Thursday, February 16, 2017
முதல்வர் கனவு..
எடப்பாடி..
நெடுங்குளம் நிகழ்வு நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..
அதை சொல்வதற்கு முன் திருமதி சசிகலாவின் ஆள் அரசாள வந்திருக்கிறார்.. திரு.பன்னீரின் அரசியலை கடந்து பார்பனர்கள் ஒன்று கூடி ஒரே சுருதியில் எதிர்த்தும்.. ஆர்எஸ்எஸ் பாஜக என பாசிச சக்திகள் எப்படியாவது விதையை இந்த மண்ணில் தெளித்து முளைக்க செய்துவிடலாமென எண்ணி காய் நகர்த்தியும்.. தன்னிடமுள்ள பணத்தாலும் தங்களுக்கே உரிய மிரட்டல் பாணியையும் கொண்டு சட்டமன்ற உறுப்பினர்களை.. பட்டியில் அடைத்து வைத்து தனக்கு தரபடாமல் போனாலும் தான் யாரை கை காட்டுகிறேனோ அவரே முதல்வர் என்று அதிக அடிமைகளை அடைத்து வைத்திருக்கிறேன் பார் என எக்காளமிட்டு முதல் சுற்றில் வென்றிருக்கிறார்..
..
சரியா தவறா என்பது இங்கே பார்க்கபடமாட்டாது இந்திய ஜனநாயகம் எண்ணிக்கையிலானது இங்கே எப்போதும் பெரும்பான்மையினர் எதிர்க்கிறவர்.. ஆட்சியில் அமரலாம்.. ஒருவர் 32% விழுக்காடு பெற்றிருந்தாலும் மீதமுள்ள 68% விழுக்காடு வாக்கு பலரும் பங்கிட்டு கொள்கிறார்கள்.. கட்சிகள் வாங்குகிற சதவிகிதத்திற்கு தகுந்தாற்ப்போல் பிரதிநிதிகளை நாம் அனுப்புவதில்லை.. இங்கே எண்ணிக்கை மட்டுமே பேசும் ஜெயிக்கும்.. அதனால் தான் இங்கே
பலமுறை தகுதியில்லாத தலைமை வந்துவிடுகிறது..
..
சரி நெடுங்குளத்தை பற்றி பேசுவோம்..
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர்கள் வெட்டபடுகிறார்கள்.. ஈட்டியால் குத்தி குடல் சரிந்து கிடக்கிறது.. வெட்டி குத்தி கிழித்தவர்கள் பங்காளிகள்.. எட்டுப்பட்டியும் கலவரம் பற்றிக்கொள்கிறது.. குத்தி கொன்ற இரண்டுபேர் தலைமறைவாக மேற்கு தொடர்ச்சி மலையில் ..
வழக்கு விசாரணை பஞ்சாயத்து என அல்லோலப்படுகிறது.. அப்போது எம்ஜிஆர் அமைச்சரவையில் மந்திரியாக இருந்த முத்துசாமி சமாதானம் செய்து வைக்கிறார்.. பிரச்சனை தீர்க்கப்பட்டு ஒளிந்திருந்த இளைஞரகள் ஊருக்குள் வருகிறார்கள்.. அந்த இளைஞரில் ஒருவர்தான்..
இன்று தமிழகத்தை தலைமேற்று வழிநடத்த வந்திருக்கும்.. நமக்கெல்லாம் முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் ..
எடப்பாடி பழனிசாமி அவர்கள்..
..
#மான்புமிகு..
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment