பை (தவறை அல்ல)நியாயபடுத்த தன் அதிகாரத்தை, தன் பிறப்பை பயன்படுத்தியவர் எவரையும் மதிக்காத ஆணவத்தின் உச்சமாய் இருந்தவர்.. ஆட்சியில் இருக்கும் போதே ஊழலுக்காக பதவி பறிக்கப்பட்டவர் .. நீதியை வளைத்தொடித்து காரியம் சாதித்தாலும் இறுதியில் குற்றவாளியென முத்திரை குத்தபட்டவர்.. அவருக்கு சிலை.. .. ஆம் அவசியம் வேண்டும் இதோ இந்த சிலை யாருடையது தெரியுமா.. மக்கள் தந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்து தானும் தன்னை சார்ந்தோரும் கொள்ளையடித்து.. கொள்ளையடித்ததை நியாயப்படுத்தி.. கடைசிவரை தவறை உணராமலேயே அகந்தையில் அழிந்தவரென வரும் சந்ததியினர் அறிந்துக்கொள்ளவேணும் வேண்டும்.. காந்தியை கொண்ட இந்து தீவிரவாதி ஆர்எஸ்எஸை சேர்ந்த கோட்சேவுக்கு சிலை வடிக்கும் நாட்டில்.. கொள்ளையடித்தவருக்கு வைத்தால் என்ன..? .. சிலை வடித்தவரை பாராட்ட வேண்டும்.. யாரை மாடலாக வைத்து வடித்தாரென தெரியவில்லை.. நிறைய முகங்கள் வந்து போகிறதே தவிர ஜெயலலிதா முகம் தெரியவில்லை.. கலைஞர் ஆட்சியில் தலைசிறந்த சிலை வடிப்பாளர் ராஜராஜ பெருதச்சனின் வழிவந்தவரென அறியபட்ட சிற்பி கணபதி ஸ்தபதி அவர்களை கொண்டு சிலை வடிப்பார்.. கலைஞர் ஆட்சியில் நிறுவபட்ட எந்த சிலையும் இதுபோன்று பல்லிளித்ததில்லை.. ஏன் நடிகர் திலகம் (விழுப்புரம் சின்னசாமி கணேசன்) சிவாஜிக்கு சிலை வைத்தாரே எத்தனை அழகாய் இருந்தது.. சரியான நபரை தேர்வு செய்து பணிகளை ஒப்படைக்க வேண்டும் ஏனோதானோ என்று செய்தால் இப்படிதான் வரும் எல்லாவற்றிலும் கமிஷன் எதிர்பார்த்து குறையோடு செய்து முடிக்கும் பழக்கமுள்ளவர்கள் இதிலும் கமிஷன் பெற்றிருப்பார்களோ .. யாரறிவார்.. .. பாவம் இவர்கள் ஜெயலலிதா முகத்தை அறியாதவர்கள் தலைகுனிந்தே காலில் கிடந்தே பழக்கபட்டதால் ஜெயாவின் முகம் சரியாக அவர்கள் நினைவில் இல்லை.. அதனால் தான் யாரையோ நினைத்து ஒரு சிலையை ஜெயலலிதா என காட்டிருக்கிறார்கள் அடிமைகள்..சிலை ஜெயலலிதா போலில்லை என்றால் கோபபடுகிறார் ஜெயகுமார்.. பாவம் இரட்டை இலையை பறக்கும் குதிரையென்றவர்களுக்கு .. இது ஜெயலலிதா சிலைதான்.. இந்த அறிவிலிகளின் கூட்டம் இன்னும் எத்தனை கூத்தை நடத்தும்.. .. வேண்டாவெறுப்பாய் செய்த சிலை .. .. Aalanci Spm

Friday, February 23, 2018

நான்

நான் நானாக வேண்டும்.. இப்போது காணும் நான் நானில்லை.. .. நான் எனும் அகந்தை எப்போது வந்தது நான் நானானதால்.. எப்போது சிரித்திடும் இயல்பில்லை இப்போது.. வந்தவர் யாரென்று பார்த்து பின் பேசும் வழக்கம் எனதில்லை வல்லனுக்காய் வழங்கி நிற்கும் செயல் எனதில்லை வந்து விழும் சொல்லில் .. பொய் சேர்ந்தததெப்போது அறிவில்லை அமுதமொழி தனை .. எனக்காய் கொஞ்சம் வளைத்தொடித்து ஏனென புரியவில்லை.. .. சிறு புள்ளியாய் இருந்தபோது என்னோடிருந்த நேர்மை.. பயிலும் போதும்.. நன்கு பயின்றவரோடு பயணித்தபோதும்.. நல்லவர் சபையை நாடி திரிந்தபோதும்.. நாடோடியாய்.. நல் மனிதரை சந்தித்து திரிந்த போதும் .. பசியறிந்த சாப்பிட்டாயா என முகம் தெரியா கிழவி கேட்டபோதும்.. பசி மறந்து தலையாட்டி கடந்தபோதும்.. கையில் காசின்றி.. நடந்தே சான்றோர் கூட்டத்தை காண.. அலைந்த போதும்.. ஊர்சுற்றி திரிந்து.. அந்திநேரத்தில்.. சில வயல்வெளி கூத்தை ரசித்து நின்றபோதும்.. சூரியன் மறையும் ..பின் எழும் நேரம் வரை வயலில் காவல் காத்து நெல் மூட்டை அருகே விழுந்து கிடந்தபோதும்.. பெரியப்பனனின் பேச்சை மீறா பொன் வசந்த காலம் அது .. .. பொய் சொல்லி பழக்கமில்லை.. வாசலில் நிற்கும் வறியவரை விரட்டியதில்லை இரக்கம் கொண்ட கண்கள் .. ஈகையோடு கூடிய எளிய வாழ்வு.. அப்பனின் அறிவு.. நடை நேர்த்தி.. அண்ணனின் நிமிர் ..திமிர்.. அன்பை மட்டுமே தந்த அம்மா.. யாரையும் முகம் சுழிக்க வைக்க்காதேவென்ற பெரியப்பன்.. சாவின் அருகில் நின்றாலும்.. தர்மத்தோடு பேசு.. எதிரியே ஆனாலும் எள்ளுவதை குறை.. நீ.. போராடும் எதிரி உனை விட தாழ்ந்தவனெனில் மோதாதே.. என்ற அப்பனின் அறிவுரை எங்கு போனது எல்லாம்.. .. இப்போது பேச தொடங்கும் முன் முகம் பார்க்கிறேன்.. அவன் தோற்றத்திற்கு தகுந்தாற்ப்போல் வந்து விழும் வார்த்தைகள்.. சத்தியமாய் எனதில்லை என்னுள் மிருகம் சட்டென்று கக்கிவிட்ட விசத்துளிகள் அவை.. எள்ளிநகையாடும் செயல்.. பலகாலம் என்னுள் அடங்கி கிடந்த மனபேய் செயல் அது.. முதுகுக்கு பின் சிரிப்போரை விடுத்து நேர்நின்று கதைப்போரின் மீது வாள் வீச சொன்னது என் சிற்றறிவு.. .. மாறுதல் வேண்டும் எப்போதும் நானாய்.. தப்பாத எண்ணமாய்.. தவறியும்..தீ சொல் பேசாத தீங்கிழைக்காத கடும் சொல் தவிர்த்து.. கவின் மிகு சொல்லெடுத்து உண்மையின் அருகாமையில் நின்று கதைக்கவேண்டும்.. வல்லவனை விடுத்து நல்லவனுக்காய் சிலகாலமேனும் உழைத்திட வேண்டும்.. .. இனியேனும் நல்லவனாய் வேண்டும்.. .. Aalanci Spm

Thursday, February 22, 2018

நீதியா.. அநீதியா

எவ்வளவு காலம் காத்திருப்பீர்கள்.. தாமதிக்கபடும் நீதி செத்த நீதியை போன்றது.. .. இந்த நீதிமன்றங்கள் காலதாமதமாக அளிக்கப்படும் தீர்ப்பால் இந்த நாடும் சமூகம் சீரழிகிறது அநீதி அளிக்கபட்டிருக்கிறது.. ஜெயலலிதா வழக்கில் 18 வருடம் காலந்தாழ்த்தியதை நடைமுறை சிக்கல் என்றாலும் தீர்ப்பிற்கு பிறகான நடைமுறைகளில் காட்டிய அவசரம்.. அதை இறுதி தீர்ப்பில் காட்டாத நேர்மையை நாம் வியக்கமால் இருக்கமுடியவில்லை..? இறுதி தீர்ப்பை வழங்க நீண்டநாட்கள் எடுத்துக்கொண்டதால் கிரிமினல் நாடாண்ட சூழலை ..கொள்ளையடித்த திருடியின் கையில் அரசை தந்ததில் மிகப்பெரிய பங்கு நீதிமன்றத்திற்கு உண்டு.. உயர்நீதிமன்றத்தில் குமாரசாமியை கொண்டு மூன்றே மீதத்தில் தீர்ப்பை தர முடிந்ததே.. ஏன் இறுதி தீர்ப்பை மட்டும் காலம் தாழ்ந்தினீர்களென கேட்க முடியாது.. எந்தவொரு மனிதரும் தனக்குண்டான நீதியை பெறுவதில் சமஉரிமையை தரவேண்டும்.. சரிசமமென நம்பவேண்டும் ஆனால் சிலருக்காக வளைந்துநெளிந்து சுருண்டு உறங்ககூடாது .. அது நீதிகளின் மீதான மக்களின் நம்பிக்கையில் தளர்வை தந்துவிடும்..‍ நம்பிக்கையற்றுபோகும். உண்மையில் நீதிமன்றங்கள் குறிப்பிட்ட காலகெடுவிற்குள் விசாரித்து தீர்ப்பை வழங்குவதே நீதியாகும்.. .. சட்டமன்றத்தில் கொறடா உத்தரவை மீறியவர்களின் வழக்கும்.. முதல்வருக்கெதிராக போர்க்கொடி உயர்த்தி தனித்து செயல்படுவோரின் வழக்கும் முடிந்து தீர்ப்பிற்காக காத்திருக்கிறார்கள்.. நிறைய உச்சநீதிமன்ற உயர்நீதி தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன இருப்பினும் காலம்தாழ்த்துவது ஒருவகை அநீதி... உச்சபட்ச அதிகாரமென எண்ணுவது கூட நியாமில்லை.. கொறடா உத்தரவை மீறியவர்களை பதவி நீக்கம் செய்யாத சபாநாயகர்.. கட்சியில் முதல்வரை மாற்றவேண்டுமென சொல்கிறவரை பதவி நீக்கம் செய்தது செல்லாது ஏற்கனவே எடியூரப்பா வழக்கில் கொறடா உத்தரவை மீறி முதல்வருக்கெதிராக வாக்களித்தவர்களை உச்சநீதிமன்றம் கட்சிக்கெதிராக செயலிபடவில்லை இந்த முதல்வருக்கெதிராக அதாவது வேறொருவர் அரசமைத்தால் எங்கள் ஆதரவை தருகிறேன் என்று சொன்னதை ஏற்று சபாநாயகரின் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்தது.. அதே நடைமுறையை தான் இங்கேயும் பின்பற்றியிருக்கிறார்கள்... திரு.பன்னீர் அணியினர் மட்டும் தான் எதிர் அணியாகவே செயல்பட்டவர்கள் .. தினகரன் அணியை சேர்ந்தவர்கள் எதிர்த்து வாக்களிக்கவுமில்லை மாறாக பழநிசாமிக்கு எதிராக நிற்கிறார்கள் .. இந்த வழக்கில் எந்த சட்டசிக்கலும் இருப்பதாக தெரியவில்லையென சட்டவல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.. ஆனால் தீர்ப்பை தர காலதாழ்த்துவது .. தொடர்ந்து இந்த பெருபான்மை இல்லாத அரசை செயல்பட அனுமதிப்பது சட்டவிரோதம் மட்டுமல்ல ஜனநாயக கேலிகூத்தும் கூட.. .. யாருக்காகவோ வளைந்தோ காத்திருந்தோ தீர்ப்பை வழங்குவதென்பதும் வலுத்தவனுக்கு வளைந்து நிற்பதும் சரியான நேரத்தில் வழங்கப்படாததும்.. நீதி அல்ல.. .. Aalanci Spm

உயர்மட்ட..

உயர்மட்ட குழு.. நிறைய பேருக்கு அதன் பொருள் தெரியுமா என்று கூட தெரியவில்லை அது எதற்காக அமைக்கபட்டது என்றும் தெளிவில்லை.. அரசியல் புரிதலே இல்லாதவர்களை உயர்மட்டத்தில் வைத்திருப்பது எந்த பலனையையும் அளிக்காது.. அது சரி அது என்ன உயர்மட்டம்..? .. ஒரு கட்சி ஜனநாயக ரீதியாக செயல்படும் போது இப்போது இருக்கிற கட்சி (எங்கே ஜனநாயகத்தோடு செயல்படுகிறது என கேட்பது புரிகிறது) எல்லா காலகட்டங்களிலும் அடிமட்ட தொண்டர்களின் பங்களிப்பை பெற்று முடிவுகள் மேற்கொள்ள முடியாதென்பதால் கிளைக்கழகம் செயலர் பதவியையும் அதன் கருத்துருவை உள்வாங்கி நடைபோட ஒன்றியத்தையும்.. மாவட்ட நிர்வாகத்தை ஒருங்கிணைக்க ..மாவட்ட செயலர் பொறுப்பும் வழங்கபடுகிறது .. தலைமை கழகத்தின் நேரடி நியமனமாக/ மாவட்ட வட்டங்களின் பரிந்துரையில் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை உருவாக்கி ..அடிமட்டவரையிலான தொடர்ப்பை அதன் கருத்தை கேட்டு செயல்படுவதே ஜனநாயக மரபென்பதால் கிளைக்கழகம் தொடங்கி தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கபட்டு செயல்படுகிறார்கள்.. பிறகெதற்கு உயர்மட்டக்குழு என்ற கேள்வி எழும் ..சில நேரங்களில் அவசரமாக செயல்பட வேண்டி.. கருத்தை கேட்டுபெற கலந்தாலோசிக்க ஒரு உயர் குழுவை அமைப்பதும் அதன் ஆலோசனையும் பெறுவதற்காக நீண்ட நெடிய கட்சிப்பணிகளை செய்தவர்கள் ஆழ்ந்த அரசியல் அறிவுடையோரை வேண்டபட்டவர்களை..நியமிப்பார்கள்.. ஏன் வேண்டபட்டவரென கேள்வி எழும்.. சில நேரம் தலைமையின் கருத்தை கடுமையாக எதிர்த்து பேசும் சூழல் உருவாகும் போது அதன் சமன்நிலையை கொண்டுவர சிலரை கருவியாக பயன்படுத்தபடுவார்கள்.. உதாரணமாக திமுகவில் அதிக அதிகாரமிக்க பொதுக்குழுவில் கட்சியின் நடவடிக்கையை ..கடுமையாக எதிர்த்து விமர்சித்து பேசிக்கொண்டே இருப்பார்கள் .. அதன் போக்கை மாற்றவேண்டுமென்கிறபோது அது அவசியமென்கிற நிலையில் .. கடைசியில் அமர்ந்திருக்கும் கோ.சி.மணியை கண்களாலேயே தேடுவார் தலைவர் கலைஞர்..அதை அறிந்து மணி அவர்கள் சரியான அதை நேராக்கி விவாதத்தை முடித்துவைப்பார்.. சிலரை சிறப்பு விருந்தினராக அழைத்து கருத்து கேட்பதும் உண்டு சிலர் பார்வையாளர்களாக அதன் பயிற்சிபெற்று வருங்காலங்களில் செயல்படவேண்டி அழைப்பதுண்டு.. ஆனாலும் இந்த உயர்மட்ட முடிவை தற்காலிகமாக தான் ஏற்பார்களே தவிர அதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமெனில் செயற்குழுவும் ..அதை பொதுக்குழுவும் அங்கீகரிக்கவேண்டும் .. அதாவது அவசர முடிவெடுப்பதற்காகவும் தலைமைக்கு அதிகாரத்தை தருவதற்காகவுமே தவிர வேறில்லை.. .. இப்போதெல்லாம் உயர்மட்ட குழுவென்பது எதற்கென்றே அறிந்திடாத அதிகாரமிக்க பதவியென எண்ணி நியமனம் செய்கிறார்கள் அரசியலைப்பற்றி சராசரி புரிதலோ அடிப்படை அறிவோ கூட இல்லாதவர்கள் தொண்டு..? செய்ய நியமனம் செய்கிறார்கள்.. நியமிப்பவருக்கும் ஏன் எதற்கென தெரியாது நியமனமானவர்களுக்கும் அது புரியாது.. முதலில் வருவோருக்கு முன்னுரிமைப் போல.. ஆரம்பத்தில் வருகிறவர்களுக்கு பதவி கிடைக்கும். அது சரி.. தலைமையே நேரடியாக முதல்வர் பதவிதான் .. மக்களின் பிரச்சனைகளுக்கு போராடுவதல்லாம் எங்கள் வேலையில்லை மக்களுக்கு தொண்டாற்ற மக்களைப்பற்றி கவலை கொள்ளவெல்லாம் நேரமில்லை.. எங்களுக்கு பதவி தாருங்கள் நாங்கள் பணி செய்கிறோமென்கிறார்கள்.. இப்போது தொடங்கபடுகிற கட்சிகள் ஜனநாயகதன்மையை கொண்டதாக இல்லை அதனால் அவர்களுக்கு வேண்டியவர்களை .. அதிக நம்பிக்கையுள்ளவர்களை கொண்டுவருகிறார்கள் .. அவ்வளவுதான் அவர்களுக்கு அரசியலைப்பற்றிய அறிவோ தெளிவோ தேவையில்லை.. இதுவரை கருப்புபணத்தோடு புழங்கியவர்கள் நேர்மையான ஜனநாயக முறையெல்லாம் அவர்களுக்கு வராது/தெரியாது.. .. உதவியாளர் பணிக்கே நேர்முக தேர்வென்ற பெயரில் அனுபவமிருக்கிறதா என கேட்கும் போது நேரடியாக முதல்வர் பதவிக்கு வர ஆசைபடுவோர் .. குறைந்தபட்ச தகுதியாவது இருக்கிறதா என்றால்.. சினிமா நல்லவனாக நடித்தால் நல்லவனென நம்புவார்களென்ற கடைந்தெடுத்த மடத்தனத்தை மூலத்தனமாக்கி வெற்றிபெற நினைக்கிறார்கள்.. ட்விட்டரிலும்.. சமூக வலைத்தளத்திலும் வசனமேறிய கவிதை சொன்னால் அரசியல் அறிநிதவரென நினைப்பு சிரிப்பை தான் தெரிகிறது.. இன்னும் சிலர் வரவேண்டியிருக்கிறது மார்கெட் போன பழைய அரிதாரங்கள்.. .. #வேசம்_கலையும்_அரிதாரபுருஷர்கள்.. .. படம்: ஊழல் செய்து தண்டிக்கப்பட்ட கிரிமினல் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக .. உண்ணீவிரதமிருந்தவர் ..இவர்கள் ஊழலுக்கு எதிரானவர்களாம் .. Aalanci Spm

Wednesday, February 21, 2018

மநு நீதி மய்யம்

அறுபது வருடங்களாக நாக்பூர் செய்யாத செலவில்லை..செய்யாத வினையில்லை பாவம் காசு தான் கரைகிறதே தவிர.. திமுகவை கரைகடத்த முடியவில்லை.. எத்தனை விதமாய் .. யார்யாரையெல்லாம் களமிறக்கி கடைசியில் கண்டது 2000 கூட திகயவில்லை.. .. ஆரம்பத்தில் ஆடம்பரமாக வருவார்கள் இங்கே அடிபலமாக விழும் கடைசியில் கரைசேரமுடியாமல் போனவர்களும் கடைசி வரை முயன்று தோற்றவர்களுமே இங்கே காண்கிறோம்.. வீட்டை அடமானம் வைத்து படமெடுத்தேனென்றவர்களுக்கு நாக்பூர் தந்த பெருந்தொகை இன்று பல்லிளித்தது.. எதிர்பார்த்த எதிர்பார்ப்பில்லாமல் சின்னதாய் உள்ளுக்குள் சிரிக்கிறது.. ஆரம்பமே பொய்யில் ஆரம்பித்து நொடியில் பிண ஊர்வல போட்டோக்களை பதவேற்றம் செய்து மக்கள் நகைச்சுவைக்கிறார்கள் எந்த கட்சியும் அலட்டிக்கொள்ளவில்லை காரணம் விவரகேட்டில் முடியும் அதிபுத்திசாலித்தனமென்று அரசியல் அறிந்தவர்களால் புரிந்துக்கொள்ளமுடியும்..ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஏஜி மவுரியா .. இவர் காவல்துறையில் இவருக்கு கட்டிங் கிங் என்றே பெயர்.. இப்போது தூய்மை அரசியலில் இணைந்து செயல்பட போகிறாராம்.. .. யாரால் இயக்கபடுகிறாரென்பதும் யார் இவர்களென்பதும் மிக தெளிவாக தெரிகிறது மூச்சுபிடித்து முட்டுகொடுப்பதிலிருந்தே மூட்டு செத்தவர்கள் இவர்களென புரியும்.. ஜெயலலிதாவிற்கு பிறகு ஒரு பார்பன தலைமை வேண்டுமென்பதற்காக களமிறக்கபட்டிருக்கிறார் கமல் அதிமுக அரசை எதிர்த்து களமிறங்குவதாக சொல்லும் போது.. ஆட்சிக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசையோ பாஜகவையோ விமர்சனம் செய்வதில்லை இதிலிருந்தே இவரின் அரசியல் பயண ஒழுங்கு எங்கு தீட்டப்பட்டதென தெரியும் .. மக்கள் நீதி மய்யம் சனாதன கொள்கையை சமூகநீதியின் பெயரில் கொண்டாட மையம் கொண்டு இருக்கிறது.. கமல் கட்சியின் சின்னத்திலுள்ள இணைந்த கையில் பதிந்துள்ள நட்சத்திரம் ஆறு முனை கொண்ட நட்சத்திரம் யூதர்களின் சின்னம். இது இலுமோட்டிவ்கள் அடையாளம்.. சரியாக தன்னை அடையாளபடுத்தியிருக்கிறார்.. கட்சியின் சின்னமே அவரை காட்டிகொடுத்திருக்கிறது.. யூத வழிதோன்றல்களான ஆரியர்களுக்கான மறைமுக மய்யம் ..எங்கிருந்து வருகிறாரென அவரை தெளிவுபடுத்தியது வரை நன்றி.. திராவிடத்திற்கெதிரான மறைமுகமாக நாக்பூர் வரைந்த கோடுகள் மய்யம் கொண்டிருக்கிறது.. எச்சரிக்கை மநு நீதி மய்யம் .. கொஞ்சம் மாற்றி மக்கள் நீதி மய்யமென்கிறார்.. மய்யம் கொண்டதை செயலிழக்க செய்யும் ஆற்றல் நமக்குண்டு என்பதை நாம் உணர்த்தவேண்டும்.. .. இது நாட்டை நாசமாக்க மய்யம் கொண்டது அரிதாரம் புதிய அவதாரமெடுத்து மய்யம் கொண்டிருக்கிறது கவலைவேண்டாம் இது வலுவிழந்து போகுமென்பதற்கு வந்த கூட்டமே சாட்சி .. கட்சி மாவட்ட செயலர்கள் இதைவிட அதிகமான கூட்டத்தை கூட்டுவர் இங்கே இருப்பவர்கள் சினிமாவின் மோகத்தாலும்.. பழைய பாசத்தாலும் வந்திருக்கிறார்கள்.. opening show வே களைகட்டவில்லை.. காட்சி முடிந்ததும் கலையும் கூட்டம் பார்த்து ரசித்ததை சிலமணிநேரம் பேசி மகிழ்வர்.. அவ்வளவுதான்.. .. மையம் கொண்டது வலுவிழந்து போகும் .. Aalanci Spm

Tuesday, February 20, 2018

மரபணு மாற்று

அரசியல் ‌களத்தில் புதிய காகித பூக்கள் மலரலாம். ஆனால் ஒருபோதும் மணக்காது.... திருமிகு.மு.க.ஸ்டாலின் ‌.. ஆம் .. காதிகப்பூக்கள் மலர்வதைப்போல காட்சிதரும் ஆனால் மலராது மணக்காது கவர்ச்சி அரசியல் பலன் தராது .. விதையென்று நினைத்தால் அது மரபணு மாற்று என்று அறிக.. .. இங்கே யார் வேண்டுமானாலும் வரலாம் சிஸ்டம் கெட்டுகிடப்பதாய் சொன்னவர் உச்சநீதிமன்றம் சிஸ்டம் சரியில்லையே என கேள்வி எழுப்புகிறது வாங்கியதையே திருப்ப தராமல் இழுத்தடிப்பவர்கள் நேர்மை பற்றி பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது.. தமிழக அரசியலில் மட்டும் தான் காலவதிகளெல்லாம் நம்மை கரைசேர்ப்பதாக சொல்லி திரிகிறது தமிழக மக்கள் காப்பாற்ற பிறந்த உத்தமர் வேடம் .. பாவம் சரியாக பொருந்தவில்லை இருவருக்கும்.. அதிகம் பேசாதவரும் அதிகம் குழப்புகிறவரும் அரைகுறைகளென ஆரம்பமே சொல்கிறது.. .. சிலர் திடீரென கமலை முன்னிலைபடுத்த காரணம் அவர் தமிழராம் .. அதனால் மற்றவரை விட இவர் சரியாம் .. உங்களுக்கு தெரியுமா #சிவாஜி எனும் மாபெரும் தமிழ் நடிகரை தமிழகம் தூக்கியெறிந்தது.. சினிமா மோகம் அரசியலில் பல்லிளிக்க தொடங்கி வெகுநாட்களாகிவிட்டது .. முன்பு காதிகப்பூவை ..வாசம் வீசும் மலரென நம்பியதெல்லாம் மலையேறிவிட்டது.. இப்போது யார் எதற்காக வருகிறார்.. இதுவரை இவர் ஆற்றிய பணியென்ன கேள்வி எழுகிறது இதுவரை எதையும் செய்யாமல் நேரடியாக முதல்வர் பதவிக்காக மட்டுமே வருவேனென இரு பழம்பெரும் நடிகர்கள் ஒரே நேரத்தில் வருகிறார்கள் ஒருவரை ஒருவர் காலை வார.. தன் வாழ்நாள் முழுவதும் சினிமாவில் போட்டிபோட்டு முந்த முடியாமல் போனதை அரசியலில் பழிதீர்க்க வருகிறார்கள்.. இருவருக்குமே இது எழவே முடியாத நிலையில் கொண்டுபோய் நிறுத்தும் ..திரு.சிரஞ்சீவி இவர்களை விட ஆந்திராவில் புகழ்பெற்ற முன்னணி நடிகராக இருந்தார் கடைசியில் கரைந்து காணாமல் போனார் தமிழக நிலையோ பரிதாபம் சினிமாகாரர்களை நம்ப மறுத்தார்கள் கடைசியில் கூட்டணி சேர்ந்து விலாசமில்லாதவரைப் போல ஆனார்.. தேமுதிக திரு.விஜயகாந்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.. .. கூட்டம் கூட்டுவதாலோ அல்லது ஊடக ஆதரவாலோ நிலைத்து நிற்க முடியாது களப்பணி அது ஒரு கலை நீண்ட நெடிய அனுபவம் வேண்டும் மக்களோடு இரண்டற கலந்து செயலாற்றவேண்டும் தம்மோடு வருகிறவர்கள் நிலைநிறுத்த தேர்ந்த அனுபவம் வேண்டும் மக்களுக்கு பிடித்திருக்கவேண்டும் நேரடியாக ஆட்சியில்தான் அமர்வேன்.. மக்கள் பிரச்சனைகளுக்கெல்லாம் போராட நிறையபேர் இருக்கிறார்கள் என்பது பதவியின் மீதான மோகமே தவிர மக்கள் பணியென்பதெல்லாம் அதில் இல்லை.. .. பூக்கள் மட்டு உதிர்வதில்லை.. சிலவிதைகள் கூட பலன்தராது .. சில விதைகள் மண்ணை கெடுத்துவிடும்.. சில விதைகள் வீரியமில்லாமல் வீணாய் போகும் .. சில மரமாய் வளர்ந்தும் பலன்தராது பயனளிக்காது .. சில விசமாய் போகும் மரபுபணு மாற்று விதைகள் இந்த சமூகத்தை மலடாக்கும்.. இப்போது பேசிதிரியும் இவர்கள் மண்ணை மலடாக்க வந்த #மரபணுமாற்று_விதைகள்.. ஆம் இந்த மண்ணை கலப்படமாக்க .. வீரியமிழக்க செய்ய.. இந்த இனத்தின் மீதான மற்றொருமொரு நவீன தாக்குதலை நடத்த நம் இன பகைவர் தயாரித்து வழங்கும் .. இந்த மரபணுமாற்று விதைகளை புறக்கணிப்போம்.. .. #எச்சரிக்கை_ஒருஇனமே_சீரழிந்துபோகும் .. .. Aalanci Spm

Monday, February 19, 2018

கமலெனும்.. நடிகன்

கமல்.. மிக சிறந்த கலைஞன் எதையும் ஆய்ந்தறிந்து சினிமாவில் எந்த வடிவில் தந்தால் எத்தனை வடிவாய் தந்தால் மக்கள் ரசிப்பார்களென அறிந்தவர்.. ஆனால் பாருங்கள் அவரின் ரசிகர்வட்டம் மேதாவிதனமானவர்கள் என்றழைக்கபடுகிறவர்கள்.. உயர் ரசிப்புதன்மை உடையோரென நம்பவைக்கபட்டவர்கள்.. பாமரத்தனமான ரசிகர்கள் அவரிடம் இல்லை..அல்லது அனைத்துதரப்பினரையும் மகிழ்விக்கும் வித்தை அறிந்திரவில்லை அது அவரின் கடின உழைப்பில் மிக சிரத்தையோடு அதிக கற்றுணர்ந்து அதை சரியாக வெளிபடுத்திய படங்கள் மிகபெரிய தோல்வியை சந்தித்தன.. அதாவது அவரை நம்பி பணம் போட்டவர்கள் பரிதாபமானார்கள் .. அவர் எப்போதும் போல் அடுத்தபடத்தில் நடிக்க தொடஙிகிவிடுவார்.. அதிக பொருட்செலவில்லாத படங்களை தனது பேனரில் வெளியிட்டு பணம் ஈட்டுவார்.. கமலின் நடிப்பின் மீதோ கலை சினிமா மீதான ஈடுபாடு மீதோ சந்தேகம் வராது ஆனால் அவரின் படங்கள் பொருளாதார ரீதியில் பெரியளவு வசூலை செய்ததில்லை செய்திருந்தால் அவர்தான் சூப்பர்ஸ்டார்.. .. சிலர் எதையும் தெளிவாக கற்ற பிறகே களம் இறங்குவார்.. எந்தவொரு படமானாலும் மிக தெளிவான அறிவோடு தான் எடுப்பார் எல்லாம் சரி ஆனால் அவர் சினிமா ரசிகர்களின் ரசனை எதுவென்பதை அவர்களின் நாடிதுடிப்பை .. சினிமா விரும்பிகளின் எண்ணவோட்டத்தை அறிந்தவராக இருந்தால் தொடர்ந்து அவரது படங்கள் ஏன் தோல்வியை தழுவுகிறது ..சினிமா தெரிந்த அவருக்கு ரசிகர்களை எடைபோட முடியவில்லை .. அதேதான் அரசியலும் அவரது அறிவு .. அரசியலை கற்று பலரிடம் ஆலோசனை கேட்டு எதை எப்படி செய்வதென முடிவுக்குவரலாம் ஆனால் அரசியல் விமர்சகர்களோ ஆலோசனை கூறுபவர்களோ மக்களின் மனநிலையை அறிந்தவர்கள் இல்லை.. இவை சரியென்று சொன்னாலும் மக்கள் ஏற்கவேண்டும் ரசிகர்களை மட்டுமே நம்பி வந்தால் மிக மோசமான தோல்வியை தான் தழுவநேரிடும் ..எனக்கு கமலை மிகவும் பிடிக்குமென்பதற்காக அவருக்கு என் ஆதரவு கிடைக்குமென்பது இல்லை.. .. ஏழரை கோடி மக்களை நம்பிதான் அரசியலில் குதிக்கிறேன் என்கிறார்.. அதுசரி அந்த எழரை கோடிக்காக இதுவரை செய்ததென்ன.. எதாவது போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறீரா.. அல்லது சமகால அரசியலில் புரிதலோடு கூடிய நகர்வை செய்திருக்கிறீரா.. மக்களின் அன்றாட பிரச்சனைகளை பற்றி எதேனும் தெரியுமா.. ஊழலற்ற அரசு என்கிற தாங்கள் ஜெயலலிதா தண்டிக்கபட்டபோது உண்ணாவிரதமிருந்தீரே அது ஏன்.. இத்தனை காலம் தமிழக மக்கள் பட்ட இன்னல்களுக்கெல்லாம் வாய்மூடி இருந்ததேன்.. திடீரென ஒருநாளில் சினிமா வாய்ப்புகள் மங்க தொடங்கும் காலத்தில் இனி நம் சினிமாவை வாங்க ஆளில்லை என்றானபின் அரசியலை தேர்வு செய்வதற்கு பெயரென்ன இது மக்களை இளிச்சவாயர்கள் என்ற நினைப்பை தவிர வேறென்ன.. சினிமா மோகம் வெகுவாக மக்களிடத்தில் குறைந்துவிட்டது எழுபதுகளில் இருந்த ஈர்ப்பு இப்போதெல்லாம் இல்லை சினிமா எனும் மாயை விலகி அது ஒரு கனவு தொழில் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.. சினிமாவை தியேட்டரை விட்டுவெளியேறிய பிறகு மறக்கிற நிலை இப்போது பிடித்தால் பார்ப்போம் இல்லையெனில் விட்டுதள்ளு எனகிற சரியான சிந்தனையை/ தெளிவை பெற்றிருக்கிறார்கள்.. .. யாருக்காக வருகிறாரென்பது மெல்ல வெளிவருகிறது.. ராஜாஜிக்கு பிறகு வராது வந்த மாமணி என அய்யங்கராத்து மாமியை கொண்டுவந்தார்கள்.. அப்போது அதற்கு மகோரா மேனன் பயன்பட்டார்.. இப்போது அவர்களுக்கான இடம் காலியாக இருப்பதால் முயற்சிக்கிறார்கள்.. ஆனால் காலம் தாழ்ந்த முடிவு.. காலவதியான காலத்தில் இனி தேறாதென்கிற நிலைதான்.. மிக சாதூர்யமாக காய்நகர்த்தி வெளிகொணரலாமென்ற அவர்களது திட்டம் அம்பலமாகிப்போனது.. அதனால் தான் கடைசியில் திராவிடமில்லாமலா என கதைக்க தொடங்கியிருக்கிறார்.. இங்கே மானமிகு சத்யராஜின் குரலை வரவேற்கிறேன்.. நடிகனை நடிகனாக மட்டும் பாருங்கள்.. இல்லையெனில் இழப்பு எங்களுக்கில்லை உங்களுக்குதான் அதாவது மக்களுக்குதான் .. எம்.ஆர்.ராதாவை நினைபடுத்தினார்.. ஆம் அரிதாரம் கலைந்தால் கட்டிய வேசமும் போகும்.. அவ்வளவுதான். .. வாலறுந்த பட்டம் வானில் பறக்காது.. .. Aalanci Spm

