Sunday, February 5, 2017

நிர்மலா...பெரிய...

நந்தினி.. மிக கொடூரமாக சிலரால் வன்புணர்வு செய்து யோனியை கிழித்து கற்பத்தை வெளியெடுத்து கொன்று வீசியிருக்கிறார்கள்.. இந்த சமூகத்தின் பார்வையில் இது பெண்ணின் குற்றமாக்கப்படும் அவலம்.. வேறெங்கும் நிகழ்ந்திராதது.. பெண்ணை யாரென்று பார்த்து பிறகு விமர்சிக்கிற பொங்குகிற போக்கு மிகவும் ஆபத்தானது.. சென்னை ரெயில்வே பிளாட்பாரத்தில் கொல்லப்பட்ட பெண்ணிற்காக தாமாக முன்வந்த நீதிமன்றம் இப்போது பத்தோடு பதினொன்று என வழக்கை கையாள்கிறது.. ஊடகங்கள் திசைதிருப்ப முயற்சிக்கின்றன.. அரசியல்கட்சிகள் கள்ளமௌனம் காக்கிறது.. .. நேற்றைய தினம் நிர்மலா பெரியசாமி.. பேசுகையில் காண்டம் உபயோகித்திருக்கவேண்டாமா.. 16 வயதில் பிள்ளையோடு வந்திருக்கிறார் பெற்றோரின் வளர்ப்பு சரியில்லை என்ற ரீதியில் பேசுகிறார்.. அதே பாணியில் எங்களாலும் பதில் தர முடியும்.. நிர்மலாவிற்கும் நந்தினி வயதொத்த அவரது...குழந்தைகளுக்கு.. தெரிந்த ஆணுறைப்பற்றி விழிப்புணர்வு .. பாவம் நந்தினிக்கு தெரியாமல் போனது திருமதி நிர்மலா அவர்களே.. தங்கள் தலைவி going study என்றாரே அவரும் வளர்ப்பு சரியில்லையென்று சொல்ல வருகிறீரா.. பொதுவில் அமர்ந்து பேசும் நாகரீகமாக பேசவேண்டுமென்ற தெரியவில்லை.. முதியவரை வேட்டியை உருவிவிடவா போகிறோம் என்றெல்லாம் பேசுகிறவரை மீண்டும் அழைத்து விவாதித்ததில் பங்கேற்க செய்கிறார்களே ஏன். .. இதே பாணியில் வேறெங்கும் பேச மறுப்பதேன் இங்கே கேள்விகேட்க மாட்டார்கள்..தாழ்த்தப்பட்டவர்களுக்காக நீதிமன்றம் கூட வாய்மூடி நிற்கும் என்பதாலேயே இவரை போன்றவர்கள் தொடர்ந்து இதைப்போல் துணிந்து பேசுகிறார்.. நிர்மலா பெரியசாமி போன்றவர்களுக்கு பெண் என்று பார்த்து வாய்மூடியிருந்தால் மேலும் மேலும் இதேபோல் நிறைய கதைப்பார்கள்..அதனால்தான் அவர்கள் மொழியில் நாம் மறுபடி தரவேண்டியிருக்கிறது..அவரை இழிவுபடுத்தவேண்டுமென்ற நோக்கம் நமக்கில்லை.. இனியும் இதுபோல் தொடர்ந்து வேறுவகையான மறுபடி தரவேண்டிவரும்.. .. எச்சரிக்கை.. .. தோழர் ஆலஞ்சி

No comments:

Post a Comment