Friday, February 24, 2017
அரசியல் கேலிகூத்து..
தமிழகத்தில் மட்டும்தான் நினைத்த நேரத்தில் சட்டென்று ஒரு கட்சியை துவங்கிவிடமுடியும்.. அவரை சுற்றி பத்துபேர் கைதட்டி உசுப்பேற்றி குட்டிசுவராக்கி தெருவில் நிற்கவைக்கமுடியும்..
இது சாபகேடு..
..
பொதுவாழ்விற்கு யார்வேண்டுமானாலும் வரலாம் என்பதை தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள்..ஆரம்பகாலங்களில் பண்ணையார்களும் படித்தவர்களும் வசதியுள்ளவர்களும் அரசியலை தங்களின் கௌரவமாக கருதியதால் சாமானியர்கள் பங்களிப்பு என்பது அரசியலில் குறிப்பாக அதிகார அரசியலில் இல்லாமலே போனது.. நீதிக்கட்சியின் வரவிற்கு பிறகுதான் அது சாமானியர்கள் பங்களிப்பு வேண்டுமென்றும்.. அதுவும் குறிப்பாக மிகவும் பின்தங்கிய சமூகத்திலிருந்தவர்கள் தொண்டுள்ளத்தோடு சமூகசேவையை தொடங்கவேண்டுமென்பதற்காக அனைவரையும் அரவணைத்து செல்லவேண்டுமென்பதற்காக அரசியலில் அனைவரும் பங்கேற்கவேண்டுமென சொல்லப்பட்டது.. இந்தியா விடுதலை அடைந்த போது கல்வியறிவு இல்லாதவர்களுக்கு ஓட்டுரிமை தரகூடாது என்று ஆங்கிலேயர்கள் சொன்னபோது அவர்களின் பங்களிப்பும் சேர்ந்தது தான் ஜனநாயகம் என்றார் நேரு..
..
அரசியலுக்கு யாருவேண்டுமானாலும் வரலாம் கல்வியறவு பணம் அந்தஸ்து வேண்டுமென்பதில்லை ஆனால் மக்களின் பிரச்சனைக்காக போராடியவராக மக்களின் எண்ணவோட்டங்களை பிரதிபலிப்பவராக ..
மக்களுக்கு சிறியளவிலேனும் சேவை செய்கிறவராக இருக்கவேண்டும்.. தனக்கு ஏதேனும் இழப்பு ஏற்படுகிறது என்பதற்காக தன் சொந்த பிரச்சனையை தீர்த்துக்கொள்ள அரசியலுக்கு வருவது .. கடைசியில் முகம் கவிழ்ந்து குப்புறவிழவேண்டிவரும்.. திரு.விஜயகாந்த் தன் சொந்த கட்டிடம் இடிக்கப்படுகிறது என்பதற்காக அரசை எதிர்த்து ..பின் கட்சி தொடங்கி கடைசியில் கரைந்து போய் நிற்கிறார்..
..
அரசியலில் சுயநலமே இல்லையா கூடாதா என கேட்டால் இருக்கிறது அது பொதுநலன் சார்ந்தும் இருக்கவேண்டும்.. கலைஞரின் வசனம் நியாபகத்திற்கு வந்தது ..தன் உணவிற்காக அழுக்கை தின்று தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன் அதைப்போல..
பொதுவாழ்வில் வருகிறவர்கள் .. இருக்கவேண்டும்..
..
நினைத்தநேரத்தில் கட்சி துவங்கி .. பேரம் முடிந்ததும் கடைசியில் கம்பெனியை காலி செய்வதுபோல களைத்துவிட்டு எதுவுமே நடக்காததுப்போல இருப்பார்கள்.. கொள்கைக்காக இனம் மொழி சமூகநீதிக்காக தொடங்கபடுகிற இயக்கங்கள் மட்டுமே காலத்தை கடந்தும் நிலைத்து நிற்கும் எவ்வளவு எதிர்ப்பிருந்தாலும் எத்தனையோ துரோகிகளை கண்டாலும் அத்தனையும் மீறி காலம் வழிநடத்த சிறந்த தலைமையை காட்டும்..
..
இடையிடையே சிலகட்சிகள் தோன்றி மறையும்.. அவையாவும் சொந்தநலனுக்காக தொடங்கப்பட்டவைகள்.. இப்போதுகூட புதிதாய் பேரவை வந்திருக்கிறது.. அதிக காலம் நீடிக்காது காரணம் அதற்கென்று எந்த கொள்கையும் இல்லை..
வேறென்ன சொல்ல..
இதெல்லாம் காலக்கொடுமை..
..
#mad..
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment