Friday, February 17, 2017
மிக மோசமான அரசியலில்
திமுகவின் நிலைப்பாடு..
ஜனநாயகமான முடிவு இது.. இங்கே நிறைய கருத்துக்கள் பரிமாற விவாதிக்கபடுகின்றன.. வாக்களிக்க தேவையில்லை என பேராசிரியர் சொல்கிறார்.. புறக்கணிப்போம் என்கிறார் மகளிர் அணி தலைவர் கனிமொழி.. சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் இரண்டும் விவாதிக்கபடுகிறது.. எதிர்த்து வாக்களித்தால் என்ன என செயல்தலைவர் கேட்கிறார்.. அதை வெகுவான உறுப்பினர்கள் ஏற்கிறார்கள்.. எதிர்ப்பை பதிவு செய்வோமென முடிவாகிறது.. மாற்றுகருத்தும் பரிசிலனை செய்கிற அதே நேரம் சரியானதை முடிவு செய்கிற மிக பெரிய இயக்கமாக /கட்சியாக திமுக திகழ்கிறது அடைத்து வைத்து கையெழுத்து வாங்கி கொண்டு மந்தையைப்போல இங்கே கட்சி நடத்தமுடியாது கலைஞர் காட்டிய வழி இதுதான். என்று பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லியிருக்கிறது திமுக ..
..
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக பழனிசாமி அரசை எதிர்த்து வாக்களுக்கும் இந்திய யூனியன் முஸ்லீம்லீக்கும் எதிர்க்கும் காங்கிரஸ் நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கலாம் .. அதிமுக யாரிடமும் ஆதரவு கோராததால் காங்கிரஸ் எதிர்க்கலாம்.. ஆனாலும் தங்கள் கட்சியினரின் வாக்கே போதுமென்கிறார்.. ஓஎஸ் மணியன்.. ஒன்றுமட்டும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றால் நாடு நல்ல தலைமையை எதிர்பார்க்கிறதென்று பொருள்..மாறாக வெற்றிபெற்றால் சிறைகதவுகள் இந்த ஆட்சியை இயக்கும்.. நிச்சயமாக மிகப்பெரிய அசிங்கம் இது.. ஒரு குற்றவாளி அதுவும் ஊழலுக்காக திருடியதாக அல்லது கொள்ளையடித்தாக.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தவறாக சொத்து சேர்ததற்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் கையில் ஆட்சி இருக்கும்.. அவரின் ஆட்கள் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மிரட்டுவார்கள்.. இதுதான் நடக்கும்..
..
நம்பிக்கை வாக்கெடுப்பில் Trust vote.. மனசாட்சிப்படி சமஉறுப்பினர்கள் வாக்களிப்பார்களா என்பது சந்தேகம் தான் ஏனெனில் முதலில் மிரட்டலும் மூன்று தவணையாக பெருமளவில் பணம் தரப்படுவதாக செய்திகள் வருகின்றன.. இனி நமக்கு எப்படியும் வாய்ப்பு வரபோவதில்லை இருக்கிற வாய்ப்பை ஏன் கெடுத்துக்கொள்வானேன் என எண்ணுகிற மனநிலைக்கு வந்துவிட்டதாலும் கொறடா உத்தரவை மீறி செயல்பட்டால் பதவி போகும் என்பதால் #யாராண்டால் என்ன என்கிற மனோநிலையில் இருக்கிறார்கள்..
..
இறுதிகட்ட பேச்சும் மிரட்டலும் குற்றவாளி கையில் சாரட் வண்டியின் கயிறு அந்த கயிறின் அசைவிற்கேற்ப இந்த அரசு செயல்படும் ..
ஆனால் காலம் இவர்களை மன்னிக்காது..
தமிழகம் கண்ட மிக மோசமான, அரசியல்நெருக்கடியான காலம் நம்மை கடந்துக்கொண்டிருக்கிறது.. நாமோ கையாலாகாதவர்களாய் .. சின்ன சின்ன ஆசைகளுக்காக உரிமையை தொலைத்ததால்.. சிற்றின்பதற்கு ஆசைபட்டு வாழ்வை தொலைத்தவர்களை போல தமிழகம்..இன்று..
..
விடியுமா.. என ஏக்கத்தோடு..
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment