Tuesday, February 7, 2017
அரசியல் அரங்கம்..
முதல்வர் மிரட்டபட்டிருக்கிறார்..
திருமதி சசிகலா புஷ்பா தன்னை கார்டனில் வைத்து மன்னார்குடி கும்பல் அடித்ததென நாட்டின் மிக உயர்ந்த சபையில் சொன்னபோது நாம் மௌனமாய் இருந்ததின் விளைவு இன்றைக்கு முதல்வரையே மிரட்டுகிற அளவிற்கு வந்திருக்கிறது..எந்த பதவியிலும் இல்லாமல் திவாகரனால் அமைச்சர்களுக்கு கட்டளையிட முடிகிறது முதல்வரை கண்காணிக்க முடிகிறது இவையாவும் சர்வாதிகார ஆட்சியின் தோற்றத்தை தருகிறது.. முதல்வரை மிரட்டியவரை செயல்படவிடாமல் தடுத்தவர் மீது குண்டர் சட்டம் பாயவேண்டாமா.. முதல்வரே நேரடியாக குற்றம் சாட்டிய பிறகு இன்னும் ஏன் தாமதம்.. இது கட்சிக்குள் நடந்த விடயம் என புறந்தள்ளிவிட முடியாது.. கட்சியின் சட்டமன்ற தலைவருக்கு தெரியாமல் கூட்டம் கூட்டப்பட்டது செல்லதக்கதல்ல
..
திமுகவின் ஸ்டாலினோடு நெருக்கம் காட்டினார் சிரித்தார் என்றெல்லாம் சொல்வது ஒன்னாங்கிஸாஸ் குழந்தை பெனிசிலை எடுத்து வச்சுகிட்டான் என்னைபார்த்து முறைக்கிறான் என்பதை போல இருக்கிறது.. திமுக பின்னில் என்ற குற்றசாட்டை மக்கள் நம்ப தயாரில்லை..பிரதான எதிர்க்கட்சி தனது வேலையை செய்கிறது.. மக்களி நலன் சார்ந்த பிரச்சனைகளில் கைரோர்க்கிறது என்பதற்காக முதல்வரை மாற்றுவேன் என்பது சரியான ஜனநாயக அணுகுமுறையல்ல..
..
எழுபது நாளும் பன்னீரை முதல்வரை பார்க்க அனுமதிக்காததில் நிறைய மர்மங்களும் சந்தேகங்களும் எழுகிறது.. முதல்வரையே மிரட்டுகிறவர்களால் எம்எல்ஏக்கள் உயிருக்கும் அவர்கள் உறவினர்கள் உயிருக்கும் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாகலாம்.. முதல்வருக்கு உச்சகட்ட பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்..
இந்த மன்னார்குடி மாபியாக்களிடமிருந்து நாட்டை காப்பாற்ற.. கவர்னர் தேர்தலை நோக்கி நகர்த்துவது மட்டும்தான்.. இப்போதே மூன்று எம்எல்ஏக்கள் முதல்வருக்கு வெளிப்படையான ஆதரவை அல்லது சசிகலா எதிர்ப்பை சொல்லியிருக்கிறார்கள்.. இது கூடலாம்.. நேற்றைய தினம் மனம் திறந்ததிலிருந்து மக்கள் மத்தியில் பன்னீர்செல்வம் உயர்ந்துநிற்கிறார்..
மிகப்பெரிய மனஅழுத்தத்தோடு இருந்திருக்கிறார் என்பது அவரின் பேச்சு நமக்கு உணர்த்தியது..
அதைவிட வெகுமக்களின் உணர்வை பிரதிபலித்தார்..
..
இருள் சூழ்ந்த மெல்லதாய் ஒளிகீற்று..
விடியும்..
#We_need_re_election……
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment