Monday, February 20, 2017

எனது களம்..

நான்... .....எனது களம்.. சிலநேரம்.. சூடாவேன்.. சுவை தருவேன். மழையாவேன்.கவி .. மழையாவேன்.. சுடர் ஆவேன். சுட்டெரிப்பேன். ஆர்பரிப்பேன்.. அடங்கா..திமிராவேன் அலை ஆவேன்..சில நேரம்..கலையாவேன்.. ஆடும் மயிலாவேன்.. தமிழ் பாடும் குயிலாவேன். எதிரியை..கண்டால்..சிலம்பெடுப்பேன்.. தமிழ்..சிலம்பெடுப்பேன். எனை தாக்கினால்.. பொறுத்தருள்வேன் என் தமிழையெனில் .. தலை கேட்பேன். தமிழ் என்றால்.. வேழம் மீதேறி வருவேன் வெற்றிக் கொடி நாட்ட #எனதுகளம் தமிழாய்..தேனாய்.. சுவைக்கும்.. சிலநேரம்.. துவர்க்கும்.. வேம்பாய்.. ஆனாலும்..மருந்தாய். ஆரிய எதிர்ப்பாய் அமைதி கடலாய். அலங்கார திமிராய்.. அடங்கும் அன்பாய் தமிழ் தேராய். தாலாட்டும்..இசையாய் கதை பேசும் . காமம் சொல்லும் கவி தரும். காவியம் சொல்லும் இயல்பாய் எதிரிகளை.. சூறையாடும் தமிழ் வேலாய்.. எனது களம்.. தேடலின்..தொடர்.. முடிவில்லா நெடுந்தொடர் .. .. தோழர் மன்சூர்

No comments:

Post a Comment