Saturday, February 11, 2017
ஆசிரியர் வீரமணி..
ஆசிரியர் அவர்களின் கருத்தோடு முரண்படுகிறேன். அவரது கவலையும் ஆதங்கமும் கவனித்தில் கொள்ளவேண்டியதுதான் மறுப்பதற்கில்லை பன்னீரின் பின்னில் பாஜக அப்பட்டமாக செயல்படுவதும் அறியாமல் இல்லை
அதற்காக சசிகலாவை ஆதரிப்பதென்பது மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்கு சமம்.. சசிகலா ஆட்சியமைத்தால் பாஜகவோடு அவர்களின் அஜந்தாவிற்கு ஒப்பவே செயல்படுவார்..அதனாலும் பாசிசத்தின் செயல்பாடுகள் மெல்ல வெளிவரும்..
..
இன்றைய நிலையில் இருவரையும் ஆதரிக்காமல் நடுநிலையாக செயல்பட்டாலே போதும் அவர்களின் சண்டை நிச்சயமாக நல்லதொரு விடியலை தமிழகத்திற்கு தரும்.. திமுகவே அடுத்த விருப்பமாக மக்கள் மனதில் தோன்றியிருக்கிறது அதை நோக்கிய நகர்வு ஒன்றுதான் சரியான பாதையாக இருக்கும்.. அதிமுக அழிந்தால் பாஜக வளர்ந்துவிடுமென்ற பூச்சாண்டி வேண்டுமென்றே பரப்பபடுகிறது.. நிச்சயமாக எதிர்வரிசையில் அதிமுகதான் வரும் இல்லையெனில் அந்த இடத்தை நோக்கி காங்கிரஸ் வரலாம் இரண்டு தவிர மூன்றாவதாக வேறெதுமில்லை .. தேமுதிக பாமக வை தாண்டி பாஜக வளர்ந்துவிடாது ..
..
ஆசிரியர் வீரமணி அவர்கள் கவலைகொள்ள தேவையில்லை.. மாறாக அமைதியாக வேடிக்கை பார்த்தாலே போதும்.. ஜெயலலிதா இருந்த போது கூட பாஜகவின் முகமாகதான் நிறைய விடயங்களில் இருந்தார்.. அவருக்கே தெரியும் திராவிட முகமூடி இல்லாமல் இங்கே எதுவும் வேலைக்காகாது என அறிந்திருந்ததால் தான் அளவோடு காய் நகர்த்தினார்.. ஆசிரியர் குழப்பமடைய தேவையில்லை .. மேலும் குழப்பாமல் வேடிக்கை பாருங்கள் அது போதும்.. உண்மையான திராவிட இயக்கத்தை ஆட்சியில் அமரவைக்கும்..
..
காலம் கனிந்து வருகிறது தேவையில்லாத விமர்சனங்களை தவிர்த்து மக்களின் மனதில் நல்ல நம்பிக்கையை திரு.ஸ்டாலின் விதைத்து வருகிறார்
ஆடம்பரமில்லாத எளிமை.. எல்லோரையும் அரவணைக்கும் அழகு.. தீர்க்கமான சிந்தனையும் செயலும் பதட்டப்படாத தெளிவும்.. உயரத்தில் கொண்டு நிறுத்தும்.
#செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். ..
என்ற குறளுக்கொப்ப செயல்படுகிறார் தளபதி..
..
ஆசிரியர் அவர்கள்
#வாயைமூடி_பேசவும்……
..
தோழர் ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment