Sunday, February 26, 2017

அறிவிலிகள்

ஜெயலலிதா மறைவிற்கு காரணம் கருணாநிதிதான்.. அறிவுலகமேதை தம்பிதுரை.. ஜெயலலிதாவை ஜெயிலுக்கு அனுப்பியதால்தான் செத்தார் என்கிறார்.. ஒரு மனிதருக்கு மரணம் என்பது தவிர்க்கமுடியாதது.. ஆனால் ஒருவர் மறைந்தபின் எதிரிகளை விட கூட இருந்தவர்கள் இவ்வளவு அசிங்கப்படுத்துவார்கள் நான் எண்ணியதில்லை.. நிரந்தர பொதுசெயலாளரென சும்மாதான் சொன்னோம் என்பதில் தொடங்கி இரும்பு பெண்மணி என ஊடகங்கங்ள் கட்டமைத்த போலியான பிம்பத்தை சுக்குநூறாக்கி ஜெயலலிதா கோழை என சொல்லாமல் சொல்கிறார்கள்.. கருணாநிதி தொடர்ந்த வழக்கில் சிறைத்தண்டனை பெற்றதால் மனஉளைச்சலுக்கு ஆளாகி மரணத்தை தழுவினார் எனும் பொருட்பட பேசியிருக்கிறார்.. இந்த தம்பிதுரை.. ஜெயலலிதா இருந்தபோது அருகில் குனிந்து நின்று கூழைகும்பிடு போட்டவர்.. இப்போது சசிகலாவை உயர்த்தி பிடிக்கவேண்டுமென்பதற்காக ஜெயலலிதாவை கேவலப்படுத்தியிருக்கிறார்.. .. .. உண்மையில் ஜெயலலிதா பயந்தவர்தான் ஆனால் இவர்கள் சொல்கிற அளவிற்கு வலிமையில்லாதவர் இல்லை வழக்கில் சிக்கவைத்துவிட்டார்களே என கூடயிருந்தே குழிப்பறித்துவிட்டார்களே என்ற மனநிம்மதியில்லாமல் கடைசிகாலத்தை கழித்திருக்கிறார்.. உடல் ஒத்துழையாமையும் தொடர் சிகிக்சையும் யாரையும் நம்ப முடியாமல் போன இறுதிகாலம் பாவம் பகைவருக்கும் வரகூடாது.. எங்கள் எதிரிதான் எங்கள் இன பகைவர்தான் மறுப்பதற்கில்லை.. அதனால் தான் மறைந்தபோதே சொன்னோம்.. நீங்கள் ஆளகூடாதென்றுதான் நினைத்தோம்.. வாழகூடாது என்றல்ல என இரங்கல்பா எங்களால் பாட முடிந்தது.. .. ஒவ்வொன்றாக வெளிவருகிறது ஜெயலலிதா மரணம் குறித்த சேதிகள் அதை திசைதிருப்ப கருணாநிதியை திமுகவை பழிச்சொன்னால் நம்பிவிடுவார்கள் என எண்ணி தம்பிதுரை உளறியிருக்கிறார்.. இவரது பேச்சை அதிமுககாரனே நம்பதயாரில்லை என்பதைதான் அதிமுக சசிதரப்பு எம்எல்ஏக்களை விளக்குமாறு கொண்டும் செருப்பை வீசியும் அமைச்சரென்று பாராது சீனிவாசன் வேட்டியை உருவியும் அதிமுககாரனே எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள்.... .. பாவம் தம்பிதுரைகள் இப்படி ஏதேனும் உளறிவைத்தால்தான் இருக்கிற காலத்தில் ஏதாவது தேறும்.. #பரிதாபகரமானநிலை..

No comments:

Post a Comment