Sunday, February 5, 2017

கள்ளத்தனம்

கள்ளச்சி.. இந்த வார்த்தை பிரயோகம் சமுகத்தின் குறியீடல்ல தமிழக அரசியலில் நேர்மையான ஜனநாயக பாதை ஜெயலலிதாவால் மெல்ல கொல்லப்பட்டபோது நாம் எப்படி உள்வாங்கினோமோ அப்படிதான் இதையும் உள்வாங்கவேண்டும்..வினையை விதைத்து விட்டு தினையை தேடினால் எப்படி கிடைக்கும்.. மக்கள் நெடுக சசியின் வரவை ஏற்கவில்லை ஆனால் இந்திய அரசியலமைப்பு தந்த வழிமுறையையே பின்பற்றி வருகிறார்.. மக்களால் தேர்வு செய்யபடாதவர் பதவி வகிக்க தகுதியில்லையென்பதெல்லாம் இங்கே எடுபடாது.. .. மிக சாதூர்யமாக ஜெயலலிதாவை விழுங்கி அவரின் இடத்தை பிடித்திருக்கிறார்.. அவருக்கு ஆரம்பம் முதலே பன்னீர் என்ற விசுவாசி .. சொன்னதை செய்யும் வளர்ப்பு நாயைப்போல .. சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையைப்போல வாய்த்தார்.. ஜெயலலிதாவையே விழுங்க தெரிந்த மன்னார்குடி வகையறாவிற்கு.. அதிகாரத்தில் எத்துவதென்பது மிக சுலபமாகிப்போனது.. சசிகலா வெளிப்படையாகவே கள்ளாட்டம் தான் ஆடுகிறார்.. அதை ஊடகங்கள் கூட புகழ்கிறது பாருங்கள் அங்குதான் சசி போன்றவர்களின் வெற்றி அடங்கியிருக்கிறது.. இனி பொய்யே சொல்லமாட்டேன் என்று சொன்ன பாண்டே மக்கள் செல்வாக்குள்ள தலைவர் என்கிறார்.. எந்த மக்களை சந்தித்து அவர்களோடு பேசி அவர்கள் பிரச்சனைகளை காதுகொடுத்து கேட்டாரென தெரியவில்லை.. பணம் இது ஒன்றுதான் சசிகலாவின் பலம்.. ஊடகங்களை விலைபேசமுடிந்த அவரால்.. மக்களையும் விலைபேசிவிட முடியும்.. இதோ அதிமுககாரன் தரும் இனிப்பை கைநீட்டி வாங்க அடித்துக்கொள்கிறார்கள்.. சிலர் கோவப்படுவது புரிகிறது.. மக்கள் திரும்பவும் சரியான ஜனநாயக பாதையை தேர்தெடுக்காமல் சில்லறைகளுக்கு விலைபோனால் இவரை போன்றவர்கள் வருவார்கள்.. .. அதிமுகவின் உ்கட்சி விவகாரமென இதில் ஒதுங்கி கொண்டால் தமிழக நலனில் சிறிதும் அக்கறையில்லாத ஆகும் .. ஜெயலலிதாவிற்குதான் வாக்களித்தார்கள் அவர்களில் வீட்டில் பணியாளுக்கில்லை என்ற திரு.ஸ்டாலின் கருத்து கவனிக்கதக்கது.. மிக சிறந்த தலைவர்களை வேண்டாமென்று வைத்த தமிழகம் தலைகுனிந்துதான் ஆகவேண்டும்.. .. சசிகலா சரியான முறையில் கள்ளாட்டம் ஆடுகிறார்.. தன்னிடமுள்ள தலையாட்டிகளை வைத்துக்கொண்டு .. நமக்கு நாடகம் காட்டுகிறார்..பணமெனும் கயிறு அவர் கையில் பாவம் பொம்மைகள் ஆடுகிறது.. ஆனால் அது ரசிக்கும் பொம்மலாட்டமாய் இல்லை.. மாறாக இது கள்ளாட்டம் #கள்ளத்தனம்... .. தோழர் ஆலஞ்சி...

No comments:

Post a Comment