Sunday, February 26, 2017

வாழ்த்துகள் பேராசிரியரே..

பேராசிரியர்.. பெருந்தகை காதர்மொய்தீன் அவர்கள் அகிலஇந்திய IUML தலைமைக்கு தேர்வாகி இருக்கிறார். வாழ்த்துகள் பேராசிரியர் அவர்களே. நீண்டகாலம் கழித்து கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களுக்கு பிறகு தலைமை பதவி தேடிவந்திருக்கிறது.. #மகிழ்ச்சி .. இருவருக்குமே ஒரு ஒற்றுமை உண்டு மிக எளிமையானவர்கள் பொதுவாழ்வில் மிக தூய்மையானவர்கள் வரிசை இடம்பெற்றவர்கள்.. மெத்தபடித்தவர்கள் அதை வெளிகாட்டி மேதமையை பறைச்சாட்டாத பண்பாளர்கள்.. இருவருமே #திராவிடர்கள்.. .. இடைப்பட்டகாலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கில் அதிகாரபகிர்வில் சில சலசலப்புக்கள் வந்ததுண்டு.. இபுராகிம்சுலைமான் சேட் காலத்தில் ஏற்பட்ட பிளவு அதன் பிறகு அது சில மாநிலங்களில் கூட எதிரொலித்தது.. பனாத்வாலாவை ஏற்றுக்கொள்ள மறுத்து கைரளியர்கள் பிடியில் சொல்லப்போனால் குறிகிய வட்டத்திற்குள் சுருங்கிவிடுமோ என என்னைப்போன்றவர்கள் அஞ்சிய வேலையில்தான் மேதகு காதர்மொய்தீன் அவர்கள் தலைமை பொறுப்பிற்கு தேர்வாகி இருக்கிறார்.. முஸ்லீம் லீக்.. குறிப்பாக இஸ்லாமிய சமுதாயம் சோதனையான காலகட்டத்தை கடந்துக்கொண்டிருக்கும் வேளையில் இந்திய தலைமையை ஏற்கிறார்.. சிறந்த கல்வியாளராக.. சிறந்த நாடாளுமன்றவாதியாக தன்னை நிரூபித்தவர்.. மென்மையான போக்கும் கொள்கை உறுதியும் அதைவிட எளிமையும் நேர்மையும் கொண்டவர்.. எவர் வேண்டுமானாலும் எப்போதுவேண்டுமானாலும் அணுகமுடிகிற தலைமை பதவியை ஒருபோதும் நாடியதில்லை சிலரை போல தனக்குதான் வேண்டுமென அடம்பிடிக்காதவர் தனக்கு தரப்பட்ட எம்பி தேர்தலுக்கான வாய்ப்பை கூட மற்றவர்களுக்கு விட்டு கொடுத்தவர்..எனக்கு தெரிந்து இஸ்லாமிய இயக்கங்களில் மிகவும் மரியாதைக்குரியவராக எல்லோரும் விரும்புகிறவராக இருக்கிறார்.. முந்தையகாலக்கட்டங்களில் அதிகார பகிர்வாக ஏற்பட்ட விரிசல்களைப்போல இல்லாமல் தனக்கு பதவிவேண்டுமென்பதற்காக தன்மானத்தை இழந்து நிற்காமல் இவருடைய அரசியல் பயணம் தன்மானம் மிகுந்த நேர்மையானதாக கொள்கை உறுதியோடு கூடிய அரசியலாக இருந்திருக்கிறது.. சில இஸ்லாமிய தலைவர்கள் விமர்சனங்களுக்குள்ளாகியிருக்கிறார்கள்.. ஆனால் பேராசிரியர் எதையும் மிக சரியாக செய்கிறவராக/செயல்படுகிறவராக இருந்திருக்கிறார்.. நீண்டகாலத்திற்கு பிறகு ஒரு நல்லதேர்வு.. வாழ்த்துக்கள் IUML நிர்வாகிகளுக்கு.. .. #Congratulations_Professor.. வாழ்த்துகள் பேராசிரியர் காதர்மொய்தீன் சாப் .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment