Sunday, February 19, 2017
பெரியாரை..நேசிக்கிறோம்
கீ.வீரமணி குற்றச்சாட்டுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது . அதை அவருக்கிட்டயே போயி கேளுங்க .
மானமிகு தளபதி ஸ்டாலின்..
இதை படிக்கிற போது கொஞ்சம் கோபம் கூட தோன்றலாம்.. ஆசிரியரை சசிகலாவிற்கு சமமாக வைத்திருக்கிருக்கிறாரோ என்று கூட தோணும்.. ஆனால் புறமிருந்து அம்பு வந்து தாக்குகிறபோது வரும் வலி பாருங்கள் அந்த வேதனை மனதில் ரணத்தை தீராத வலியை ஏற்படுத்தி மாறாத வடுவாகும்..
..
எல்லோரும் திமுகவை குறைகூற ஆசிரியரின் விமர்சனம் ஒரு காரணியாக அமைந்தது.. இரகசிய வாக்கெடுப்பு மற்றொன்று ஒருவாரகாலம் கழித்து நடத்தலாம்.. முதல்முறை ஒத்திவைத்தபிறகு திரு.ஸ்டாலின் காங்கிரஸ் உறுப்பினர் முஸ்லீம்லீக் அபுபக்கர் எல்லோரும் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை திரும்பபெற்றுக்கொள்கிறோம்.. ஆனால் சிலதினங்கள் கழித்து சபையை நடத்துங்கள் என்றதை வசதியாக ஊடகங்கள் கூட மறைத்து திமுக மீது பழியை போட முயற்சிக்கிறது..
முதலில் சமூகஆர்வலர்கள் ஊடகத்துறையினருக்கு ஒரேயொரு கேள்வி குற்றவாளியை வானுயுர புகழ்ந்து அவரின் வழிகாட்டுதல் படி அரசு இயங்குமென்றால் அதைவிட நேரடியாக சசிகலாவிற்கே பதவியை தந்திருக்கலாமே..
முதல்வர் முதல் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் வரை இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக ஏன் இறையாண்மைக்கு எதிராக குற்றவாளிக்களுக்கு வக்காலத்து வாங்குவது உங்கள் மனசாட்சியை உறுத்தவில்லையா.. அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது என்பது தண்டனை கைதியை அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதை ஜனநாயகம் என்பீர்களேயானால் இந்த நாட்டிற்கு சர்வாதிகாரமே தேவை..
..
ஆசிரியருக்கு சிறிய தகவல் தயை கூர்ந்து சமூகப்பணிகளை மட்டும் பாருங்கள் சசிகலாவை ஆதரித்தபோதே .. அதற்கு தாங்கள் சொன்ன காரணம் பார்பனர்கள் ஓபிஎஸ்ஸை ஆதரிக்கிறார்கள் என்பதால் நாம் எதிர்க்கவேண்டும் என்ற பெரியாரின் சொல்லை பயன்படுத்தினீர்கள். பெரியார் சசிகலா போன்ற கிரிமினல்களுக்கு துணைபோக மாட்டார்.. சமூகநீதிக்கெதிரான பார்பனர்களின் பார்வையைதான் கடுமையாக எதிர்தாரே தவிர.. இது போன்ற செயல்களை பெரியார் எப்போதும் விரும்பியதில்லை.. சசிகலாவிற்கு பெரும்பான்மை இருப்பதாலோ.. அல்லது அவர் இடைசாதிகாரர் என்பதாலோ ஆதரிக்கவேண்டுமென்பதில்லை..
திமுகவின் நடவடிக்கைகளில் சில தவறுகள் ஆர்வமிகுதியில் ஏற்பட்டது சபாநாயகரின் நாற்காலியில் அமர்ந்ததெல்லாம்.. விமர்சனத்திற்குரியதென்றாலும் சசிகலாவெல்லாம் அமர்ந்த நாற்காலி என்கிற போது அது பெரியவிடயமாக தெரியவில்லை.. ஆர்வகோளாறில் சிலர் செய்தவற்றிக்கு ஸ்டாலின் சபாநாயகரிடம் வருத்தம் தெரிவித்தபிறகும் விமர்சிப்பது நாகரீகமானதல்ல..
மரம்தரும் கனிகளில் ஒன்றிரண்டு சுவை குறையலாம் ஆனால் அது மரத்தின் தவறில்லை..
சீதோஷ்ணநிலை, நீர்,காலம்,பருவம்.., இவைகளே பழத்தின் சுவையை தீர்மானிக்கிறது..
..
திமுக செயல்பாட்டை குறைகூறுவதாக எண்ணி ஜனநாயக படுகொலையை Democratic Massacre நியாயபடுத்துவது மகா கேவலம்..
..
பெரியாரை நேசிப்பதால் சொல்கிறோம் தங்களில் செயல் வெறுப்பை தருகிறது
#disgusting..
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment