Thursday, February 23, 2017

சிதறும்..

சிலநேரம் கூத்து ரசிக்கும்படியாக இருக்கிறது.. அதிமுக வலுவிழந்து வருவது மகிழ்ச்சி தந்தாலும் சங்கடத்தை வருவதை மறுப்பதற்கில்லை..எல்லோரும் பூஜ்யங்கள் என்று ஒருமுறை ஜெயா சொன்னது சரியென்றே தோன்றுகிறது.. அப்போதுகூட திருநாவுகரசு அதை ஆமோதித்தார்.. ஒன்றோடு சேரும் பூஜ்யம் மதிப்பை கூட்டும் என்றார்.. ஒன்று போனபின் பூஜ்யங்கள் பூஜ்யங்களாகவே இருக்கிறது.. சுதந்திர போராட்டத்தில் சிறை சென்றவர்களோடு கொள்ளயடித்து தண்டனைப்பெற்ற கிரிமினல் ஜெயலலிதா ஒப்பிட்டு பேசும் போதும்..எத்தனைமுறை காரி உமிழ்ந்தாலும் காசு ஒன்றே குறிக்கோளாய் நடக்கும்,இந்த நடைபிணங்களால் தமிழகம் மரியாதை இழந்து நிற்கிறது.. .. நீண்டநாட்கள் உண்மையை மறைக்க முடியாது.‍. அதேபோல் எல்லோரையும் பணம்கொண்டு வாங்கிவிட முடியாது பணத்திற்காக மௌனமாக இருப்பவர்கள் அல்லது வளைந்து கொடுப்பவர்கள் தமக்கு சேரவேண்டியது சரியாக கிடைக்காத பட்சத்தில் எதிராவார்கள்.. தீபக் அப்படிதான் என்று நினைக்கிறேன்.. நேற்றுவரை மௌனமாய் இருந்தவர் தினகரனை காரணம் காட்டி வசனம் பேசுகிறார்.. இதுவரை செய்ததை சரியென்கிறாரா.. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இப்போது வருவது ஏன்.. நேற்றுவரை #சசிஅத்தையாக இருந்தவர் இன்று என்ன ஆனார்.. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பதைபற்றி அறிய தீபக்கிற்கு முழு உரிமையும் இருக்கிறது ஆனால் இதுவரை காலம் தாழ்த்தியது ஏன்.. எது இப்போது தூண்டியது.. ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் சேராதது ஏன்.. கட்சி விடயங்களில் பங்குபெறாதது ஏன்.. .. இப்போது கூட காலம்கடந்துவிடவில்லை.. அத்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சிபிஐ விசாரணை கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.. இரத்தசொந்தம் என்பதால் நீதிமன்றமும் கணக்கில் கொள்ளும்.. மாறாக வழக்குதேவையில்லையென நினைப்பாரேயானால் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அது சசிகலாவிடமிருந்து கிடைக்காமல் போனதால்தான் என மக்கள் நினைக்ககூடும்..,இப்போதுகூட வாய்திறந்திருப்பது கிடைக்கவேண்டியது கிடைக்கவில்லை என்பதால்தான் என பேச்சு அடிபடுகிறது.. .. அதிமுக சிதைவது மகிழ்ச்சியென்றாலும் எங்கள் எதிரியின் மரணம் குறித்த கவலை எங்களுக்குமுண்டு.. நிச்சயமாக காலம் உண்மைகளை வெளிக்கொணரும்.. .. #காத்திருப்போம்_என்றைக்கும்உண்மைஉறங்காது.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment