Wednesday, February 15, 2017

திராவிட பேரியக்கம்..

திரும்பி பார்.. ஒரு கோமாளி மக்களை மகிழிவிப்பவன் ராஜாவேடமெல்லாம் கட்டியவன்.. மக்களை மயக்கத்திலேயே வைத்திருந்து சின்ன..சின்ன நல்லவைகளை தந்து ரசிகனை தெளிவடைய செய்யாமல் கவர்ச்சியெனும் ஆயுதம் கொண்டு கீழடக்கி வைத்திருந்த வரலாறு முடிகிறது.. மருதூர் கோபாலமேனன் ராமசந்திரன் எனும் எம்ஜிஆர் தொடங்கிய கட்சி இனி.. .. மானமிகு வாலியை மறைந்து நின்று தாக்கிய மாண்புமிகு ராமசந்திரனை மாவீரன் என்று.. மகாகவி கம்பனே ஏற்கவில்லை.. என்ற கலைஞரின் கவிதையோடு தொடங்கலாம்.. சின்ன சின்ன வேடம் கட்டியவரை மார்டன் தியேட்டர் முதலாளி சுந்தரத்திடம் அறிமுகம் செய்து தாடையில் குழியிருக்கிறது வேண்டாமென்ற முதலாளியை தாடி ஒட்டி நடிக்கவைக்கலாமென சொல்லி வாய்ப்பு தந்தவனை.. எதிர்த்து அரசியலை தொடங்கியபோது ஊழலுக்கெதிரான கட்சி என்றார்கள்.. கமிஷனெல்லாம் அமைத்து பார்த்தார்கள்.. விசாரித்தவன் விஞ்ஞான ஊழல் என்றான் நிரூபிக்கவேண்டியதானே என்றால் ஆளையே காணோம்.. இன்றுவரை நெருங்கவே முடியவில்லை.... ஆனால் எம்ஜிஆரின் கட்சியினர் ஊழல் செய்ததாக மருங்காபுரி பொன்னுசாமி தொடங்கி அதன் பொதுசெயலாளர் ஜெயலலிதாவரை ஊழல் வழக்குக்காக தண்டனை பெற்றிருக்கிறார்கள்.. .. கொள்கை எதுவுமின்றி ஆடம்பரம் ஆர்ப்பார்ட்டம் கவர்ச்சியை நம்பி தன் அரசியல் வாழ்வை தொடங்கிய மகோரா.. மெல்ல ஆர்எஸ்எஸ் பிடிக்குள் வந்தார்.. திராவிட இயக்கத்தை சிதைக்க கங்கணம் கட்டி செயல்படுவோரின் வலையில் விழுந்து இந்துமுண்ணனி எல்லாம் அனுமதி தந்து மெல்ல படரவிட்டார்.. அரசியலில் அவருக்கு பிறகு வெற்றிடமாய் போய்விடுமென அஞ்சியவர்கள் ஆரியமாயையை உட்புகுத்தி தங்களின் எண்ணங்களுக்கு வழங்கி நிற்கவைத்தனர்.. எவ்வளவோ முயற்சித்தும் அவர்களுக்கே உரிய சாணக்கியதனத்தை பிரயோகபடுத்தியும் ஆட்சியை கலைத்தும் தனிமைபடுத்தியும் பார்த்தார்கள் திமுக எனும் சுயமரியாதை இயக்கத்தை அழிக்க முடியாமல் போனது.. காரணம் ஒற்றை போர்வாளாய் தளபதியாய் தலைவனாய் #எம்_கலைஞர் காத்து தந்தார்.. .. இதோ திமுகவை அழிக்க ஆரியர் சூழ்ச்சியால் துவங்கப்பட்ட அதிமுக எனும் கட்சி இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாய் சிதைய தொடங்கியிருக்கிறது.. கொள்கை உறுதியும் இனமானமும் பற்றும்..அறிவும் எதையும் பகுத்தாயும் திறனும் சமூகநீதியின்பால் அக்கறையும் கொண்டவர்களை கொண்ட பேரியக்கத்தை.. யார்வரினும் உடைத்திடவோ சிதைத்திடவோ முடியாது.. இங்கே தலைவர்களை காலம் தீர்மானிக்கிறது.. துரோகங்களால் வீழ்த்திட முடியாது.. .. #காக்கையின்_எச்சமா_ஆலமரத்தை_அழித்துவிடும்…… .. தோழர் ஆலஞ்சி..

No comments:

Post a Comment