Sunday, February 18, 2018

அரசியல் பழகு

சேர்த்துவைத்தாரென்பதற்காக மோடியின் பெயரை இழுக்கலாமா என்கிறார் பொன்னர் (சேர்த்துவச்சவனை தானே கேட்கமுடியும்..) புத்திசுவாதீனம் இல்லையென்கிறார் எச்.ராசா சர்மா.. மோடி தமிழை சமஸ்கிருதத்திற்கு முன்பே இருந்த மூத்த மொழியென்பதை ஏற்கமுடியாமல் சங்கர நாராயணனென்ற விஜயேந்திரரை அவமதித்துவிட்டதாக எஸ்.வி.சேகர் .. .. ஒன்று புரிகிறது இவ்வளவு அரைகுறைகளுக்கு நடுவிலும் நாம் அரசியல் செய்யவேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் எதிர்கருத்துக்களை கூட நயத்தோடும் நாகரீகமாவும் எடுத்துவைத்தார்கள் அறிவுகொண்ட விவாதங்கள் .. ஏற்க கூடிய அளவில் இருக்கும்.. கொள்கைகளை தாண்டி நம் முன் வார்த்தைகளால் நர்த்தனம் புரிவார்கள்.. கொஞ்சம் அசந்தால் அவர் சொல்வது சரியென கேட்கவேண்டியிருக்கும்.. எதிர்ப்பவரும் திறமையாளனாக இருந்தது ஒரு அறிவுடை சமூகமாக .. அறிவுசார் கூட்டமாக தமிழகம் இருந்தது .. எப்படி இப்படியானது. .. நண்பர் ஒருவர் கருத்திடுகையில் அறிவுடை சமூகமென்கிறீர் எப்படி அதனை ஆரியம் வீழ்த்தியிருக்குமென கேட்கிறார்.. வேறெங்கும் தேவையில்லை சமகால விஞ்ஞான வளர்ச்சி பெற்ற காலத்தில்.. அதிக அறிவுபூர்லமான கண்டுபிடிப்புகளை தந்த இனம் யூத இனம் ஆனால் அவர்கள் நாடிழந்து நாடோடிகளாய் திரிந்த காலமும் வரலாற்றில் உண்டு.. தமிழக அரசியலில் மிக மோசமான காலம் இது என்ன செய்கிறோமென தெரியாத அறிவிலி கூட்டத்திடம் சிக்கி மக்கள் அள்ளல்படுகிறார்கள்.. தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன பைத்தியங்கள் எண்ணிக்கை கூடி இருக்கிறது.. .. சமீபகால பாஜகவினர் போடுகிற கூச்சல் முட்டாள்தனங்களின் மொத்தவடிவமாக இருக்கிறது.. பாஜக வகையறாவில் எவருமே சரியாக பேசுவதில்லை அதைவிட அறிவுபூர்வமாக பதில் சொல்வதில்லை ஞானசூன்யங்கள்.. கத்தி கூச்சலிடுவதாலேயே அவர்கள் பேசுவது சரியென்று ஆகிவிடாது.. பா.ஜ.க கரு நாகராஜன் பார்த்தீர்களா, எங்களது கடுமையான நடவடிக்கைகளால் சமாளிக்க முடியாமல் நிரவ் மோடி இந்த நாட்டை இனி ஏமாற்ற முடியாது இருக்க தகுதியில்லை என்று நாட்டைவிட்டே ஓடிவிட்டான்.. என்கிறார் இது ஒரு சாம்பிள்தான் இவர்கள் யாருமே நேர்மையான முறையில் விவாதிக்க மாட்டார்கள் காரணம் இவர்களிடத்தில் சரக்கில்லை .. சட்டமன்றத்தில் கூட அதிமுகவினரின் விவாதம் அதிமுட்டாள்கள் நாங்களென பறைசாற்றுவதாக இருக்கிறது.. காரணம் கொள்கை ரீதியாக இணைந்தவர்களில்லை மாறாக கவர்ச்சி நம்மை காக்குமென நம்பி இணைந்தவர்கள் திமுகவை வீழ்த்த ஆரியர்களின் ஆதரவு நமக்கிருக்குமென நம்பி வந்தவர்கள்.. அவர்களிடம் திறமையை எதிர்பார்க்க முடியாது.. .. புத்திசுவாதீனம் இல்லாதவரென்று யார் சொல்கிறார்.. புத்தி தெளிவில்லாதவர் எதையாவது பேசி கலவரத்தை உண்டுபண்ணலாமா என காத்துகிடக்கிற கழிசடை .. தமிழை உயர்த்தி பேசியதை பொறுக்காத தமிழ்நாட்டில் தமிழில் நாடகங்கள் நடத்தி பிழைக்கும் பீ திங்கிற புத்தியுள்ளசேகர்.. இதுதான் இவர்களின் லட்சணம் .. கருத்திடை வேறபாடுயிருந்தாலும் சுவைகுன்றா சொல்லெடுத்து பேசிய தமிழ்நாட்டில்.. ராஜாஜி பக்தவச்சலம் காமராஜர்.. போன்றவர்களோடு கொள்கை ரீதியான யுத்தமே நடத்திய போதும் அறிவுடையோரோடு மோதிய அனுபவமே கிட்டியது இப்போதெல்லாம் அறிவிலகளோடு அவர்களின் காமெடிகளையும் காதுகேட்க முடியாத சொல்லும் செயலும் காலகொடுமை.. ஜனநாயக மரபுகள் காற்றில் பறக்கின்றன மாற்றான் தோட்டத்தில் மல்லிகை இல்லை .. கள்ளிச் செடிகள்.. புதர் மண்டி கிடக்கிறது .. இன்னும் எத்தனைகாலம் இந்த அரைவேக்காடுகளோடு.. .. Aalanci Spm

Saturday, February 17, 2018

பன்னீரெனும் கோழை

நான் கோபப்பட்டால் நிறைய உண்மைகள் வெளிவரும். ஜெயலலிதா என்னை தினகரன் உடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்று கூறினார். என்னை தோற்கடிக்க பெரிய குளத்தில் பெரிய முயற்சி செய்தார்கள். சசிகலா கொடுத்த தொல்லைகள்.. வேறு யாராவது இருந்தால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டு இருக்கும். பிரதமரை நான் சந்தித்த போது உங்களை பற்றி ஜெயலலிதா நல்ல முறையில் கூறியுள்ளார்கள். ஆகவே நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக அதிமுக வில் செய்யுங்கள் என்று என்னிடம் கூறினார்.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகு மோடியின் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் பொறுப்பை ஏற்றேன்.. .. மானம் மரியாதை சூடு சொரணையற்றவர் தானென அவரே சொல்லிக்கொள்கிறார்.. தனக்கென்று மானம் மரியாதை ஏதுமில்லை என்று வெளிப்படையாகவே சொல்கிறார்.. தினகரனை ஒட்டுமொத்த முக்குலத்தோரின் பிரதிநிதியாக வரவிடகூடாதென்பதற்காக கடும் முயற்சி எடுப்பது வெளிப்படையாகவே தெரிகிறது ஆனால் சொந்த தொகுதியில் கூட மரியாதை கிடைக்குமா என கேள்வி எழுகிறது.. .. சசிகலா குடும்பம் தான் முப்பதாண்டுகளாக அதிமுகவை இயக்கியது என்கிற உண்மையை இப்போதுதான் வெளியிடுகிறார் இது எல்லாருக்கும் தெரிந்ததுதான்.. ஆனால் சில நடுநிலைகள் .. ஜெயலலிதாவை மிக பிரமாண்டமாக உயர்த்தி பிடித்து இரும்பு பெண்மணி என்றெல்லாம் பேசி அவரை கண்டால் எல்லோரும் நடுங்குவார்களென ஒரு மாய பிம்பத்தை கட்டிவைத்திருந்தார்கள் ..பாவம் இவையெல்லாம் சசிகலா எனும் கம்பீரத்தின் பின்னால் ஒளிந்திருந்தவர் என்று போட்டுடைத்திருக்கிறார்.. சாதிபாசமோ.. உண்மையில் ஒருவகையில் பன்னீர் சொல்வது சரிதான்.. ஜெயலலிதாவை சந்திக்கவே விடாமல் மிக சாமர்த்தியமாக கட்சிகாரர்களை தடைந்து எதை பேசவேண்டும் எப்படி பேசவேண்டுமென்று கூட (குனிந்து கும்பிட்டு விழுந்து ) சசிகலாதான் சொல்லி அதையே நடைமுறைபடுத்தியிருக்கிறார்.. கட்சியின் எந்த முடிவானாலும் சசியை தவிர யாரிடமும் ஆலோசித்ததாக யாருமே இதுவரை சொன்னதே இல்லை அதிலிருந்து மறைந்திருந்து இயக்கியவர் சசிகலாதான் என்பது தெளிவு.. வேட்பாளர் தேர்விலிருந்து செலவு எவ்வளவு செய்யவேண்டும் என்பது கூட சசிகலாவின் மேற்பார்வையில் தான் நடந்தது .. ஜெயலலிதா ஒரு டம்மி பீஸ் என்று சாட்சியம் சொல்கிறார் பன்னீர்.. .. அதிமுகவை பாஜகவில் அடகுவைத்தது பன்னீர்தானே தவிர சசிகலாவோ அவரது குடும்பமோ அல்ல .. தலைமை பதவிக்கு ஆசை வந்து பன்னீரை விலக சொல்லாமல் இருந்திருந்தால் .. சசிகலா காலில் விழுவதை அங்குள்ள யாரும் தவறாக எண்ணியிருக்க மாட்டார்கள் .. பதவியை பறித்தவுடன் சில குருபார்வையில் விழுந்து எப்படியும் மீட்டுவிடலாமென்றிருந்ததை கூவத்தூரில் அடைத்து .. பன்னீரை செயலிழக்க செய்ததும் .. வேறுவழியின்றி சிறைசெல்ல வேண்டியிருந்ததால் எடப்பாடியை முதல்வராக்கியதும் பன்னீர் மானத்தை விட்டு எடப்பாடியோடு கரம் சேர்ந்திருக்கிறாரே தவிர.. அதிமுகவினர் யாரும் அவரை விரும்பவில்லை என்பதும்.. பெரியகுளத்தில் அல்ல இனி எந்த குளத்தில் குளித்தாலும் கரை சேர முடியாது என்பதால் எனக்கு கோபம் வந்தால் நிறைய உண்மைகள் வெளிவருமென மிரட்டிபார்க்கிறார்.. இதுவரை எந்த உண்மையையும் வெளியில் சொன்னதே இல்லை இந்த சொரணைகெட்டவர்.. .. தர்மயுத்தம்..?செய்து உண்மையை சொல்வேனென்று சொல்லி பதவி கிடைத்தவுடன் பல்லிளித்தாயிற்று.. இப்போது தினகரன் புதிய நிபந்தனைகளை வித்ப்பதால் அதாவது சில அமைச்சர்களை அதாவது பன்னீர் உட்பட சிலரை வீட்டுக்கு அனுப்பினால் அரசு தப்பிக்கும் என சொல்வதால் பொங்க வருகிறார். இந்த முறை பொங்காது.. பன்னீர் பச்சைதண்ணீர்.. கோபம் ரோசமே அதெல்லாம் மானமுள்ள மறவனுக்குரியது சொரணையற்றவருக்கில்லை.. .. ஒருவகையில் உண்மையும் கூட.. ஜெயலலிதாவை இதைவிட கேவலபடுத்த முடியாது .. சசிகலா தான் எல்லாம் நாங்களெல்லாம் அவரின் அடிமைகள்.. வெளியே ஜெயலலிதாவை கும்பிட்டு நடித்தோமே தவிர உண்மையான பயம் சசிகலாவிடம் தானிருந்ததென ஒட்டுமொத்த அடிமைகளுக்கும் சேர்த்து இவர் ஒப்புதல் வாக்குமூலம் செய்திருக்கிறார்.. .. #பன்னீர்_கோழை .. .. Aalanci Spm

Friday, February 16, 2018

தமிழின் பெருமை

ஏன் எதுவுமே எழுதவில்லை மோடியே தமிழின் தொன்மைப் பற்றி பேசியிருக்கிறாரே என்றார் நண்பர்.. எத்தனை காலம்தான் மறைத்துவைக்கமுடியும் .. சிவனின் உடுக்கையில் கூட பிறந்ததென (தமிழும் சமஸ்கிருதம்) சங்கர நாராயணன் (விஜயேந்திரன்) சொன்னபோதும் இதோ மோடியின் பதிலையே அவருக்கு பதிலாக தரலாம் .. தமிழின் தொன்மையை சிதைப்பதில் காலம்காலமாய் பிராமணர்கள் அளித்த பங்கு கொஞ்சம் நஞ்சமல்ல.. சமீபத்தில் ஹார்வர்ட் பல்கலைகழக தமிழ் இருக்கை அமைப்பது வரை எதிர்த்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.. தமிழுக்கு தொண்டாற்றுவதாக சொல்லி நிறைய ஓலைச்சுவடிகளை கைப்பற்றி அழித்ததெல்லாம் வெளியில் வராத செய்திகள்.. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் நிறைய பக்கங்கள் (ஓலைச்சுவடிகள்) காணாமல் போனது மிச்சமிருந்ததைதான் நமக்கு கிட்டியது.. இதோ கீழடியில் நம் கண் முன்னே நம் முன்னோர் வாழ்ந்த சுவடுகள் மண்கொண்டு மூடியபோதும் தமிழனின் வரலாற்றை மறைத்துவிட முடியாதென்றும்.. ஆதி மொழி தமிழ்தான் என்பதை உலகம் ஏற்கும் காலம் வந்தே தீரும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகமாய் வாழ்ந்தவன் மனிதன் குகையில் வாழ்ந்த காலத்தில் நகரம் அமைத்து வாழ்ந்தவன்.. அவன் அறிவு கலாச்சாரம் பண்பாடு எல்லாம் உலகிற்கு வழிகாட்ட கூடியது.. .. பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி கடலில் போட்டால் அது தனுஷ்கோடிக்கு வந்து சேருமென கடல் நீரோட்டத்தை அறிந்திருந்தவன் தமிழன்.. கடல் ஆமைகள் கடல் நீரோட்டத்தை கண்டு 500 மைல் கல் வரை நீந்தாமலேயே மிதத்துவரும் .. அதை கண்டு கப்பல் போக்குவரத்தை கண்டுபிடித்தவன் கப்பல் பாறையில் மோதினால் அந்த பகுதிமட்டும் தனியாக கழன்று போகும் தொழிற்நுட்பம் அறிந்து வடிவமைத்தவன் .. தமிழக சமண கோவில்களில் ஆமைகள் படமிருக்கும் நீரோட்டத்தை மிக துள்ளியமாக கண்டுபிடிக்கவல்லது நீண்டநாள் வாழும் ஆற்றல் கொண்டது ஆமைகள்.. ஆமைகளிடம் மட்டும் பிரத்கேய குணம் உண்டு .. ஆமைகள் கருத்தரித்தால் தாய்வீட்டிற்கு தான் செல்லுமாம் அந்த பழக்கம் ஆதியில் தமிழர்களிடத்தில் மட்டுமே உண்டென்பர்.. .. தமிழன் மீதான வன்மம் குறிப்பாக ஆரியர்களுக்கு காலம்காலமாய் இருந்துவருவது கைப்புண்ணைப்போல .. எந்தவொரு கலாச்சார பின்னணியோ வரலாற்றோ இல்லாத வந்தேறிகள் செமையாக வாழ்ந்து வந்த தமிழர்களை கண்டு அவர்களை வலுவிழக்க செய்ய அவர்களை வீழ்த்த அவர்கள் இனத்தின் மீதான தாக்குதலை மிக துள்ளியமாக செய்தார்கள்.. எந்தவொரு இனத்தையும் அழிக்கவேண்டுமெனில் அதன் கலாச்சாரத்தின் மீதான போராக இருக்கவேண்டும் .. அதைதான் செய்தார்கள் என்கிறார் இலங்கை மொழியியல் ஆய்வாளரும் யாழ் பல்கலைக்கழக பேராசிரியருமான சிவ.பாலகிருஷ்ணன் ..ஆம் தமிழனின் கலாச்சாரத்தில் மீது கடவுள் சாதி பயம் பக்தி என்ற இடைசொருகலை செய்து அவனின் பழக்கவழக்கங்களை மாற்றினார்கள் ..அதுவரை அவனுக்கு தெரியாத சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் அவனுக்கு பழக்கமில்லாததும் அதை காலபோக்கில் ஏற்றுக்கொள்ள வைத்ததோடு அதையே அவன் கலாச்சாரமாக மாற்றியதில் பெரும்பங்கு ஆரியருக்கு உண்டென்றார் பேரா.சிவ. பால கிருஷ்ணன்.. .. பிரதமர் தமிழ் சமஸ்கிருதத்திற்கு முன்பே இருந்ததென்பதை தன் சகாக்களுக்கு சொல்லலாம்.. சமஸ்கிருதத்திலிருநிது தமிழ் பிறந்ததென பீற்றி திரியும் அறிவிலிகள் அதற்கான ஆதாரத்தை தருவதே இல்லை.. உலக வழக்கில் இன்றும் இலக்கணத்தோடு இருக்கிற தொன்மையான மொழி தமிழ் மட்டுமே.. எத்தனை காலம் மறைத்தாலும் உண்மை வெளிவந்தே தீரும் .. அது கீழடியாக இருந்தாலும் .கிழக்கு வெளுக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அதைப்போல தமிழே மனிதன் ஆதியில் பேசிய மொழி என்பதும் வெளிச்சமாகும். உலகிற்கு அறிவை கலைச்சாரத்தை நாகரீகத்தை கற்று தந்தவன் தமிழன்.. .. தமிழன் என்பதில் பெருமைகொள்வோம்.. .. Aalanci Spm

காவிரியும் ஞானும்

காவிரியும்..குடமுருட்டியும் பின்னே ஞானும்.. .. அப்போதெல்லாம் கரைபுரண்டோடும் .. படகில் அக்கரைக்கு சென்று பயிச்சல் பார்த்த நினைவெல்லாம் வந்து தொலைக்கிறது.. அக்கரையை நீந்தி செல்வதென்பது எவ்வளவு மூச்சிழைக்கும்.. புரண்டோடும் நீரின் அழகும்.. கரையோர நாணல்களும்.. தென்னந்தோப்பு குயில்களின் இசையும் ..பச்சைபசேலென பூமி குளிர்ந்து கிடைந்ததும், , வயல்வெளியில் நெற்கதிர்கள் தலைசாய்ந்து உழவன் தலைநிமிர்ந்து நின்றதெல்லாம் கனாகாலமாய் போனது.. .. காவிரி வறண்டு காட்டான் குடியேறிய கதை .. காவிரிக்கரையில் வாழ்கிற எம் போன்றோரின் ஜீவதார உரிமைகள் மீதான வழக்கு முடித்துவைக்கபட்டிருக்கிறது நீண்டநெடிய சட்டபோராட்டங்கள்.. திமுக அதிமுக அரசியலை கடந்து சற்று திரும்பிபார்க்கவேண்டும்.. அதற்கு முன் காலம் பொய்த்தாலும் காவிரி பொய்க்காதென்ற பழஞ்சொல் இப்போது கேட்டால் எரிச்சல்தான் வருகிறது.. .. நாம் நடுவர்மன்றத்திற்கு பிறகான அரசியலை பார்ப்போம் காரணம் அதுவரை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காவிரி விவகாரம் ஒரு நிலையை அடைந்தது அப்போதுதான் .. திரு.வி.பி.சிங் ஆட்சியிலிருந்த போது கலைஞரே மிக சிரத்தையோடு காவிரி நடுவர்மன்றம் அமைத்தார் அப்போது அதை கடுமையாக எதிர்த்தது ஜெயலலிதாவும் கர்நாடகவும் தான் இதனால் ஒரு பயனுமில்லையென ஜெயலலிதாவும் மன்றத்தையே ஏற்கமுடியாதென கர்நாடகமும் வரிந்துகட்டின... கடைசியில் அதை ஏற்றுக்கொண்டார்கள்.. இடைகால தீர்ப்பாய் 205 டிஎம்சி தரவேண்டுமென்றபோது ஜெயலலிதாவே எதிரத்்தது தான் விசேசம்.. இறுதி தீர்ப்பில் 192 என நடுவர் மன்ற தீர்ப்பை கலைஞர் பெற்றுதந்த போது போதாது என்றார்கள் .. இப்போது மேல்முறையீட்டு செய்து உச்சநீதிமன்றம் 177.25 ஆக குறைத்து வழக்கை முடித்துவைத்திருக்கிறது .. .. இதுவாவது கிடைக்கமா என்கிற பரிதாபத்திற்கு கேள்வியை நாங்கள் கேட்கிறோம்.. காவிரி பிரச்சனைக்கு மாறி மாறி குற்றம் சுமத்தி இருகட்சிகளும் பேசிவருவதே மறைமுகமாக அது கர்நாடகாவிற்கு பலன் சேர்க்குமென்பதை உணர மறுத்தார்கள்.. காவிரித்தாயென்றெல்லாம் பட்டம் தந்து மனம் குளிர்ந்தபோதும் தொடர்ந்து திமுகவை குற்றம் சாட்டி காவிரி அரசியலை அதிகம் முன்னெடுத்து பயன்பெற நினைத்தார் .. ஆனால் தஞ்சை ,கீழ்தஞ்சை மாவட்டங்கள் ஜெயலலிதாவை நம்பவில்லை.. திமுகவும் ஜெயலலிதாவை குறைசொல்வதை விடவில்லை காவிரி விடயத்தில் திமுகவின் பங்கு அளப்பரியதென்றாலும் அது போதுமானதாக இல்லையென்பது நிஜம்.. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி நீர் பங்கீட்டை செய்கிற வரை ..காவிரி நீர் என்பது நமக்கு கிட்டாமல் போகும்.. சிறிய அளவில் தண்ணீர் தந்தால் கூட ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைத்து போராடுகின்றன தமிழகத்தில் திமுக அதிமுகவும் மாறி மாறி அரசியல் செய்வதோடு பணி முடிந்ததாக நினைப்பது மிக கொடுமை .. எவ்வளவு நீர் தேவை என்ற அளவை சரியாக கணிக்கபடவே இல்லை.. கீழ்தஞ்சையில் மட்டும் 2.5 லட்சம் ஹெக்டர் தண்ணீர் குறைவால் விளைநிலங்கள் வீடுகளாகவும் தொழிற்பட்டறைகளாகவும் மீன்வளர்ப்பு என சிகைந்து போனது .. நீர் வழித்தடங்கள் மறைக்கபட்டு அல்லது காணாமல் போய் இருக்கிற நிலங்களுக்கும் நீர் வரமுடியாத சூழல் அதுவும் காலபோக்கில் தரிசான கொடுமை இவையெல்லாம் அரசின் அலட்சியங்கள் மட்டுமல்ல அங்கே வாழும் மக்களின் பொறுப்பற்ற செயலும் காரணம் .. நீர் சேமிப்பின் அக்கறையின்மை குளங்கள் ஏரிகள் குட்டைகளென எல்லாம் காணாமல் போகிறது ..நீர்வழித்தடங்களின் மீதான போர் இவைகளின் அழிவிற்கு காரணமென்பதை நாம் அறிந்திருக்கவில்லை.. இனி வரும் காலங்களில் குளங்கள் ஏரிகளை ஆக்ரமிப்போரை நாமே தடுக்கவேண்டும் ஏற்கனவே உயர்நீதிமன்றம்.. நீர்நிலைகளின் மீது கட்டபட்டிருக்கிற கட்டிடங்களை அகற்றலாமென தீர்ப்பு தந்திருக்கிறது.. அது வழிபாட்டுதலங்களாக (கோவில் மசூதி சர்ச்) இருந்தாலும் கல்வி நிலையங்கள் குடியிருப்புகள் எதுவாக இருந்தாலும் இடிக்கலாமென கூறியிருக்கிறது.. இனியாவது ஆக்ரமிப்புகளை அகற்றி .. தூர்வாறி... வழிதடங்களை சரிசெய்து.. நீரை சரியான பங்கீட்டுமுறை அமல்படுத்தி உழவனின் வாழ்வியலை உயர்த்துங்கள்..நம்மிலும் உண்டு உழவரென்ற எண்ணம் வேண்டும்.. .. Aalanci Spm

Thursday, February 15, 2018

இசை அரசியல்

இசைக்கு ஏது சாதி.. .. இப்படிதான் சிலர் சொல்கிறார்கள் சொல்பவர் யாரென்று பாருங்கள் அதிலுள்ள வர்ணம் நமக்கு புரியும் இன்று நேற்றல்ல என்றைக்கு திருவையாற்றில் தமிழில் கீர்த்தனைகள் பாடியதற்கு தீட்டு கழித்தார்களே அன்று தொட்டு சாதிய நிலை தொடர்ந்து தான் வருகிறது.. நேற்றைய தினம் திரு.புஷ்பவனம் குப்புசாமி தனக்கிழைக்கப்பட்ட அநீதி கண்டு பொங்கினார்..தனக்கு திறமையிருந்தும் துணைவேந்தர் பதவி கிடைக்கவில்லையென்றார்.. அதற்குமுன்பு சிறு கதையொன்று சொல்லவேண்டும்.. திருமதி அனிதா குப்புசாமி அவர்கள் அதிமுகவில் சேர்ந்ததே தன் கணவருக்கு துணைவேந்தர் பதவி கிடைக்குமென்பதால் தானாம் .. அதாவது அரசியலுக்கு வந்தால் பதவியை அனுபவிக்கலாமென்ற கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை.. அதுவும் எந்த முகாந்திரமும் இல்லாமல் எதிர்க்கட்சியை வசைபாடினால் ஜெயலலிதா மனம்குளிர்ந்து பதவி தந்துவிடுவாரென்ற நினைப்பு இருக்கிறது பாருங்கள் அது அருவருக்கதக்கது கண்டிக்கதக்கது.. .. தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைகழகத்தின் துணைவேந்தரை தேர்வு நியமிக்கபட்ட கமிட்டி சுதா ரகுராமன் என்ற பார்ப்பனர் தலைமையில் .. அரசோ குருமூர்த்தியின் ஆலோசனையில் தலைமைசெயலர் கிரிஜா வைத்தியநாதன் ..பீ திங்ககூட தயாரென்ற எஸ்.வி.சேகரின் அண்ணியார்.. பிறகு கேட்கவா வேண்டும்.. தகுதி பார்த்து வழங்கபடுவதெல்லாம் இப்போது நடைமுறையில் இல்லையென குப்புசாமி அறியாமல் போனது அவரது அறியாமை .. முனைவர் பட்டம் பெற்றிருப்பதாக சொல்கிறவர்.. என்னைவிட தகுதியானவர் அந்த பட்டியிலே இல்லையென்கிற போது நீதிமன்றத்தை நாட வேண்டியதுதானே .. ஆனால் வேண்டாம் என்கிறார்.. வன்னியர் குலத்தில் பிறந்த தன்னை பார்ப்பன கூட்டம் பழிவாங்கி விட்டதென புலம்பினால் மட்டும் போதுமா சட்டரீதியான முறையீடு வேண்டும் அப்போதுதானே நியாயம் கிடைக்கும் வரும்காலங்களில் நியமன நடைமுறையில் தகுதி அடிப்படையை பின்பற்ற பரிந்துரையை பெறமுடியும்.. காலகெடுவை நீடிடித்தும் அந்த காலகெடுவிற்குள் விண்ணபிக்காத பிரமிளாவிற்கு வாய்ப்பு வழங்க சுதா ரகுராமன் பிடிவாதம் பிடித்ததாக சொல்வதிலிருந்தே அந்த நடந்த லாபி நாடறிய வேண்டும்.. .. பிரமிளாவை துணைவேந்தராக கொண்டு வர அரசின் தலைமைச் செயலகத்தில் தொல்லியல்துறை அமைச்சராக இருக்கும் மாஃபா பாண்டியராஜன் தரப்பு பிரமிளா குருமூர்த்தி தரப்பை தொடர்பு கொண்டு துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொண்டிருக்கிறது. அதன் பிறகே அவர் அவசர அவசரமாக விண்ணப்பித்திருக்கிறார் அவரை உடனே துணைவேந்தர் ஆக்கியிருக்கிறார்கள் அவருக்கு முன்பு விண்ணப்பித்த புஷ்பவனம் குப்புசாமிக்கு அந்த பதவியை வழங்காமல் விட்டிருக்கிறார்கள்.. அதாவது பிராமணர் அந்த பதவிக்கு தரவேண்டுமன்பதற்காக பெரியளவில் சதி நடந்திருக்கிறது .. பாவம் இடைசாதி கதறுகிறான்.. தற்போதைய ஆட்சியில் பிறப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படுவதில்லை” என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருக்கிறார் புஷ்பவனத்தை சேர்ந்த குப்புசாமி.. இப்போது சொல்லுங்கள்.. நாங்கள் ஏன் பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோமென்று புரிந்திருக்கும்.. .. #இப்பெல்லாம்_யாருங்கசாதிபார்க்குறா.? .. Aalanci Spm

Wednesday, February 14, 2018

என்னங்கசார் உங்க சட்டம்

உயிரோட இருந்திருந்தால் செல்வி.ஜெயலலிதா மேல் முறையிடு செய்து குற்றவாளி இல்லை என நிருபித்து இருப்பார் ..ரங்கராஜ் பாண்டே.. சிலநேரம் உண்மை வெளிவந்துவிடும் அவர்களை அறியாமல் விசாரணை முடிந்து தீர்ப்பு காலந்தாழ்த்தும்போதே சிலர் வெளிப்படையாக சொன்னார்கள் ஜெயலலிதாவிற்காக தீர்ப்பு தாமதமாகுவதாகவும் எதேனும் வழிகளில் அவரை மட்டுமாவது விடுவிக்க மார்க்கம் இருக்கிறதா என மத்திய அரசு முயற்சிப்பதாகவும் சொல்லபட்டது.. பார்பனர் தண்டிக்கபட்டால் என்னாவது என்றெல்லாம் சொன்னார்கள்.. உச்சநீதிமன்றத்தில் டைகர்மேனன் வழக்கில் அவசரமாக இரவில் கூடிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன் வாதாடிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் attorney general.. மநுநீதியை எடுத்துகாட்டி வாதாடியது அப்போது பேசபட்டது.. அதை தான் ரங்கராஜ் பாண்டே சொல்லியிருக்கிறார்.. .. சசிகலா என்ற கள்ளரை தண்டிக்கமுடியும் ஆனால் ஜெயலலிதா எனும் பாப்பாத்தியை ஒரு மயிரும் புடுங்கமுடியாதென்ற மமதையில் வந்த வார்த்தை அது.. இந்திய நீதிகளின் லட்சணத்தை மிக தெளிவாக படம்பிடித்து காட்டிருக்கிறது இவரின் பேச்சு ..தொடர்ந்து ஜெயலலிதாவிற்கு வழங்கபட்டுவந்த சலுகைகளும் ஒரு வழக்கை நடத்த எவ்வளவு சிரமபட வேண்டியிருந்ததும் நாம் கண்டதுதான்.. யார் விசாரிக்கவேண்டும் ஏன் இவர் விசாரிக்கிறார் இவர் மீது நம்பிக்கையில்லை என்றெல்லாம் ஜெயலலிதா மனுவாக போட்டது அனைவரும் அறிந்தது.. வழக்கின் போக்கையே மாற்றி உயர்நீதிமன்றத்தில் அவசரமாக விசாரித்து கணிதப்பிழையை காட்டி வெளியில் வந்து அதிகாரத்தை ஏற்கும் வரை பாஜக அரசு எப்படி வழங்கி நின்றதென .. மத்திய அமைச்சரே வீடுதேடி சென்று குற்றவாளியென நிரூபிக்கபட்டு பிணையில் வந்தவரை சநிதித்து பேசியது இந்தியா அதுவரை காணத செயல் .. அப்போதே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இப்படிதான் வருமென அதிகாலையிலேயே பாண்டே தந்தியடித்ததும் தமிழகம் கண்டதுதான்.. .. பாண்டே சொல்வரும் சேதி நமக்கு இதுதான்.. பார்பனர்களை எந்த நீதிமன்றத்தாலும் தண்டிக்க முடியாது ..இந்திய சட்டங்களைவிட மநுநீதியை வெல்லும் இங்கே.. பிராமணன் கொலையே செய்தாலும் அவனுக்கு பொன்னும் பொருளும் தந்து நாடு கடத்தணுமென்ற மநுவின் புதிய வடிவமாக .. தண்டனையிலிருந்து விலக்கு பெறுவோமென்கிறார்.. சங்கரராமனை கொன்றாலும் இங்கே மிக சுலபமாக வெளியே வருமோம் என்கிறார்.. முதலில் இவர் இந்திய உச்சநீதிமன்றத்தை அவமதித்திருக்கிறார்.. மறுசீராய்வு மனுவைகூட தள்ளுபடி செய்து தீர்ப்பு உறுதி செய்ததை குற்றவாளி 1 ஜெயலலிதா குற்றம் புரிந்திருப்பது அதாவது கொள்ளையடித்திருப்பது பச்சையாக சொன்னால் திருடியிருப்பது உண்மை ..அவர் மரித்துவிட்டபடியாமல் அவரை விலக்குகிறோம் என்ற தெளிவான தீர்ப்பை கேவலபடுத்தியிருக்கிறார்.. அல்லது ஜெயலலிதா இருந்தால் தீர்ப்பே வேறுமாதிரி இருந்திருக்குமென இந்திய உச்சநீதிமன்றத்தை கேலி செய்திருக்கிறார்.. .. இந்திய நீதியில் பாப்பானுக்கு வேறுவிதமான நீதி .. சட்டம் தீர்ப்பு தண்டனை எல்லாம் .. அந்த 3% விழுக்காட்டிற்கில்லை ..மீதமுள்ள 97 க்குதான் .. அனைத்து சலுகைகளும் உயர்பதவியும் அனைத்து அதிகார மையங்களும் .. பார்பனர்களுக்காக மட்டுமே,இயங்குமென .. சொல்லாமல் சொன்ன சேதி இது.. .. #என்னங்கசார்_உங்கசட்டம்.. .. Aalanci Spm

Tuesday, February 13, 2018

பெரியார் மண்..

