Saturday, February 18, 2017
ஜனநாயகத்தின் கருப்புதினம்..
இன்றைய சபை நிகழ்வுகள் ஏற்புடையதாக இல்லை.. சபாநாயகர் அனைத்துக்கட்சிக்கும் சமமானவராக இருக்கவேண்டுமென்ற அடிப்படை கூட தெரியாதவராக இருக்கிறார்.. தன் செயலை நியாயபடுத்த தன்னை ஜாதி சொல்லி கேலிசெய்ததாக சொல்கிறார்.. சாதி தனக்கு கவசமாகும் என நம்புகிற தாழ்வுமனபான்மை தனபாலுக்குண்டு.. தன் கட்சி தலைமையிடமே இதை முறையிட்டுதான் தொடர்ந்து எம்எல்ஏவானார்..
..
எதிர்க்கட்சி சட்டமன்றத்தில் /நாடாளுமன்றத்தில் சபாநாயகரை சுற்றி நின்று கோசம் எழுப்புவது புதிதல்ல மாண்பிமை மம்தா பானர்ஜி கூட காதிகத்தை கிழித்து நாடாளுமன்றத்தில் எறிந்துவிட்டு சென்ற வரலாறு உண்டு.. சபாநாயகர் ஆரம்பம் முதலே ஏறக்குறைய 100 மேற்ப்பட்ட உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பை கேட்கிறபோது ஏறக்குறைய பாதிபேர் கேட்கிறபோது நடத்துவதுதானே முறை.. அதைவிடுத்து கட்சிகாரர் போல நடந்துக்கொண்டது மிக கேவலம்..அதுவும் தன் சட்டை கிழிக்கபட்டதாக சொன்னார் ஆனால் ஜெயா டிவி ஒளிப்பரப்பிய கிளிப்பில் கூட அவரை காவலர் அழைத்து செல்வது மிக அழகாக பதிவாகியிருக்கிறது ஆனால் அதில் சட்டை கிழியவில்லை.. கிழிந்ததாக பொய்யான தகவலை சபாநாயகர் சபையில் பதிவு செய்தது மட்டுமல்லாமல்.. தன் செயலை நியாயபடுத்த சாதியை துணைக்கழைக்கிறார்.. இது மிகவும் கீழ்தரமான செயல் இவர் சமுகத்திற்காக 3.5 % இடஒதுக்கீட்டை கொண்டுவந்தபோது மலத்தை சுமக்கும் இவர்களுக்கான இடஒதுக்கீட்டை கொண்டுவந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறேன் என்றவர்.. இவரின் குற்றசாட்டில் துளியும் உண்மையில்லை..
ஜனநாயக படுகொலைக்கு பட்டியல் இனத்தவனே காரணமாய் இருந்தான் என்ற அவப்பெயர் வரலாற்றில் பதிந்துவிட்டது..
..
முழுவதுமாக எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு அதிமுகவினர் மட்டுமே சபையில் இருந்து சபையை நடத்தி வெற்றிபெற்றதாக அறிவிப்பது ஜனநாயகவிரோதம்.. ஜனநாயத்தில் ஒரு கரும்புள்ளி.. சபாநாயகரின் துணைக்கொண்டு ஜனநாயக படுகொலையை நிகழ்த்திருக்கிறார்
இந்த அரசை ஜெயிலில் இருக்கும் கைதி இயக்கபோகிறாரா..இப்போது கூட முதல்வர் சின்னம்மாவின் புகழ்பாடுகிறார்.. அரசின் ரகசியங்கள் ஜெயலில் இருக்கும் கைதி அறிந்துக்கொள்வதும்.. ஒரு தண்டனை பெற்ற கைதி அரசை வழிநடத்துவதும் தான் ஜனநாயகம் எனில்.. அது #வீழ்ந்தேபோகட்டும்..
தேவை கவர்னர் பரிந்துரை..
dissolve the tn govt..
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment