Wednesday, April 24, 2019

பிழைகள்

சீமானும் சீமான் தம்பிகளும் .. உள்ளக்கிடக்கில் கிடப்பதெல்லாம் அழுக்கென்றால் வந்து விழும் வார்த்தையெல்லாம் பரிசுத்தமாகவா வரும் வெறுப்பு அரசியலை மட்டுமல்ல வளர்த்தது கூடவே அசிங்கங்களையும் தான் ஆரம்பம் முதலே அவரின் பேச்சுகளை உணர்ச்சியை தூண்டி இளைஞர்களை வழிகெடுப்பதாகதான் சொன்னார்கள் உண்மையில் அவரின் செயலும் பேச்சும் வக்கிரத்தின் உச்சமாகவே இருந்தது பேரறிஞர் அண்ணாவையே மடையர் என்ற போது சீமானை புரிந்துக்கொள்ளாத இளைஞர்கள் வழிகேட்டில்தான் நிற்பார்கள் .. .. சீமானே போனை வைடா....தா என முன்பு சொன்னபோது இவர் விதைப்பதெல்லாம் சொத்தை என்று சொல்லியது நியாபகம் வருகிறது மிக மோசமான வார்த்தை பிரயோகம் நாம் தமிழர் கட்சியினர் என்றில்லை சாதிய வன்மத்தை விதைத்து வளர்க்கிற ராமதாஸ் தாசர்களிடத்திலும் காணலாம்.. ஒழுக்க நெறி அரசியல் இவர்கள் அறியாதது அதனால்தான் பிரபாகரன் இடத்தில் நானிருந்தால் ஒரு சிங்களச்சியை கூட விட்டு வச்சுருக்கமாட்டேன் என்று பேசமுடிந்தது விடுதலைப்புலிகளை இதைவிட யாரும் கேவலமாக பேசிவிட முடியாது புலிகளின் செயல்பாடுகளில் கருத்துவேற்றுமை இருந்தபோதும் ஓழுக்கநெறியை யாரும் குறைகூறியதில்லை.. .. இவர்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியுமென்ற நினைப்பு ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் காப்புரிமை வாங்கியதைப்போல பேச தொடங்கியபோது விரட்டியிருக்கவேண்டும் திராவிடத்தை வீழ்த்துவதாக சொல்லிக்கொண்டே ஜாதியத்தை வளர்த்தெடுப்பவர்கள்.. இனத்தை காட்டி பிழைக்கிற கூட்டம் கொள்கையற்ற கோமாளிகள் தங்களுக்குள் பகை வந்தால் எப்படி நடந்துக்கொள்வார்களென இன்று ஊருக்கு புரிந்தது ..சீமானை திட்டுகிறவர் தேவையில்லாமல் அவரது இணையரை வம்புகிழுக்கிறார் இதுதான் அவர்கள் கற்ற நாகரீகம் .. வெளிநாட்டு பணம் அதிகார ஆசை இவர்களை ஆட்டம் போட வைக்கிறது குறிப்பாக தமிழ்தேசியம் என்ற பெயரில் இவர்களின் கூத்து கடைசியில் கடைந்தெடுத்த அயோக்கியத்தனமென மக்களுக்கு புரிய இவர்களின் உரையாடல் உதவியது .. சீமானை நம்பி போகிறவர்கள் தகுதியை பறைசாற்றியது .. .. திராவிட அரசியல் மெத்தபடித்தவர் பள்ளிபடிப்பை கூட முடிக்காதோரென திராவிட இயக்கத்தில் பலரை கண்டிருக்கிறோம் அதிகம் படி ஆழ்ந்து படியென கல்வியை அறிவை வளர்த்தெடுத்த இயக்கத்தில் நாகரீகமான பேச்சும் சுவை குன்றாத எழுத்தும் கருத்து சுதந்திரமும் இருந்தது அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைமைபண்பு சிறந்திருந்தது .. கருத்து பேதம் வந்து பிரிந்தபோது கூட கடுஞ்சொல்லை கையாண்டதில்லை .. அவர்களின் குடும்பத்தினரை கேவலமாக பேசும் பழக்கத்தை கற்றுதரவில்லை நாகரீக அரசியலை எப்போதும் முன்னெடுத்த இயக்கம் திராவிடம் கடும்பகைகொண்டு பார்பனீயத்தோடு கருத்துமோதலை கொண்டிருந்த போதும் பார்பனர்களை கேவலபடுத்தியதில்லை எதிரியென்றில்லை தொடர்ந்து முதுகில் குத்தும் துரோகிகள் மீது கூட கடும்கோபம் கொண்டதில்லை கருத்தை விமர்ச்சனத்தை எதிர்கொள்ளும் போதும் எல்லை மீறாதது செயல்பட கற்று தந்தது திராவிடம் நம் மீது கடும் விமர்சனத்தை வைக்கும்போதும் எதிர்கருத்தை சொல்லும் போதும் எதிராளிகளின் கருத்து சுதந்திரத்தை காக்க எப்போதும் தவறியதில்லை .. .. அறநெறியோடு அரசியலை முன்னெடுத்த தமிழகத்தில் இன்று காதுகூசுகிறது ஏதோ பைத்தியகாரர்களிடம் மாட்டிக்கொண்ட நிலை இவர்களின் உரையாடலை கவனித்தால் கொலைக்கஞ்சா பாவிகள் என்பது தெரிகிறது நிறைய மரணங்களின் மர்மம் இவர்களின் உரையாடலில் வெளிபடுகிறது .. இனத்தை மொழியைச் சொல்லி இவர்கள் கட்டமைக்க நினைப்பவை ஆபத்தானதென விளங்குகிறது .. குறிப்பாக இளைஞர்கள் தெளிவின்றி உணர்ச்சி பெருக்கில் இணைந்திருப்பது புரிகிறது எண்ணிக்கையில் சொற்பமென்றாலும் இவர்கள் மனசிதைவிற்கு உள்ளாகியிருக்கிறார்கள் அல்லது மூளைச்சலவை செய்யபட்டிருக்கிறார்கள் ஆபத்தான போக்கு இது.. முன்பு சுப.வீரபாண்டியன் அவர்களை கொல்வேன் என சீமான் பேசிய போதே உணர்ச்சிவயபட்டு பேசியிருப்பதாக எண்ணியது தவறென்று இப்போது புரிகிறது இவர்கள் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து கலையபடவேண்டும் ஏனெனில் இவர்கள் சுயஅறிவற்றவர்கள் இவர்கள் பின்னால் இருந்து இயக்குகிறவர்கள் இவர்களை கேலிபொருளாக்கி வேறெதையோ திட்டமிடுகிறார்கள் .. தமிழகத்தின் பொதுஅமைதியை சிதைக்க இவர்களை கொண்டு முயல்கிறார்கள் சாதாரணமாக கொலை முயற்சியெல்லாம் நடந்ததாக சொல்வதை கேட்டு கடந்து போகமுடியவில்லை இவர்களை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.. ஆபத்தானவர்கள் மட்டுமல்ல இவர்கள் #பிழைகள் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment