Friday, April 26, 2019
அல்லற்பட்டு
"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.".. குறள்
சாதாரண மக்களிடமிருந்துதான் மாற்றத்திற்கான
ஒளி பிறக்கிறது ..
நடந்து முடிந்த மூன்று கட்ட தேர்தல்களின் முடிவுகள் பாதகமாக தான் இருக்குமென அரசியல் அவதானிகள் கணிக்கிறார்கள் ..மெல்ல படர்ந்த பாசிசத்தை துடைத்தெறிய மக்கள் மௌன புரட்சியை செய்வதை அறிய முடிகிறது ..
தன் செலவிற்கு கூட அம்மா தான் பணம் தருகிறாரென .. விலை உயர்ந்த ஆடையும் mont blanc பேனாவும் வைத்திருக்கும் இந்த "ஏழைத்தாயின் மகன்" சொன்னபோது மக்கள் நகைத்தார்கள் .. சிகை அலங்காரத்திற்கே லட்சங்கள் செலவு செய்வதாக ஊடக செய்திகள் இதுவரை அவரோ அவரின் அமைச்சகமோ மறுக்கவில்லை .. மக்கள் மீண்டும் பிரதமராக விரும்புவதாக வாரணாசில் பேசிவிட்டு சென்றவுடன் நகரை சுத்தம்செய்ய 14 லட்சம் நீர் தேவைபட்டிருக்கிறது .. இதுதான் ஏழைமகனின் செயல் .. இந்த நிகழ்வில் தர்மயுத்தம் பன்னீர் குடும்பத்தோடு கலந்துக்கொண்டார்.. மிக ஆபத்தாவனராக அடிமைகளில் நானே முதலாமவன் என பறைச்சாற்றி வருகிறார் .. நேரடியாக பாஜகவில் இணையாததுதான் ஆனால் பாஜகவின் கைப்பிள்ளையாக ஜெயலலிதா மறைவிற்கு பிறகு செயல்படுவது கண்கூடாக தெரிகிறது தன்னை காத்துக்கொள்ள எதைவேண்டுமானாலும் செய்யும் அரசியலில் மிக கேவலமானவராக மாறிவருவதை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை தமிழகத்தில் பாசிசத்தின் செயல்பாடுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிற.. அவர் சொல்படி செயல்படுகிற ஏவல்காரனைப்போல இந்த "மானமுள்ளபிள்ளை" இருக்கிறது
..
அதிமுக ஆட்சியை எப்படி தக்கவைக்க வேண்டி அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறி
சபாநாயகரின் நடுநிலை என்ற அதிகாரத்தை கையிலெடுத்து நான்கு உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய துணிகிறார்கள் .. எப்படியும் மக்களின் தீர்ப்பு பாதகமாகவே வருமென்று அறிந்து எண்ணிக்கையை குறைத்து "சதுரங்கம்" ஆட முயல்கிறார்கள் .. மூன்று பேருக்கு பதில் முப்பதை தூக்கினால் நிலை என்னாகும் என்பதை அதிமுக அரசு உணரவேண்டும் எதை எடுப்பதென்பதை எதிரியே தீர்மானிக்கிறான் .. ஆட்சிக்கெதிராக வாக்களித்த பன்னீர் வகையறாக்களின் தீர்ப்பை எத்தனை காலம் தாமதபடுத்த முடியும் உச்சநீதிமன்றத்தின் போக்கு மாறியிருக்கிறது
சூழ்ச்சிகளும் சூதுகளும் நீண்டநாள் நிலைப்பதில்லை .. ஆட்சிமாற்றம் வேண்டுமென மக்கள் தீர்மானித்து வாக்களிக்க தொடங்கிவிட்டார்கள் .. இந்திய குடியரசில் மக்களின் தீர்ப்பிற்கு முன்னால் சூதுகள் நிற்காது
..
தென்மாநிலங்களில் பாஜகவின் நிலை பரிதாபகரமென்பதால் தமிழகத்தில் எந்தகாலத்திலும் காலூன்ற முடியாதென்பதால் கிடைத்த அடிமைகளை வைத்து மறைமுகமாக ஆளும் நிலையை தவறவிடகூடாதென்று அதிமுக அரசிற்கு பாஜக அரசு உதவி வருகிறது பெருபான்மை இழந்த நிலையிலும் மத்தியில் ஆளும் பாசிச அரசு தூக்கிபிடித்துக்கொண்டு நிற்பதை மக்கள் உணராமல் இல்லை மக்களின் அதிகாரம் அறியாமல் இன்று ஆட்டம் போடுவோர் .. தூக்கியெறியபடும் போது வரலாற்றில் இருந்த இடமே தெரியாமல் போவார்கள் ..
மத்தியல் பாசிச பாஜக மோடி அரசும் மாநிலத்தில் அடிமை அதிமுக அரசும் மக்களால் வீழ்த்தபடும் ..
"அல்லற்பட்டு ஆற்றாது"
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment