Friday, May 31, 2019
பார்பன ஜனதா கட்சி
தமிழகத்தை சேர்ந்த இரு பார்பனருக்கு மத்திய அமைச்சர் பதவி அதிலும் முக்கியம் வாய்ந்த பதவிகள் உடனே சிலர் மோடி தமிழகத்தை புறக்கணிக்கவில்லை என்கிறார்கள் முதலில் தமிழர்களுக்கு மந்திரிசபையில் இடமளிக்கவில்லை பார்பனருக்கு அளிக்கபட்டிருக்கிறதென தமிழர்களுக்கு புரியவைக்கவே கஷ்டபடவேண்டியிருக்கிறது
பாஜக கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து உயர்பதவிகள் பார்பனர்கள் வசமே சென்றடைந்ததை உணராதவரை எதுவும் பலனில்லை
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் பார்பனர்கள் அதிகளவில் இடம் பெறுகிறார்கள் .. மொத்த தொகுதிகளில் 543 ல் பட்டியிலினத்தவர்கள் 131 தவிர்த்து 412 ல் 232 பேர் பார்பனர்கள்
சிறுபான்மையினர் தவிர்த்து ..120 பேர்தான் பிற சாதியினர் அதாவது( OBC,BC,MBC )..
இதையெல்லாம் உணராமல் பாஜக இந்துக்களுக்கான கட்சியென பார்பனர் அல்லாதோர் மல்லுகட்டுவதுதான் கொடுமை
26 கேபினட் அமைச்சர்களில் 13 பேர் பார்பனர்கள் இது எங்கே செல்கிறது.. யார் மந்திரியாகவேண்டுமென நாக்பூர் தீர்மானிக்கிறது அதை உணராததால் தான் வடஇந்தியா இன்னமும் தாழே கிடக்கிறது ..
..
தமிழகம் உட்பட தென்னகத்தில் பார்பன ஆதிக்கத்தை சிதைத்ததில் பெரும்பங்கு பெரியாருக்கு உண்டு அவர் மனிதர்களின் அறிவோடு பேசினார் அவர்களை தட்டியெழுப்பி பார்பனன் உன்னை அடிமைபடுத்தி மதமென்ற பெயரில் பிரித்து வர்ணமென்று கதையடித்து அவன் உயர செல்ல உன்னை படிகளாக்குகிறான் .. உனதுரிமையை பிடிங்கிக்கொண்டு உன் கைகளைக்கொண்டே உன் விழிகளை குத்துகிறானென புரியவைத்ததால் இன்று சுயமரியாதையோடு போராடுகிறான்.. அதையும் மீறி எழும்ப எண்ணுகிற போதெல்லாம் பெரியாரின் தடிகொண்டு அடித்தமர்த்துகிறோம் .. ஆனாலும் சில துரோகிகளும் அடிமைகளும் தன் சுயமிழப்பதறியாமல் பார்பன அடிவருடியாய் வாழ்வது சாபகேடு ..
..
பார்பனர்கள் மிக தெளிவாகதான் செயல்படுகிறார்கள்
உழைப்பதற்கும் மக்கள் ஏசும் மொழிகளை கேட்பதற்கும், கிண்டல் கேலிக்கு ஆளாகி மானங்கெட்டு திரிவதற்கும் இந்த சூத்திர அடிமைகள் இருக்கிறார்கள் யாருக்கும் உதவாத பதவியை கொடுத்துவிட்டு நாம் அவர்களை ஆட்டிவைக்கலாம் .. அதிகாரம் பதவி எனும் போது நோகாமல் நோங்கு தின்னலாம் ஆம் தறிகெட்டு பேசுவதற்கும் ஓயாது உழைப்பதற்கும் சாதிவெறி மதவெறியை தூண்டுவதற்கும் பொன்னர் தமிழிசை அர்ஜூன் போன்ற சூத்திரர்கள் இருக்கிறார்கள் ...
ஆளுமைமிக்க பதவிகளுக்கு பார்பனர்கள் .. மக்களை சந்திக்காமல் வெயில் மழையென அலையாமல் ஊரூராய் சென்று அவதிபடாமல்
யாரை இரைஞ்சாமல் பதவி தானாக தேடிவரும்
இது புரியாதவரை அக்கா தமிழிசை போன்றவர்கள் கத்திக்கொண்டே திரியவேண்டியதுதான்
மக்கள் செல்வாக்கோடு வென்ற பொன்னருக்கு இணையமைச்சர் மக்களுக்கு யாரென்றே,தெரியாத நிர்மலாவிற்கு ராணுவ அமைச்சர் பதவி தந்தவர்கள் தான் ..இரண்டாவது முறை வென்றவுடன் பார்பனீய ஆதிக்கமும் அதிகமாகியிருக்கிறது .. யார் பதவிக்கு வரவேண்டும் யாருக்கு தரவேண்டுமென மோடி தீர்மானிக்கமுடியாது பார்பன தலைமை பீடம் நாக்பூர் தான் தீர்மானிக்கும் .. பாஜக என்பது பார்பன ஜாதி கட்சி இதுதான் உண்மை இந்துகளுக்கான கட்சியென்பது மிகப்பெரிய பொய்
இதை சூத்திர அர்ஜூனும் பொன்னரும் தமிழிசையும் உணர்ந்தால் நல்லது
..
பணிசெய் பலனை எதிர்பாராதே இது பார்பனீயம்
பணி செய்து பலனை பெறு .. திராவிடம்
..
ஆலஞ்சியார்
Wednesday, May 29, 2019
கலைஞர்96
என் தமிழ் ஆசான் #கலைஞர்..
..
இங்கே நிறைய பேருக்கு தமிழாசான் கலைஞர்தான் எனக்கும் கூடதான் ..
இலக்கிய தமிழில் புதிய தோரணையை கட்டி நடனமாடியவர்.. சினிமா கலையில் புதிய உக்திகள் சொல்லும் சொல்லின் பொருள் இருபொருள்பட சொல்வார் அது அரசியலையும் முன்னெடுக்கும் கதாபாத்திரத்தையும் பேசும்.. புரிந்துக்கொள்வார்கள்..
..
இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.. அறிஞர் அண்ணா எழுதிய வசனத்தில் கூட நேரம் கருதி சிலவார்த்தைகளை நீக்கிவிட்டு படமாக்கிவிடலாம் ஆனால் கலைஞரின் வசனத்தில் ஒரு வார்த்தை நீக்கினால் கூட பொருள் மாறிவிடும் அவரை கொண்டே மாற்றி எழுத வேண்டும் .. கலைஞரின் எழுத்து எல்லோரையும் ஈர்க்கும்.. அது கொள்கை வேறுபாடு கொண்டவர்கள் கூட ரசித்து நிற்பர்.. எழுத்தில்/பேச்சில் சிலம்பம்,ஆடுவது அவருக்கு மிக இலகுவாக வரும்..
..
சட்டமன்றத்தில் ரகுமான் கான் போலீஸ் மான்ய கோரிக்கையில் .. பேசிக்கொண்டே இருக்கிறார் சபாநாயகர் ராசாராம் அமர சொல்லியும் கேட்கவில்லை.. உன்னை ஆண்டவன்தான் உட்காரவைக்கணும் என்ற போது .. கலைஞர் எழுந்து உட்கார் என்கிறார்
உடனே அமர்ந்துவிட்டார் ரகுமான்.. கலைஞரை பார்த்து மிக்க நன்றி என்றார் சபாநாயகர்.. உடனே கலைஞர் எழுந்து நீங்கள் தானே ஆண்டவனால் தான் அமரவைக்க முடியுமென்றீர்.. நானும் ஆண்டவன்தான் .. என்று சிறிது இடைவெளி விட்டு தமிழகத்தை ஆண்டவன்தான் என்ற போது சபை கைத்தட்டி மகிழ்ந்தது..
கலைஞரோடு சொற்போரில் வென்றவரில்லை.. போராட்டத்தில் கைதாகி சிறை சென்று திரும்பி சட்டமன்றம் வந்தபோது .. அனந்த நாயகி உங்க மாமியார்வீடு (சிறைச்சாலையை) எப்படி இருந்தது என்றார் உடனே.. உங்க தாய்வீடு நலம் என்று வாயடைக்க வைத்தார்..
கன்னியாகுமரி மக்களின் கோரிக்கைப்படி முதல்வருடைய கருணை கொண்ட-கடைக்கண் பார்வை குமரியின்மீது திருப்பப்பட்டு, அம்மக்களின் குறை தீர்க்கும் வகையில் தொழிற்சாலயை அமைக்க, முதல்வர் முன்வருவாரா? என்றார் நூர்முகம்மது எம்எல்ஏ.. பதிலளித்த
கலைஞர் குமரியின்மீது கடைக் கண் பார்வை வைக்கின்ற அளவுக்கு எனக்கு வயது இல்லை இப்போது.. (6.5.1989).. என்றார்..
அதேபோல் காமாட்சி என்ற உறுப்பினர் மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை.. இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு? என்றார் பதிலளித்த
கலைஞர் மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன்னால், காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே! என்றார்..இப்படி நகைச்சுவை குன்றாமல் நயத்தோடு நாகரீகம் கெடாமல் பதிலளிப்பார் ..
..
கண்ணதாசன் வெளிநாடு செல்லும் போது என்ன வாங்கிவர என்றபோது நல்லபெயரை வாங்கிட்டு வா என பொருட்பட சொன்னார்.. தன் தலையை சீவி விடுவதாக வடநாட்டு சாமிகள் சொன்னபோது
என் தலையை நானே சீவி பல நாட்களாகிவிட்டதென சொன்னவர்..
இப்போது கூட உடல் நலிவுற்று காவேரியில் இருந்தபோது செவிலிய பெண்ணிடம் உன்பேர் காவேரியா எனகேட்டு இல்லையென்க தண்ணி கேட்ட இவ்வளவு கம்மியாக கொடுக்குறீயே காவரியான்னு கேட்டேன் என நகைச்சுவையோடு சொன்னவர்..
..
முரசொலி மற்றும் குங்குமத்தில் தான் குறளோவியமும் சங்கத்தமிழும் தொடராக வரும் .. சங்கத்தமிழில்.. அவர் எழுதிய காதல் கவிதைகள்...பழைய நினைவுகளை கிளறும்..
// கண்ணல்லவோ கனியல்லவோ எழுதாத பண்ணல்லவோ என் நெஞ்சம் விண்ணல்லவோ அதில் நீ வெண்ணிலவல்லவோ..என்றென்னை அழைத்திட்ட போது அவன் வடித்திட்ட வார்த்தை அருவித்தவழ் சோலை அழகுமலர்கூட்டம்...:// சங்கத்தமிழில்..சொக்கிப்போவோம்..
..
தமிழ் அவருக்குமட்டுமே கட்டுப்படும்..
அரசியலில்..
சில நேரம் சிலேடைகளோடு எழுதுவார். எம்ஜிஆர் (மகோரா) பற்றி எழுதுவார்..
எல்லோரும் ராமாயணம் என்றிருப்போம்... புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
//
#மானமிகு வாலியை
மறைந்து நின்று தாக்கிய
மான்புமிகு ராமசந்திரனை
மாவீரன் என மகாகவி கம்பனே ஏற்கவில்லை என்பார்..
..
கலைஞர் தமிழ் முன் இதுவரை யாருமே வென்றதில்லை இறுமாப்போடு சொல்வதில்லை உண்மை அதுதான்..
விதவை என்றெழுதும் போது கூட பொட்டுவைக்க முடியவில்லையென இளங்கவிஞன் விகடனில் கவிதை எழுதி கவலையுற்ற போது #கைம்பெண் என்று தமிழில் எழுது ஒன்றுக்கு இரண்டு பொட்டு வைக்கலாமென பொருட்பட பேசியவர் ..
..
கலைஞர் எழுத்து சொல் செயல் எல்லாம் தமிழோடு இணைந்தது தமிழாய் நின்றது..
கலைஞரின் குரலை நேசித்து தமிழை சுவாசித்து வளர்ந்தவர் நாம்.. அந்த பெருமகனோ வாழ்கிறோம் என்பதே பெருமைதான்..
..
#தமிழாசான்_கலைஞர்_பிறந்தநாள்_ஜூன்3
..
ஆலஞ்சியார்
Tuesday, May 28, 2019
சாதீ..
எந்த ஊரு.. எந்த ஜாதி
விளங்கமுடியாமல் போய் துணைக்கு ஜாதியை அழைத்து பரிதாபமாய் நிற்கிறார் .. தன் உயர்ஜாதியென நம்பும் கிருஷ்ணசாமி.. சாதியே இழுக்கென்று அறியாமல் சாதியை இன்னமும் நம்பி தன் சமூகம் கைகழுவியது கூட அறியாமல் பரிதாபகரமாய் நிற்கிறார் .. யாரிந்த கிருஷ்ணசாமி ஏன் இந்தளவு முக்கியத்துவம் தரவேண்டும் .. ஒட்டபிராடத்தில் தனித்துவமாய் மிளிர்ந்த கிருஷ்ணசாமி தன் சமூகத்தின்பால் அளவற்ற அன்பு கொண்டிருப்பதாக காட்டி .. சமூக நீதியே தன் இலக்கென்று பயணித்தவர் மதவெறியர்களின் பிடியில் சிக்கி தன்னை உயர்ந்த பிறப்பாக காட்ட நினைத்து கடாசியில் மிக கேவலமாக தமிழ் சமூகத்தால் பார்க்கிற நிலை ..தன் மகள் எவ்வளவு மதிப்பெண் பெற்றால் என்று கூட தெரியாது அவருக்கு மருத்துவம் கிடைப்பதற்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டு பெற்றதை மறைத்து .. அதை வெளிகொணர்ந்த அன்று சபையில் இருந்த மார்க்சிஸ்ட் தோழர் பாலபாரதியை யாரென்று தெரியாதென சொல்லி ஒரு தவறை மறைக்க மேலும் மேலும் பொய்களால் அவமானபட்டு நிற்கிறார் .. சாதியை மட்டுமே நம்பி நின்றால் மதத்தை மட்டுமே நம்பினால் தமிழகத்தில் கதை ஆகாதென என்பதை பாமகவின் தோல்வி உணர்த்தியிருக்கிறது .. ஆறுமுறை தொடர்ந்து தோல்வியை அந்த தொகுதி மக்கள் தந்திருக்கிறார்கள் .. ஒருகாலத்தில் கொண்டாடிய மக்கள் இன்று இவரை முகம்பார்க்க தயாரில்லை ..
..
இந்த மண் சாதியத்தை நம்பி அரசியல் செய்ய முடியாது
பாமக கூட தன்னை சமூக நல்லிணக்கவாதியாக காட்டி கொண்டதால் ராமதாஸை அங்கீகரித்தார்கள் ஒரே மேடையில் திருமாவோடு அமர்ந்து சமூக நல்லிணக்கம் எனது பாதையென நம்பவைத்தார் தாழ்த்தபட்டவரின் பிணம் எடுத்த செல்ல மறுத்தால் எனக்கு போன் செய்யுங்கள் நான் வருகிறேன் என்றெல்லாம் பேசி வளர்ந்தார் வன்னிய சமூக மக்கள் மட்டுமல்ல பிற சமூக மக்களிடமும் ஒரு நம்பிக்கை வளர்த்தவர் தான் பிறகுதான் சுயரூபம் வெளிபட்டு இன்று பரிதாபகரமான நிலையில் பாமக .. அதைவிட மிக மோசமான நிலையில் கிருஷ்ணசாமி இருப்பதை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை
பத்திரிக்கையாளர் சந்திப்பில் தரகுறைவாக நீ வா போ என ப்சுவதும் அவன் இவன் என அழைப்பதும் கடைசியில் எந்த ஊரூ என்ன சாதி என்றழைத்து தரம்தாழ்ந்து நிற்கிறார் .. அவரை யாரும் கண்டுக்கொள்ளாதீர்கள் விரக்தியின் உச்சத்தில் பாவம் செய்வதறியாது பேதலித்து நிற்கிறார் .. நான் உயர்ந்த சாதியென என தனக்குள் பேசி பேசி கடைசியில் பார்கிறவரையெல்லாம் என்ன சாதியென கேட்கிற நிலை பாவம் விட்டுவிடுங்கள் .. கிருஷ்ணசாமி நல்ல மனநல மருத்துவரை காண்பது நலம் ..
..
சாதி மனிதனை மிருகமாக்கும்.. பைத்தியகாரனாகவும் மாற்றும் ..
..
ஆலஞ்சியார்
Monday, May 27, 2019
ஸ்டாலின்...
இடதுசாரிகள் செய்ய வேண்டியதை
ஸ்டாலின் துணிச்சலாக செய்கிறார் ..
-தா பாண்டியன்..
அதைதான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம்
கம்யூனிஸிட்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொள்ளாதவரை இதே நிலைதான் தொடரும்
கம்யூ.கட்சி பார்பனர்கள் கையிலிருந்து அதிகாரம் பிடுங்கப்பட்டாலொழிய அது மறைமுகமாக சனாதனவாதிகளுக்கு ஆதரவான நிலையைதான் செய்யும்.. பொலிட் பீரோவில் இத்தனை ஆண்டுகளாயும் பார்பன மேலாதிக்க எண்ணமே இருந்தது இருக்கிறதென்பதை உணரமுடியும்,..
..
காங்கிரஸையும் பாசிசத்தை எதிர்பபதாக சொல்லி
காங்கிரஸை தோற்கடிக்க வேண்டும் என்பதே அவர்கள் தலையாய பணி.. அதைவிட பாஜகவின் வெற்றிக்கு முடிந்தளவு மறைமுகமாக உதவுவது .. இதை 1984 லிருந்தே செய்துவருகிறது .. ராஜீவ் எதிராக வி.பி.சிங் களமிறக்கபட்டபோது அப்போது இரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜகவை .. புரிந்துணர்வு என்ற புதிய உக்தியை சொல்லி சில இடங்களில் எதிர்த்து வேட்பாளரை நிறுத்த கூடாதென ஒப்பந்தம் செய்ததன் விளைவு அப்போது 82 இடங்களில் பாஜக வெற்றிப்பெற்றது .. அன்று தொடங்கி இன்று வரை மார்க்.கம்யூனிஸ்ட் கட்சி அந்த பணியை தான் காங்கிரஸை எதிர்ப்பதாக சொல்லி பாஜக வெற்றிக்கு வழிவகுக்கிறது .. இந்த தேர்தல் கூட மம்தாவை வீழ்த்த வேண்டும் அல்லது வங்கத்திலிருந்து விரட்டவேண்டுமென்று பாஜகவிற்கு வாக்களிக்க வலியுறுத்துயதாக வரும் செய்தி மிகவும் கவலைக்குரியது
..
இந்திய நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சனாதனவாதிகளின் கையில் நாடு சிக்குண்டு வருவதை தடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு பொதுவுடமைவாதிகளுக்கு இருக்கவேண்டும்
அனைத்து கட்சிகளிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி முக்கிய எதிரியாக பாஜகவை வீழித்த வியூகம் வகுத்திருக்கவேண்டும் .. விட்டுகொடுத்து
அனைவரையும் .. பாசிச எதிர்பாளர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டிருக்கவேண்டும் ..
திமுக.தலைவர்.ஸ்டாலின் அதை மிக கச்சிதமாக செய்தார் .. தமிழகத்தின் கம்யுனிஸ்ட்களின் பலமறிந்தும் 2 தொகுதிகளை ஒதுக்கினார் சில அரசியல் ஆய்வாளர்கள்/விமர்சகர்கள் கூட அதிகம் என
சொன்னார்கள் காங்கிரஸூக்கு ஏன் இத்தனை இடங்களை தரவேண்டுமென கேள்வி எழுந்தது ஆனால் திமுக தலைவரின் நோக்கம் பாஜகவை வீழ்த்தவேண்டும் .. அதேபோல் யார் பிரதமர் என்பதை முதலிலேயே அறிவித்து களமிறங்குவது நல்ல பலனை தரும் ..வடமாநில கட்சிகள் ராகுலை முன்னிறுத்த தயங்கியதும் ..எல்லோருக்கும் பிரதமர் பதவியின் மீது ஆசையும் கடைசியில் வழிகேட்டில் நிறுத்திய நிலையாகியது ..
..
கலைஞர் சொல்வார் என் உயரம் எனக்கு தெரியும்
அதனால் தான் பிரதமரை உருவாக்குகிற இடத்தில் இருந்தார் பிரதமராக ஆசைபடவில்லை .. கலைஞரைப்போல தளபதியும் மிக நேர்த்தியாக
கூட்டணியை அமைத்து வெற்றிப்பெற்று இன்று இந்தியாவே வியக்கிற தலைவராக உயர்ந்து நிற்கிறார்
50 ஆண்டுகளாக அனுபவமும் கலைஞரிடம் நேரடி பயிற்சியும் அனைவரையும் அரவணைத்து செல்லும் பாங்கும், சரியான திட்டமிடலும் கடும் உழைப்பும் .. மக்களை நேரடியாக சந்தித்து உரையாடுவதும் .. மக்களுக்கும் தலைவனுக்குமான இடைவெளியை குறைத்ததும் .. தொண்டர்களை சரியாக வழிநடத்தியதும் இந்த பெரிய வெற்றிக்கு காரணிகளாகும் ..
..
தளபதி உயர்ந்து நிற்கிறார்
..
ஆலஞ்சியார்
Friday, May 24, 2019
திராவிடம் எங்கள் வாழ்வியல் அரசியல்
நடந்து முடிந்த தேர்தலின் வெற்றியை சில முற்போக்கு பேசும் பழசுகள்... என்ன செய்யபோகிறார்கள் என்கிறார்கள் .. சிலரோ கம்யூனிஸிட் திருமா வின் வெற்றியை புகழுவதாக எண்ணி திமுகவின் எழுச்சிமிகு வெற்றியை மடைமாற்ற பார்க்கிறார்கள் .. இவர்கள் அரசியல் தெளிவற்றவர்கள் ..
திருமாவை "தலித் " தலைவராக காட்ட ஜெய்பீம்கள் முயற்சிப்பதை பார்க்கும் போது அரசியலின் அரிச்சுவடியை கூட இன்னமும் அறிந்திருக்கவில்லையென புரிகிறது .. அதிகாரத்திற்கு வரவேண்டுமென விரும்பினால் .. அதிகாரம் மட்டுமே எம் சமூகமக்களின் துயர் துடைக்கும் என நம்பினால் சாதிய அல்லது குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரவேண்டும்.. இனம் மொழி கலாச்சாரத்தின் நிழலில் நின்று கதைக்கவேண்டும் .. தலித்திய பார்வை என்பது தேர்தல் அரசியலில் பெரிய தாக்கத்தை தந்துவிடாதென்கிற யதார்த்த்தை உணரவேண்டும்,.. சமூக மக்களின் உயர்வென்பதை கருத்தில் கொண்டு செயல்படும் போது பிற சமூக மக்களின் பெரும் துணை வேண்டுமென்பது கட்டாயம் ..
சில ஜெய்பீம்கள் .. தலித் என்பதால் திருமாவின் வெற்றி சிரமத்தை தருவதாக சொல்கிறார்கள் .. தலித் வாக்குகள் மட்டுமே வெற்றியை தீர்மானித்திடவில்லையென்ற உண்மையை,.. திருமாவை குறுகிய வட்டத்திற்குள் அடைத்து தமிழக பெருமக்கள் பார்க்கவில்லையென்ற நிலை உணராமல் அவரை வட்டத்திற்குள் அடைப்பது தலித் சமூகத்திற்கு கேடு விளைவிக்கும்,.. சாதிய தலைவர்களாக வலம்வந்த ராமதாஸ் அன்புமணியின் நிலமை உணர்த்துவது இதுதான் ..
..
நாடெங்கும் கம்யூனிஸ்ட்கள் படுதோல்வியை சந்தித்த போதும் தமிழகத்தில் வென்றிருப்பது உண்மையில் மகிழ்ச்சி .. உயர்ஜாதியினரின் பிடியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி மீட்கப்படவேண்டிய காலகட்டத்தை நமக்கு உணர்த்துகிறது இந்த தேர்தல் விடுதலை அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் பொலிட் பீரோவில் ஒரு தலித் வர முடியவில்லை என்கிற யதார்த்தம் புரிந்தால் பார்பனீயத்தின் கை எந்தளவு ஊடுறுவியிருப்பது புரியும் .. வங்கத்தில் கம்யூ. தோல்விக்கு பிறகான பாஜகவின் வளர்ச்சியில் இவர்களின் பங்கு அபரிதமானது .. இந்தியாவிற்கு இன்றைய தேவை திராவிட கொள்கைகளே தவிர மார்க்ஸியம் அல்ல.. இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லவேண்டுமெனில் .."இந்த மண்ணுக்கேற்ற மார்க்ஸியம் என்பது திராவிடம் " தான் ..
தென்னகம் எப்போதும் போல மதவாத /சாதிய கட்சிகளை புறந்தள்ளியிருக்கிறது இங்கு சமூகநீதி.. அனைவருக்கும் உரிமை சாதி மத பேதமற்ற சமுதாயம் என உயர்நோக்கோடு எப்போதும் செயல்படும் இடையிடையே சில சறுக்கல்கள் வந்தபோதும் தன்நிலைப்பாட்டை உறுதியோடு திரும்ப பெற்றிருக்கிறது .. வடமாநிலத்தைபோல கல்வியாளரை வேண்டாமென வைத்து தீவிரவாத போக்குடையவரை தேர்வு செய்யும் மடமையை எப்போதும் செய்ததில்லை
தலித்களின் பாதுகாப்பு வடமாநிலங்களை போலல்லாமல் இங்கே உரிமையோடு கதைக்க செயல்பட திராவிட இயக்கங்களின் அளப்பரிய தொண்டே காரணம் என்பதை உணரவேண்டும்,..
..
இந்த தேர்தல் பலவகையான நல்லவைகளை செய்திருக்கிறது .. சாதிவெறியர்களை சாய்த்திருக்கிறது மதவெறியர்களுக்கு இங்கே இடமில்லை இனம் மொழியென பிரித்தாளும் சூழ்ச்சி இங்கே பலனளிக்காது சாந்து பூசி வந்தாலும் இனி மயக்கமில்லை.. விலைபேசும் கயவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்டியிருக்கிறது .. அதோடு
மிக சிறந்தவர்களை நாடாளுமன்றம் அனுப்புகிறது .. ஆ.ராசா.. டி.ஆர்.பாலு ,தயாநிதி,பழநிமாணிக்கம்,ஜெகத்ரட்சகன், போன்ற அனுபவமுள்ளவர்களோடு இலக்கிய ஆளுமைகள் கனிமொழி தமிழச்சி ஜோதிமணி வெங்கடேசன் ரவிக்குமார் போன்றவர்கள் .. உண்மையான பொதுவுடைமைவாதிகள், சமூகநீதிக்காக போராடும் திருமா .. இவர்களோடு திராவிட அடலேறுகளாய், ராமலிங்கம், செந்தில்குமார், சிகாமணி, கலாநிதி என திராவிட பெரும்படை நாடாளுமன்றத்தை அதிரவைக்க போகிறது .. தமிழகத்தின் நலன்களை புறக்கணித்தால் "தீ" யென சுட்டெரிப்பார்கள் ..
..
"தேனென இனிக்கும் செய்தியென்பர் சிலருக்கு தேள்கடிபோல் உணர்வர்" என்றார் பேராசான் #அண்ணா .. திராவிடத்தை வீழ்த்தலாம் என்போருக்கு பேராசானின் பொன்மொழியிலேயே பதில் தருவோம்
"திராவிட பெருங்குடியினருக்கு பெருமையோடு சொல்லிக்கொள்வேன் நாம் போட்டுயிருக்கிற அடித்தளம் சாமானியமானதல்ல.,காலத்தால் கிள்ளியெறியபட கூடியதல்ல, காதகர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் கிள்ளியெறிய முடியாது அந்தளவிற்கு அடித்தளம் போட்டாகிவிட்டது "..
..
ஆம் திராவிடம் எங்கள் வாழ்வியல் அரசியல்
Thursday, May 23, 2019
திராவிடம் வெல்லும்
என் திராவிடத் தலைவா..
நெஞிசமெல்லாம் பூரிப்பு துள்ளியெழ .. உச்சிமுகர்ந்து முத்தமிடுகிறேன் .. எத்தனை இன்னல்கள் எத்தனை இழிச்சொற்கள் எத்தனை வஞ்சகம் அத்தனையையும் தாண்டி .. இதே முடிந்ததென கூப்பாடுபோட்டவர்கள்
திராவிட இயக்கத்தை வேரோடு சாய்க்கலாமென்றவர்கள் மத்தியில் நடுநிலை என்ற பெயரில் நக்கலடித்தவர்கள் திமுகவை ஒழிப்பதே எனது தலையாயபணி என்று ஓலமிட்டவர்கள் மத்தியில் தனுயொருவனாய் .. ஓயாத உழைத்து திமுக எனும் மக்கள் இயக்கத்தை வெற்றிபெற செய்திருக்கிறீர் ..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை வழிநடத்த வந்த எழுச்சி நாயகரே வாழ்த்துகள்
..
பெரியாரின் பேரப்பிள்ளைகள் 38 பேரை அனுப்புகிறோம் 16 வது மக்களவைக்கு.. இதுவரை சில அறிவிலிகளால் நாம் பட்ட துன்பங்களை .. தமிழர்களின் மானத்தை விலைபேசிய மூடர்களை துடைத்தெறிந்து மானமிகு செயல்வீரர்களை அனுப்புகிறோம் .. சென்ற முறை செய்த தவறுக்கு பரிகாரமாய் ஆற்றல்மிகு திராவிட அடலேறுகளை அனுப்புகிறோம் .. கனிமொழி தமிழச்சி,ஜோதிமணியென பெரியாரின் பெயர்த்திகள் செல்வது பேரின்ப மகிழ்ச்சியை தருகிறது ..
சு.வெங்கட்சன் ரவிக்குமார் கனிமொழி தமிழச்சி போன்ற இலக்கிய ஆளுமைகளும் நாடாளுமன்றத்திற்கு பெரும் மகிழ்ச்சி..
தமிழகத்தின் நலன்கள் .. தேவைகளை போராடி பெற சிறந்தவர்களை நாம் அனுப்பியிருக்கிறோம் .. எதையுமே போராடி பெறுவதில் தான் தன்மான திமிர் இருக்கிறதென்ற சுயமரியாதைகாரர்கள் நாம் .. அதை தான் கலைஞர் நமக்கு கற்று தந்தார் ..
..
தன் உயரம் தனக்கு தெரியும் என்பார் கலைஞர் .. மற்ற மாநிலங்களில் எல்லோருமே இழுபறி வரும் அதைவைத்து பிரதமர் கனவில் மிதந்து கூட்டணி அமைத்து போட்டியிடாமல் தனித்து போட்டியிட்டு கடைசியில் மண்ணை கவ்வி மீண்டும் மோடியை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள் தமிழகத்தில் கூட்டணி அமைத்து மிக சாதூர்யமாய் காய் நகர்த்தி .. ஓயாமல் சுழன்று சுழன்று உழைத்து .. "அப்பனின் மகன்" என உணர்த்தியிருக்கிறார்.. இந்த தேர்தல் சில உதரிகளை. ஏதோ தாங்கள் தான் ரட்சகன் போலவும் .. இந்த தமிழ் சமூகமே தங்களால் தான் காப்பாற்ற முடியுமென கதைவிட்டு .. இவர்களுக்கு மட்டும்தான் உணர்விருப்பதைப்போல பேசி திரிந்தவர்களுக்கு "கட்டிவச்ச" காசையும் பிடிங்கிக் கொண்டு விரட்டியடித்திருக்கிறார்கள் .. தமிழகத்தின் திமுகவின் தேவையும் இந்த மண் பண்பட்ட சமூகநீதிக்கான களம் என்பதையும் சாதியைச் சொல்லி மதத்தைச் சொல்லி வெறியூட்டி குளிர்காய நினைத்தால் அம்மணமாக்கி விரட்டிவிடுவார்கள் மக்கள் என உணர்த்தியிருக்கிறது இந்த தேர்தல் .. மதத்தை சொல்லி பிரித்து நாடகமாடி நயவஞ்ச செயலை செய்வோரை விரட்டியடிக்கும் மண் இது ..
..
பெருங்கிழவன் செப்பனிட்ட பாதையை எண்ணி.. பூரிக்கிறேன்,.. பேரறிஞரும் பேரருளாளனும் போற்றி காத்த மண் என்று உவகை கொள்கிறேன் .. பெருவெற்றியை பெற்று தந்த தளபதியின் கரம் பிடித்து மகிழ்கிறேன் ..
..
ஆலஞ்சியார்
Wednesday, May 22, 2019
நாளைய நம்பிக்கை
எல்லோருக்கும் ஆசைதான் ..
மந்திரிசபையில் இடம்பெறுவது குறித்து தேர்தல் முடிவிற்கு பிறகு யோசிப்போம் தேமுதிக..
அதிமுக மந்திரிசபையில் இடம் பெறுமா என்பதை முடிவிற்கு பிறகு சொல்வோம் பன்னீர் ..
..
மூணுகுளம் வெட்டினேன் இரண்டுல தண்ணியே இல்ல ஒண்ணு பாழ்.. என்ற கதைதான் நியாபகம் வந்தது ஆசைபட யாருக்கும் அவகாசம் உண்டு கள நிலவரம் அறியாமல் சிலர் கதைக்கிறார்கள் .. அமித்ஷா அளித்த விருந்தில் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியின் தலைவர் சரத்குமாரெல்லாம் கலந்து கொண்டது மிகப்பெரிய அதிர்வலைகளை அரசியலில் தந்திருக்கிறது .. இனி தான் என் ஆட்டத்தை பார்க்க போகிறீர்கள் என கைப்புள்ள சீமான் சொன்னதைப்போல ..
..
வெற்றி தோல்வி நாளை தெரிந்துவிடும் ஆனாலும் இவர்களின் பேராசைதான் சிரிப்பை தருகிறது பல்வேறு கருத்து திணிப்புகளுக்கு நாளை சம்மட்டி அடி விழலாம் .. வடஇந்தியாவில் ஆட்டோவிலும் லாரியிலும் மளிகைகடைகளிலும் ஹோட்டல் அறைகளிலும் வாக்குபதிவு இயந்திரங்கள் உலா வருவதால் எதுவும் நிகழலாம் மக்களின் உணர்வுகளின் மீது அவர்களின் உரிமைகள் மீது நடத்தபடுகிற யுத்தமாகவே இதை கருதவேண்டியிருக்கிறது ஜனநாயகத்தில் மிகப்பெரிய விரிசல் விழுந்திருக்கிறது மக்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும் நாங்கள் முடிவு செய்வோம் யார் ஆள வேண்டுமென என்பதை போல
ஆளும் அரசிற்கு ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுக்கிறது தேர்தல் ஆணையம் .. இதுவரை இப்படியொரு விமர்சனத்தை இன்னும் சொல்லப்போனால் நம்பிக்கையின்மையை இப்போதுதான் தேர்தல் ஆணையம் பெறுகிறது ..
20 லட்சம் வாக்கு பதிவு இயந்திரம் இருக்குமிடம் தெரியவில்லை /காணவில்லையென தகவல் உரிமையில் கேட்டு பெறப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது .. சுயமாக செயல்படவேண்டிய ஆணையம் விவி பாட் பரிசோதனைக்கு பிறகே வாக்கெண்ணல் வேண்டுமென்ற ஒட்டுமொத்த எதிர்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது .. வெளிப்படைத்தன்மை இல்லாத ஆணையம் ஜனநாயகத்திற்கு கேட்டை தரும் ..சர்வாதிகார போக்கும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறதென்ற குற்றசாட்டை நிரூபிக்கிற வகையில் அதன் செயல்பாடுகள் இருக்கிறது ..
..
நாளை சூரியன் உதிக்கும் நல்லதொரு பொழுதாய் விடியுமென மக்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் .. எத்தனை இடைஞ்சல்கள்/இடையூறுகள் வந்தாலும் வெற்றி தோல்வி எதுவாகினும் மக்கள்பணி செய்து கிடப்பதே எமது தலையாய கடமையென செயலாற்றுவோம் .. மக்கள் நம் மீது கொண்ட நம்பிக்கைக்கேற்ப செயலாற்றுவோம்..
கலைஞர் பெருமகன் கற்றுதந்த வழியில் அவர் செதுக்கிய பாதையில் களைப்பின்றி பயணம் தொடர்வோம் .. சமூகநீதி காத்திட இனம் மொழி கலாச்சாரம் காத்திட பகுத்தறிவு துணைக்கொண்டு பயணிப்போம் ..
ஆற்றல்மிகு அடலேறுகளை கொண்ட மாபெரும் இயக்கம் திமுக .. அது கட்சியல்ல மாபெரும் இயக்கம் ..தன் கடமையிலிருந்து மாறாது .. தமிழகத்தில் புதியதொரு நல்லாட்சியை சமைத்திட உறுதிஏற்போம் .மக்கள் நலனே பிரதானமாய் கொண்டு செயல்படுவோம்,..
தளபதியோடு கரம் சேர்ப்போம்.. நாளைய நம்பிக்கை நாட்டின் ..நாட்டுமக்களின் நம்பிக்கை தளபதி..
..
நாளை நமதே..
..
ஆலஞ்சியார்
Tuesday, May 21, 2019
வியப்பூட்டும் தலைவர்
நான் கண்ட வியப்பூட்டும் தலைவர் ..
பேரருளாளன் கலைஞர்
..
தலைவர்கள் நன்னெறியோடும் தியாக சிந்தனையோடும் பல்வேறு கடமைகளையாற்றி மக்களிடையே நன்மதிப்பை பெற்றிருக்கிறார்கள் அவர்களை காலம் கடந்தும் போற்றியிருக்கிறது .. ஆனால் அவர்கள் தன் கொள்கையாளர்களால் தன்னை பின்பற்றிய தொண்டர்களால் தான் உருவாக்கிய கட்சி/இயக்கத்தால் நினைவுகூறபட்டிருக்கிறார்கள் .. அவரை விரும்புகிற நேசிக்கிற மக்களும் அவர்களை கொண்டாடியிருக்கிறார்கள் ..
..
கலைஞர் .. வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர்கள் கூட அவரின் ஓய்விடத்தில் வந்து கண்ணீர் சிந்துகிறார்கள் .. அறியாமையில் தவறான வழிகாட்டலில், தவறான புரிதலில் ஒப்பற்ற ஒரு தலைவனை வேண்டாமென வைத்தோமே என நொஞ்சுருகுகிறார்கள்.. அவரின் சிந்தனையில் முப்பதாண்டுகளுக்கு முன்பு உதித்ததுதான் இன்றைய Digital India செய்கிறது பின்பற்றுகிறதென்பதை அறிந்து வியந்துநிற்கிறார்கள்
பார்பன ஊடகங்கள் கட்டிசமைத்தவைகள் .. தீயசக்தியென பேசி திரிந்தவையெல்லாம் பொய்யென்று அறிந்த போது கண்கலங்கி நிற்கிறார்கள் ..
..
ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் எப்படி இயங்கவேண்டுமென பாடமாக இருக்கிறார் கலைஞர் ..
போற்றுபவரையும் தூற்றுபவரையும் கண்டு கவலைக்கொள்ளாமல் மக்கள் நலத்திட்டங்களை தொலைநோக்கோடு .. வாய்ப்பு அமைகிறபோதெல்லாம் மிக நேர்த்தியாய் செய்து முடித்தவர் .. விமர்சனங்கள் வரும் பழி கூட வரும் எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாமல் விளிம்புநிலை மக்களின் ஏற்றம் ஒன்றே தன் வாழ்நாள் கொள்கையாய் கொண்டு செயல்பட்டவர் .. கல்வி மட்டுமே என் சமூதாயத்தை மேம்படுத்தும் என எண்ணி.. ஊர்தோறும் பாடசாலைகளை நிறுவியவர் .. 5 கிலோ மீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி 7 கி.மீ உயர்நிலை/மேல்நிலைப்பள்ளியென வட்டம் தோறும் கல்லூரிகள்
மாவட்டத்தோறும் மருத்துவக்கல்லூரி என கல்விப்புரட்சியை அமைதியாய் செய்து முடித்தவர் ..
ஏழைகளுக்கு இலவச நிலம் .. வீடில்லாதோருக்கு வீடு ..
விவசாயகளுக்கு இலவச மின்சாரம் என அமைதிபுரட்சியை செய்துவிட்டு பெருமைபட்டுக்கொள்ளாமல்
அதை தன் கடமையாக கருதியவர் .. முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி என்பதும் அவனுக்கு முன்னுரிமை என்பதெல்லாம்
புதிய சிந்தனையும் வடிவம்.. இந்தியாவில் முதன்முதலில் நடப்பாக்கியவர் .. எட்டாவதுவரை படித்தால் திருமண உதவியென சொல்லி பெண்குழந்தைகளை கல்வி கற்க வைத்தவர்
அரசியலில் இவரைப் போல ஒரு ஆளுமையை இந்தியா இதுவரை கண்டதில்லை .. முப்பதாண்டுக்கு முன்பே இவர் தீட்டிய திட்டங்கள் தான் நவீன இந்தியாவிற்கு பொருந்துகிறது ..
..
ஆளுமை ..
பல்வேறு துறைகளில் சிறந்த ஆளுமைகளை கண்டிருக்கிறோம் .. ஆனால் பன்முக ஆளுமையாய் அதிலும் ஒவ்வொரு துறையிலும் பேராளுமையாய் கலைஞரைப்போல காண்பதறிது.. இலக்கியம் பேச்சாற்றல் நாடகம் சினிமா எழுத்தாற்றல் அரசியல் என தொட்டதெல்லாம் மின்ன செய்தவர் எப்போது எதை எப்படி கையாள வேண்டும் எப்படி பேச வேண்டுமென .. எதை கொண்டு இந்திய அரசியல் நகர்வை திருப்பவேண்டுமென அறிந்து செயல்பட்ட ஒப்பற்ற ஆளுமை கலைஞர் அவர்கள் தான் .. நாவன்மை, சட்டமன்ற செயல்களில் தனித்துவம் .. எதிராளர்களையும் மதிக்கும் பேரன்பு .. கட்சியின் கடைமட்ட தொண்டனோடும் உறவு .. என எல்லா நகர்வுகளையும் ஜனநாயகபடுத்திட்ட பேராற்றல் ..
இந்தியாவிலேயே மிகவும் சிறந்த முறையில் உட்கட்சி தேர்தலை நடத்தி ஜனநாயகத்தின் அடிநாதத்தை உயிர்ப்போடு வைத்திருந்த தலைவரை வேறெங்கும் காண இயலாது .. இவ்வளவு வெளிப்படையான தலைவரை வேறெங்கும் காண இயலாது .. இத்தனை துரோகிகளை .. இத்தனை தோல்விகளை வேறாரும் கண்டிருந்தால் இருந்த இடமே தெரியாமல் புதைந்து போயிருப்பார்கள்.. எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றார் அண்ணா ...உண்மையில் எல்லாவற்றையும் தாங்கிய/தாங்கும் இதயம் பெற்றவர் கலைஞர்
..
வாழும் போதெல்லாம் இவரை அறியாமல் போன தமிழன் தன் நன்றிகடனை கண்ணீரால் செலுத்துகிறான் .. இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தன்னிகரற்ற அரசியல் தலைவர் கலைஞர்..
#பேரருளாளன்
..
ஆலஞ்சியார்
Monday, May 20, 2019
கருத்து திணிப்பு
கருத்துக்கணிப்புகளுடன் சில நாட்கள் பகல் கனவில் மிதப்போர் மிதக்கட்டும்... 23 ஆம் தேதி அவர்கள் கனவை மக்கள் பொய்யாக்குவார்கள் என்பதை நம்புங்கள்... 23 ஆம் தேதியிலிருந்து நமக்கு கொண்டாட்டம்தான்... காந்தி இதைத்தான் நமக்கு கற்றுக் கொடுத்தார் பிரகாஷ்ராஜ்..
..
கருத்துகணிப்பென்ற பெயரில் சூதாட்டம் நடக்கிறது
மும்பையில் மிகப்பெரியளவில் யார் வெல்வார்களென்று சட்டா பஜாரில் பாஜக வெல்லுமென பந்தயம் கட்டி நேற்று காசு பார்த்துவிட்டார்கள் மிகப்பெரிய மோசடி அதில் நடந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன..
திருமதி சோனியா காந்தி exit poll க்கு பிறகும் மிக நம்பிக்கையோடு இருப்பதாக செய்திகள் சொல்கின்றன .. பாரபட்சமற்ற முறையில் தனியார் ஏஜென்ஸி எடுத்த சர்வேவும் .. மத்திய உளவுத்துறை கசியவிட்ட ரிப்போர்ட்டும் காங்கிரஸிக்கு சாதகமாக இருப்பதாக சொல்கிறது .. இந்த கருத்து திணிப்புகள் பொய் என்பதற்கு தென்னிந்தியாவில் 10 இடங்கள் தான் பாஜக வருமென்று சொல்கிறவர்கள் எப்படி 300-340 என விலையிறுத்த முடியும் தென்னிந்தியாவில் மாநில கட்சிகள் 100-110 இடங்களில் வெற்றிபெறுமென அவர்களே சொல்லும் போது எப்படி அவர்களின் கணிப்பு சாத்தியமாகும் .. நாடு முழுவதிலுமிருந்து 2 லட்சம் பேரிடம் கேட்டதாகவும் .. இரண்டு பேர் விடுத்து மூன்றாவது நபரிடம் கருத்துக் கேட்கபட்டதாகவும் சொல்வது இதுவரை இப்படியொரு முறை sample கடைப்பிடிக்கபட்டதில்லை ..
..
தேர்தல் ஆணையமும் அதிகாரிகளும் அரசு இயந்திரமும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாக ராகுல் குற்றம் சாட்டுகிறார் .. உண்மையில் சில வாக்கு சாவடிகளில் அதிகாரியே அழைத்து சென்று ஓரு குறிப்பிட்ட சின்னத்திற்கு வாக்களித்ததும்.. சில ஊர்களில் பணத்தை கொடுத்துவிட்டு கைவிரலில் மை வைத்துவிட்டு அவர்களே வாக்களித்ததாகவும் செய்திகள் வருகின்றன ..மிக பெரியளவில் மோசடியை அரசின் துணைக்கொண்டு செய்திருக்கிறார்கள் .. தேர்தல் ஆணையர் ஒருவரே தலைமை ஆணையருக்கு நேர்மையாக தேர்தல் நடத்தபடவில்லையென சிலருக்காக விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதை சுட்டிகாட்டி கடிதம் எழுதியது இதுவரை நடந்திராத கூத்து .. இதையெல்லாம் மீறி மக்களின் தன்னெழுச்சி ..இந்த பாசிச அரசின் மீது கொண்ட வெறுப்பை ஆங்காங்கே காண முடிந்தது .. இதுவரை காணாத எதிர்ப்பு கருத்து கணிப்பின் மீது வந்தது இதுதான் முதல் முறை ..
..
2004,2009, என கருத்து கணிப்புகள் பொய்த்திருக்கின்றன இன்றைய தின ஏடுகள் சில கருத்துகணிப்பு நம்பதன்மையை குறைகூறி மெதுவாக முலாம் பூசுகிறது ..
ThNeta-NewsX predicts 242 seats for NDA, 164 for UPA
''''"'""""""""""""'''''""""""""""""""""""""""""""""""""""""""""""""
This has been a very close fight. With no one party expected to form the government this time, we are back to the era of coalitions. As per our data, the expected post-poll alliances show that both the NDA and the UPA have an opportunity to form the government though the NDA is much closer to the 272 mark. It would be very interesting to watch the post-poll alliances that the Congress and the BJP are able to form after the election results are out,"
எந்த கட்சியும் தனித்து வெல்ல முடியாது என்பதும் NDA பெரும்பான்மைக்கு அருகில் வரும் அவ்வளவுதான்
ஆனால் ஊடகங்கள்
Journalist must think about their role in the normalisation of extremist behaviour rather than focusing on exist polls...// THE HINDU...
மிகைபடுத்தபட்ட கருத்து திணிப்பு ..
திரு.ஸ்டாலின் சொன்னதைப்போல அறுவடைக்காலத்தில் அதிகம் கவனம் தேவை .. ஏனெனில் தேர்தல் ஆணையம் நம்பிக்கையை இழந்து நிற்கிறது .. எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையம் மீது வழக்கு தொடுக்கலாமென மம்தா சொல்வதை கவனிக்கவேண்டும் .. ஆர்எஸ்எஸ் பாசிச சித்தாந்திகள் கையில் சுயசார்பு நிறுவனங்கள் செல்வது ஆபத்தானதென்பதை உணர தொடங்கியிருக்கிறோம் ..
..
மே23 .. விடியும்
..
ஆலஞ்சியார்
..
Sunday, May 19, 2019
யார்..நான்
இரண்டு கவிதைகள்
**********************************
ரகசியம் சொல்கிறேன்
காதை கொடுங்கள்
நான் நானில்லை ..
நிஜத்தில்..
நான் நானில்லை..
முகம் வேறு..
அகம் வேறு...
..
உள்ளில் வஞ்சம்..
பிறர் வாழ..
வழிவிடுவதேயில்லை..
எல்லாம் எனக்காது..
அடுத்தவர் உரிமையா..
நான் தருவருதே..
அவர் உரிமை..
..
பங்காளி
தேங்காய் உடைத்தால்
நான் கொட்டாங்குச்சியை அல்ல
அவன் கையையே உடைக்கிறேன்..
..
வெளியில் தெரியும்
எதுவும்..நிஜமில்லை..
..
உள்ளில் மிருகம்
மூகமூடியணிந்து..
சிரித்து பேசி..
பலரை படுகுழியில்
தள்ளுகிறது ..
தவறென்று தெரிந்தும்.
மனதில் துளியும்
இரக்கம் கொள்ளாமல்.
கீரிடம் சூட்டிக்கொள்ளகிறேன்..
..
அடுத்தவர் பாதையை
அடைத்து..
எனக்கென..ஒருபாதை..
நான் மட்டுமே
செல்லும் தனிபாதை
வேண்டுமென்கிறேன்..
..
சுற்றம் சொந்தம் கூட
எனைச் சுற்றியே
இயங்க வேண்டுமென்ற
பேராசைக்காரன்..#நான்
..
உலகம் எனக்கானது
என்ற அகம்பாவம்..
எதற்கும் அடங்காத திமிர்
யார் சொல்லும் கேளாமை,
அறியாமை..
பெரியவர் தம்மை மதிக்காத
கொடுஞ்செயல் ..
எல்லாம் உண்டு என்னிடம்..
வெளியில் காட்டாதவாறு
யாரும் எனை
இனம்காணாதவாறு..
..
நான் நானில்லை
நிஜத்தில்லை
மனிதனில்லை..
மனிதம் மரத்துப்போன
முகமிழந்த..
போலி முகமூடியணிந்த
பொல்லாதவன் ..
..
எல்லோரும்..
சொல்கிறார்கள்
#நான்_மனிதன்..
..
*************************************
சிலநேரம்..
நம்மை கடந்து போகும்
நிகழ்வு எதும் ..
நமக்கில்லை என
எண்ணுவதுண்டு..
சின்ன சலனத்தைக்கூட
ஏற்படுத்துவதில்லை.
நமக்கு மிக நெருக்கமான
ஏதோ ஒருவகையில்
தொடர்புடைய .
என்றாவது ஒருநாள்..
நம்மை நேரடியாய் ..
சில வேளை ..
இதயத்தில் ரணத்தை..
மாறா வடுவை
தரக்கூடிய
நிகழ்வு கூட
நமக்கில்லையெனும் போது..
சஞ்சலமில்லாமல்
நம்மால் இயங்க முடியும்..
..
மரணம் அழகு..
அத்தனை கொடூரமில்லை..
என்றாவது
நம்மை தழுவும்..
ஆரத்தழுவும்..
இயற்கையோடு
நம்மை கொண்டு சேர்க்கும் ..
மண்ணில் உரமாவோம்..
..
நிறைய வாழ்ந்தவனோ
நிம்மதி இழந்தவனோ..
பேராசை கொண்டவனோ
பேரறிவாளனோ.
மண் சமன் செய்யும்.
மரணம் அழகு..
இயல்பாய் வருமெனில்..
தனியாய் வருமெனில்..
#மரணம்கூட_அழகு..
..
ஆலஞ்சியார்
மோடி
குகை ..
வரலாற்று நெடுக பெரும் கதாபாத்திரமாய் இருந்திருக்கிறது .. குகைவாசிகள் .. குகைக்குள் தஞ்சம் குகைக்குள் தியானமென வரலாறு நமக்கு சில சேதிகளை சொல்லியிருக்கிறது .. குகை இந்த உலகிற்கு நிறைய சேதிகளை சொல்லும்.. அரசு அதிகாரம் வேண்டாமென்று நிம்மதி வேண்டி குகைக்குள் தியானத்ததாய் எல்லாம் நாம் செவிவழி செய்தியாய் கேட்டதுண்டு ..மதங்களில் குகை எனும் சொல் புனிதமாக்கபட்டிருக்கிறது .. சில அற்புதங்களை நிகழ்த்தியதாயெல்லாம் வேதங்களும் .. அதை பின்பற்றுவோரும் நம்புவதுண்டு .. சில வரலாற்று ஆய்வுகள் சிலவற்றை நம்பதகுந்ததாய் சொல்கிறது ..
எப்படியோ குகை மீண்டும் பேசு பொருளாக மாறியிருக்கிறது ..
..
வடக்கிருத்தல் ..(சல்லே கனை)
வடக்கிருத்தல் என்பது சமண சமயக் கொள்கை. உண்ணா நோன்பிருந்து உயிர்விடுவது என்பது இதன் பொருள். வடக்கிருத்தல் எப்போது செய்ய வேண்டும் என்பதை அருங்கலச் செப்பு என்னும் சமண சமயநூல்
"இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை"
அஃதாவது, பொறுக்க முடியாத மனவேதனையைத் தருகிற இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு இவை உண்டான காலத்துச் சல்லேகனை செய்து உயிர் விடலாம் என்பது சமணர் கொள்கை. இரத்தின கரண்டக சிராவகாசாசரம் என்னும் வடமொழிச் சமணசமய நூலிலே இதே செய்தி கூறப்படுவதோடு, வற்கடம் முதலான பஞ்ச காலத்திலும் சல்லேகனை செய்யலாம் என்று கூறுகிறது
..
மோடி வடக்கிருத்தலை மேற்கொண்டு நாடே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் .. குகைக்குள் தியானம் பொறுக்க முடியாத வேதனையில் நிம்மதி தேடி துறவி வேடமணிந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.. குகைக்குள் அதிநவீன வசதிகள் .. பஞ்சுமெத்தை போன்ற விரிப்பு அவசரத்திற்கு செல்ல நவீன கழிப்பறை .. கடுங்குளிரை கட்டுபடுத்த மின்சாரத்தில் இயங்கும் ஹீட்டர் .. சொகுசான தியான பயிற்சி .. பாரத பிரதமரின் தியானம் கேலிப்பொருளாக்கியிருக்கிறது .. இவர்கள் மதத்தை கடவுளை கேலிசெய்வதாக ராகுல் சொல்லில் உண்மையில்லாமல் இல்லை .. துறவமென்பது இப்போதெல்லாம் காசு சம்பாதிக்கும் குறுகிய வழியாகிப்போனதால் கார்ப்பரேட் சாமியார்கள் வியாபாரமாக்கி .. "சிவராத்திரி" கூட தரம் பிரித்து
காசுக்கு தகுந்தாற்போல் தரிசனம் தந்து பிழைத்துக்கொண்டிருக்கிற நாட்டில் .. நாட்டின் முதன்மை அமைச்சர் கொஞ்சம் தியானம் செய்தால் தப்பா என்ன..?
..
மோடி என்ற தனி மனிதரின் தெய்வ பக்தியை யாரும் குறைகூறவில்லை.. அதை விளம்பர படுத்தி திரும்பும் திசையெல்லாம் காமிராக்களோடு பேசி .. ஒவ்வொரு அசைவையும் தானே ரசித்து மகிழ்ந்து .. அரிதாரம் பூசும் கலைஞர்கள் கூட வாழ்நாளில் ஏற்றிராத அலங்காரத்தோடு வலம் வருவதை சகிக்க முடியவில்லை.. மோடியின் தியானம் செய்வதை நாட்டிற்கு காட்டவேண்டிய அவசியம் என்ன .. இதனால் நாட்டு மக்களுக்கு அவர் சொல்லும் சேதி என்ன..
அவரின் பக்தி ஏன் அரசியலாக்கபடவேண்டும் ..
அவரின் தனிபட்ட பக்தி தியானம் ஏன் இவ்வளவு விளம்பர படுத்தபடவேண்டும் .. எல்லாம் பொய் என்ற யதார்த்தம் அறியாமல் இல்லை ..
..
எதற்காக இந்த தியான நாடகம் .. exit ஐ போல .. ஒரு சமாதானம் அவ்வளவுதான் .. அல்லல்பட்ட மக்களின்
கோபம் அடங்காத பெருந்தீ.. சுட்டெறித்தே தீரும்.
..
ஆலஞ்சியார்
Saturday, May 18, 2019
மோடி எனும் மாயை
மோடி என்ற "கருத்தை" எங்களால் முடிந்தளவு கலைத்துப் போட்டுவிட்டோம் ..
“எதிர்க்கட்சியாக சிறப்பாகவே செயலாற்றியுள்ளோம். வெற்றிகரமாக பாஜக ஆட்சியின் தோல்விகளை மக்களிடம் கொண்டு சென்றோம்.. ராகுல்
..
2014 ல் மோடி வருகையை கொண்டாடி தீர்த்த ஊடகங்கள் நேற்றைய தினம் கிழித்து எறிந்துவிட்டது
மேடைப் பேச்சில் வல்லவராய் தன்னை காட்டியவர் அதிகபட்ச மௌனமாய் ஊடகவியலாளர் சந்திப்பில் நடந்து கொண்டது அவரின் சரக்கு அவ்வளவுதான் .. மிடுக்கெல்லாம் பொய்யில் தான் நேர்மையான விவாதமோ பேட்டியோ வந்தால் "கைப்புள்ள" தான் என்பதை நிரூபித்திருக்கிறார்..
The Telegraph ஏடு .. மோடிக்காக முன்பக்கத்தில் அரைபக்கம் ஒதுக்கி வைத்திருந்தோம் .. கடைசி வரை மௌனமெனும் ஆயுதத்தால் காத்துக்கொண்டதால்
silence please என போட்டு தன் ஜனநாயக கடமையை நேர்மையோடு செய்திருக்கிறது .. மோடியின் பிம்பம் தூள் தூளாக்கபட்ட நாள் ..
..
இதுவரை எந்த பிரதமரும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்ததில்லை பிரபலமான பத்திரிக்கைகள் நையாண்டி செய்து கேலிச் சித்திரங்களை வெளியிட்டிருக்கின்றன .. பிரதமர் இந்திராவை மிசா காலத்தில் கடுமையான சாடிய பத்திரிக்கைகள் மிக அதிகமாக கேலிச் சித்திரங்களை லட்சுமணனை கொண்டு வரைய வைத்திருக்கிறது .. ஆனால் அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணித்ததில்லை
டாக்டர் மன் மோகன் சிங் .. 2014 மிக இக்கட்டான 2ஜி வழக்கு நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது கூட
சலைக்காமல் பதிலை தந்தார் தணிக்கை அறிக்கையை கொண்டு கட்டிசமைத்த பூதாகரமான மாய எண்ணைக்கொண்டு ஊடகங்கள்
ராசாவை ரணகளமாக்கிய போதும் .. வழக்கு விசாரணை நடைபெறுகிறது என்றெல்லாம் சாக்கு சொல்லாமல் தைரியமாக மடியில் கனமில்லை எனவே பயமில்லையென செய்தியாளர்களை சந்தித்தார் உயர்திரு.மன்மோகன் சிங் அவர்கள் .. அவரை சோனியாவின் பினாமி என்றெல்லாம் பேசிய ஏசிய ஊடகங்களை அவர் புறக்கணிக்கவில்லை ..
..
இதுவரை ஆட்சி செய்தவர்களில் மோடி மட்டுமே தான் என்னென்ன திட்டங்களை செய்தேன் அது எந்தளவிற்கு மக்களுக்கு பலனளித்தது என பேசாமலேயே தேர்தலை சந்தித்தவர் .. மறைந்த நேருவையும் இந்திராவையும் ராஜீவ்காந்தியையும் பேசியே காலத்தை ஓட்டியவர்
தூய்மை இந்தியா என்றார் கங்கையை புனித படுத்துவதாக சொன்னார் புதிய இந்தியா பிறந்ததென்றார் ஏதாவது நிகழ்ந்ததா .. இந்தியா சுத்தமானதா கங்கை சுத்தபடுத்துவதாக சொல்லி கோடிகளை கொட்டி கடைசியில் சிலர் கொழுத்தது தான் மிச்சம்.. கருப்புபணத்தை மீட்பேன் எனச் சொல்லி கொழுத்த பண முதலைகளின் கருப்பை வெள்ளையாக்கி கமிஷன் பெற்றது தான் மிச்சம் .. அமிர்ஷா தலைமையிலான கூட்டுறவு வங்கியில் கோடிகளில் பணபரிமாற்றம் நடந்தது பற்றி ஏதேனும் வாய் திறந்தாரா ஊழலை ஒழிப்பேனென சொல்லி பிரதமரானவர் .. 400 ரூபாயை தொட்ட எரிவாயுக்கே வீதியில் நின்று போராடியவரின் ஆட்சியில் ₹1000 த்தை தொட்டிருக்கிறதே பதிலில்லை .. என் பிணத்தின் மீதுதான் GST என்றவரின் ஆட்சியில் 28% வரி GST ..
நூறுநாட்களுக்குள் கருப்புபணத்தை ஒழித்து புதிய இந்தியாவை மிளிர செய்வேன் என பணமதிப்பு இழப்பில் பேசி இல்லையென்றால் என்னை கொளுத்துங்களென சவால் விட்டவர் .. மண்ணெண்ணை கேனோடு மக்கள் நிற்கிறான் என்ன மண்ணெண்ணைக்கு பதில் வாக்கு சீட்டோடு மொத்தமாக எரிக்க ..
மக்களின் வயிற்றெரிச்சல் அதிகம் சூட்டை உண்டாக்கியதோ என்னவோ.. தியானம் இருக்க மலைக்குகையில் நிற்கிறார் புகைப்படகாரனோடு ..
..
இனி மோடியை போன்ற ஒருவரை மக்கள் ஏற்க தயாரில்லை பொய்யும், புரட்டும், தான்தோன்றித்தனமும், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியும் ஒரு மத கோட்பாட்டை ஓரே கலாச்சாரத்தை
நடைமுறைப் படுத்த நினைக்கும் செயலும் இந்த நாட்டிற்கு தேவையில்லை
bye..bye..Modi
..
ஆலஞ்சியார்
Friday, May 17, 2019
மோடி..
பத்திரிக்கையாளர் சந்திப்பில் .. மோடிக்கு பதில் அமித்ஷா பேசினார் .. அடுத்த முறை சில கேள்விகளுக்கு பதிலளிக்க அமித்ஷா அனுமதியளிக்கலாமென ராகுல் கிண்டலடித்திருக்கிறார் .. நாட்டின் பிரதமர் கடந்த ஐந்தாண்டுகளில் ஊடகத்தை சந்திக்கவே இல்லையென்ற பெருமையோடு கடைசி தினம் சந்தித்து விடைபெறுகிறார் .. விடுதலை இந்தியாவில் எந்த பிரதமரும் பத்திரிக்கையாளர்கள் சந்திக்க பயந்ததில்லை .. 56 இன்ச் என பெருமை பேசி வந்த வீராதி வீரர் கடைசிவரை தப்பித்தார் ..
..
ஐந்தாண்டுகள் சிறந்த ஆட்சியை தந்ததாக சொல்லும் போது அவரின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை .. தேர்தல் நடக்கும் போது IPL சூதாட்டத்தை நடத்தியதற்காக பெருமைகொள்கிற பிரதமர் .. காங்கிரஸ் நடத்தவில்லை என சொல்வதிலிருந்தே அவருக்கு இப்போதும் வேறெந்த சாதனைகளும் சொல்வதற்கில்லை என்பது தெளிவாகிறது .. ஊடகங்களும் மிக மென்மையான போக்கையே கடைபிடித்தன .. வலிக்காமல் அடித்தன என்று கூட சொல்லலாம் அவரது ஆடையைப்பற்றி கேள்வி கேட்க வேண்டிய அவசர அவசியமென்ன.. இந்த ஐந்தாண்டில் ஆடிய ரூத்ர தாண்டவத்தை பற்றி கேள்வி எழுப்பாததும் ஆச்சரியத்தை தரவில்லை ..
..
பணமதிப்பிழப்பு .. மாட்டிறைச்சிக்கா மனிதகொலை ..
நீட், ரஃபேல் ஊழல், தமிழ்நாட்டில் பெருபான்மை இல்லாத அரசை செயல்பட அனுமதித்தது .. இரண்டே இடங்களில் வெற்றிபெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்த அயோக்கியத்தனம் .. சிறுபான்மையினர் மீதான வன்மம் .. காந்தியையே தேச துரோகியைப்போல பேசும் பாஜகவினரை கண்டிக்காதது ஒரு சமூகத்தின் மீதான குரோத பார்வை .. மதமென்ற பெயரில் மோதல்கள் .. சாதிவெறியை தூண்டி ஆங்காங்கே சங்பரிவார்கள் தாண்டமாடியது ..தலித் மக்களின் மீதான கொடூர தாக்குதலை நாட்டின் பிரதமர் வாய்மூடி மௌனத்திருந்தது ஏன் .. நேருவையும் இந்திராவையும் விமர்சனம் செய்தது ஏன் .. விடுதலை போராட்டத்தில்
மன்னிப்பெழுதி தப்பித்துக்கொண்டவர்கள் தேசபக்தர்களாக சித்தரிப்பது ஏன் .. மதசார்பின்மைக்கெதிராக இந்திய அரசியலமைப்பிற்கு எதிராக பேசிவருகிறவர்கள் தேச பக்தர்கள் வேசம் போடுவதேன் .. ஆட்சி அதிகாரமிருக்கிறதென்ற பெயரில் எதிர்கருத்தை பரப்புகிறவர்களை தேச விரோதியாக ஆன்டி இந்தியன்களாக சித்தரிப்பது ஏன்
ஜனநாயக மரபுகளையெல்லாம் காலில் போட்டு மிதித்து
தான்தோன்றித்தனமாக சர்வாதிகார தோணலில் செயல்பட்டதேன் .. உச்சநீதிமன்ற நீதிபதிகளே வீதிக்குவந்து அரசின் தலையீடு நீதிபீடம் பாசிசத்தின் கடும் நெருக்கடியில் இருப்பதை சொன்னதை..
கடைசியாக நீங்கள் செய்த சாதனைகள் தான் என்ன...? இப்படி
நிறைய கேள்விகள் கேட்கபடாமலேயே ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு ..
..
பிரதமர் முகத்தில் மகிழ்ச்சியில்லை அதிகாரத்தால்
ஆணவத்தை ஒரு சாராருக்கு பலனளிக்கும் திட்டங்களை செய்து பிற சமுதாய மக்களை அவர்களின் தாழே நிறுத்த வேண்டுமென்ற பிராமணீய போக்கை நடைமுறைபடுத்த எண்ணி வெகு மக்கள் முன் தோற்று நிற்கும் ஒரு பிரதமராய் தெரிகிறார் மோடி .. 2014 ல் 56 இன்ச் ஆக தெரிந்தவர் 5.6 இன்சாக மக்கள் முன் நிற்கிறார்.. இந்தியா போன்ற மதசார்பற்ற பன்முக தன்மை கொண்ட நாட்டில் மோடியைப்போன்றவர்கள் வந்தால் என்ன நடக்குமென இந்த ஐந்தாண்டு சொல்ல்லியிருக்கிறது .. மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது ..
மக்கள் ஒரே குரலாய் ஒலிக்கிறார்கள்
bye ..bye.. Modi..
..
ஆலஞ்சியார்
Thursday, May 16, 2019
இஸ்லாமிய இயக்கங்கள்
ஏன் இஸ்லாமிய இயக்கங்களை எதிர்த்து இஸ்லாமியர்கள் அரசியல் செய்யகூடாதென்கிறார் சமூக போராளி Banu Iqbal.
..
பாஜக வளர்ச்சியில் இஸ்லாமிய இயக்கங்களின் பங்கு..
நீண்ட நாட்களாக பேசபடும் விடயம் இது எனினும் எந்த அமைப்பினரும் இது குறித்து ஆய்வு நடத்தியதாக தெரியவில்லை கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கென்று இருந்து விட்டார்களா அல்லது .. நோக்கமே அதுதானே என்று மௌனிக்கிறார்களா..
இஸ்லாமியர்களிடையே பிரிவை ஏற்படுத்தினால் அது யாருக்கு பலன் சேர்க்குமென அறிந்திராத மழலைகளா இவர்கள்.. இல்லை இவர்களுக்கு வழங்கபட்ட
Assignment வேலையே அதுதானா..
..
ஆர்எஸ்எஸ் மிக அருமையாக யாரை எப்படி பயன்படுத்தினால் வாக்குகள் சிதறுமென அறிந்து அவர்களின் திட்டங்களை செயல்களை கடுமையாக எதிர்ப்பார்கள் அப்போதுதான் .. அந்த சமூகத்தின் இளந்தாரிகள் ஒருவித மோகத்தோடு சிந்தனை திறனின்றி அவர்களோடு கைகோர்த்து தனித்து களம்காண்பர் .. அது இயற்கையாகவே பலனை ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கொண்ட கட்சிக்கு அல்லது அவர்களை ஆதரிக்கும் கட்சிக்கு கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கும் நடுநிலைவாதிகளென சொல்லி திரிபவரின் கட்சிக்கு பலன் சேர்க்கும்..
..
வாக்கு அரசியலே வேண்டாமா அல்லது நாம் ஏன் தொடர்ந்து ஒரு கட்சியை ஆதரிக்கவேண்டும் அவர்களால் நமது தேவைகள் சமூகத்திற்கு பலனை பெற முடியவில்லையே.. நமது பலத்தை காட்டினால் தான் நமக்குரிய பங்கை உரிமையை பெற முடியுமென மூளைசலவை செய்கிறார்கள்.. யார் வந்தாலும் நமக்கான உரிமையை அவ்வளவுமிகவும் சீக்கிரம் பெற முடியாது .. அதேவேளை நமக்கானதை பெற தடுத்து நிறுத்த முடியாது.. இஸ்லாமிய இயக்கங்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது.. கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து முன்னேற்ற வழிவகை செய்யவேண்டும் .. பொது சமூகத்தோடு கல்வி வேலைவாய்ப்பில் போட்டிநிலையை உருவாக்க வேண்டும் நமக்கான இடத்தில் நம் சமுதாயமக்கள் பயன்பெறாமல் காலியாக எத்தனை இடங்கள் இருக்கிறது தெரியுமா.. அதை கண்டறிந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கலாம் ..
..
தேர்தல் அரசியல்
நமக்கானதை பெற ஏன் பிறரை நம்பி செயல்படவேண்டும் நமது உழைப்பு விழலுக்கு இரைத்த நீராக போகிறதே என்போருக்கு.. ஒருவகையில் இஸ்லாமியர்களின் வாக்குகளால் தொடர்ந்து காங் திமுக போன்ற கட்சிகள் பயனடைந்தன .. அதேவேளை இன்றைக்கு இஸ்லாமிய சமூக அடைந்த உரிமைகளில் பலவற்றை அந்த கூட்டணியால் தான் சாத்தியமாயிற்று ஆனாலும் அது போதாமையை தருவதை மறுப்பதற்கில்லை.. அது மிகப்பெரிய பாதுகாப்பை தந்ததையும் மறுக்கமுடியாது
ஆனால் சமூகத்தின் வாக்குகள் .. பிரிக்கபட்டு வேறு வழிகளில் செல்வதால் அது வீணாய் போவதோடு .. இஸ்லாமியர்களை பிரதான பகையாய் கருதுகிறவர்களுக்கு பயனை தருகிறது..
..
உ.பி யில் உவைஸியின் கைங்கரியத்தால் பாஜக வெற்றியை எளிதாக்கிய இடங்கள் 19.. சில இடங்களில் சமாஜ்வாடியின் வெற்றிக்கு நெருக்கடியை தந்தது.. அதேபோல இப்போது கருநாடகாவில் sdpi செய்த புண்ணியத்தில் சில தொகுதிகளை காங்கிரஸ் இழந்தது.. சில இடங்களில் தேவகவுடா ஜனதா கட்சிக்கு இழப்பை உவைசி கட்சியும் sdpi ம் தந்திருக்கிறது
பாஜக வெற்றிபெற வசதியாக இஸ்லாமிய இயக்கங்கள் செயல்படுவது வெளிப்படையாக தெரிந்தும் அது குறித்து அவர்களுக்கு கவலையில்லை அவர்கள் நோக்கம் இஸ்லாமியர்களிடையே தங்களுக்கு ஆதரவிருப்பதை காட்டிக்கொள்ளவேண்டும் அதை வைத்து வசூல் வேட்டை நடத்தலாம் அவ்வளவுதான்.. ஆரிய கைகூலிகள் என்றழைத்தால் அது கொஞ்சம் சங்கடமாக தெரியும்.. முஸ்லிம்களை காட்டிகொடுப்பவர்கள் என்றழைக்கலாம் அது அவ்வளவு ரசகரமாக இல்லை .. ஆனால் ரோஜாப்பூ கொடுத்து பாஜக B அணி என அழைக்கலாம் .. இவர்களை ..இந்த இயக்கங்களை சொல்கிறேன்
..
இஸ்லாமியர்களின் மேம்பாடெல்லாம் இது போன்ற இயக்கங்களின் செயல்பாட்டால் சாய்ந்துபோகிறது..
ஒற்றுமையெனும் கயிறை பலமாக பிடித்துங்களென என வேதம் சொல்கிறது.. இவர்களோ .. கயிறை அறுப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள் .. ஓரணியில் இணையாதவரை.. பாசிசத்திற்கெதிரானவர்களை ஆதரித்து நிற்காதவரை இனியும் நிறைய இழப்பை தருவார்கள்.. இவர்கள் நோக்கம் பாஜக ஆட்சி அமைக்க வழியமைப்பது ..
#இஸ்லாமியசமுதாயத்திற்குமட்டுமல்ல_பொதுசமூகத்திற்கும் கேடுவிளைக்கும் கொடியவர்கள்..
..
ஆலஞ்சியார்
Wednesday, May 15, 2019
தேச பிதா
எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது அப்படி தீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவாக இருக்க முடியாது ..
கார்மேக புகழ் மோடி ..
காந்தியை கொன்றவரை கொலையாளி என்று அழைக்க வேண்டும் தீவிரவாதி என்றல்ல ..
நிர்மலா சீதாராமன் ..
..
மோடி அவர்களே எந்தவொரு மதமும் தீவிரவாதத்தை போதிக்கவில்லை அன்பையே போதிக்கிறதென்கிற போது எங்கிருந்து பிற மதத்தின் மீது வன்மம் குரோதம் எழுகிறது .. ஆர்எஸ்எஸ் பயிற்சிவகுப்பென்ற பெயரில் ஐந்து ஆறு வயது சிறுவர்களிடத்தில் முஸ்லிம்களை பற்றி கொடூரமாக சித்தரித்து அவர்கள் வளரும் போதே முஸ்லிம்கள் மீதான தவறான கண்ணோட்டத்தோடு கொலைவெறியாகவே வார்த்தெடுப்பதற்கு பெயர் என்ன .. இதை செய்கிற ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்துக்களின் பெயரில் தான் செய்கிறதே தவிர வேறெந்த நோக்கமும் இல்லையே .. இதை எப்படி அழைப்பது .. கோட்சே தன் கையில் இஸ்மாயிலென பச்சை குத்திக்கொண்டு காந்தியை கொன்றது தனிப்பட்ட பகைக்காகவா .. இந்து ராஷ்ட்ரீயம் அமைய காந்தி தடையாக இருக்கிறார்/இருந்தார் என்பதற்காக தானே தவிர வேறெதும் இல்லை .. இந்து என்ற பெயரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்தே கொல்லபட்டவர்கள் தனிப்பட்ட பகைக்காகவோ வெறுப்பினாலோ கொல்லபடவில்லை ஆர்எஸ்எஸ் அவர்களுக்கு பயிற்சி வகுப்பென்ற பெயரில் மாட்டை புனிதமென மூளைச்சலவை செய்து மனிதனை அடித்தே கொல்ல அவர்கள் மனதில் விஷத்தை ஏற்றியதை எப்படி கொள்வது.. தலித்கள் மீதான கொலவெறி தாக்குதலை இடைச்சாதிக்காரனை கொண்டு நடத்தபடுகிறதே இதெல்லாம் இந்து மதத்தின் பெயரால் தானே இதையெல்லாம் தனிப்பட்ட பகை என்று கொள்ளவேண்டுமோ.. மதம் யானைக்கும் வெறி நாய்க்கும் தானே வரவேண்டும் .. மதவெறியோடு அலைகிற செயலை எதைக்கொண்டு அழைப்பது .. ஏதாவது புதியதொரு "நாமகரணம்" சூட்டுங்கள் அதைச்சொல்லி அழைப்போம் மேகத்தில் மறைந்தால் ரேடாரில் தெரியாதென்ற புதிய தொழிற்நுட்பத்தை நாட்டிற்கு தந்தவராயிற்றே எப்படி அழைப்பதென சொல்லுங்கள் .. ஏதேனும் புதிய இந்தியா பிறக்கும் போது "நாமகரணம்" சூட்டலாம் ..
..
கொலையாளி என்றழைக்க வேண்டுமே தவிர தீவிரவாதி என்றழைக்க கூடாதென நிர்மலா சொல்கிறார் .. காந்தியோடு கொடுக்கல் வாங்கல் பகையா பங்காளி தகராறா .. கோட்சே மிக தெளிவான வாக்குமூலத்தில் இந்துவிற்கு விரோதியாக காந்தி செயல்பட்டார் அதனாலேயே கொன்றேன் என்கிறான் ..
மதத்தின் பெயராலேயே கொன்றதை அவரும் அவரது சகோதரரும்,வாக்குமூலம் தருகிறார்கள் பின் அவரை தீவிரவாதியென அழைக்காமல் கொலைக்காரனென சுருக்க வேண்டும் .. ஆனால் பிரதமரே தேசதந்தையை கொன்ற கோட்சே சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார் .. தேச தியாகியைப்போல சித்தரிக்கபடுகிறார் .. சில சங்பரிவார் அமைப்புகள் காந்தி அல்ல தேசபிதா, கோட்சே தான் தேசபிதா என்கிறது பாதுகாப்பு அமைச்சர் சொல்படி கொலைக்காரனை தேச தியாகியைப்போல அதுவும் தேசத்தின் தந்தையை கொன்றவனை தேசபிதாவாக கொண்டாடுவதற்கு பெயர் என்ன சொல்லுங்கள்..
.
கோட்சே தீவிரவாதி இல்லையென உச்சநீதிமன்றம் சொன்னதாக மன்னார்குடி ஜீயர் சொல்கிறார் .. உச்சநீதிமன்றம் துவக்கபட்டதே 1950 ல் .. கோட்சே தூக்கிலிடப்பட்டதோ 1949 ல் .. மதம் தலைக்கேறினால்
புத்தி போகும் ..
காந்தியை கொன்ற போது இந்திய வானொலி காந்தியை ஒரு இந்துதான் கொன்றான் என செய்தி சொல்லியது .. காரணம் இஸ்மாயில் என பச்சை குத்திக்கொண்டு காந்தியை சுட்டுக்கொன்றதால் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை மிகப்பெரியளவில் திட்டமிட்டு செய்தது ஆர்எஸ்எஸ்... அதை தடுக்க வேண்டி .. தந்தை பெரியார் வானொலியில் காந்தியை கொன்றது பார்பனன் என்ற இந்து என பேசினார் .. முத்துராமலிங்க தேவர் .. வண்டியில் மைக்செட்டை கட்டிக்கொண்டு கிராமம் கிராமாக சென்று இந்து தான் கொன்றான் என பிரச்சாரம் செய்தார் .. இதையெல்லாம் மறந்துவிட்டு /மறைத்துவிட்டு இன்று இந்து என சொல்லலாமா என பேசுகிறார்கள் ..
..
இந்தியாவில் தடைசெய்யபட்ட ஒரு பாசிச பயங்கரவாத இயக்கம் ஆர்எஸ்எஸ் தான் அவர்கள் இன்று தேசத்தின் புனிதர்களாக மாறியதுதான் காலக்கொடுமை .. விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தவரெல்லாம் பாரத ரத்னாவாக வர முடிந்த தேசத்தில் காந்தியை கொன்றவன் தேசபக்தனாக தான் தெரிவான்..
..
மதவெறி தேசபக்தியாகாது
..
ஆலஞ்சியார்
Tuesday, May 14, 2019
தமிழிசை இம்சை
வகிக்கும் பதவிக்கு தகுந்தாற்ப்போல் பேச்சில்லை தகுதி மறந்து வாய்க்குவந்ததை பேசி கடைசியில் மானங்கெட்டு நிற்பதே பழகிப்போனது .. தமிழிசை
பாஜகவில் தலைமையிலிருந்து கடைசி தொண்டன் வரை பொய்களை கூசாமல் பேசுவது சாதாரணம். அரசியலில் அடிப்படை நேர்மை கூட இவர்களுக்கு இருந்ததில்லை வாக்குறுதி பொய் ஆட்சியில் செய்ததாக சொன்ன திட்டங்கள் பொய் எதிர்கட்சிகள் மீது சுமத்தும் குற்றசாட்டுகள் பொய் .. ஒருவரின் தனிப்பட்ட விடயங்களில் அளவிற்குமீறி நுழைந்து மூக்கறுபடுவதும் .. சிலநேரம் மன்னிப்பு கேட்பதும் பாஜகவினருக்கு மட்டுமே உரித்தானது ..
..
திமுக பாஜகவோடு பேசி வருவதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சொன்னதும் சில ஊடகங்கள் உடனே அதை பரபரப்பாக்கின .. எப்போதாவது உண்மையை பேசியிருந்தாலாவது பரபரப்பாக செய்தி சொல்லலாம் எப்போதும் பொய் பேசிதிரியும் கூமுட்டைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை .. ஏற்கனவே தெளிவாக இனி எந்த காலத்திலும் எந்த சூழலிலும் பாசிச பாஜகவோடு கூட்டணி இல்லையென தெளிவாக சொல்லிவிட்ட பிறகு நப்பாசையில் சிலதுகள் பாஜகவோடு இணைத்து பேசி திமுகவிற்கு அழுத்தத்தை தர முயற்சிக்கின்றன .. திமுக மிக தெளிவாக இந்த நாட்டிற்கு பாஜக பெரும் கேடு என்பதை உறுதியாக மக்களிடம் எடுத்துச்சொல்லி பாஜக அரசை வீழ்த்திட வேண்டுமென திட்டமிட்டு செயல்படுகிறது .. சந்திரசேகர ராவ் வந்து சந்தித்த போது கூட காங்கிரஸ் கூட்டணிக்கு வாருங்களென அழைப்பு விடுத்ததும் .. பதறிப்போய் எங்கே கூட இருக்கும் கட்சிகளும் காலைவாரி விடுமோ என அஞ்சி திமுக பாஜகவோடு பேசுவதாக நம்பவைக்க முயற்சிக்கின்றன ..பாஜகவின் கூட்டணிகட்சிகள் ஒவ்வொன்றாக கழட்டிவிட முயற்சிக்கின்றன .. அதன் எதிரொலி தான் திமுக பாஜகவோடு பேசவதாக சொல்லி திரிவது .. கூடவே தமிழக அமைச்சர் "ரோட்டான்டவா" புகழ் ஜெயகுமார் பாஜகவிடம் ஐந்து அமைச்சர் பதவி கேட்டதாக சொல்லி .. அதிமுக படுதோல்வி அடையும் என்பதை ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் .. இவை எல்லாவற்றிருக்கும் திமுக தலைவர் தளபதி.ஸ்டாலின் .. மிக தெளிவாக மண்டையில் கொட்டியதைப்போல பதில் தந்திருக்கிறார் ..
நான் பாஜகவோடு பேசியதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார் .. இல்லையெனில் மோடி, தமிழிசை விலக தயாரா ..
இதைவிட வேறெப்படி சொல்வது .. இதெல்லாம் மோடிக்கோ தமிழிசைக்கோ உரைக்காது ..
..
மக்கள் விரோதபோக்கை, தானென்ற அகந்தையை, அதிகாரம் இருக்கிறதென்பதற்காக எதைவேண்டுமானாலும் சொல்லலாம் கதைக்கலாமென்ற திமிரை தாங்கள் மட்டுமே தேசத்தை நேசிக்கிறவர்கள் .. பாஜகவை அதன் பாசிசத்தை எதிர்க்கிறவர்களெல்லாம் தேசவிரோதிகளாக எண்ணுகிற செயலை கொஞ்சமும் கூச்சமின்றி சொல்லி திரிகிற தமிழிசை எச்.ராசா போன்றவர்களை புறக்கணிக்கவேண்டும் அதீத முக்கியத்துவம் தருவது பேராபத்து .. சமீபகாலமாக நாகரீகமற்ற சொல்லாடல்கள் சர்வசாதாரணமாக பிரயோகபடுத்துகிறார்கள் .. கொஞ்சமும் உண்மையில்லை என்று தெரிந்தும் திரும்ப திரும்ப சொன்னால் பொய் உண்மையாகிவிடுமென பரப்புகிறார்கள் .. அரசியலில் கருத்தியல் ரீதியாக மோதுவதை தவிர்த்து தனிப்பட்ட குரோதத்தை கையிலெடுக்கிறார்கள் இவையெல்லாம் அதிமுக அடிமைகள் கையில் ஆட்சி வந்ததற்கு பிறகே காணமுடிகிறது .. அமைச்சரே நாவை அறுக்கவேண்டுமென்று பேசுகிற துணிவு .. பேசிவிட்டு அமைச்சராக தொடரமுடிகிற நிலை ..காரணம் பாஜகவின் சொல்படி தலையாட்டுகிறவர்களை எதை சொன்னாலும் கேட்பார்கள் இந்த மடையர்களென .. இவர்களை வைத்து சாதித்துக்கொள்ள வேண்டும்
எந்தகாலதிதிலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் .. இந்த ஆட்சியை .. மடையர்களை ஆட்சி கட்டிலில் வைத்திருக்கிறார்கள்.. ஆடுங்கள் 23 வரை .
மக்கள் அதிகாரத்தின் மூலம் தூக்கியெறிபடுவீர்கள்
குப்பைமேட்டில் ..
..
ஆலஞ்சியார்
Monday, May 13, 2019
முதல் தீவிரவாதி
விடுதலை இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கமலின் பேச்சு விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது அதை சொன்ன இடம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.. ஒன்றை கவனிக்க வேண்டும்,,ஒரு
இசுலாமியர் கூட கைதட்டவில்லை காரணம் தமிழ்நாட்டில் எந்த மதத்தை குறித்து பேசினாலும் அது மதத்தின் மீதான தாக்குதலாக இருப்பின் யாரும் கண்டுக்கொள்வதில்லை .. மத சடங்கு என்ற மூடநம்பிக்கையை வெகுவாக புறக்கணிப்பார்கள் .. அதை எதிர்ப்பதை கைதட்டி வரவேற்பார்கள் .. ஆனால் இரு மதங்களுக்கிடையான மோதலையோ வெறுப்பையோ யாரும் விரும்புவதில்லை .. மதங்களிடையே நல்லிணக்கத்தை கடைபிடிக்கிறது ..
..
கமல் மிக தெளிவாகதான் பேசியிருக்கிறார் எச்சரிக்கையோடு விடுதலை இந்தியாவின் முதல் தீவிரவாதி பார்பனன் என்றோ ஆர்எஸ்எஸ்காரனென்றோ சொல்லாமல் இந்து என்று பொது அடையாளபடுத்தி காப்பாற்றியிருக்கிறார் .. "தன் தசை ஆடும்"..
இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக .. மத கலவரத்தை திட்டமிட்டு இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு வந்து காந்தியை கொன்றதின் நோக்கத்தை பேசியிருக்கலாம் காந்தி கொல்வது மட்டுமல்ல மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கி இஸ்லாமியர்களை வேட்டையாட வேண்டுமென்ற நோக்கம் தான் காரணம் .. இன்றைக்கு கோட்சே தேசபக்தராகவும் காந்தி தேசவிரோதியாகவும் சித்தரிக்கபடுவதும் அதை அரசு கண்டும் காணமல் இருப்பதும் அதைவிட காந்தியை ஏசுகிறவர்களுக்கும் கோட்சேவை புகழ்கிறவர்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் தருவதும் தான் உச்சகட்ட கொடுமை.
கோட்சேவின் புகழ்பாட தனியாக அமைச்சகம் உருவாக்கினால் கூட வியப்பில்லை ..
..
கோட்சேவை தேசபிதா என விளிக்காத குறையாக ஆர்எஸ்எஸும் அதன் கிளைகளும் தங்கள் பரிவாரங்களோடு இந்த பாசிச பாஜக ஆட்சிகள் உலவுகிறார்கள் இன்னும் கொஞ்சநாள் போனால் ...இதே அரசு தொடருமானால் காந்தி படத்தை நீக்கிவிட்டு கோட்சே ரூபாய் நோட்டுகளில் இடம்பெறலாம் .. இந்த ஆட்சியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் .. கமல் முதல் தீவிரவாதி இந்து என்றவுடன் ஒட்டுமொத்த இந்துவை குறிப்பதாக சிலர் கண்டனத்தை பதிவு செய்கிறார்கள் .. ஆனால் முஸ்லிம் தீவிரவாதி என்ற போது அமைதி வாய்மூடி அமைதி காத்தவர்கள் .. தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டுமே தவிர அதற்கு மதசாயம் பூசுவது சரியல்ல ..எந்த மதமும் நல்லதை தான் போதிக்கிறதென்கிறபோது எங்கிருந்து வருகிறது .. வன்மமும் தானே பெரியவன்/ மேலானவன் என்கிற நிலைபாடும் தன்னை/தன்கோட்பாட்டை நிலைநிறுத்திக்கொள்ள பிறரை தூண்டிவிடுதலும் மக்களிடையே பிரிவினையை சொல்லி மோதலை வெறியை உண்டாக்கி குளிர்காயும் சில விஷம சக்திகளே காரணமே தவிர சாமானியர்கள் அல்ல
அவனவன் கோட்பாட்டில் கொள்கையில் பயணித்தால்
மற்றவை உரிமை பறிக்காமல் இருந்தால் எங்கிருந்து வரும் வன்மம் கலவரம் வன்முறை குரோதம் தீவிரவாதம்..
..
நம்மை பிரித்தாளும் சூழ்ச்சி செய்து சிலர் மட்டுமே பயன்பெற பலன்பெற வேண்டி சாதி மத மோதலை தூண்டுகிறார்கள் .. அங்கிருந்து தான் உருவாகிறது தீவிர வாதம்..
..
காந்தியை சுட்டு கொன்ற போது இப்படிதான் செய்தியை வெளியிட்டார்.. #கலைஞர்
"உத்தமர் காந்தியின் உயிரைக் குடித்தது
ஒரு ஊதாரி பார்ப்பான்" - 4 பிப்ரவரி 48 முரசொலி..
..
ஆலஞ்சியார்
Sunday, May 12, 2019
தாய்
உஸ்தாது
பச்சை மண்ணை தன் வித்தையால் கலையாக்கி காட்டும் மேதைகள் யாருக்கு எப்படி சொன்னால் விளங்குமென அறிந்து அவன் புத்தியின் கூர் தீட்டும் கலை அறிந்தவர்கள் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் தான் எனினும் யார் எப்படி எதில் ஜொலிக்க முடியுமென அறியும் பேராற்றல் கொண்டவர்கள் சிறுவயதில் ஆழ பதிந்திடும் விதையை நம்மில் விதைத்து அது
அறிவுச்சோலையாய் பூத்துகுலுங்குவதை கண்டு ரசிக்கும் குழந்தைகள் ..
..
அம்மா
தாயே முதல் ஆசான் என்கிறது .. அவளிடமிருந்து குழந்தைகள் 3000 சொற்களை பாடசாலைக்கு செல்லும் முன்னே கற்றுக்கொள்கிறது எது பிடிக்கும் என்று அறிந்தவள் மட்டுமல்ல தாய்.. எப்படி சொல்வதென்பதையும் எப்படி புரியவைப்பதென்பதையும் அறிந்து நம்மை வளர்ப்பவள் என் முதல் ஆசான் என் தாய்
என்னுள் சிலதேனும் நல்லதை காண்பீர்களெனில் எல்லாம் அவள் தந்தது.. தமிழ் மீது தீராத பற்றுக்கொண்டவர் .. சீறாபுராணமும் முஹையத்தீன் மாலையும் அவள் பாடி படிக்க அதன் ராகம் என்னை தமிழோடு கட்டிப்போட்டது .. அதிகம் ஆசைபடாதே என்றதும் வறுமையின் நிழல் கூட படாதவாறு வளர்த்ததும் .. பசிக்கிறவனை கண்டால் பரிவோடு ஏதேனும் தந்தனுப்பியதும் .. எல்லைமீறாத கட்டுபாடுகள் செதுக்குமென செப்பியதும் .. உயரங்களில் இல்லை உன் வளர்ச்சி உள்ளங்களில் என போதித்ததும் . உனக்கென்ற கடமையில் பின் வாங்காதே உடன்பிறந்தவர்களை மறவாதே .. வரும் போகும் ஆனால் நிரந்தரமாய் உறவின் பலம் வேண்டும் வாக்கு தந்தால் அதை நிறைவேற்று .. முடியாதென்றால் வாக்கு தராதே ..அளவோடு பேசு அதையும் அறிந்து பேசு ..பொய் கொல்லும்..பசி வந்து உண் பார்த்து பழகு.. அதிகம் படி..
இத்தனை இலகுவாய் வாழ்வியலை நான் யாரிடமும் கற்றதில்லை .. என் தாய் என்னிடம் நானூறு மேற்பட்ட புத்தகங்களை தந்துவிட்டு போனார் .. பர்மா தேக்கில் செய்த மரபெட்டியில் பாதுகாத்து வைத்திருந்தவை..
அறிவை தேட அதுவே உத்வேகமாய் அமைந்தது ..
..
வாழ்வியல் எதார்த்தத்தை ஒருவன் உணரவேண்டுமெனில் முதலில் தாயை படி ..
உன் உயர்வில் உன்னிலும் அதிகம் அக்கறைகொண்ட ஜீவன் .. தாயை தவிர உன்னை உண்மையாய் நேசிக்கிற ஒருவரை காண்பதரிது
தாய் அது மட்டுமே உண்மை ..மற்றதெல்லாம் (கடவுள்உட்பட) நம்பிக்கை தான்.. உன் அறிவின் ஆரம்பம் தாய்
..
தாயே மிக சிறந்த ஆசான்..
..
ஆலஞ்சியார்
Saturday, May 11, 2019
பட்டால்தானே புரியும்
பா ஜ க தனி கொள்கை கொண்டது.மோடி, அமீத்ஷாவுக்கானதாக எப்போதும் இல்லை..நிதின்கட்கரி..
குஜராத் கலவரத்தில் மோடி ஆட்சியை கலைக்க வாஜ்பாய் விரும்பினார் .. ஆனால் அத்வானி தான் அதை தடுத்தார் .. சின்ஹா..
..
பாஜக பெரும்பான்மை பெறும் என்பதை யாரும் நம்பவில்லை நடந்துமுடிந்த தேர்தல்களில் பாஜக பலத்த தேசம் அடைந்திருப்பதாக ஊடக கணிப்புகள் காங்கிரஸும் தனித்து பெரும்பான்மை கிடைக்காதென்று இப்போதே சிலர் பிரதமர் கனவோடு வலம் வர தொடங்கியிருக்கிறார்கள் .. பிரதமர் தேர்வில் மம்தா பிரதான பங்கை வகிப்பாரென தெலுங்கு தேச சந்திரபாபு நாயுடு கதைக்கிறார்,..
ஒன்று தெளிவாக தெரிகிறது பாஜக மீண்டும் வர வாய்ப்பில்லை என்பதுதான் .. அதனால் தான் ஆர்எஸ்எஸ் தன் விசுவாசியை வைத்து மோடி அமித்ஷா அல்ல பாஜக என சொல்ல வைத்திருக்கிறது .. பெரும்பான்மை கிடைக்காதபட்சத்தில் பிகாரின் நிதிஷ்குமாரை பிரதமராக்கி மூன்றாவது அணியில் முயற்சியை வீழ்த்த நினைப்பதாக செய்திகள் சொல்கின்றன ..அப்படி அமைந்தால் மத்தியளவில் அதிமுகவை போல ஒரு அருமையான அடிமை கிடைத்ததைப்போல ஆர்எஸ்எஸ் காய் நகர்த்தும் அது முழுக்க முழுக்க பாசிசத்தின் கரங்களால் இயங்கும் அரசாகவே இருக்கும் அது பேராபத்து ..
ஆர்எஸ்எஸ் மோடியை கைகழுவ தயாராகிவிட்டதாக தெரிகிறது தொடர்ந்து விமர்சனங்களை மோடி மீது விதைத்து அவரால் தான் கெட்டது என்ற குற்றசாட்டோடு ஆர்எஸ்எஸ் தன்னை புனிதப்படுத்திக்கொள்ள முயலும் அதன் தொடக்கமாக தான் நிதின்கட்கரியின் பேச்சு அமைந்திருக்கிறது ..
..
மோடியின் ஆட்சியை கலைக்க வாஜ்பாய் நினைத்தார் அதை அத்வானி தடுத்தாரென சின்ஹாவின் கூற்றை கடந்து போக முடியாது .. திட்டமிட்ட படுகொலை வன்முறை என்பதும் அதை அரசு வேடிக்கை பார்த்ததென்பதும் .. மத்திய அரசு அதை கண்டுக்கொள்ளாமல் இன ஒழிப்பை அரங்கேற்றியதும் சத்ருகன் சின்ஹாவின் பேச்சு உணர்த்துகிறது .. மிக மோசமான ஒருவரைதான் ஆர்எஸ்எஸ் வளர்த்தெடுத்து பிரதமராக்கியிருப்பது இதிலிருந்து தெரிகிறது "அரச தர்மத்தோடு" நடந்துக்கொள்ளுங்களென மோடியை பார்த்து வாஜ்பாய் கூறியது அப்போது விவாதமானாலும் பிரதமராக நேர்மையோடு அவர் நடந்திடவில்லை என்பதும் பாஜக இந்த நாட்டிற்கு கேடு என்பதும் நமக்கு புரியும் .. மதவெறி அரசியலை கையிலெடுத்து ஆர்எஸ்எஸ் பிஞ்சு குழந்தைகளிடம் கூட முஸ்லிமான்களை பற்றி வன்மத்தை விதைப்பதும் பிஞ்சுகளின் கையில் ஆயுதங்களை திணித்து மனதில் குரோதத்தை வளர்த்தெடுப்பதும் தேசபக்தி என்ற பெயரில் அதை நியாயபடுத்துவதும்
சாதிமத வெறியை வளர்த்து மக்களிடையே பிரிவினையோ உண்டாக்கி ..குறிப்பிட்ட ஒருசாரார் மட்டுமே எல்லா பதவிகளையும் அதிகாரத்தையும் அடைய வழிவகை காண்பதுவே ஆர்எஸ்எஸின் லட்சியம் கொள்கை .. அதற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுப்பார்கள் .. இப்போது இது மோடியின் தோல்வியாக கருதபடும்.. உண்மையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் தோல்வி இது .. இந்த மண்ணுக்கேற்ற சித்தாந்ததமாய் அது இல்லை.. ஒரே மதம் ஒரே கொள்கை ஒரே கலாச்சாரமென்பது இந்த நாடு ஏற்றுக்கொள்ளாது மட்டுமல்ல பெரும் அழிவினை பின்னடைவை தருமென்பதற்கு மோடியின் பாசிச அரசு சாட்சி வகிக்கிறது ..
பட்டால்தானே புரியும்..
..
ஆலஞ்சியார்
Friday, May 10, 2019
பிரித்தாளும் பிரதமர்
இந்திய மக்களை பிரித்தாள்வதில் பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்.....
TIME இதழ்..
நாட்டில் நடக்கும் பசுவின் பெயரால் படுகொலைகள்
2017 ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் போன்ற மதவாத சாமியார்களை முதல்வராக அறிவித்தது
குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பிரக்யா தாகூரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டது ..
என மூன்று விடயங்களை சுட்டிக்காட்டுகிறது டைம்
..
இந்தியாவின் முகம் இன்று கருத்துப்போனது
அகிம்சை பூமியாக அறியபட்ட இந்தியாவில் ஒரு பிரதமரே பிரித்தாள்பவர் என்ற சொல் பெரும் அதிர்வை தந்திருக்கிறது உண்மையில் பிரதமர் வெறும் அம்பு இதன் பின்னில் ஆர்எஸ்எஸ் எனும் விஷமேறிய பாசிச பார்பனீய சித்தாந்தம் இருப்பதை மறைக்க நினைக்கிறோம் .. துறவிகளை அதிகாரத்தில் அமர்த்தி ஒரு சார்பு நிலைப்பாட்டை வெளிப்படையாக செய்கிற சூழலை உருவாக்கி ஹிந்துத்துவா என்ற பெயரில் பார்பனீய மேலடுக்கு அதிகார மையத்தை உருவாக்குவதே அதன் பிரதான நோக்கம் .. சிறுபான்மையினர் மீதான வன்ம போக்கை உக்கிரமாக வளர்த்தெடுத்ததில் .. குறிப்பாக இடைசாதிக்காரனை தூண்டி மதவெறியை தலைக்கேற்றி ஒருவித பயத்தோடு வடமாநிலங்களில் வைத்திருப்பதே சாட்சி.. மத கலவரங்களை வேறுவடிவில் தூண்டிட பிறமதத்தின் மீதான தாக்குதலை வேறுவடிவத்திற்கு கொண்டு சென்றதே மாட்டை காரணம் காட்டி .. எளிய மனிதர்களை கொல்வதை கண்டுக்கொள்ளாமல் கள்ளமௌனம் காத்தது மோடியின் மீதான கடும் விமர்சனத்திற்கு காரணம் .. பச்சிளங்குழந்தைகளுக்கு பிராணவாயு தர காசில்லை என கைவிரித்து மாட்டிற்கு பிராணவாயுவை தர முடிகிற அடிமடையர்களின் கையில் நாடு போனால் இப்படிதான் சர்வதேச அளவில் அசிங்கபடவேண்டிவரும் ..
..
தீவிரவாதத்தை ஒழிப்பதாக சொல்லும் அதற்காக மதத்தை குறிவைத்து இஸ்லாமியர்கள் தான் எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் காரணமென்று நம்பவைத்து .. இஸ்லாமியர்களை தீவிரவாதிகளைப்போல பிற சமூக மக்களிடையே கொண்டு சேர்த்ததில் சங்பரிவார்களுக்கு மட்டுமல்ல ஊடகங்களுக்கும் பெரும்பங்குண்டு அதே செயலை இந்துத்துவா என்ற பெயரில் சாதுகள் செய்தால் தேசம் மீட்க வந்த ரட்சகரைப் போல உருவகபடுத்தியலும் ஊடக பங்கு அளப்பரியது .. தீவிரவாதி என அடையாளம் காணப்பட்டவரை வேட்பாளராக நிறுத்தி பாஜக தன் நிலைப்பாட்டை தெளிவாக சொன்ன போதும் யாருமே எதிர்க்கவில்லை கூடவே கொண்டாடாத குறையாக பேசதொடங்கியது கூட மோடியின் மீதான பயம் காரணமாக இருக்கலாம் .. இந்த ஐந்தாண்டில் நாடு .. எல்லா நிலைகளிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது .. மிக மோசமான பொருளாதார நெருக்கடியை நாடு சந்திக்குமென எச்சரித்தும் தான்தோன்றித்தனமான செயல்பாட்டால் படுகுழியில் தள்ளியிருக்கிறது மோடியின் அரசு ..
..
மதம் என்ற பெயரிலும் சாதிவெறியை இந்து சமூகத்திடையே வெறியோடு வளர்த்து தலித் மக்களின் மீதான தொடர் தாக்குதலை செய்து நிர்வாணமாக விரட்டிய போதும் பிரதமர் மௌனமாய் கடந்து சென்றதும் .. இந்தநாடு பிராமனீய கோட்பாட்டில் மட்டுமே ஆட்சி நடத்தபடுமென அதற்கான ஆயத்தப்பணிகளை தான் மோடி அரசு செய்ததே தவிர பிற சமூக மத மக்களுக்கான அரசாய் செயல்படவில்லை
..
மோடி இந்திய சமூதத்தை பன்முகதன்மையை பிரித்தாள்வதில் தான் கவனம் செலுத்தினாரே தவிர இந்தியா பல்வேறு இனத்தின் ஒருமைபாட்டில் எழுப்பட்டிருப்பதை மறந்துப்போனார்
இந்திய ஒருமைப்பாட்டை பல்வேறு கலாச்சார பண்பாட்டு மற்றும் மத நம்பிக்கைகளை வெறுக்கிற/தடைசெய்கிற ஒற்றை கலாச்சாரமென்ற பெயரில் பார்பன மேலாதிக்க செயல்பாடுகளை ஊக்குவிக்கிற செயலைதான் செய்தார்.. மோடி இந்திய மக்களுக்கான பிரதமராக செயல்படவில்லை .. ஒரு சாராரின் நலனுக்காக பாடுபடுகிற பிரதமர் ..
#பிரித்தாளும்_பிரதமர்
..
ஆலஞ்சியார்
Thursday, May 9, 2019
முதல்வராக கூட அல்ல அமைச்சராக கூட கனவுகாண தகுதியில்லாதவர் எடப்பாடி .. திடீரென்று வந்த வாய்ப்பில் முதல்வரானவர் .. அவர் தளபதி.ஸ்டாலினை விமர்சிக்க தகுதியில்லாதவர் ..
மானமிகு.கனிமொழி..
..
ஸ்டாலினைப் பற்றி சொன்னால் வெளியே நடமாடமுடியாது .. தமிழிசை ..
..
வெளியே நடமாட முடியாதென சொல்லி அவரால் நடமாட முடிகிறது பாருங்கள் அது தான் திராவிடம் தந்த பேச்சுரிமை .. எதை உளறினாலும் சொல்ல கூடாததை கருத்தென்ற பெயரில் சொன்னாலும் அரைவேக்காட்டு அரசியல் அறிவோடு கதைத்தாலும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை .. உளறல் என்ற பெயரில்
மூப்பனார் பிரதமராவதையும் கலாம் ஜனாதிபதி ஆவதையும் தடுத்தவர் கலைஞர் என்கிறார் இந்த அரைகுறை அரசியல்வாதி ..
மூப்பனாருக்காக வடமாநில தலைவர்கள் அவர் வீட்டிலேயே சந்தித்து ஆதரவு கேட்டவர் கலைஞர் அவர்கள் அப்போது முலாயம் சிங் நானும் பிரதமர் ரேஸில் இருக்கிறேன் என்று மறுத்தவர் .. அன்று அதை மூப்பனாரே வெளிப்படையாக சொன்னார் கலைஞர் எனக்காக மிகவும் பேசினார் ஆனால் குஜரால் தான் பிரதமராக வரவேண்டுமென பெரும்பாலோனார் விரும்பினர் என்றார் .. ஆனால் கலாம் விடயத்தில் அப்படி இல்லை இரண்டாவது முறையாக நிற்க வேண்டுமென பாஜக விரும்பியபோது அதை முழுமையாக எதிர்த்தோம் காரணம் கலாம் ஏறக்குறைய பாஜகவின் ஊதுகுழலாகவே செயல்பட்டார் .. எதிர்ப்பதென்றால் வெளிப்படையாக தைரியமாக எதிர்ப்போம் .. ஆதரிப்பதென்றால் முழுமூச்சாக வெளிப்படையாக செய்வோம் .. பிரதமர் இந்திராவே எதிர்ப்பததென்றாலும் ஆதரிப்பதென்றாலும் உறுதியோடும் இருப்பவர் கலைஞர் கருணாநிதி என்றதை தமிழிசை தன் தகப்பனிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம் ..
..
சசிகலாவின் சிறை தண்டனை உறுதி செய்யபட்டதால் கிடைத்த அரிய வாய்ப்பு .. கூவத்தூரில் கட்டிகாத்து கடைசியில் கிடைத்தது ஆனால் சசிகலா சிறை சென்றவுடன் பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து தலையாட்டி முதல்வராய் .. மத்திய அமைச்சரெல்லாம் விரல்காட்டி மிரட்டுகிற அடிமையாய்.. தலைமைச்செயலரை கூட அதிகாரம் செய்ய முடியாத கையாலாகாத முதல்வராய் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தங்கள் செயல்பாடுகளை தடங்களிலின்றி செய்ய .. பார்பன சிதிதாந்தத்திற்கு சிவப்பு கம்பளம் விரிக்க ஒரு ஆட்சி தேவைபடுகிறது மக்கள் ஆதரவோடு இனி எக்காலத்திலும் வென்றெடுக்க முடியாதென்பதால் அடிமைகளை கொண்டு தனி ஆவர்த்தனம் செய்ய இந்த ஆட்சியை பயன்படுத்துகிறார்கள் .. பாசிச பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து செயல்படுகிற முதல்வர் .. தளபதி.ஸ்டாலினை பார்த்து கனவு காண்பதாக சொல்வது வேடிக்கை ..
..
மக்கள் நேசிக்கிற தலைவராக .. மக்களை நேசிக்கிற தலைவராக நீண்ட அனுபவமும் நிலைத்த புகழும் ..
நேர்கொண்ட பார்வையோடு .. அறநெறி அரசியலை கையிலெடுத்து .. எதுவும் மக்கள் தந்ததாக இருத்தல் வேண்டுமென்ற நேர்மையான முறையில் களம்காண்கிற ஒப்பற்ற தலைவராக வலம் வருகிறார் தளபதி.. இவரை விமர்சிப்பதற்கும் தகுதி வேண்டும் .. பார்பன அடிவருடியாய் .. நாளை தேவையில்லையெனில் தூக்கியெறிபடுகிற .. அதன்பிறகு யாரென்றே அடையாளம்கான இயலாத அளவில் இருக்கிறவர்கள் நாவடக்கி பேசுவது நல்லது ..
மக்கள் அங்கீகாரம் இல்லாதவர்கள் தங்கள் நிலை உணர்ந்து பேசவேண்டும் ..
குப்பைமேடு கோபுரமாகாது ..
..
ஆலஞ்சியார்..
Tuesday, May 7, 2019
தமிழகம்..?
அடிமைத்தனமும்,அறிவிலித்தனமும் எங்கிருந்து வந்தது அறிவுடைச்சமூகமாய் இனங்காணப்பட்ட
தமிழினம் இன்று கிறுக்கர்களின் கையில் சிக்கி தவிக்கிறதா .. எதையும் ஆய்ந்தறிந்து ஏற்றுக்கொண்ட தமிழன் .. இன்று சிலரின் வீராவேச சொல்லிற்கு அடிமைபட்டானா.. எதையும் தெளிவோடு சிந்தித்ததவன் இன்று அறிவிலிகளின் கூப்பாட்டில் செய்வதறியாது நிற்கிறானா ..
கம்ப ராமாயணத்தை எழுதிய சேக்கிழாரையும் ..
மாடல்ல பொருளறியா மடைமையோடும் கழிக்கவேண்டியிருக்கிறது..
அதெல்லாம் கொடுமையில்லை இதையும் கேட்டு
ஒரு இளம் சமூகம் கைதட்டுகிறதே அதுதான் கவலைபட வேண்டிய விடயம் .. எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்களென்ற நினைப்பும் தமக்கே எல்லாம் தெரியும் நானே வழிநடத்த அருகதை உள்ளவன் என சொல்லிதிரிவது கூட மடைமைதான்..
..
தமிழக அரசியலில் கொள்கைகளை கடந்து மிகச்சிறந்த அறிவுடையோராய் பல்துறையில் விற்பன்னர்களாய் பேராற்றலுடையாராய் பெருமக்கள் நிறைய இருந்தார்கள் .. மூதறிஞர் ராஜாஜி, சி.எஸ், ஒமந்தூரார் ,பக்தவச்சலம், காமராஜர்.. திராவிட இயக்கத்திலிருந்து பேராசான், பேரறிஞர்,திராவிட பெருவுடையாரென .. சொல்லிக்கொண்டே போகலாம் .. நாவலர், சம்பத், இரா.செழியன் வைகோ, மாறன், ப.சிதம்பரம் ,என அடுக்கிகொண்டே போகலாம் .. அரசியலில் கருத்துவேறுபாடு இருந்த போதிலும் மிகச்சிறந்த ஆளுமைகளாய் அறிவால் திறமையால் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்கள் .. எதிரெதிராய் நின்ற போதும் சொல்வன்மையால்
பிரகாசித்தார்கள்
"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்."
என்றான் வள்ளுவன்
கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்."
ஆனால் இன்றோ வாய்க்குவந்ததை பேசி கேனசிரிப்போடு வலம் வந்தால் நல்லவனாகலாம் என எண்ணுகிறார்கள் எதையும் அறிந்து பேசவேண்டுமே தவிர ஏதோ கைத்தட்டல் கிடைக்கிறதென்பதற்காக உளறிவைக்ககூடாது
பொய்யாமை நன்று ..
..
உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் அதற்குரிய மரியாதையோடு இருக்கவேண்டும் தன் தகுதிக்கு மீறிய பதவி நல்வாய்ப்பில் கிட்டியதால் அதை தக்கவைக்க அடிமையாய் .. பாசிசத்தின் ஏவல்காரனாய், மத்தியில் ஆட்சி செய்வோருக்கு பயந்து நடுங்கி தன்மானமிழந்து .. அடிமையாய் வாழ்வதால் ஒட்டிமொத்த தமிழகமும் தலைகுனிந்து நிற்கிறது ..
..
நல்லதொரு தலைமையை வேண்டாமென வைத்ததன் விளைவு .. சில்லரை காசுக்கு ஆசைப்பட்டு முகமிழந்து அஞ்சி ,கேவலபட்டுநிற்கிறோம் .. தன்மானமிழந்து தமிழகமே தலைகுனிவை சந்தித்திருக்கிறது இந்த அடிமைகளால் ..
மக்கள் தங்கள் அதிகாரத்தின் மூலம் இந்த கோமாளிகளை அறிவிலிகளை அடிமைகளை விரட்டும் நாளே நன்னாள் ..
..
ஆலஞ்சியார்
Monday, May 6, 2019
மன்மோகன் பார்வை
மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி மிகவும் வேதனைக்குள்ளானது; பேரழிவானது: மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்
..
சிங் போன்ற ஆளுமைகளை மறுத்து குஜராத் கலவர புகழை மட்டுமே நம்பி அதுவே ஆள தகுதியென நம்பியதன் விளைவு .. மத மோதலை உருவாக்கி ஹிந்து ராஷ்ட்ரீயமென புளுகி கடைசியில் அது பார்பன நலனுக்கானதாக முடிந்ததே தவிர .. ஏனையோரின் நலனுக்கானதில்லை.. தனிநபரால் தீர்மானிக்கபடுவதோ அல்லது தனியொரு சித்தாந்ததமோ பன்முகம் கொண்ட கலாச்சார ஒருங்கிணைப்பில் தோல்வியைதான் சந்திக்கும் .. பிற மத இனத்தவரின் உணர்வுகள் மீதான தாக்குதல்கள் காலப்போக்கில் திருப்பி தாக்குமென்பதை நிறைய வரலாறுகள் நமக்குணர்த்தியிருக்கிறது .. அரேபிய வரலாற்றில் மிக கூர்ந்து கவனிக்கபட்ட உபைதியா உடன்படிக்கை மிகப்பெரிய தோல்வி.. ஒரு சாராரின் நலன் மட்டுமே கொண்ட எந்தவொரு கொள்கை முடிவும் சட்டமும் மிகப்பெரிய பின்னடைவையே தரும் .. இந்திய அரசியலமைப்பின் அடித்தளம் மிக சரியாக கட்டமைக்கபட்டிருப்பதால் ஷோசலிச ஜனநாயக மதசார்ப்பற்ற குடியரசு என தெளிவாக வரையறுக்கபட்டிருப்பதால் .. மதவெறியை முன்னிறுத்தும் .. இன பாகுபாட்டை மைய்யமாக கொண்டு செயல்படுவோர்களை காலம் காணாமல் போகவே செய்யும் ..
..
திரு.மன்மோகன் சிங் அவர்கள்
பல்வேறு மக்களைக் கொண்டிருக்கும் நமது தேசத்தில், மக்களின் அபிலாஷைகளுக்கும், நம்பிக்கைக்கும் ஒரு மனிதரின் கொள்கைகளாலும், விருப்பத்தாலும் எந்தவிதமான நீதியையும் வழங்கிவிட முடியாது. இந்தியாவில் பிரதிநித்துவம் என்பது மிகவும் முக்கியமானது. 130 கோடி மக்களின் விருப்பங்களையும் ஒரு தனிமனிதர் பிரதிபலிக்க முடியாது. அவர்கள் சந்திக்கும் அனைத்துவிதமான பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியாது. அதிபர் முறை போன்ற தேர்தல் முறை இந்தியாவில் ஒருபோதும் சரிவராது. ஒரு மனிதர்தான் அனைத்து ஞானத்தின் அதிபதி என்ற கொள்கை இந்தியாவுக்குப் பொருந்தாது''. என்கிறார் ..
மிகச்சரி .. எவ்வளவு தெளிவான பார்வை
அதிபர் முறை ஜனநாயகம் இந்தியாவிற்கு பொருந்ததாது பன்முகதன்மையை அது வெகுவாக பாதிக்கும் பல்வேறு மாநில நலன்களை அது புறக்கணிக்கவே செய்யும் இந்தியா என்பது பல்வேறு இனங்களின் கலாச்சாரத்தின் ஓருங்கிணைப்பே தவிர தனி இனமோ கலாச்சாரமோ அதிகாரம் செலுத்துவதையோ ஆதிக்கம் செலுத்துவதையோ ஏற்கஇயலாது ..
..
பண மதிப்பிழப்பை மிகப்பெரிய மோசடி என்கிறார் மன்மோகன் .. பணமதிப்பிழப்பு மிகப்பெரிய பொருளாதார சரிவை தருமென்று நாடாளுமன்றத்திற்கு வந்து தவறிழைத்துவிட்டீர்கள் என எச்சரித்தார் கேமேரா முன்னால் நடித்துக்கொண்டிருக்கும் பிரதமர் செவிசாய்க்கவில்லை எல்லாம் எனக்கு தெரியுமென எகத்தாளமாக செயல்பட்டதால் கருப்பு வெள்ளையானதும் பொருளாதார வீழ்ச்சியையுமே நாடு கண்டது ..
..
"புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட பின், மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் கூட்டங்களில் பிரதமர் மோடியைப் பார்ப்பதற்குப் பதிலாக, ஜிம் கார்பெர்ட் தேசியப் பூங்காவில் திரைப்பட படப்பிடிப்புகளில் மோடி இருந்தது என்னை ஆழ்ந்த துயரத்துக்குள்ளாக்கியது "என கவலைக்கொள்கிறார் மன்மோகன் ....
அதெல்லாம் மோடிக்கு தெரியாது நடிக்க, பொய் சொல்லதான் தெரியும் ..
..
நாடு மிக கடுமையான சூழலிலிருந்து மீள வேண்டுமென மக்கள் விரும்புவது வெளிப்படையாக தெரிகிறது .. அதனால்தான் பிரதமர் அலுவலக தொலைபேசியை கூட மாநில அரசுகள் புறக்கணிக்கின்றன .. லாயக்கற்ற பிரதமரை காலாவதியான பிரதமரென விமர்சிக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது .. இந்தியா ஜனநாயத்தின்
நம்பகதன்மை ஒளிவிட தொடங்கியிருக்கிறது ..
பனி விலக்கும் கதிரவனைப்போல
ஜனநாயக ஒளிக்கீற்று மெல்ல வெளிச்சம் தரும்
..
ஜனநாயகம் வெல்லும்
..
ஆலஞ்சியார்
Sunday, May 5, 2019
கவனிக்கபடுகிறேன்
#கவனிக்கப்படுகிறேன்..
புரிகிறது..
தடுமாறாமல்..
எழுந்து நிற்க..முயல்கிறேன் ..
நான் நானாக..
பெரும் சவால்தான்..
முகமிழந்து நடைப்போட
முடியாதென்னால்..
அடுத்தவர் ..
முகம் கிழிக்க
ஆகாதென்னால்..
செப்புவது சரியென்றால்
மாத்திரமே பின் தொடர்க..
செப்புதல் பிழையெனில்..
சொல்லித்தருக..
..
அறிவின்..
சுடரொளியில்..
வரும் எல்லாம் தருவேன்..
ஆகமவிதியென்றாலும்..
ஆண்டவன் சொல்லென்றாலும்..
ஆள்பவன்..சொன்னாலும்..
ஆதிக்க திமிரென்றாலும்..
அறிவுசார்..எனில்..
அதர்மமில்லையெனில்..
தருவேன்....
..
அன்பால் சொன்னாலும்..
அதிகார திமிராய் சொன்னாலும்
அடுக்கடுக்காய்..
அழகுதமிழில் சொன்னாலும்..
அறிவிற்கொவ்வாயெனில்..
ஏற்கேன்..
மொழியேன்..
..
என்னை
கட்டுப்படுத்த முடியாது
காற்றைப்போல நான்
தென்றலாய் வருவேன்..
சிலநேரம்
சினங்கொண்டு
கொடுங்காற்றாய்
கூண்டுக்குள் அடைக்கமுடியாது
எங்கெனினும்
ஏதுவாகினும் ..
பிடிக்காததை
ஏற்க என்னால் இயலாது
சிலரைச் சுற்றி மட்டுமே
இயங்க என்னால் இயலாது
..
பொருள் பொதிந்து
செப்பினால்
சொக்கி நிற்பேன்..
பிழையென்றறிந்தால்
நகைத்து நிற்பேன்..
..
நான் சொல்வதெல்லாம்
அறம்சார்ந்தேயன்றி
வேறில்லை..
கொள்கையில் தெளிவும்
ஏற்ற
கோட்பாட்டில் உறுதியும்
எப்போதும் விடுவதில்லை நான்..
..
நானேற்கா எதையும்..
என் சுவற்றில்..
கிறுக்குவதில்லை
..
கவனிக்கப்படுகிறேன்..
..
#கவனமாய்..
ஆலஞ்சியார்
Saturday, May 4, 2019
இஸ்லாம்
அப்படி என்ன சொல்லிவிட்டார் ஷா நவாஸ்
Sha Navas
இஸ்லாமிய இயக்கங்களின் மூளைச்சலவையை இளைஞர் வழிகெட்டு நிற்கும் அவலநிலையை தான் மிக தெளிவாக சொல்லியிருக்கிறார் .. உடனே சில அடிப்படைவாதிகள் ஏதோ தாங்கள் தான் இஸ்லாமியர்களின் பாதுகாவலர்கள் போலவும்
ஒட்டு மொத்த சமூகத்தை வழிநடத்த தங்களுக்கு மட்டுமே உரிமை உள்ளது போலவும் நினைத்துக்கௌண்டு சரமாறியாக வசை பாடுகிறார்கள் .. தெளிவாக உள்ளவர்கள் வெகுமக்கள் ஷாநவாஸ் சொன்னதை சரிதான் கடந்த 25 ஆண்டுகளாக தான் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தில் அமைதியிழந்த சூழல் நிலவுகிறது இதுவரை இல்லாத மதவெறுப்பு வெளிப்படையாக தெரிகிறது பிற சமூக மக்களிடம் நல்லெண்ணத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்து இஸ்லாமிய சமூகம் ஆட்பட்டிருக்கிறதென்ற உண்மையை உணர்ந்து பேசுகிறார்கள் ..
..
குறிப்பாக சமீபகாலம் என்பதை வெளிப்படையாக தவ்ஹீத் ஜமாத் வந்ததற்கு பின்னால் என்பதுதான் சரியானதாக இருக்கும் ..
கடுங்கோட்பாட்டு நிலைபாடென்பது அறியாமையால் வந்ததல்ல சரியான புரிதல் இல்லாமையால் வந்தது .. இதில் நேரடியாக பாதிக்கபடாதவரை அதை இந்த இளைஞர் சமூகம் உணராதென்றே எண்ணுகிறேன் கோவை குண்டுவெடிப்பு முதல் தொடங்கி திருபுவனம் ராமலிங்க படுகொலை வரை இஸ்லாமிய சமூகத்தின் மீது கைகாட்டுகிற நிலை வர யார் காரணம் .. கோவை பாரூக் படுகொலை அவர் ஏற்றுக்கொண்ட கடவுள் மறுப்பு கொள்கைக்கெதிராக என்றால் எங்கே போகிறது சமூகம் .. இஸ்லாம் போதித்ததை தவறான விளக்கம் தந்து.. குர்ஆன் ஹதீஸ் கருத்துகளுக்கு நேரடியான தர்ஜமா செய்து அதன் காலஅளவு எந்த நேரத்தில் சூழலில் சொல்லபட்டது அது இன்றைய சூழலில் ஏற்புடையதா என்பதையெல்லாம் ஆராயாமல் google translate போல தவறான வடித்ததின் விளைவு இன்று சமூகம் படும் அல்லுக்கெல்லாம் காரணம் ..
..
நிறைய முஸ்லிம் ஆளுமைகள் பல்வேறு கருத்து வேறுபாட்டிலும் தாங்கள் சொன்ன கருத்தில் தெளிவாக இந்த மண்ணில் நல்லிணக்கமே பிரதானமாய் கொண்டு செயல்பட்டார்கள் இன்றைக்கு குறிப்பாக இளைஞர்கள் முழுவதுமாக கற்றுணராமல் சிலரின் பேச்சால் அதுதான் சரியான பாதையென செல்வதால் வந்த கெடுதி இது ..
மதங்கள் மனித நேயத்தை போதிக்கிறதென்கிற போது அதிலும் இஸ்லாம் நேர்வழியை சொல்கிறதென்றால் அதில் எங்கிருந்து வந்தது வன்முறை ..பழிக்குபழி என்பது தனிநபருக்கானதே தவிர அப்பாவிகளின் மீதான தாக்குதலுக்கல்ல
சிலரின் தூண்டுதலால் நடந்தேறுகிற செயல்களுக்கு சமூகம் எப்படி பொறுப்பாகும் என்பதை விடுத்து சமூக பெரியவர்கள் பேச தொடங்குங்கள் .. நல்லதை கெட்டதை அதனால் சமூகம் சந்திக்கிற கொடுமைகளை குறிப்பாக சிறுவர்களிடத்தில் குழந்தைகளிடத்தில் சொல்லுங்கள் வளரும் சமூகம் கல்வியால் மட்டுமே தலை நிமிர முடியுமென எடுத்துக்கூறுங்கள் .. விடுதலை சமயத்தில் ஏறக்குறைய ஒரே விழுக்காடாக இருந்த கிருஸ்துவ சமூகம் இன்று கல்வியில் நல்லதொரு முன்னேற்றம் கண்டிருக்கிறது .. நல்ல புரிதலை பெறாத சமூகம் சீரழியும் ..
..
முதலில் கோட்பாட்டை சரியாக படித்துணருங்கள் இஸ்லாம் போதிப்பதெல்லாம் தனிமனித ஒழுக்கம் பட்டுமல்ல பிற சமூகத்தின் மீது பற்றும் அவர்களின் உரிமைகளுக்கு மதிப்பும் தரவேண்டும் என்பதுதான்
உணருங்கள் இல்லையென் பொது சமூகம் நம்மை முழுவதுமாக புறக்கணிக்கும்
..
ஆலஞ்சியார்
Thursday, May 2, 2019
சௌகிதார்.. பயத்தில்
கொல்லப் போறாங்க.. தாவ போறாங்க.. ஜாதி பார்க்கிறாங்க... பிரதமர் மோடி..
பிரதமரின் பேச்சு அவருக்கு தோல்வி பயத்தை காட்டியிருக்கிறது தரம் தாழ்ந்து பேச தொடங்கியிருக்கிறார்
பிற்படுத்தபட்டவன் என்பதால் ராகுல் என்னை விமர்சிக்கிறார் என்றார் திரிணாமல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் தாவ தயாராக இருப்பதாக சொன்னார் கடைசியில் என்னை கொல்ல பார்க்கிறது காங்கிரஸ் என்ற நிலைக்கு
இறங்கி வந்துவிட்டார் ..
..
வடக்கிலிருந்து வரும் செய்திகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை சந்திக்கும் என்கிற நிலையில் மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்த முடியுமா என பார்க்கிறார் .. பாகிஸ்தான் .. ராணுவ நடவடிக்கை காஷ்மீர் பள்ளதாக்கில் ராணுவ வீரர்கள் கொல்லபட்ட விடயமென அரசியலாக்க எண்ணி கடைசியில் முகம் கருத்து போனது பாஜகவிற்கு .. இனி தனிநபர் தாக்குதல் எல்லாம் எடுபடாமல் போக .. அதை செய்வேன் இதை செய்வேன் என உளறியதெல்லாம் மக்கள் ஏற்க தயாரில்லை என்றவுடன் .. பரிதாபகரமான வேசம் கட்ட பார்க்கிறார் ..
ராகுலை கேலியாக நாடாளுமன்றத்தில் விமர்சித்து சிரித்து மகிழ்ந்த போதும் அமைதியான மௌனத்தால் திருப்பியடித்ததும் ..என்னை பப்பு என்று சொல்லிவிட்டு போங்கள் ..ஆனால் ரஃபேல் திருடன் இல்லையென்று நிரூபிக்க முடியுமா என கேட்டு கதிகலங்க வைத்துவிட்டார் .. சமானியனுக்கான ஆட்சியல்ல இது பெரும் பண முதலாளிக்கான ஆட்சியென போட்டுடைத்துவிட்டார் .. இதுவரை பிரதமராக இருந்தவரிலேயே எங்கு படித்தார் என்ன படித்தாரென நாட்டுக்கு மக்கள் கடைசி வரை தெரிந்து கொள்ள முடியாதவராக இருந்தவர் மோடி மட்டும்தான் .. 2014 ல் பட்டபடிப்பு படித்தாக தேர்தல் ஆவணத்தில் சொன்ன ஸ்மிருதி ராணி 2019 ல் +12 பாஸ் என்கிறாரென்றால் இவர் மத்திய மனிதவள மேம்பாடு(மத்திய கல்வி அமைச்சர்) எவ்வளவு தில்லுமுல்லு .. இந்த ஆட்சியில் எல்லாமே பொய் பிரதமரே தவறான தகவலை தருகிறாரென்றால் .. பேசுவதெல்லாம் பொய் என்றால் செய்ததெல்லாம் அவசர கதியில் அரைகுறையில் என்றால் மக்கள் கோப படதான் செய்வார்கள் ..
..
ஒரு இரவில் நாட்டுமக்களை கதிகலங்க வைத்து வைத்திருந்த காசெல்லாம் செல்லாது என சொல்லி புதிய இந்தியா பிறந்ததென குதூகலித்தவர்.. கருப்பு பணத்தை மீட்கிறேன் எனச் சொல்லி அமிர்ஷா வகையறாக்கள் கருப்பை வெள்ளையாக்கியது தான் நடந்தது .. ஏழைபாழைகள் சிறுகசிறுக சேர்த்ததையெல்லாம் செல்லாதாக்கி அழுது புலம்பவிட்டு கதறியே மூச்சிழந்தவர்கள் பலர் .. வங்கியில் குறைந்தபட்ச பணம் இருப்புவேண்டுமென சொல்லி ஏழைகளிடம் கொள்ளையடித்த பணம் ஆயிரம் கோடிகள் .. ஏழைகளின் கல்விகனவை சிதைத்து .. விவசாய நிலங்களை கார்ப்ரேட்களுக்கு தாரைவார்த்து .. மாட்டிற்காக மனிதனை கொன்று.. தாழ்த்தபட்டவர்களை நிர்வாணமாக அடித்து துன்புறுத்தி மதவெறியை தூண்டி சாதிமோதலை ஊக்கபடுத்தி என பாஜகவினரின் செயல்களை கண்டும் காணாததுப்போல இருந்துவிட்டு இன்னும் சொல்லபோனால் கடைகண் கரிசனத்தோடு இருந்துவிட்டு இப்போது ..
கொல்லபார்க்கிறார்கள் .. சாதி பார்க்கிறார்கள் தாவ பார்க்கிறார்களென புலம்புவதால் பயனொன்றுமில்லை ..
..
இந்த பாசிச அரசை வீழ்துவதொன்றுதான் நாட்டிற்கும் நமக்கும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லதென மக்கள் முடிவுசெய்ததிருப்பதன் விளைவு தான் வடமாநிலங்களில் பெரும்பின்னடைவு .. தெற்கு எப்போதும் ஏற்காது இவர்களின் சித்தாந்தத்தை என்பதால் வடக்காவது வாழ்வு தராதா எனறிந்தவரின் எண்ணத்தில் இடியை இறக்குகிறார்கள் மக்கள் அதனால் வந்த புலம்பல் இது ..
..
சௌகிதார் ஷோர் ஹை .. என மக்கள் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள் ..
பொய் வீழ்ந்தே தீரும்
வாய்மையே வெல்லும்
அறம் வெல்லும்..
..
ஆலஞ்சியார்
Wednesday, May 1, 2019
தெளிவு
புரியாமல் இல்லை
புரிந்தும் ..சிலநேரம்
புரியவில்லை ..
புரியாததென்று ஏதுமில்லை
தெளிவில்லாத..
புரிதலால் பயன் இல்லை..
புரிதல்..
சரியாக புரிதல்..
தெளிந்தறிதல்..
மிகப்பெரிய கடினமில்லை..
தெளிந்தறிய..
முயற்சிகள் தேவை..
யாரிடமிருந்து வந்தது
எந்த நேரத்தில் வந்தது..
சொன்னவரின் தகுதியென்ன.
சொல்லும் முன்
அவர் சரியானவரா..
என யோசிப்பதை விடுத்து ..
சொல்லப்பட்ட விடயமென்ன..
சரியாகத்தான் ..
சொல்லியிருக்கிறாரா..
என ஆய்தல் நன்று..
..
சொல்லின் பொருள்
பிடிப்படவில்லையெனில்..
சொல்லை குறைச்சொல்லாதே..
மீண்டும் மீண்டும்..படி
அறிந்து படி..
அறிந்ததை ..
உன் அறிவும்..
இந்த சூழலும் ..
ஏற்கிறதா..என பார்..
..
சிலர்
நாற்றம் பிடித்த
நயவஞ்சக கருத்தை..
நா..நயமாய் செப்பிடுவர்..
முதல் முறை..
மனம் ரசிக்கும்
சொற்களை கையாள்வர்..
மடமையை ..
நாற்றமெடுத்த..
சங்கதியை..
நடுநடுவே தருவர்..
சொல்லில் சொக்கி
சுயமிழக்க வைப்பர்..
புராணம்,
மதம்,
சடங்கு சம்பிரதாயம் ..
அப்பன் வழி..
ஆண்டவன் சொன்னது...
இலக்கியம் சொல்லுது..
அடியார்கள் செப்பியதென்பர்..
எல்லாம் சரி..
முதலில் அறிவில் சேர்
சமநிலை தட்டாமல்
தெளிவானதென
அறிவேற்கிறதா என பார் ..
பலமுறை சொன்னாலும்..
சுற்றிவளைத்து ..
திரும்ப..திரும்ப
சொன்னாலும்..
பொய்..
நிஜமாகாது..
..
எல்லாம் அறி..
அது அறிவு..
ஆய்ந்து அறி..
அது தெளிவு..
தெளிவின்றி ஏதும்
புரியாது..
புரிந்துவிடின்..
ஏதுவும் தோற்காது..
நிஜம்...
நிஜமட்டுமே..
நின்று வெல்லும்..
..
உன்னுள் உறங்கும்
உண்மையெனும் ஒளிகொண்டு
உலகைப் பார்
தெளிவாக தெரியும்
இடையில் வந்த
மதமும் சாதியும்
தீயென்று புரியும்
பொய்யர்கள் பொழுதுபோகாமல்
கட்டி சமைத்ததெல்லாம்
வீண் என்று விளங்கும்
வேதம்
ஆண்டவனின் சொல்
ஆன்றோர் சொல்
என பிதற்றி திரிவது புரியும்
இயற்கை
தந்ததெல்லாம்
இவர்கள் தந்ததைப்போல
இட்டுகட்டியது புரியும்
..
ஆம்..
அறி ..
ஆழ்ந்து அறி..
தெளிவு பிறக்கும்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)