Monday, February 20, 2017

தளபதி...

தளபதி.. மிக பக்குவப்பட்ட பேச்சு.. மிக தெளிவாக மிகவும் நாசூக்காகவும் பேசினார் கிரிமினல்களின் கையில் நாடு போயிருக்கிறது அதை எல்லோரும் சேர்ந்து எதிர்க்கவேண்டும் என்ற போதே அவருக்குள்ள அக்கறையை பார்க்கமுடிந்தது.. ஆசிரியர் பற்றிய கேள்விகளுக்கு நான் மதிக்கிற ஒருதலைவர் என்ற சொன்னதின் மூலம் உயர்ந்துநிற்கிறார்.. அதைவிட வைகோவை ஞானி என்றழைத்து யாரை எங்கே வைக்கவேண்டுமென்று தெரிந்துவைத்திருக்கிறார்.. தன் கட்சியை சார்ந்தவர்கள் சபாநாயகர் இல்லாத போது அவரின் #சிம்மாசனத்தில் அமர்ந்ததை கண்டித்ததோடு இதுபோன்று இனி நடக்ககூடாது என எச்சரித்திருக்கிறேன்..என்றார்.. ஒருதலைமை எப்போது கண்டிப்போடு நடந்துக்கொள்ள வேண்டுமென்று அறிந்து தலைவராக உயர்ந்து நிற்கிறார். .. சட்டசபையில் நடந்ததைப் பற்றி விளக்கும் போது ஒன்றை சொன்னார்... அதிமுக மந்திரி ஒருவரே எங்களை செருப்பால் அடித்தாலும் நாங்கள் எந்தவித எதிர்ப்பையோ கோவத்தை காட்டாமல் அமைதியாகதான்,இருந்திருப்போம் என்று சொன்னதை மேற்கோள் காட்டினார்.. இதிலிருந்தே அவர்கள் எப்படியேனும் என்னநடந்தாலும் அமைதியாக இருக்கவேண்டுமென்பதில் குறிப்பாக உணர்வற்ற பிண்டத்தைப்போல எஜமானின் விசுவாசமாக வாங்கிய காசிற்கு சரியாக நடந்துக்கொண்டிருக்கிறார்கள்..இந்துராம் சொன்னதைப்போல எதற்கெடுத்தாலும் துள்ளிகுதிப்பவர்கள் அமைதியாக இருந்தார்கள் கோடிகணக்கில் பணமும் தங்கமும் வாயடைத்திருக்கிறது.. .. திமுக இனி சட்டபோரட்டத்தை கொள்வதும் மக்களிடையே இந்த கிரிமினல் சசிகலாவின் ஆலோசனையில் நடைபெறும் ஆட்சியை எடுத்து சொல்லவேண்டும் மக்கள் மனதில் சசிகலா மீதான வெறுப்பை அதிமுக மீதான மக்களின் எரிச்சலை மங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்..சட்டரீதியான போராட்டத்தை .. அறவழி போராட்டத்தை மிக வேகமாக கையிலெடுக்கவேண்டும்.. இன்னொன்றுமிருக்கிறது.. கிரிமினல் ஜெயலலிதா படத்தை அரசு அலுவலங்களில் பயன்படுத்த தடைவாங்கவேண்டும்.. சசிகலாவையும் ஜெயலலிதாவையும் இனி கிரிமினல் என்ற அழைக்கவேண்டும் அதுதான் சட்டப்படியானதும் கூட..சரியும்கூட.. .. இனிதான் ஆட்டமே இருக்கிறது.. #சலங்கைகட்டிஆடுவோம்.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment