Saturday, February 25, 2017

தலைமை செயலரின்.. செயல்

எதிர்க்கட்சி தலைவர் மாண்பிமை ஸ்டாலின் அவர்கள் தலைமைசெயலர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி எனஇறுதிதீர்ப்பில் சொல்லப்பட்ட.. ₹100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட செல்வி ஜெயலலிதாவின் படங்கள் அரசு விளம்பரங்களிலோ அல்லது அவர் பெயரில் திட்டங்கள் நடைமுறை படுத்துவதோ இந்திய அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிரானது..அவரது பிறந்தநாளை அரசே கொண்டாடியது சட்டப்படி குற்றம் ..அதை தலைமைசெயலரின் பெயரில் விளம்பரம் செய்ததும் குற்றம்.. என நேரில் விளக்கி கடிதம் அளித்திருக்கிறார்.. அதோடு இதுபோன்ற இனி நடக்குமெனில் சட்டரீதியாக வழக்கு தொடரப்படும் என எச்சரித்திருக்கிறார்.. .. தலைமைசெயலராக இருக்க திருமதி கிரிஜா வைத்தியநாதன் அருகதையை இழக்கிறார்.. உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என தெரிந்தும் அவரது படத்தை தன் கையில் தூக்கிக்கொண்டு நிற்பது தவறு என தோன்றவில்லையா.. இந்திய அரசிலமைப்புக்கு எதிராக செயல்படுபவர் உயரிய பதவில் இருக்க தார்மீகமாகவும் சட்டப்படியும் தகுதியிழக்கிறார்.. தனிப்பட்ட முறையில் கிரிமினல் ஜெயலலிதாவோடு கரிசனம் தோன்றியிருக்கலாம் அது மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்து ஆர்ப்பார்ட்டமாய் விழா எடுப்பது எந்த விதத்தில் நியாயம்.. திருமதி கிரிஜா அவர்களை பதவிநீக்கம் செய்வதுதான் சரி.... .. அரசை இயக்குபவர்கள் அறிவிழந்து ஏதோவோரு ஆசையில் சட்டத்தை அறியாமல் செய்கிறார்கள் என்றால் இந்திய அரசுப்பணியில் நீண்டகாலம் அனுபவம் கொண்டிருக்கும் தலைமைசெயலராக பதவி உயர்வை குறுகிய காலத்தில் பெற்றிருக்கும் கிரிஜா அவர்கள் அரசுக்கு விளக்கியிருக்கவேண்டாமா..அல்லது எனது பேச்சை கேட்கவில்லை இந்த அரசு என விளக்கம் அளித்திருக்கவேண்டாமா.. அப்படி அறிக்கையை உள்துறைக்கு அனுப்பியிருந்தால் இந்த அரசு செயல்பட ஒரு நொடி கூட அனுமதியில்லை.. இதையெல்லாம் ஆலோசித்துதான் எதிர்க்கட்சி தலைவர் நேரடியாகவே தலைமைசெயலரை சந்தித்து அவரின் தவறுகளை கவனித்திற்கு கொண்டுவந்திருக்கிறார்.. இது தெரியாத கூமுட்டைகள் அரசியல் அறிவிலிகள் .. மறைந்த ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூச்சலிடுகின்றன.. முதலில் கிரிமினலை புகழ்ந்து கொண்டிருந்தாலே சட்டப்படி கட்சியின் அங்கீகாரத்தை கூட ரத்து செய்யவேண்டுமென தேர்தல் ஆணாயத்திடம் கேட்கலாம்..ஏனெனில் கிரிமினல்கள் போட்டியிட இந்திய தண்டனைச்சட்டம் கடுமையான விதிகளை தந்திருக்கிறது.. கிரிமினலை புகழ்ந்து கட்சி நடத்துவதும்கூட தவறு என முறையிட எதிர்க்கட்சிகளுக்கு உரிமையும் கடமையும் உள்ளது.. .. கிரிமினல் ஜெயலலிதாவின் பெயரோ புகைப்படமோ அரசிதழ்களிலோ அரசு விளம்பரங்களிலோ இடம்பெறுவது சட்டப்படியான குற்றம்.. என்பதை புரிந்துக்கொண்டு ..சிலர் தளபதியை பார்த்து குரைப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.. ஏனெனில் தளபதி #சூரியபுத்திரன்.. .. #எச்சரிக்கை.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment