Thursday, February 2, 2017
நாடாளுமன்றம்
யாரை தேர்தெடுத்திருக்கிறோம்..
நாடாளுமன்றத்தில் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா ஜெயலலிதா வெண்கலசிலை பற்றி பேசுகிறார்.. திமுகவின் கனிமொழி எண்ணூர் எண்ணை கசிவைப்பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புகிறார்.. மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்கிறார் ..
..
தமிழகத்திலிருந்து தலைசிறந்தவர்களை மேலவைக்கும் மக்களவைக்கும் அனுப்பி அழகுபார்த்தது.. அண்ணா தொடங்கி இரா செழியன் ,நாஞ்சிலார் ..மாறன் திருச்சிசிவா வரை..
ஆளுமைகள் தங்கள் திறமையை/முத்திரையை நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பதிந்திருக்கிறார்கள்.. கலைஞர் அவர்கள் நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்பும் போது அவர்களின் திறமையை கணக்கில் கொள்வார்.. கலைஞர் அனுப்பிய யாருமே சோடை போனதில்லை.. சில சோபிக்க முடியாமல் போயிருக்கலாம் ஆனால் தங்கள் கொள்கையை நிலைநிறுத்துவதில் மிக தெளிவாக இருந்தார்கள் என்பதும்.. அதே நேரம் சபையின் மாண்பை கேலிக்கூத்தாக்காமல் நாகரீகமாக நடந்துக்கொண்டார்கள் மாநில நலன் என்று வருகிறபோது கட்சியை தாண்டி ஒருமித்த குரலாய் ஒலித்திருக்கிறார்கள்..
..
ஆனால் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு
அதிமுக உறுப்பினர்களின் செயல்கள் கண்ணியமிக்கதாகவோ அல்லது சபை நாகரீகத்தை காப்பதாகவோ இல்லை மாறாக ஜெயலலிதா புகழ்பாடும் பஜனை கோஷ்டிகளாக மாறியது நாளடைவில் யார் அதிகம் புகழ்கிறார்கள் என்பதிலேயே அவர்களுக்குள் போட்டி நடத்தும் அளவிற்கு மாறி கடைசியில் சம்பந்தமே இல்லாமல் பேசி நேரத்தை வீணடிக்கிற வேலை மட்டுமே நடந்தது நடக்கிறது..
..
திமுக காங்கிரஸ் உறுப்பினர்கள்..
அறிவு செறிந்த உரையாடல்கள் மாநில நலன் சமூகநலன் சமூகநீதி.. எதிர்கருத்துடையோர் கூட பதில் சொல்லமுடியாமல் திணறடிக்கும் திறமை.. அதேநேரம் கொள்கை உறுதியாய் தமிழ்நாட்டுக்கு தேவையானதை பிடிவாதமாக பெற்றுதர பெருமுயற்சி .. பிரதமர் அமைச்சர் யாராக இருந்தாலும் துணிவோடு எதிர்க்கும் ..அதேவேளை சரியானதெனில் வரவேற்று .. எத்தனை அழகாய் சோபித்தார்கள்.. ஆனால்..
அதிமுக உறுப்பினர்களில் செயல்களால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது சிலநேரம் பிற மாநில உறுப்பினர்கள் கேலிசெய்து சிரிக்கின்றனர்.. அறிவுடையோரை அனுப்பிய தமிழகம் அறிவிலிகளையும் அனுப்பி தாழ்ந்து நிற்கிறது....
..
மக்களவையில் அனுப்பியவர்களில் ஒருவர்கூட தன் முத்திரையை பதிக்கவில்லை இதுவரை தமிழகத்திற்காக குரல் கொடுக்கவில்லை.. மாறாக ஜெயலலிதா புகழ்பாட மட்டுமே அனுப்பியதாக எண்ணுகிற அவலம்.
.
ஏய் தாழ்ந்த தமிழகமே.. என்றார் அண்ணா
அண்ணாவின் மொழியை கடன் வாங்கி ..சொல்கிறேன்.
#ஏய்_தாழ்ந்ததமிழகமே
இனியேனும் திறமையானவர்களை.. தமிழகத்தின் மானம் காப்போரை ..அறிவால் சபையை அலங்கரிப்போரை.. அனுப்புங்கள்
#அடிமாடுகளை_அல்ல..
..
தோழர் ஆலஞ்சி..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment