Monday, February 13, 2017

ஜெயா எனும் மாயை

சசிகலா வாய் திறந்தார்.. ஜெயலலிதா எனும் பிரமாண்டமாக கட்டமைக்கபட்டவை எல்லாம் வெறும் மாயதோற்றம் என்றானது.. நான் தான் எல்லாம் ஜெயலலிதா என்று இதுவரை நீங்கள் பார்த்தது சாட்சாத் நானேதான்.. ஜெயலலிதா அரசியலே வேணாம் சசி என்ற ஒளிந்தோடிய போது நான் தான் அவரை கொண்டுவந்தேன்.. கட்சிகாரர்களின் கோரிக்கைகள் நான் படித்துபார்த்துவிட்டுதான் எதை முதலில் செய்யவேண்டுமென தீர்மானித்து அடுக்கி வைப்பேன்.. கூட்டணி விசயத்தில் கூட நான் தான் பேசினேன்.. அடுக்கடுக்காய் .. ஆனால் உண்மைகளை உளறிக்கொட்டிவிட்டு போய்விட்டார்.. .. நீங்கள் இதுவரை #எஃகுமனுஷி என்று புகழ்ந்து கொண்டிருந்தீர்களே உண்மையில் அவர் பொத்தை மரம் .. நான் தான் உண்மையான சூத்ரதாரி ... என் ஆட்டத்திற்குதான் ஜெயலலிதா ஆடினார் என் முடிவைதான் ஜெயலலிதாவின் சொல்லில் கேட்டீர்கள்.. ஜெயலலிதா வெத்துவேட்டு .. என்கிற ரீதியில் தன் தொண்டர்களை வைத்துக்கொண்டு வெளிபடையாகவே பேசியிருக்கிறார்.. .. உண்மையில் ஊடகங்கள் ஜெயலலிதாவை தூக்கி வைத்து கொண்டாடும் அளவிற்கு தகுதியானவர் இல்லை.. ஒருமுறைக்கு இருமுறை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டும் அவரை புனிதர் ரேஞ்சுக்கு உயர்த்தி பிடித்தன .. இதே இடத்தில் வேறுயாராவது இருந்திருந்தால் அவரின் புகழை தரைமட்டமாக்கியிருக்கும் இப்படி அளவிற்கு மீறி கொண்டாடியிருக்காது.. அவர் #அவாளாக இல்லாமல் இருந்தால் முன்பே அரசியலில் குழிதோண்டி ஆழ புதைத்திருப்பார்கள்..ஊடகங்களும் அரசும்.. உண்மையில் பயந்தாங்கொள்ளி என்ற அளவிற்கு ஜெயலலிதாவைப்பற்றி சசிகலா பேசுகிறார் என்று சொன்னால்.. சிலவை மிகைப்படுத்தபட்ட வார்த்தைகளாக கூட இருக்கலாம் ஆனாலும் ஓரளவிற்கு உண்மை இல்லாமல் இல்லை.. .. சசிகலா எத்தனை பேர் வந்தாலும் ஒருகை பார்ப்பேன் என்கிற ரீதியில் அகந்தையோடு பேசுகிறார்.. ஆற்றாமை ..வாய்ப்பு தள்ளிபோகிறதே என்கிற கோபம், தான் வளர்த்த/எடுத்த கொள்ளி தன்னையே காயபடுத்துகிறதே என்கிற இயலாமை அவரின் பேச்சின் நெடுக தெரிகிறது.. தாம் பேசுகிற வார்த்தைகள் இதுவரை நீங்கள் பார்த்த,ரசித்த ஜெயித்த ஜெயலலிதாவே நான் தான் என்கிற தொனி .. அதிமுக அடிமைகளுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டதுதான்.. .. அதிமுகவினருக்கு ஜனநாயக நெறிமுறைகளோ வழிமுறைகளோ பரிச்சயமில்லை மாறாக அடங்கிப்போய் எல்லாவற்றிக்கும் தலையாட்டுகிற கைதட்டுகிற பழக்கம் அதுதான் கட்சி நடத்துகிறமுறையென நீண்டகாலமாக நம்பியிருக்கிறார்கள் .. அதனால்தான் சசிகலாவால் இப்படி அகந்தையோடு ஆணவத்தோடு பேசமுடிகிறது.. .. அதுசரி.. #அடிமைகளுக்கு_வேறென்ன_வாய்க்கும்…… .. தோழர் ஆலஞ்சி...

No comments:

Post a Comment