இது பெரியார் மண் அல்ல பெரியாழ்வார் மண்.. இது அண்ணா மண் அல்ல ஆண்டாள் மண்.. எங்கள் தமிழிசை.. இலக்கிய செல்வரின் மகளல்லவா.. எதுகை மோனையில் பேசுகிறார்.. நன்று.. இங்கே பெரியாழ்வாரை யாருக்கெல்லாம் தெரியும் .. புத்தகத்தில் படித்ததோடு சரி மறந்து போனவர்கள் தான் அதிகம்.. பாவம் ஆண்டாள்.. சிலர் மட்டுமே அறிந்திருந்த அவரை..? ஊர்பேசி வைத்தது போதாதென்று .. அச்சு முறிந்த தேர் இழுக்க வருகிறார் .. இம்சை.. .. இது பெரியார் மண் இல்லையாம் மறைந்து நாற்பத்திநான்கு ஆண்டு கழித்து இன்னமும் சிலர் வயிறு கலக்குகிறதே.. பெரியாரை பேசாமல் பொழுது விடிவதல்லையே .. இன்றைக்கு தாமரை போட்ட ரவிக்கையோடு வலம் வரமுடிகிறதே.. பார்த்தாலே தீட்டென்ற சமுகத்தில் பிறந்து .. இன்று ஒரு கட்சி தலைவராக வலம் வருகிறீர்களே.. பனை மரத்து கீழே பாப்பான் நடந்துபோனால்.. மரத்தில் இருப்பவர் மரத்தை தட்டி ஓசை எழுப்பவேண்டும் அப்போது தான் அவன் நிழல் மேலே படாமல் ஒதுங்கி செல்வார் அந்தனர்.. இதையெல்லாம் மாற்றதான் பெருங்கிழவன் பாடதபாடுபட்டார்.. ராஜாஜி குடும்பத்திலேயே அவரால் மறுமணமென்ற புரட்சியை செய்ய முடிந்தது பால்ய விவாகத்தை சட்டவிரோதமாக்க முடிந்தது.. யாருக்கும் நீ அடிமையில்லென்று .. மானத்தோடு உரிமைக்கு போராட சொன்னவர் தீண்டாமை சாதி அடுக்கு மதம் கடவுள் என்ற கட்டுகதைதளை சொல்லி ஏமாற்றுகிற கூட்டம்.. இதையெல்லாம் எதிர்த்தார் அதனால் தான் காலமாய் #தமிழகத்தின்_காலமாய் என்று ஜொலிக்கிறார்.. அண்ணா.. அறிஞர் திராவிட அரசியல் தேரின் அச்சாணி எழுத்தில் பேச்சில் செயலில் தமிழனுக்கு பெருமை சேர்த்த பெருமகன் அவரின் அரசியல் ஆளுமை முன் முட்டிபோட கூட சில மூதர்களுக்கு முடியாமல் போனது .. பேராசான் பெருங்கிழவன் சிந்தனையில் உதித்ததை செயல்படத்தான் ஆட்சி ஏறியவுடனேயே பெரியாருக்கு காலடியில் வைக்கிறேன் என்றார்.. காலம் அவருக்கு வழங்கிய வாய்ப்பில் நின்று .. தமிழ்நாடென்று பெயர்மாற்றம் ..சுயமரியாதை திருமணத்தை சட்டபூர்வமாக்கினார்.. அவருக்கு பிறகு பதவியேற்ற கிழவனின் நேரடி சீடர்.. திராவிட பெருவுடையார் கலைஞர் பேரறிஞரின் இதயத்தை இரவலாக பெற்று .. ஆற்றிய அளப்பரிய பணிகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.. ஒரேஒரு நிகழ்வு போதும் இன்றைக்கு பாஜக போட்ட பட்ஜெட்..( நிதிநிலை அறிக்கையை) ஊரே /நாடே சொன்னது தி.மு.க செயல்படுத்தியதை தான் இந்தியாவிற்கு கொண்டுவருகிறார்கள் .. இருபது வருடங்களுக்கு முன்பு தமிழகம் வளர்ந்தவிதத்தை நாடே அறிந்து நின்றது.. .. திராவிடன்.. பெயரை கேட்டாலே கோபம் வருகிறதா வரவேண்டும் இன்னமும் உம்மை போல் சுரணையற்ற ஜடங்களை திருத்துவரை திராவிடம் என்ற சொல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.. பார்பன அடிமைகளே கேளுங்கள் என்னதான் வீரமாய் பேசி திரிந்தாலும்.. ஒரு படி கீழேதான்.. தெய்வம் பக்தி வேதமென பயமுறித்தி அறிவு கொண்டு சிந்திக்காமல் வைத்திருப்பதிலேயே ஒரளவு வெற்றிப்பெற்றிருக்கிறது பார்ப்பனீயம் .. என்னதான் சேர்ந்து சிரித்து மகிழ்ந்து உழைத்தாலும் பலனென்னவோ அவாளுக்குதான் தமிழிசை.. கடைசியில் நின்று கொண்டே இருக்கவேண்டும் .. உங்களை போன்றோரை குனியவைத்து படியேறி போய்கொண்டே இருக்கிறார்கள்..அறியாமல் வசனம் பேசிக்கொண்டு திரிகிறார்.. .. பெண் என்பதால் ஜெயாவை ஆதரித்தாக விஜயதாரணி சொன்னார் ஏறக்குறைய இதே சொல்லை தமிழிசையும் ஒருமுறை பயன்படுத்தியிருந்தார்.. பெண் ஆளுமை என்பதால் விமர்சனம் செய்யபடுவதாக.. உண்மையில் பெண் ஆளுமைகள் என்பதால் தான் பெரியாரிய வழியை தேர்ந்தெடுத்தவர்கள் நியாயமாக அன்றி விமர்சிப்பதில்லை மென்மையான போக்கை தொடர்ந்து கடைபிடிக்கிறோம்.. சோனியாவை பதிபக்தியில்லாதவர் என்ற போதுகூட ஜெயாவை தனிப்பட்டமுறை தாக்கியதில்லை அரசியல் ரீதியான விமர்சனங்கள் எங்கள் இனத்தின் மீதான தாக்குதலாய் மொழி கலாச்சார பண்பாட்டு மீதான தாக்குதலாய்.. மக்களின் அறியாமையை களமாக்க நினைக்கிற போதெல்லாம் திருப்பி தாக்குகிறோம் எதிர்நிற்பவரின் கருத்தியலோடே தவிர.. பாலினத்தோடல்ல..ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எண்ணி சிலநேரம் அவர்களின் திமிரை கூட ரசிக்கிறோம்.. ஆனால் கேனத்தனத்தை அல்ல.. தமிழிசையிடம் இருப்பது ஆளுமையல்ல.. அறிவிலித்தனம்.. அது மாறவேண்டும்.. குமரியில் விளைந்த பயிர் களையாய் போகாமல் வேண்டும் .. Aalanci Spm

வழுத்தூர்

இரு அணியினரும்.. பொய் காலில் நின்று கூத்து நடத்துகிறார்கள்.. ரசிக்கதான் முடியவில்லை.. சேற்றை வாரி இரைக்கும் போதெல்லாம் சகதியில் நின்று எறிவதேனோ மறந்துபோகிறார்கள்.. .. மாறி மாறி பேசி திரிவதால் மாண்பு போகும்.. மற்றவர் நகைக்க.. ஊரின் மானம் போகும்.. சில்லரை விசயமென சிரிப்பாய் சிரிக்கிறது சீர்மிகு வழுவை.. சொறிந்து பிடித்த சிரங்கை களிப்பிட்டு ஆற்றலாம் காயம் போகும்..உள்ளில் புரையோடி .. சீழ் வைக்கும்.. அறுத்து வெளியில் எடுத்து மருத்திட்டு காயம் ஆற்று.. .. தன்னை நல்லவன் என்பவனும் தான் மட்டுமே நல்லவனென்பவனும்.. பிழைகள் கண்ணுக்கு தெரியாத பேதைகள்.. நான் மட்டுமே தகுதியானவனென்பவர்.. அகந்தையில் மட்டுமல்ல உள்ளில் அயோக்கியம் குடியேறுமென்பதை மறந்து போகிறார்.. .. எது ஜனநாயகம்.. பத்துபேர் கூடி தீர்மானிப்பதா.. பத்துபேர் கூடி தேர்தெடுப்பதா.. அனைவரின் அங்கீகாரமன்பது தேர்வில் வேண்டும்.. அது ஊர்மக்கள் கூடி இழுத்த தேராய் வேண்டும் ரகசியம்.. ரகசியமாய் உங்களுக்குள் தேர்வென்பது அத்துமீறும் அயோக்கியம் நீண்ட நாள்..நிலைக்காது எல்லோரும் பங்குபெறும் தேர்தல் நடைமுறை.. வாக்களித்து அதை வெளிப்படுத்தும் பெருமை மிகு ஜனநாயகம் அதுதான் இப்போதைய தேவை.. .. இல்லையெனில் ஊர் தேறாது.. பொய்கால்குதிரைமேல் நின்று ஊர் போய் சேரமுடியாது.. .. ஊர்க்காரன் ஆலஞ்சி..

Monday, February 12, 2018

தமிழனின் தொன்மை

பதவிக்கு மண்டி இட்டு ஓடும் தமிழா நீ யார் தெரியுமா?...உனக்குள் இருக்கும் ஆளும் சக்தியை பெறு. பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?. தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்!. தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன் படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறையவே உள்ளது!. தமிழகத்தில் 79 கோயில்களுக்கும் மேல் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்த படி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் பண்டையத் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல் படையும் போக முடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன் பகுதியை அப்படியே கழற்றி விடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன் படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக் கொண்டனர். உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார். சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான். போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா?. அதுதான் உண்மை! கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழனின் தொழில்நுட்பம்தான் . அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்!. ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணமா? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு. ஓட்டுக்கு பணத்தை நிர்ணயம் செய்பவனும் அதை வாங்குபவனும் தமிழனே கிடையாது. "என் மக்கள்" கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

இரு நிகழ்வு.. பேராபத்தும் பெரும் இழிவும்

இருநிகழ்வுகள் .. ”நாட்டுக்காக போரிட ஆர்எஸ்எஸ். மூன்றே நாட்களில் ராணுவத்தை உருவாக்கும்”: மோகன் பாகவத்.. ராணுவம் தயாராக ஒருமாதம் ஆகும் ஆனால் ஆர்எஸ்எஸ்க்கு மூன்றே நாள் போதும். இந்திய ராணுவத்தை அவமதித்த மோகன் பகவத்தை செருப்பால் அடித்தால் என்ன..? .. நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் .. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் உலகின் நான்காம் நிலை ராணுவத்தை குறைத்து மதிப்பிடுவதோடு ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் அமைப்பு பலமாக உள்ளதாக சொல்கிறார்.. அன்று பகத்சிங் ஆர்எஸ்எஸ் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையுமென்ற சொன்னது நியாபகம் வருகிறது.. .. சமீபகாலமாக பார்பனர்களின் பேச்சுதொனியும் செயல்களும் யாருக்கும் கட்டுபடாத நிலை.. அதிகாரத்தில் மோடி வைத்து இயக்குகிற நிலையில் இன்றைய தேதியில் அனைத்துத்துறைகளிலும் .. உயர்பதவிகளை ஆர்எஸ்எஸிடம் பயிற்சிப்பெற்றவர்கள்.. குறிப்பாக பார்பனர்கள் அபகரித்திருக்கிறார்கள் எல்லா செயல்திட்டங்களும் குறிப்பிட்டவர்களுக்காக அவர்களாலேயே இயக்கபடுகிறது இன்றைக்கு துணிச்சலாக பகிரங்கமாக செயல்படுவதன் நோக்கம் அவர்கள் செல்வாக்குள்ள மாநிலங்களில் வெற்றி வாய்ப்பு சரிய தொடங்கியதும் அதை நிலைநிறுத்த மிகப்பெரிய சதி திட்டத்தோடு களமிறங்க தயாராக இருப்பதன் சூட்சமம் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.. வரும் தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்திக்க நேர்ந்தால் அவர்கள் கையிலுள்ள அதிகாரம் போய்விடுமென்ற அச்சத்தில் இதுபோன்று பேசி பரபரப்பாக நாட்டை வைத்திருக்க நினைக்கிறது.. .. ஆர்எஸ்எஸ் தேசத்தின் அங்கரீக்கபட்ட திவீரவாத அமைப்பாக செயல்படுகிறது ஆங்காங்கே இளம் சிறுவர்களை கூட ஆயுதபயிற்சி அளித்து அவர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கிற செயலை செய்துவருகிறது உலகின் தலைசிறந்த ஜனநாயக அமைப்பை பல்வேறு மொழி பேசும் பல்இன மக்களின் வேற்றுமை சித்தாந்தத்திலும் .. ஒற்றுமையாய் வாழும் நாட்டின் கீர்த்தியின் மீது தொடர்ந்து தாக்கிவருவதும் .. மதத்தை சாதியை சொல்லி பிரிவினையை தூண்டுவதும் தொடர்ந்து அநாகரீகமற்ற பேச்சாலும் செயலாலும் வினையாற்றுவதும்.. பாஜக பரிவார்கள் செய்கிறார்கள் ஒவ்வொரு வினைக்கும் நாடு தழுவிய எதிர்வினை அவர்களுக்கு கிடைக்கிறது ஆனாலும் எதையாவது சொல்லி நாட்டை பதட்டத்தோடு வைத்திருந்தால் மட்டுமே வரும் தேர்தலில் வெல்ல முடியுமென கணக்கிட்டு உளற தொடங்கியிருக்கிறார்கள்.. இந்தமுறை பலத்தை காட்டி பயமுறுத்தும் செயலை கையிலெடுக்கிறார்கள்.. .. #இரண்டு.. . குற்றவாளி படத்திறப்பிற்கு பிறகு சிலர் பெரியார் காயிதெ மில்லத் படங்கள் இருகிகும் போது ஜெயலலிதா படம் இருக்ககூடாதா ..? என்கிறது பாஜக முதலில் இருவரும் குற்றவாளிகள் அல்ல சட்டத்தின் முன் தண்டிக்கபட்டவர்கள் அல்ல.. இந்த சமூக மேம்பாட்டிற்காக காலமெல்லாம் உழைத்தவர்கள் .. கண்ணியத்திற்குரியவர்கள் இந்த தேசத்தின் பூர்வகுடிகளுக்காக .. நாடோடிகளிடமிருந்து மரியாதையை மீட்டு தந்தவர் தந்தை பெரியார்... இறந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் பாப்பானை கதறவிடுகிறாரே.. அதிலிருந்தே தெரியவில்லையா பெரியாரின் பணி.. இன்றைக்கும் இந்த மண்ணில் பாசிசம் காலூன்ற முடியாமல் தடுத்து நிற்கும் பெருஞ்சுவராய் எம்தந்தை பெரியார் இருக்கிறாரே அவரோடு அரசியல் கழிசடையை ஒப்பிடுவது இழுக்கு.. தமிழனின் புகழை நாடாளுமன்றத்தில் நிலைநாட்டியவர் காயிதெ மில்லத்.. பண்டிதர் நேருவே.. நீங்கள் இஸ்லாமியர் நீங்கள் ஏன் தமிழுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களென்ற போது.. எனது மதம் இஸ்லாம் நான் பிறப்பால் தமிழன் எனது மொழி தமிழ்.. என் உணர்வோடு கலந்தது தமிழ் எங்கள் இனம் திராவிடம்.. எங்கள் வழிபாடுதான் இஸ்லாமே தவிர நான் உருது வழி வந்தவனோ அரபியனோ அல்ல.. என உரக்க சொன்னவர்.. சிறந்த நாடாளுமன்றவாதியாய் .. தொகுதிக்கு செல்லாமல் வெற்றிபெற்ற பெருந்தகையாளர் காயிதெமில்லத்.. அவரோடு ஜெயலலிதா ஒப்பிடுவதே அருவருப்பானது.. .. குற்றவாளி பாப்பாத்தி என்பதற்காக செம்படிக்கும் பாஜக .. இவர்கள் தான் ஊழலுக்கெதிரானவர்களாம் .. ஊழல் செய்து இந்தியாவிலேயே பதவியில் இருக்கும் போது சிறைச்சென்ற .. தாம் வகித்த பதவிக்கு தீராத களங்கத்தை தந்த ஜெயலலிதாவோடு பெருந்தகைகளை ஒப்பிடுவது எப்படி சரியாகும்.. எனக்கு role model முன்மாதிரியாக இருக்கிறார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி.. எதில் என்பதை அவர் விளக்கவேண்டும் பொது சொத்தை எப்படி கொள்ளையடிப்பது என்பதிலா..? ஒரு குற்றவாளிக்கு பரிந்து பேசும் இவர்களை கண்டால் எரிச்சல் வருகிறது.. இந்தியா வரலாற்றில் குற்றவாளி படத்திறப்பு .. #கருப்புதினம்.. .. Aalanci Spm

Sunday, February 11, 2018

ஜெயலலிதா எனும் கிரிமினல்

சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம்.. .. மூன்றுமுறை மக்களால் தேர்தெடுக்கபட்டு அதில் இரண்டுமுறை உச்சநீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றத்தால் பதவிநீக்கம் செய்து வரலாற்றில் தீராத களங்கத்தை ஏற்படுத்தியவர் சில குமாரசாமிகளால் விடுதலை செய்யபட்டு ஆட்சியில் மீண்டும் வர இந்திய நீதியின் மீதான மரியாதையை நம்பகதன்மையை கேலிகுரியதாக்கியது.. எது நீதி என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது..பணமும் பதவியும்.. நூலும், உயர்மட்ட செல்வாக்குமிருந்தால் எதையும் செய்யலாமென்ற நிலையை ஏற்படுத்தி கடைசிகட்ட நம்பிக்கையான நீதிமன்றங்கள் மீது எரிச்சலை தந்தது .. நீண்டகால சட்ட போராட்டத்தில் எவ்வளவு சலுகைகளை பெற முடியுமோ அவ்வளவையும் பெற்று என்ன செய்துவிட முடியும் இந்த நீதிமன்றங்களால் என எகத்தாளமிட்டு செயல்பட்டவந்தவரை உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பில் கொஞ்சம் கூட குறைக்காமல் குற்றவாளிகளென ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் நால்வரின் தண்டனையை உறுதி செய்தது.. ஜெயலலிதா திருடியது உண்மை .. மக்கள் பணத்தை கொள்ளையடித்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது கூட்டு சதியென குற்றம் சாட்டபட்ட அனைத்திலும் தண்டனை பெற்றவர்.. ஏற்கனவே டான்சி வழக்கைப்போல சொத்தை திருப்பி அரசாங்கத்திற்கே தந்துவிடுகிறேன் என சொல்லி மன்னித்து விடுதலையாகவில்லை..மாறாக கடுமையான தண்டனையை வழங்கி ₹100 கோடி அபராதமும் நான்காண்டு சிறையும் விதித்தது.. .. அக்யூஸ்ட் நம்பர் 1.. ஜெயலலிதா என்ற தனிநபரோடு நமக்கு எப்போதுமே வெறுப்பு இருந்ததில்லை அதனால் தான் நீ..ஆள கூடாதென்றுதான் சொன்னோமே தவிர..வாழ கூடாதென சொல்லவில்லையென எழுதமுடிந்தது.. ஆனால் அரசியல் ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் பொதுவாழ்விற்கான குறைந்தபட்ச தகுதியை கூட இழந்தவர் யார் வேண்டுமானாலும் வரலாமென்ற ஜனநாயகத்தின் ஈரத்தை தமக்கு சாதகமாக்கி நேர்மையான வழியில் வராமல் இலைமறைவு அரசியலின் மூலம் வந்தவர் ஆனால் காலப்போக்கில் தம்மை செப்பனிட்டுகொண்டு முன்னேறாமல் தவறுகளின் உற்பத்திசாலையாகவே இருந்தார் .. கோபமும் ஆத்திரமும் காழ்ப்புணர்ச்சியும் தெளிவற்ற சிந்தனையும் மற்றவர்களை தாழ்வாக எண்ணும் பாசிச நினைப்பும் அவரோடு இருந்தது இளமைகாலங்களில் அவர் மீது தொடுக்கபட்ட தாக்குதல்களின் ரணம் ஆராத காயங்களின் வலி அவர்கள் அரசியல் வாழ்வின் நெடுக தெரிந்தது.. ஆனால் பொதுவாழ்வின் சாதக பாதகங்களை அறிந்திருந்தும் அதன் எதிர்திசையிலேயே பயணித்தவர் ஆணவம் திமிர் இரண்டும் அவரை சுயபரிசோதனை செய்துக்கொள்ளவே இல்லை.. தன் பிறப்பு அரசியல் சதுரங்கத்தில் தம்மை காப்பாற்றும் என நம்பினார் அதனால் தான் அவரால் தொடர்ந்து தவறிழைத்த போதும் நம்மை எதுவும் செய்யமுடியாதென நினைத்தார் நீதி காத்திருந்து வெல்லும் என்பதை மறந்தார் .. சரி... ஜெயலலிதாவின் படம் சட்டமன்றத்தை அலங்கரிக்கலாமா என்ற கேள்வி நம்முன் வருகிறது மூன்றுமுறை மக்களாலும்..இரண்டுமுறை நீதிமன்ற தண்டனையை தொடர்ந்து விரைந்து வழக்கிய முறைகேடாலும் முதல்வராக இருந்தவர் மரபின்படி அவரின் புகைபடம் வைப்பதில் தவறில்லையென தோன்றும் ஆனால் வரலாற்றில் அது மிக மோசமான முன்னுதாரணத்தை கொண்டுவரும்.. ஆம் இன்றைக்கு கோட்சே சிலையை நிறுவ வேண்டுமென சொல்கிறார்களே அதேபோல நாளை எப்படிபட்ட குற்றவாளியாக இருந்தாலும் இறந்துபோனால் அவரை புனிதராகக்க நினைக்க தோன்றும்.. இன்றைக்கு அவரை புகழ்ந்தும் மூச்சுவிடாமல் உச்சரித்துக்கொண்டிருப்பவர்கள் நாளை பதவி போனபிறகு யாரிந்த ஜெயலலிதாவென கேட்பார்கள் இவர்களின் ஆதரவென்பது ஆட்சி பதவி அதிகாரத்தின் மீதான ஆசையேயன்றி நிஜமான பாசமில்லை.. அதோடு அவர்களும் அறிவார்கள் ஜெயலலிதா கிரிமினலென்று நேற்றுவரை சசிகலாவை சின்னம்மா என்ற உதடு ஜெயிலுக்கு சென்றவுடன் திருடி என சொல்லவில்லையா நாளை இவர்களின் ஆட்சி பதவி போனால் ஜெயாவையும் பலே திருடி என சொல்வார்கள்.. தவறான முன்னுதாரணத்தை தொடங்கி வைத்தல் மிகமோசமான விளைவுகளுக்கு வித்திடுதல் போல.. சட்டமன்ற வரலாற்றில் மாபெரும் இழுக்கு ஜெயலலிதா படத்தை வைக்கும் போது தயை கூர்ந்து அண்ணா காமராஜர் படத்தை அகற்றிவிடுங்கள்.. சிலர் அறிவிலிகள் நாட்டை ஆண்ட ஜெயலலிதாவின் படத்தை திறப்பதில் என்ன தவறென்கிறார்கள்.. நாட்டை கொள்ளையடித்தவரென உச்சநீதிமன்றம் முத்திரை குத்தியவரென்பதை மறந்து போகிறார்கள் ..வெட்கம் அவமானம்.. நாட்டின் அவமானசின்னமாய் இருக்கவேண்டுமென்றால்.. அவரது படத்தை திறக்கலாம்.. அவர் படத்திற்கு கீழே இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும் போதே தண்டிக்கபட்ட முதல்வர் .. என்று எழுதுங்கள் வரும் தலைமுறை தெரிந்துக்கொள்ளட்டும்.. .. Aalanci Spm

Saturday, February 10, 2018

புதிய பாதை

தி.மு.க.வில் ஒரு கிளைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுத்தாலும், அவர் கோர்ட்டுக்கு போக முடியும். அப்படி கட்சியின் சட்ட விதிமுறைகள் ஜனநாயகப்படி உள்ளது. அந்த ஜனநாயகத்தைக் காக்க நான் சர்வாதிகாரியாக மாறப்போகிறேன் கட்சிக்கு உழைக்காமல் துரோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை கடுமையாக இருக்கும்.. தளபதி.. .. இது சரியான போக்கா என நாம் ஆய்வு செய்யவேண்டும் தளபதியின் கருத்தை மிக நுட்பமாக ஆய்ந்தால் அதில் இன்றைய காலகட்டத்தின் அவசியம் ஒரு இயக்க செயல்பாடின் வடிவம் எதைநோக்கியதாக இருக்கவேண்டுமென்பதும் புரியும்.. தலைவருக்குரிய அதிகாரம் என்பது கீழ்மட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரையிலான எல்லா பதவிகளிலும் ஆதிக்கம் செலுத்துவதல்ல மாறாக அந்தந்த நிலைகளில் .. குறிப்பாக மாவட்டத்தின் கீழ் ஒன்றிய மற்றும் கிளை கழகங்கள் செயல்பாட்டை கண்காணிக்க நெறிபடுத்த அதிகாரம் உண்டு நேரடியாக எல்லா அதிகாரத்தையும் ஒரே ஆள் சுமப்பதென்பது சர்வ அதிகாரமும் தமக்கென்ற அகந்தையை நோக்கி நகருமென்பதாலேயே .. திமுக சட்டவடிவங்கள் மிகவும் ஜனநாயகபடுத்தபட்டு அதிகார பரவல் என்பது குறுகிய வட்டத்திற்குள் இல்லாமல் விரிவுபடுத்தபட்டிருந்தது.. (இது இந்திய நாட்டில் வேறெந்த கட்சி விதிகளிலும் காணமுடியாது.. இடது கம்யூனிஸ்ட்டில் கூட பொலிட்பீரோ எனும் ஒன்பது பேர் கொண்ட அமைப்பின் முடிவை எதிர்க்கமுடியாது) ஆனால் அதன் தாக்கம் சிலரை குறுநில மன்னர்களைப்போல செயல்படவிட்டதும் அவர்களை மட்டுமே நம்புகிற சூழலை உருவாக்கியதும் பின்னாளில் அதுவே திமுகவின் சுணக்கத்திற்கு காரணமானது.. .. இங்கே மற்றொரு வேறுபாட்டை நாம் நோக்கவேண்டும்.. அதிமுக காங்கிரஸ் போன்று நியமனம் செய்தால் எப்போதுவேண்டுமானாலும் தூக்கியெறியலாம் பின் அழைத்துக்கொள்ளலாமே என எண்ணகூடும் அது தனிநபர் ஆராதனை அல்லது செல்வாக்கு என்கிற நிலையை தாண்டி வளராது அங்கே சர்வாதிகாரதொனி தெரியும் அது அதி புகழ்ச்சியில்..., கொண்ட கொள்கை சிதைவில் போய் முடியும்.. பணம் பதவிக்கான தேடலில் கட்சியை யாரும் கண்டுக்கொள்ள போவதில்லை எதற்காக இந்த கட்சியென்ற அடிப்படை கோட்பாட்டை விட்டு விலகி செல்லும் ..அதையும் நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம்.. ஆனால் தளபதி சொல்லும் சர்வாதிகாரமென்பது தலைமைக்கான அதிகாரத்தை கூட்டுதல் என பொருள் கொள்ளல் வேண்டும்.. நேரடி கண்காணிப்பும்.. அதே வேளை அவரவர் பணிகளை அவரவர் செய்ய மாவட்ட ஒன்றிய அனுமதியை நாட வேண்டியதில்லை மாறாக சில கொள்கை ரீதியான போராட்டம் செயல்பாடுகளில் கட்டுபடுதல் உள்ளுர் மற்றும் வட்டார நிகழ்வுகளுக்கு தாமே வடிவைமைத்து செயல்படும் அதிகாரம்.. அவைகளை நேரடி தலைமையின் தொடர்போடு கூடியதாக்குவது.. மாவட்ட நிர்வாகம் நேரடி தொடர்பில் இருப்பதைப்போல வட்டாரத்தையும் கொண்டுவருதல்.. அதாவது தொடர் கண்காணிப்பு என்று எடுத்துக்கொள்ளலாம்.. செயல்பாடுகளில் தவறு அல்லது சரியில்லையெனில் அவர்களை தற்காலிகமாக மாற்ற தலைமைக்கு அதிகாரம் தருதல் முறைப்படி வேறொருவர் தேர்தெடுக்கும் வரை நியமனங்கள் செயல்பாடு சரியான உக்தியாக இருக்கும் .. ஏற்கனவே ஒருமுறை எழுதியிருந்தேன் அதீத ஜனநாயகம் தேர்தல் அரசியலில் சரிவராது சில நேரம் கவிழ்த்துவிடும்.. .. ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான மெல்லிய ரேகையை அழித்துவிடாமல் நிற்க வேண்டும்.. ஆணவமும் அகந்தையும் தலையில் ஏற்றாமல் செயல்படுதலே ஜனநாயகத்தின் இறுதிவரை நிலைக்க செய்யும்.. தொடக்கத்தில் தேனாய் இனிக்கும் சர்வ அதிகாரமும் கடைசியில் தோற்றுபோகுமென்பதை கவனத்தில் கொள்ளுதல் மிக அவசியம்.. எந்தவொரு இயக்கமாக இருந்தாலும்.. அதன் விதிகள் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கவேண்டியது அவசியம் அது நியாயமும் கூட எந்த சட்டவடிவமும் பழைய தொனியில் அதிகாரமற்று செயல்படுவதென்பது காலபோக்கில் பொருளற்றதாகிவிடும்.. புதியதொரு பாதையை வகுக்கும் அதேவேளை அடிப்படை சித்தாந்தத்திலிருந்து மாறாமல் கொள்கைகளை கொண்ட கோட்பாடுகளுக்காக இருப்பது அவசியம்.. எல்லாம் ஒருவரின் அதிகாரமென்பது ஆபத்தின் தொடக்கம் அதுவே வீழ்ச்சியின் தொடக்கமாகவும் அமையும் என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் .. தி.மு.கழகத்தில் கடினமான உழைக்கும் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் பொறுப்புகளும் .. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் உறுதி செய்யப்படும் என்கிறார் தளபதி .. நல்லது சில களைகள் பயிரையே நாசம் செய்யும் போது களைந்தெறிதல் எப்படி தர்மமோ அதேபோல் புதிய விதைகளை .. விதைப்பதும் காலத்தின் கட்டாயம்.. இன்று திராவிடத்திற்கெதிராக தமிழ்மொழிக்கெதிராக ஆரியம் நடத்திட நினைக்கும் செயல்களை எப்படி நாம் எதிர்கொள்கிறோமோ அதைப்போல வரும் தலைமுறை தமிழுக்கும் இனத்திற்கும் அரணாக செயல்படும் ஒரு புதிய படையை இளைஞர்களை கொண்டு உருவாக்குவது மிக அவசியம் நல்ல முடிவு நலன் பயன் தரும் .. வருகிறவர்கள் இயக்த்தின் கொள்கைகளை அறிந்தவர்களாக/உணர்ந்தவர்களை .. எப்படியெல்லாம் நம் எதிரிகளிடமிருந்து காத்துநிற்கிறோம் என்ற படிப்பினையை அறிந்து செயல்படவேண்டும் .. தமிழர்களின் அறிவியல் அரசியல் வரலாறுகளை அறிந்து நம் இனம்காக்க .. சாதிமதமற்ற சமதர்ம கொள்கைகளை தாங்கிபிடித்து .. பெருங்கிழவன் பெரியாரின் தொலைநோக்கு சிந்தனையை உயர்த்திபிடித்து நின்றால் எக்காலத்திலும் நம்மை வீழ்த்த முடியாது.. ஒருமுறை அறிஞர் அண்ணா .. தமிழகமென பெயர்மாற்றவேண்டுமென்ற கோரிக்கை குறித்து பேசும் போது தேவையில்லை என வாதிட்டார்கள் சிலர்.. அப்போது அண்ணா சொன்னார் ..#நேரு அவர்களே ..எங்களை விட திராவிட ஆரியர் போர் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. இதோ இங்கே இருக்கிற பஞ்சாப்பியரோ மாராட்டியரோ எதிர்க்கவில்லை.. தமிழன் தான் எதிர்க்கிறான் என்றார்.. ஆம் .. தமிழர்களின் வீழ்ச்சிக்கு வேறு யாரும் காரணமில்லை தமிழன் தான் காரணமென்பதை அறிந்து செயல்படுதல் நன்று.. "இளம் கதிர் கிழக்கே இன்னும் எழவில்லை இரவு போர்த்திய இருள் இன்னும் நீங்கவில்லை ஆயினும்.. கேள்வியால் அகலும் மடைமைப்போல்.. நல்லிரவு மெதுவாய் நகர்ந்தே சென்றது "என்றான் புரட்சிகவிஞன்.. அதே போல் .. இருள் விலக சூரியனின் ஒளி வீசுமென்ற நம்பிக்கை வருகிறது.. .. வாழ்த்துகள் தளபதி.. .. Aalanci Spm

Friday, February 9, 2018

தீதும் நன்றும் பிறர்தரவாரா

இன்றைய தமாசுகள் சில விசயங்களை உணர்த்தியிருக்கிறது.. சிலரால் என்ன செய்தாலும் ஏதும் பிடிங்க முடியாது.. சிலரை சமயம் பார்த்து பழிதீர்த்தல் நடத்துவதும் .. இறைவனால் ஏதுமில்லை மக்கள் எழுச்சியே வெற்றியை தருமென்ற யதார்த்த உண்மையை போலிகளை வைத்து உலகறிய செய்த தினம்.. மற்றொன்று சில துரோகங்கள் வாழ்வில் மதிப்பிழந்து மரியாதைபோய் நடுதெருவில் காலம் நிறுத்தும்.. .. ஜீயர்.. சைவத்தை விட வைணவமே பெரிதென எண்ணி காலில் விழவைத்த செயலை .. இதோ வைணவ பீடத்தை காமெடியாக்கி திண்டு கொழுத்த தேகத்தை நீயெல்லாம் சரிபட்டு வரமாட்டே என காரணம் சொல்லி கேவலபடுத்தியிருக்கிறது.. சைவம்.. யார் நிர்பந்தத்தின் பெயரில் உண்ணா நிலையென்றோ அவர்களே கேட்டுக்கொள்வார்களாம்.. உடனே விட்டுவிடுவாராம்.. இதனால் ஆண்டாளுக்கு ஏற்பட்ட கலங்கம் தீர்ந்ததா.. தாசியென்று தானே தமிழன் சொன்னான் .. அவளை வேசியாக்கி நடுதெருவில் கேலி பேசவைத்தது யார் சைவமத ராசாசர்மா தானே.. இதிலுள்ள சூழ்ச்சி புரியாமல் அசிங்கபட்டு கிடக்கிறது வைணவம்.. இதிகம் அரசியலில் நேரடியாக கருத்திடாத வைணவசபை இந்தமுறை சிரிப்பிற்குள்ளாகி இருக்கிறது ..திருப்புகழ் அருணகிரிநாதர் தெரியுமா.. அவர் அருணகிரியாக வலம்வந்த போது மைனராக சொத்தையெல்லாம் தாசிகளுக்கே அழித்தார்.. ஒருகட்டத்தில் தாயில்லாமல் தமக்கையின் வளர்ப்பில் வாழ்ந்தவர் .. கடைசியில் நானும் பெண்தானே என்க திருந்தி நாதரானார் அவர் பாடிய திருப்புகழில் .. கலவியில் ஆண்களிடம் சிக்கிய பெண்கள் படும் துன்பம் போல் தனக்கு தந்துவிடாதே என்று பாடினார் .. அந்தளவு பெண்களை துன்படித்தியவர் கலவி கொண்டு அனுபவித்ததைதான் எழுதினார்.. கன்னியாக வாழ்ந்த ஆண்டாள் எப்படி கலவியின் ரகசியங்களை .. அறிந்து மெய்மறந்த உயர்ந்தநிலையை அடைந்தைப்போல் எழுதியிருக்கமுடியும்.. அனுபவமே எதையும் சரியாக உணர்ந்துமென்ற அறிவு நம்மை கேட்கவைக்கிறதே... அவள் "ஸ்ரீரங்கத்து ராசியோ" என்று இன்றும் ஸ்ரீரங்கம் அதற்கு பெயர்போனதுதானே.. நிறைய கிளறவைக்கிறார்கள்.. கிளறும்போதெல்லாம் காமமே அவர்களின் வாழ்வின் உயரத்திற்கு கொண்டு போனதென்று உலகுக்கு உணர்த்துகிறார்கள் அவர்களின் ஆயுதம் அதுதானென உலகறியும்.. .. இரண்டாவது பரிதி இளம்வழுதி. திராவிடத்தை கையெலேந்தி வீதியெங்கும் முழங்கிய இளம்வழுதியின் மகனாய் கலைஞரின் பாசத்திற்குரியவராய் சட்டென்று உயரத்திற்கு வந்தவர்.. திராவிட கழக துணைப்பொதுசெயலராக உயர்ந்த பதவி வரை அனுபவித்தவர்.. களஅரசியலில் மாவட்டங்களில் காலம் தரும் மாற்றத்தை ஏற்க மறுத்து உட்கட்சியினரோடு இணைந்து செயல்பட முடியாமல் போனது. நிறைய உதாரணங்களை சொல்லமுடியும் ஒருகாலம் வந்த பிறகு மன்னை மணியின் கட்டளைக்கு கட்டுபடவில்லையா ஏன் அதே மணி.. பழநிமாணிக்கத்திற்கு துணையாக நிற்கவில்லையா. அதுபோல இயக்கம் முக்கியமென உணராமல் கொள்கை உயிரென எண்ணாமல் திடீரென்று ஒருநாளில் பூங்கொத்தோடு ஜெயலலிதாவிடம் சேர்ந்து இன்று எங்கிருக்கிறாரென சுவடு தெரியாமல் கடைசியில் தூக்கியெறிய பட்டிருக்கிறார்.. எதுவும் இருக்குமிடத்தில் இருந்தால்தான் நாருக்கும் மரியாதையென தெரியாமல் போனது.. இவரின் புதல்வர் தன் தாத்தனைப்போல கொள்கை உணர்வோடு .. தளபதியின்படையில் "இளம்சுருதி" யாக வலம் வருகிறார் .. அதுவரை மகிழிச்சி.. தீதும் நன்றும் பிறர்தரவாரா.. .. Aalanci Spm

Thursday, February 8, 2018

முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டு

முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை - எச் ராஜா சீறாப்புராணம் எழுதிய உமறுப் புலவர் தமிழில் முதன் முதலில் "அசன்பே சரித்திரம்" என்ற நாவலை எழுதிய சித்தி லெவ்வை மரைக்காயர் சதாவதானம் புரிந்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் பெரும் உறுப்பினராக இருந்து, “நான்காம் தமிழ்ச் சங்க நக்கீரர்” என்று சிறப்பிக்கப்பட்ட குலாம் காதிர் நாவலர் இராமத்தேவராக இருந்து இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி வைத்திய நூல் எழுதிய யாக்கோபு சித்தர் நற்றமிழில் நான்கு காப்பியங்கள் எழுதிய காயல் சேகனாப்புலவர் முத்தமிழில் மூன்று இலக்கியங்கள் படைத்த வண்ணக் களஞ்சியப் புலவர் மிஃராஜ் மாலை எழுதிய ஆலிம் புலவர் பெண் எழுத்தாளர்களின் முன்னோடி நாகூர் சித்தி ஜுனைதா பேகம் யூசுப்-ஜுலைகா காவியம் வரைந்த சாரண பாஸ்கரணார் மசலா (புதிர்-வினா). நாமா (வரலாற்றுக்கதை) , கிஸ்ஸா (கதை வடிவம்), முனாஜாத்து (இறைவேட்கை பாடல்), படைப்போர் (போர் நிகழ்ச்சிகள்), திருமண வாழ்த்து (திருமண பழக்க வழக்கங்களைக் கூறுவது) , நொண்டி நாடகம் (சிற்றிலக்கிய நாடக வகைகளில் ஒருவகை) என்றெல்லாம் எழுதிக் குவித்து தமிழ் இலக்கியங்களுக்கு புதுப்பொலிவு ஏற்றிய இஸ்லாமியர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு சம்பந்தமில்லாத அயல் நாட்டவர். அப்படித்தானே ஹரிஹர ராஜா ஷர்மா அவர்களே…! தமிழிலக்கிய வரலாறு உங்களிடமிருந்தும்,, கல்யாண் ராமனிடமிருந்தும், , ராம ரவிக்குமாரிடமிருந்துதான் நாங்கள் கற்க வேண்டும் போல. நன்றி :- #அப்துல்கையூம்

திராவிடனை வீழ்த்த இயலாது

உண்ணா நோன்பு.. உண்ணாவிரதம் இப்போதெல்லாம் மரியாதை இல்லாமல் போய்விட்டது அடிக்கடி தேதியை மாற்றி மாற்றி இதோ வருகிறாரென காத்திருக்க கடைசியில் விருப்பமில்லாமல் சிலர் தூண்டுதலால் ஜீயர் உண்ணாமல் நோகிறார்.. பாவம் பசி பொறுக்காத உடம்பு.. .. நீங்கள் தலைகீழ் நின்றாலும் சொன்ன வார்த்தையை திரும்ப அள்ளமுடியாது ஆண்டாளை தாசியென இதுவரை அறிந்திராதவர்கள் இப்போது அறிந்துக்கொண்டிருக்கிறார்கள்.. இலக்கியங்கள் படிக்க விரும்பாத இளம் சமூகத்தில் இன்றைக்கு ஆண்டாள் காமகவிதைகள் பிரபலமாக மிக முக்கிய காரணமாக .. பாஜக மற்றும் மதமேறிய வகையறாக்கள் காரணம்.. தாசியாக இருக்கலாமென்ற கூற்றை ராசா சர்மா போன்ற அறிவிலிகள் அவசரகுடுக்கைகள் .. வேசியாக்கி நடுத்தெருவில் நிறுத்தியாகிவிட்டது இனி என்ன சொன்னாலும் ஆண்டாளைப்பற்றி பார்வை வேறுமாதிரியாகதான் இருக்கும்.. .. இங்கே எந்த விதமாக போராட்டங்களை/எதிர்ப்புகளை கொண்டுவந்து நிறுத்தினாலும் வெத்துவேட்டுகளின் விவரகேடுகளால் தமாஷாகவே முடிகிறது.. எந்தவொரு விடயமானாலும் அதை அறிவுபூர்வமாக அணுகுகிற சமூகத்தின் முன்னால் இந்த பொய்பேசி திரியும் புராணக்கூட்டத்தால் வெல்லவே முடியாது வேண்டுமானால் கூச்சல் போடலாம் .. தமிழகம் எதையும் அறிவுகொண்டே பார்க்க பழக்கியிருக்கிறான் எங்கள் பெருங்கிழவன் பேராசான் #பெரியார்.. இங்கே அண்ணன் தம்பியாய் காலந்தொட்டே வாழ்ந்து பழகியவன்.. மதமும் சாதியும் மண்டையில் ஏற்றினாலும் அவனுக்கு தான் நிற்கும் நிலம் எதுவென தெரியும் அதனால் தான் காவிகளை காலூன்ற முடியாதவாறு கதறவிடுகிறான்.. .. எத்தனை வழிகள் உண்டோ அத்தனையிலும் நுழைய முற்படுகிறார்கள்.. திடீரென வழி அடைபட மூச்சுமுட்டுகிறது.. கோவில்களை எரித்து பார்த்தாயிற்று எதற்கு அசைவதாக இல்லை இந்த சமூகமென நொந்து போகிறார்கள்.. மீண்டும் உண்ணாவிரதமென்றவுடன்.. வடகபட்டி அங்கதம்மாளிடம் வந்து மன்னிப்பு கேள்.. என திருப்பி அடிக்கிறார்கள்.. சங்கர நாராயணனெனும் சொர்ண விஜயேந்திரனை மனோன்மணியம் கல்லரை முன் மண்டியிட சொல்வதிலிருந்தே இந்த பெருமைமிகு திராவிட சமூகம் மானமிகு சமூகமென .. வந்தேறிய பொறம்போக்குகளுக்கும்.. வந்தேறியவனை நக்கி பிழைக்கிறவர்களுக்கும் புரிந்திருக்கும்.. எத்தனை உயிர்களை காவு கேட்டிருப்பீர்கள்.. இப்போதாவது போகட்டுமே ஒரு உயிரென எங்களாலும் கதைக்க முடியும்.. ஆனாலும் அதற்கெல்லாம் மானம் இருத்தல் வேண்டும்..எப்படியும் ஏதேனும் காரணம் சொல்லி நழுவலாம்.. ஆனால்.. இங்கே பார்பனர் பார்பனரல்லாதோர் என பிரிந்துநிற்பது மிக தெளிவாக தெரிகிறது.. இங்கே ஆரிய கூச்சல் எடுபடாது.. நீங்கள் மதமோதலை சாதி மோதலை கையிலெடுக்க நினைக்கிற போதெல்லாம் அது பார்பனன் சூழ்ச்சியென மண்டையில் தடிகொண்டு அடிக்கிறார்கள் தமிழ்பெருமக்கள்.. ஆம் பெரியார் தடிகொண்டு. .. அறிக.. திராவிடரை வெல்ல இயலாது.. .. Aalanci Spm

Wednesday, February 7, 2018

Pakkoda maker

மக்களவையில் பிரதமர் உரைக்கு எதிராக, எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் முழக்கம். மிகவும் உரத்த குரலில் பேசினார் மோடி. அவர் முகத்தில் கடும் கோபம் தெரிகிறது.. பாஜக ரத்தத்தில் ஜனநாயகம் ஊறியுள்ளது என்றார் பிரதமர் அது ஜனநாயகம் இல்லை #சனாதானம் என அவருக்கு யாராவது சொல்லியிருக்கலாம்.. படேல் பிரதமராகியிருந்தால் முழு காஷ்மீரும் கிடைத்திருக்குமென்றார்.. மிக சிறந்த ஜனநாயகவாதி நேரு என்ற நாத்திகர் இல்லாமல் போயிருந்தால் நாடு எப்போதே சிதைந்திருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திரம் சமயங்களை கடந்த மனிதநேயமும் தான் இந்தியாவை வலுவாக்கி நிறுத்தியிருக்கிறதென்று பிரதமருக்கு தெரிந்திருக்கவில்லை மோடி இந்நாட்டின் பிரதமர். அவர் உரை முழுக்க காங்கிரஸ் கட்சியைப் பற்றி மட்டுமே இருந்தது அவர் பேசட்டும் ஆனால் அதற்கு பாராளுமன்றம் இடமல்ல. வேலை வாய்ப்பை பற்றி பேச மறுக்கிறார், மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச மறுக்கிறார். அவர் பிரதமராக நாட்டின் பிரதமராக பேசவில்லை. ஒரு அரசியல் தலைவராக மட்டுமே பேசியுள்ளார் என்றார் ராகுல் காந்தி ஆம்.. மோடி தான் பிரதமரென்பதையே மறந்துவிட்டார் .. வாய்சொல்வீரர்.. .. பின் எவ்வளவுகாலம் பொய்யை நம்பிக்கொண்டிருப்பது.. வாய்சவடாலும் வார்த்தை ஜாலமும் கரை சேர்க்கவில்லை தேர்தல் பிரச்சாரத்தில் 56 இன்ச் மார்புள்ளவன் என பேசிய போதே அவரின் தகுதி நமக்கு புரிந்தது.. எப்போதுமில்லாத வகையில் ஊடகங்கள் தொடர்ந்து தூக்கிபிடித்து நிற்க தான் யார் தன் தகுதியென்ன என தெரியாமலேயே மிகப்பெரிய பொறுப்பை ஏற்று .. மேலே சென்றுக்கொண்டிருந்த இந்தியாவின் வளர்ச்சியை ...கீழே இறக்கிய பெருமை இவருக்கு உண்டு.. இதுவரை பிரதமராக இருந்தவர்களில் .. தான் என்ன படித்தேன் என்பதை கூட ஒளித்துவைக்கிற ஒருவர் .. யாருக்கும் தெரியாத இவரின் கல்வி தகுதி .. தகவல் உரிமை சட்டத்தில் கூட கேட்டு பெற முடியவில்லை அந்தளவிற்கு வெளிப்படை..? இதுதான் மோடி என்ற மனிதரின் நிலை.. .. இதோ புதிய புத்தன் பிறந்துவிட்டார் .. இந்தியாவை காக்க பிறந்த அவதாரமென்றெல்லாம் கதைகட்டி கடைசியில் எதற்கு உதவாத அரைகுறையென கண்டறிய நான்கு ஆண்டுகள் தேவைபட்டிருக்கிறது.. இதோ சாமானியன் பிரதமராக வந்துவிட்டார்.. டீ கடை வைத்திருந்தவர் பிரதமராக முடிகிற ஜனநாயகம் வேறெங்கும் உண்டா என்றெல்லாம் கேட்டபோது.. சிலர் ஆமாம் இதுதானே சிறந்த ஜனநாயகம் என்றார்கள்.. ஆனால் மிக உயர்ந்த பதவிக்கு வரும் தகுதிகள் எவையென்பதை அளக்க மறந்துபோனார்கள்.. தமிழகத்தில் கூட இதோ பார் கடைக்கோடி தொண்டன் வெல்லமண்டி வைத்திருந்தவர் முதல்வராக வரமுடிந்ததே என்றார்கள்.. தகுதியை வளர்த்துக்கொள்ளாது போனால் அதன் தாக்கம் ஏற்படுத்தும் இன்னல்களும் பேரடியும் அனுபவத்தில் உணரும் போதுதான் தெரியும்.. எளியவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்பது தவறானவர்கள் லாயக்கற்றவர்கள் பொறம்போக்குகள் அல்ல.. தகுதி திறமையும் சேவை மனப்பான்மையும் உடையோர் வரவேண்டுமே தவிர .. அரைகுறைகளும் அறிவிலிகளும்.. மதம்பிடித்தாட்டும் பேய்களும் அல்ல.. .. தலைக்கு ₹15 லட்சமென்றதை அரசியல் கவர்ந்திழுக்கும் பிரச்சாரமாக கருதலாம் ஆனால் demonetisation - பண மதிப்பிழப்பை ஒரு இரவில் கொண்டுவந்து இதோ ஊழலை கருப்பு பணத்தை ஒழிக்கவந்தவன்.. இதோ ஒழிந்தது கருப்புபணமென பெரும் கூச்சலிட்டு இதோ எங்கள் இரட்சகன் .. இரட்சித்தானென பின்ணணி பாடி.. ஒரே கோரஸாக கேட்டோம்.. அப்போதே அறிவுடைசமூகம்.. அமைதியாய் இது ஒன்றுக்கும் உதவாத அடிமாடு என சொன்னார்கள்.. அதன் தாக்கத்தை உணர ஒராண்டு பிடித்தது.. தொலைநோக்கு சிந்தனையில்லாத திட்டங்களை தீட்டி தங்கள் கையிருப்பு இதுதானென காட்டி .. கடைசியில் திராவிட பெருவுடையானின் காலில் விழுந்த கதையாய் திராவிட கட்சியின் செயல்திட்டங்கள் தொலைநோக்கு பார்வையை கடன்வாங்கி விருந்துவைக்கிறார்கள்.. உலகிற்கு அறம் சொன்ன வள்ளுவன் வகையறா நாங்கள்.. இனி... இந்தியா விழித்தெழ வேண்டுமெனில் இந்த கூமுட்டைகள் ..மதம்பேசும் அறிவிலிக்கூட்டத்தை அவர்களுக்கு செம்படிக்கும் மூளைச்சலவை செய்த கழுதை கூட்டத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.. மத்தியிலும் மாநிலத்திலும் உண்மையான நல்லாட்சியை நல்க திமுகவிற்கு துணைநிற்போம் .. கடந்த தவறுகளால் நாடும்.. நம் மாநிலமும் படும் அவதிகள் போதும் .. தமிழகத்திற்கு தீராத களங்கத்தை தலைகுனிவை ஏற்படுத்தி வாய்மூடி அதிகார பசியில் இடுப்பு வேட்டி அவிழ்ந்து விழுந்தது கூட தெரியாமல் இந்திய அரங்கில் அம்மணமாய் திரிகிற .. அடிமைகள் கூட்டத்தையும் விரைந்து வீட்டிற்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது.. நல்லதை விதைப்போம்.. நல்லதையே அறுவடை செய்வோம்.. சாதி மதம் எனும் வெறிபிடித்த இழிநிலையை விட்டொழித்து சமநீதியை நிலை நாட்ட உறுதியேற்போம்.. .. இனி .. 56ம் வேண்டாம் ..அடிமாடுகளும் வேண்டாம் .. .. PM (pokkda maker..) .. Aalanci Spm

Tuesday, February 6, 2018

வேசம்கட்டு நடக்கிறது

ரஜினி கமல் இருவரும் மத்திய அரசை விமர்சனம் செய்வதில்லை மாறாக மாநில அரசை கடுமையாக விமர்சனம் செய்வதோடு மாநிலத்தில் இதுவரை ஆண்ட கட்சிகளால் மாநிலமே கெட்டுகுட்டிச்சுவரானதைப்போல ஒரு பிம்பத்தை கட்டியெழுப்பமுயல்கிறார்கள் .. ஒருவர் நேரடியாக ஆன்மீகம் என்றும் மற்றொருவர் நாத்திகர் போர்வையிலும் வருகிறார்கள்.. அரிதாரம் பூசிய இருவரின் செயல்களும் தங்களை உத்தமர்போல் காட்டுகிற தோரணையை பொய்யால் ஆனதென்பதை ..மறந்து போகிறார்கள்.. இவர்களின் முகமூடி கிழிந்து உண்மை சொரூபம் வெளியே தெரிகிறது.. .. முதலில் இதற்குமுன் தமிழகத்தை ஆண்டவர்களின் செயல்பாடுகள்பற்றி பார்ப்போம்.. ஆரம்பகால காங்கிரஸ் ஆட்சியென்பது தேசியநீரோட்டத்தோடு பிணைந்ததென்றாலும் முழுக்க முழுக்க பார்பனர்களின் ஆதிக்கம் மட்டுமே செல்லுபடியானது அவர்களை மீறி எதையும் செய்யமுடியாத சூழல் தான் இருந்தது.. நல்லாட்சி என்பதன் பொருள் அப்போதெல்லாம் வலுத்தவர்களின் செல்வாக்கை மேம்படுத்துதல் ஒன்றே குறிக்கோளாக இருந்தது அதையும் மீறி சில திட்டங்களின் பலன் சாமானியனுக்கு கிடைத்தது..ஆனால் முழுமையான அங்கீகாரம் என்பது எட்டாகனியாகவே இருந்தது கல்வி வேலைவாய்ப்புகளில் நம்மவர்களின் பங்கு மிக மிக குறைவு.. .. பார்பன ஆதிக்கத்திலிருந்து அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டி காமராஜரை பெரியார் முன்னிறுத்தினார் அவரும் கல்வி சமூகமேம்பாடு போன்றவற்றில் அதிகவனம் செலுத்தினாலும் அது திராவிட ஆட்சியின் தொடக்கமாக கொள்ளவேண்டும் .. ஆனால் முழுஅளவிலான பங்களிப்பு கிடைக்க வழக்கம் போல் நிறைய இடையூறுகள் இருந்தன .. அண்ணாவின் ஆட்சி திராவிடத்தின் கொள்கைக்கு கிடைத்த அங்கீகாரமென்றாலும் அவருக்கு காலம் வாய்ப்பை வழங்கவில்லை.. அதன் பின் பொறுப்பேற்ற கலைஞர் ஆட்சியென்பது ..சமநிலையை நோக்கியதாக பயணித்தது.. அவரது திட்டங்கள் தொலைநோக்கை கொண்டிருந்தது பகுத்தறிவு பகலவன் பெரியாரை தாங்கி நின்றது.. ஆனால் வழக்கம் போல் பாசிசம் தன் சூழ்ச்சிவலையை கையிலெடுத்து கவர்ச்சியை அரிதாரத்தை நம்பி எம்ஜிஆரை கொண்டுவந்தது எப்போதும் சட்டென்று உணர்ச்சிவயபடும் தமிழனின் பலவீனத்தையும் சட்டென்று நம்பிவிடும் அவன் இயல்பையும் பயன்படுத்தி திராவிட அரசியலுக்கு அல்லது திராவிட செயல்பாட்டிற்கு தடைபோட நினைத்தது சிலவற்றை செய்தாலும்... திராவிடத்தை மறந்த அல்லது ஒதுக்கி ..எம்ஜிஆராலோ பின் வந்த ஜெயலலிதாவாலோ இங்கே நிற்கமுடியாதென்பதை உணர்த்தியது.. திராவிட ஆட்சியென்றாலே கலைஞரின் ஆட்சியை மட்டுமே கணக்கில் கொள்ளவேண்டும்.. அவரின் திட்டங்கள் இன்று இந்தியாவிற்கே தேவைபடுகிறது.. சமகால அரசியலின் புதிய ஆத்திசூடியை வகுத்து தந்திருக்கிறார் .. அதை பின்பற்றினால் மட்டுமே இந்தியா மிளிருமென காலம் கடந்து தெரிந்திருக்கிறது காலமெல்லாம் எதிர்த்து வந்த சித்தாந்தவாதிகள் வேறுவழியின்றி கலைஞரின் பழைய பாடதிட்டத்தை மொழிபெயர்க்கிறார்கள்/ புதுப்பித்து வெளியிடுறார்கள் .. .. இன்று முகமூடி அணிந்துவரும் நடிகர்கள் முதலில் அரசியலை கற்றுக்ககொள்ளட்டும்.. தமிழகம் தாழ்ந்து போனதைப்போல பேசி திரிவதை முதலில் விடவேண்டும்.. ஜெயலலிதா மற்றும் எடப்பாடி அரசு காலம் தந்த படிப்பினை .. பணம்,பொய் பிரச்சாரம்,ஊடகங்களின் தொடர் ஆதரவு இவை செய்த அலங்கோலத்தை அவசரகதியில் நம்பியதன் விளைவு ..எதையும் சீர்தூக்கி பார்த்து ஆய்ந்தறியாமல் சட்டென்று நம்பியதன் விளைவு மிகப்பெரிய விலையை தரவேண்டியதாயிற்று .. இனியும் முகமூடி அணிந்துவரும் இந்த அரிதார புருஷர்களை நம்பி அவர்களின் கவர்ந்திழுக்கும் பேச்சில் நடை உடை பாவனையில் விழுந்துவிடாமல்.. சாதி மத அரசியலை முன்னெடுப்போரின் பினாமிகள் இவர்களென்பதை உணர்ந்து கொள்ள இவர்களின் மௌனம் நமக்கு உணர்த்துகிறது .. .. யார் இவர்கள் இவர்களின் நோக்கமென்ன என்பதும்.. திராவிட அரசியலுக்கு எதிராக பாசிச சிந்தனை கொண்ட ஆரியர்களின் மறுஉருவமாய் . கவர்ந்திழுக்கும் முகமூடியோடு வலம் வருகிறார்கள்... இனத்தின் மீதான மொழி கலாச்சார பண்பாட்டு மீதான மறைமுக தாக்குதலுக்கு இவர்கள் அரிதாரம் பூசி மக்கள் முன் நடிக்க வருகிறார்கள்.. வெள்ளித்திரை புறக்கணிக்கும் காலத்தில் வெளித்திரையில் வந்து இவர்கள் வேசம் கட்டுகிறார்கள்.. .. #எச்சரிக்கை.. .. Aalanci Spm

