Saturday, February 4, 2017

தப்பாட்டம்..

முதல்வர் பதவி.. சசிகலா முதல்வராக போவதாக வரும் செய்திகளில் எந்தளவு உண்மையென தெரியவில்லை.. அப்படி முதல்வரானால் ஒரு வகை ரப்பர்ஸ்டாம்பாகதான் ஆட்சி நடத்துவார்.. .. பீகாரில் நாம் ஏற்கனவே பார்த்ததுதான்.. லல்லுபிரசாத் யாதவ் தன்மனைவி ரப்ரிதேவியை முதல்வராக்கினார்.. headlines today என்று நினைக்கிறேன் ஆங்கில சேனல் அவரிடத்தில் பிகாரி மொழியில் பேட்டிக்கண்டது நேரலையில் சில நிமிடங்களே நடந்த உரையாடல் முடிந்தவுடன் செய்தியாளர் சொன்ன வாசகம் இதுதான்.. Clearly, she is a rubber stamp..அது பெரிய அதிர்வலையை /தாக்கத்தை பிகார் அரசியலில் தந்தது.. அதே போல் எந்தயொரு அரசியல் அனுபவமும் இல்லாமல் ஒரு அரசியல்கட்சியின் தலைவரின் வீட்டை பாராமரித்துக்கொண்ட ஒருவர் அதிகார மையத்திற்கு வர முடிகிறதென்றால் கட்சி அரசியல் இயக்கமாகவோ/ கட்சியாகவோ இல்லை மாறாக கம்பெனியைப்போல் நடத்தப்பட்டிருக்கிறதென்றே பொருள்.. .. உள்ளாட்சி கேர்தலில் நீங்கள் பார்த்திருக்கலாம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை நிறுத்தி .. அவர்களை பொம்மையாக்கி அதிகாரம் செய்தார்கள்..அதேபோல் மன்னார்குடி வகையறாக்கள் சசிகலாவை முதல்வராக்கி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறது.. இதை அனுமதிக்ககூடாது.. சிலநேரம் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு சதுரங்கத்தை நடத்தலாம்.. சிலர் கள்ளாட்டம் என்றால் கூட கவலையில்லை.. ஏனெனில் நாட்டுமக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து செயல்படவேண்டிய கடமையும் எதிர்க்கட்சிக்குண்டு.. .. நேர்மையற்ற முறையிலான எதையும் எதிர்க்கலாம் மக்கள் எதிர் களத்தைதான் தந்திருக்கிறார்கள்.. அரசின் எதிர்‍.. அரசு செயல்கள் மக்கள் விரோதமெனில் அதற்கெதிராய் போராடவே மக்கள் பணித்திருக்கிறார்கள்.. புறவழியில் தகுதியில்லாத ஆட்டுமந்தைகளில் ஒரு கருப்பாடு தலையமடுக்க முற்பட்டால் அதை எதிர்த்து எந்த ஆட்டமும் ஆடலாம் சில நேரம் தப்பான ஆட்டம் கூட சரியான முடிவை தரும்.. இதே சசிகலா மக்களை சந்தித்து வந்தால் ஒருவேளை அவரை மக்கள் ஏற்றால் அவரை எதிர்த்து அரசியல் செய்யலாம்.. அதை மக்கள் தீர்மானிக்கட்டும்.. #இனி_சலங்கைகட்டிஆடவேண்டும்.. .. தோழர் ஆலஞ்சி...

No comments:

Post a Comment