Monday, February 5, 2018

மத கிறுக்கர்கள்

இந்து கோவில்கள் இருக்குமிடத்தில் பிற மதத்தவருக்கு கடைகள் வழங்க அனுமதிக்ககூடாது.. தமிழிசை.. இதை தமிழிசை வைத்து சொல்ல வைத்ததில் தான் அவர்கள் சூட்சமம் அடங்கியிருக்கிறது.. வசவுகளும் கேலிகளும் எதிர்ப்புகளையும் தமிழிசை போன்றோருக்கு தருவது ஈராயிரம் ஆண்டாய் நடப்பதுதானே.. .. நிறைய இந்து கோவில்களுக்கு சொந்தமான இடத்தில் கல்வி நிலையங்களை பார்பனர்கள் மிக சிறிய தொகையை கொடுத்து கோடிக்கணக்கான சொத்தை கைவசம் வைத்திருக்கிறார்களே.. மயிலாப்பூர் கிளப் பாரதி வித்யாலயாவும் கோவில் நிலத்தில் வாடகை தராமல் ஏய்த்தது பலகோடிகள்.. இதெல்லாம் ஏன் "இந்து" என சொல்லிதிரியும் ராசாக்களுக்கு தெரிந்தும் ஏன் வாய்திறப்பதில்லை.. .. காலகாலமாய் இந்து கோவில் இடத்தில் பிற மதத்தவரும் முஸ்லிம் தர்கா பள்ளிகளுக்கு சொந்தமான கடைகளையும்.. நிலத்தை இந்துக்களும் மிக சிறிய தொகை தந்து ஒத்திக்கு வைத்திருக்கிறார்கள் அதேபோல கிருஸ்துவ ஆலயங்களில் இடத்தில் கடைகளும் நிலங்களை பிற மதத்தவரும் பயிச்சல் செய்கிறார்கள்.. அங்காங்கே வசிக்கும் மக்கள் நிலங்களை கடைகளை எடுத்து நடத்துவது காலகாலமாய் இந்தியாவில் எங்கும் நடப்பதுதான்.. தமிழகத்தில் எதாவது ஒரு பிரச்சனையை கையிலெடுத்து மதகலவரத்தை விதைக்கலாமென்று நினைக்கும் பாஜக சங்பரிவார்கள் தினம் தினம் ஒரு பிரச்சனையை கையிலெடுக்க இங்கே உடனேயே அதை கிண்டலாக்க படுகிறது .. .. எப்போது பாஜக நம்மவர்களை களம் இறக்குவார்கள் எப்படி மக்களின் எதிர்வினை Reaction இருக்கிறதென்று பார்ப்பார்கள். எந்தவிடயமாக இருந்தாலும் பலியாடுகளைப்போல பொன்னர் தமிழிசை வானதி போன்றவர்கள் முதலில் கருத்து சொல்வதும் எதிர்வினை கொடூரமாகவோ கேவலமாகவோ அல்லது நையாண்டியாகவோ இருக்கும் .. ஏதேனும் குழப்பம் விளைவிக்கலாமென எவ்வளவு முயற்சிகள் அதற்கு பலியாடுகளாய் தமிழிசைகள் .. ஏதேனும் அறிவுபூர்வமாக பேசுவார்கள் அவர்களோடு விவாதிக்கலாமென்றால்.. பக்கோடா விற்பது தான் அவர்களுக்கு தெரிந்திருக்கிறதே தவிர.. வேறொன்றும் இல்லை.. மதத்தால் கலவரம் சாதி சொல்லி பிரிக்கலாமென பார்க்கும் போதெல்லாம் அதி அறிவுடைத் தமிழ் சமூகம் பார்பனர் பார்பனர்அல்லாதோர் என்ற நிலைக்கு கொண்டு போவதும் அசிங்கபட்டு நிற்பதும் பாஜகவிற்கு புதிதல்ல.. .. தனியார்மயமாக்கும் கோவில்களில் என்ன நடக்கிறதென்று நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.. தீட்சதர்கள் கையிலிருந்த சிதம்பரம் கோவில் ₹30,000 என வரவு வைத்ததும் சிலகாலம் கலைஞர் ஆட்சியில் அறநிலையத்துறை எடுத்துக்கொண்ட போது ₹40 லட்சமாக உயர்ந்ததும் நாடறிந்த சிதம்பர ரகசியம் தான்.. எதற்காக கோவிலை கேட்கிறார்களென புரியாமல் இல்லை.. எதற்காக கோவில் கடைகளை பிற மதத்திற்கு தரகூடாதென சொல்வதிலும் இவர்களின் நோக்கம் நமக்கு புரியும்.. .. தமிழகம் இங்கே வேற்றுமைகளில் கலகம் செய்யமுடியாது .. கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சொல்லும் எச்.ராசா முதலில் சிதம்பரம் கோவிலில் தீட்சகர்களின் ஆக்கிரமிப்பை அகற்றி அதிலிருந்து தொடங்கலாம்.. முதலில் மதநல்லிணக்கத்திற்கு இடையூறு செய்யும் எச்.ராசா... தமிழிசை வகையறாக்களை இந்திய அரசியல் சட்டத்தின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்களென பிணையில் வரமுடியாதவாறு தமிழக அரசு வழக்கு பதிவு செய்யவேண்டும்.. அதுவே நாட்டிற்கு நல்லது .. #மத_கிறுக்கர்கள்.. .. Aalanci Spm

Sunday, February 4, 2018

இது..தமிழகம் கவனம் ..

இந்து கோயில்களை காப்பது நமது கடமை. இந்துக்களே வீதிக்கு வாருங்கள் எச் ராஜா.. எப்படியாவது எந்த முறையிலாவது பிரச்சினை ஏற்பட்டு விடாதா ..இதனால் நமக்கு அரசியல் ரீதியாக நன்மை (ஆதாயம்)கிடைக்காதா என நினைத்து கையிலெடுத்திருப்பது தான்.. இந்து கோவிலை காப்போம்.. . இந்து கோவிலை நிர்வகிக்க இந்துக்களிடம் ஒப்படையுங்கள் என்கிறார்.. இப்போது இந்துக்கள் தான் நிர்வகிக்கிறார்கள்... பிற மதத்தை சேர்ந்த அதிகாரிகள் அறநிலைய துறையில் இல்லை.. பின் யாரை சொல்கிறார்.. கோவில் நிர்வாகத்தை தனியார்மய படுத்தவேண்டுமன்கிறாரா.. அல்லது பாப்பான்களே நடத்த வேண்டுமென்கிறாரா. அவர்களுக்கு (பாஜக ஆர்எஸ்எஸ்) கோவில் அல்ல பிரச்சனை இதை சொல்லியாவது கலவரத்தை உண்டு செய்வது அதன் மூலம் குளிர்காயலாம் அதற்கான எல்லா முயற்சிகளையும் திட்டமிட்டு எடுத்து வருவது தெளிவாக தெரிகிறது. .. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சொற்சொடரை கூட மாற்றவேண்டும்.. இந்து கோவில்களில் இந்துக்கள் அர்ச்சகராகலாமென்று இனி சொல்லவேண்டும் அப்போதுதான் அவர் யாரை இந்து என்கிறாரென்று தெளிவாக தெரியும்.. அவர்கள் எடுக்கும் அதே பாணியை நாமும் கையாளவேண்டும் அரசியல் சட்டம் யாரையெல்லாம் இந்து என அடையாளம் காட்டுகிறதோ அவர்கள் கோவிலில் வழிபடுதலை.. பூஜை செய்வதை கர்ப்பகிரகத்தை சுற்றுவருவதை கோவிலை நிர்வகிக்க தகுதியுள்ளவர் என்று சொன்னால் தெரியும் இவர்கள் யாருக்காக பேசுகிறார்கள் யாரை இந்து என்கிறார்கள் என்று விளங்கும் எச்.ராசா பறையனும் பள்ளனும் கோவிலுக்கு வரகூடாது அய்யர் அளவிற்கு உயர்ந்து போகமுடியாது .. அவர்களை அனுமதித்தால் அய்யர் தாழ்ந்து போவாரென பேச இங்கே அனுமதித்திருக்கிறோமே அப்போதே செருப்பை வீசியிருந்தால் துள்ளல் குறைந்து போயிருக்கும் .. முதலில் எச்.ராசா போன்ற கிருமிகளை கைதுசெய்து மக்களிடையே ஒருவித பதட்டத்தை வதைக்கிற செயலுக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக அரசு பலவீனமானவர்களால் நடத்தபடுவதால் ராசா போன்ற விசகிருமிகளின் கூச்சல் அதிகமாக கேட்கிறது.. தங்களை தேசபக்தர்களாக அறிவித்து கொண்டு தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற இவர்கள் தான் தேசத்தின் விரோதிகள் சாபகேடுகள்.. உண்மையான தேசத்தின் மீதான அக்கறை என்பது மக்களை மதத்தை கொண்டும் சாதியை சொல்லியும் பிரித்து வைப்பதல்ல.. பாப்பான் மட்டுமே வாழ வழிசெய்யும் செயல் இந்திய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பிற்கு சேதாரம் தரும்.. இந்து v/s இந்து அல்லாதோர் எனச்சொல்லி பிரிக்க நினைக்கும் சூழ்ச்சி திருப்பியடிக்கிறது.. பார்பனர்கள் v/s பார்பனர் அல்லோதார் என்ற நிலையை நோக்கி தமிழகத்தில் நகர்த்தபடுகிறது.. ஆம் இங்கே ஆரிய திராவிட போர்தான் நடக்கும்.. ராஜா எவ்வளவு தான் கூவினாலும் தமிழக மக்கள் இதனைத் காது கொடுத்து கேட்கும் மனோநிலையில் இல்லை.. இதுதான் திராவிடம் செய்தது..இங்குதான் பெரியார் வெற்றிப்பெற்றிருக்கிறார்.. இங்குதான் சமநீதி எனும் கொள்கை..சுயமரியாதை எதையும் ஆய்ந்து அறிவேற்பதை ஏற்கும் தெளிவு வெற்றியடைந்திருக்கிறது.. பாஜகவும் சங்பரிவார்களும் சில விசமிகளை கையிலாக்கி கலவரத்தை நடத்தலாமென நினைப்பதும்.. அர்ஜூன் சம்பத் போன்ற அரைகுறைகளை களத்தில் இறக்கிவிட்டு இவர்கள் தப்பிக்க நினைக்கிறார்கள்..இவர்களை இனம் கண்டு விரட்டியடிப்போம்.. செல்லாத அரசை கையிலாக்கி கருத்து சுதந்திரத்திற்கெதிரான நடவடிக்கையைவமேற்கொள்கிறார்கள் ... எச்சரிக்கை நாங்கள் அதே பாணியில் திருப்பியடித்தால் இருக்குமிடமே தெரியாமல் போவீர்.. .. இது தமிழகம் கவனம் கொள்க.. .. Aalanci Spm

Saturday, February 3, 2018

இனி.என்ன வேண்டும்

என்ன வேண்டும்.. இனி.. .. இன்றைய நிலையில் எங்கும் பரவி கிடக்கும் கசடுகள் ..ஆம் அரசியலில் அழுக்கை கொட்டுவிட்டு அதை சந்தனமென சொல்லிதிரியும் நிலை இது இந்தியாவிற்கு ஏற்பட்ட கருப்பு பக்கங்கள்.. இல்லாத ஒன்றை சொல்லி மரியாதைக்குரிய மன்மோகன் சிங் அரசை வீட்டுக்கு அனுப்பியதன் விளைவு .. எங்கும் அழுச்சாட்டியம்.. விவரகேடுகள் கையில் நாடு சந்திசிரிக்கிறது .. நான்காண்டு முடிந்தும் இன்னும் தெளிவான பாதை தெரியவில்லை .. மதத்தை கையிலெடுத்தால் நாடு எப்படி சீரழியுமென அண்டை நாடுகளை கண்டும் படிப்பினையில்லாமல் மதத்தை கொண்டாட அது மதம்பிடித்தலைய .. நாடு கேவலமான பாதையில் செல்கிறது .. .. பொய்களாலேயே ஒரு அரசாங்கம் தன் பதவிகாலத்தை கழிக்கமுடியுமென நமக்கு புரிய வைத்திருக்கிறார்கள் தலைசிறந்த பொருளாதாக நிபுணரை வீட்டுக்கு அனுப்பியதன் விளைவை நாடு அறிந்து கொள்ள நான்காண்டு ஆகியிருக்கிறது.. 2ஜி என சொல்லி மக்களை முட்டாளைக்கிய ஊடகங்கள்.. இன்னமும் தெளிந்தபாடில்லை தாங்கள் செய்த தவறின் பலனை மக்கள் அனுபவிக்க தொடங்கிய போது.. அவன் விடுகிற ஓலம் .. இவர்கள் காதுகளுக்கு கேட்கவில்லை.. ஒரு நாட்டை கட்டமைப்பதில் நன்முறைபடுத்துவதில்லை மிக முக்கிய பங்கை வகிக்க வேண்டிய ஊடகம் .. காசொன்றோ குறிக்கோளாய் செயல்பட்டதன் விளைவு நாடு கெட்டு குட்டிசுவராய் கிடக்கிறது.. விசயமில்லாதவர்கள் வாய்ஜாலம் செய்கிற வித்தைகாரர்கள் பேசுவதை நம்பிய மக்கள் தெளிவடைய தொடங்கியதன் எதிரொலிதான் இடைத்தேர்தல் முடிவுகள்.. ஆளும் மாநிலத்திலேயே தோல்வியை குறித்திருக்கிறார்கள் மக்கள்.. .. தமிழகம்.. நல்லதொரு ஆட்சியை இதே 2ஜியை சொல்லி வீட்டுக்கனுப்ப வரிந்துகட்டி வேலைசெய்தவர் யாரென்று கவனித்திருந்தால் இன்றைய அவலங்களை மாநிலம் சந்திருக்கிருக்காது.. குறிப்பாக பார்பனர்களின் குரு சோ பெரும் முயற்சி செய்து ஆடிய ஆட்டத்தை புரிந்துக்கொள்ளாமல்.. எந்நிலையிலும் பாப்பானை நம்பாதே என்ற பாவேந்தர் சொல்லை எண்ணிபார்க்காமல் திமுகவை வேண்டாமென வைத்ததின் விளைவு .. சொரணையற்றவர்கள் கையில் தமிழகம்.. உண்மையை விளங்கி கொள்ளமுடியாத அவசரகோலம் ..சற்றென்று உணர்ச்சிவயப்பட்டு முடிவெடுக்கிற காலமெல்லாம் தமிழகம் துன்பத்திலேயே வீழ்ந்திருக்கிறது.. திமுக எப்போதெல்லாம் ஆட்சியில் இல்லையோ அப்போதெல்லாம் மறைமுகமாகவோ நேரடியாகவோ பாசிசம் தலைதூக்கும்.. இந்த மண்ணின் பெருமைகள் ஆழத்தோண்டி #கீழடியில் புதைக்கப்படும் .. நிறைய நிறைய பார்த்தாயிற்று தமிழர் நலன் மீது சிறுதும் அக்கறை இல்லாதது மட்டுமல்லாமல் அவனை இழிவுபடுத்துகிற அவனை தலைகுனிய வைக்கிற கேடுகெட்ட ஆட்சியை விரட்டுவதொன்றே வரும் காலங்களில் தமிழ் தமிழர்நலன் தமிழர் பண்பாடிற்கு பாதுகாப்பு.. .. மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிமாற்றத்திற்கு நாள் குறிக்க தொடங்கியிருக்கிறார்கள் மெல்ல தெளிந்து வைகறை வெளிச்சம் படர தொடங்கும் சமிஞ்சை தெரிகிறது.. மேகம் சூழ்ந்த வானமில்லை.. தெளிவாய் தெரிகிறது .. இடையிடையே சில கருப்பாடுகள் திசைமாற்ற முயற்சிக்கும் .. அவைகளை கண்டறிந்து கசாப் கொடுக்கவேண்டும் அந்த பணியைதான் தளபதி செய்துக்கொண்டிருக்கிறார்.. "உங்கள் புகார் உண்மையாக இருந்து நடவடிக்கை இல்லை என்றால் இந்த இயக்கத்தை நடத்துவதற்கு எனக்கு தகுதி இல்லை.. என்ற சொல் சிலரை தவறான பாதையிலிருந்து நேராக்கி சரியாக பயணிக்க செய்யும்.. செப்பனிடும் பணி சிறக்கும்.. ஒளி பிறக்கும் வழி கிடைக்கும்.. நன்று செய் அதே இன்றே செய்.. .. #தளபதி .. Aalanci Spm