Tuesday, April 23, 2019

காயத்தை குருதியை கொண்டு கழுவாதே

காயத்தை குருதிக் கொண்டு கழுவாதே என்றார் மௌலானா ரூமி (ரஹ்).. .. நேற்றைய தினம் இலங்கை தொடர்குண்டு வெடிப்பு குறித்து மதம் ஒரு சவம் என்ற பதிவை சில நண்பர்கள் கடுமையாக விவாதித்தார்கள் சில நண்பர் தொடர்பு கொண்டு எதன் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மீது களங்கம் சுமத்துகிறீர்கள் யாரோ சொன்னதை நம்பி எழுதுவதா என்றெல்லாம் கதைத்தார்கள் ..இன்று இலங்கை குண்டுவெடிப்புக்கு ஐ எஸ் பொறுப்பேற்றுள்ளது இதுகுறித்த செய்தியை ஐஎஸ்ஸின் செய்தி நிறுவனமான அமாக் தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்ததற்கான எந்த ஆதாரத்தையும் ஐஎஸ் வெளியிடவில்லை.‍. மதவெறுப்பின் உச்சம் தான் இப்படிபட்ட தாக்குதல் என்பதை உணர மறுப்பதுதான் மகா கொடுமை செய்தவன் யாராக இருந்தாலும் அவனை கண்டிக்க வேண்டுமே தவிர மெல்லிய புன்னகையோடு கதைக்க கூடாது .. இன்று ஒரு இலங்கை நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது 30 மஜ்ஸித்களில் குண்டுவெடித்தபோது என்ன செய்தீர்கள் மூன்று சர்ச்களில் (கனிஸா) இடத்தில் வெடித்தற்கு பேசுகிறீர்களே என்றார் இதைபோல் தான் நிறைய நண்பர்களின் மனநிலையும் இருக்கிறது .. எந்த வழிபாட்டுத்தளத்தில் நடந்தாலும் கடுமையாக கண்டிக்கவேண்டும் .. புலிகளால் பள்ளியில் நடத்தபட்ட கொடூர தாக்குதலை கண்டித்திருக்கிறோம் .. மனிதர்களை கொத்து கொத்தாக கொல்வதை யார் செய்தாலும் ஏற்க முடியாது .. மனிதநேயமுள்ள அனைவரும் கண்டிக்கவேண்டும் .. ஆனால் தன்னை சார்ந்தவன் என்பதற்கு அவனை காக்க நினைப்பதும் அவனது செயலுக்கு ஒருவகை நியாயம் கற்பிப்பதும் தான் மிகபெரிய கொடுமை .. காயத்தை குருதிக்கொண்டு கழுவும் செயல் இது .. .. குண்டுவெடிப்பு தொடர்பாக இலங்கை அரசு வெளியிட்ட குறிப்பில் ஐஎஸ்ஐஎஸ் உடைய அடையாளங்களை இருந்ததாக சர்வதேச புலனாய்வு வல்லுனர்கள் சொல்கிறார்கள் இலங்கை சேர்ந்த அமைப்பு செயல்பட்டிருந்தாலும் அதன் பின்னில் ஐஎஸ் இருப்பதற்கான செய்தி வருகிறது .. intelligence sources had earlier said the attacks bore some of the hallmarks of the ISIS. International experts had said, even if a Sri Lankan group had carried out the attacks, it was likely that the ISIS were involved given the level of sophistication of the apparently coordinated bombings. .. இலங்கை இஸ்லாமிய நண்பர் ஒருவர் தன் பதிவில் சில விடயங்களைப்பற்றி பேசுகிறார் .. மதரஸாக்களின் பாடதிட்டங்களை அரசிடம் தந்து அனுமதி பெறவேண்டும் ஜூம்மா குத்பா உரையை முன்கூட்டியே சில மார்க்க அறிஞர்கள் கொண்ட குழுவின் ஒப்புதலுக்கு பிறகே பேச வேண்டும் இதை அரசு கண்காணிக்கவேண்டும் என்கிறார் .. இது கீழைநாடுகளில் நடைமுறையில் உள்ளதுதான் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் இப்போதும் சில கட்டுபாடுகளோடுதான் மதரஸா நடத்தபடுகிறது ஜூம்மா உரை கூட தணிக்கை செய்யபடுகிறதென்கிறார் .. காரணம் இளைஞர்களை மாணவர்களை தீவிரவாதத்தின் பக்கம் இழுக்க இவைகள் பயன்படுவது வெளிப்படையாக தெரிகிறது பொது சமூகமும் சந்தேகம் கொள்கிறது, எந்த ஒரு உயிரையும் காரணமின்றி கொல்வதை எம் மதமும் கோரவில்லை விரும்பவும் இல்லை இது போன்ற கொடுஞ்செயல்களை செய்கிறவனை தயைகூர்ந்து கனிவோடு பார்க்காதீ்ர்கள் ஆதரிக்காதீர்கள் செய்திருக்கமாட்டானென சப்பைகட்டாதீர்கள் அப்படி செய்வது மேலும் சிலரை தவறான பாதையில் பயணிக்க உதவிடகூடும் .. மதத்தை கடவுளை உங்கள் வழிபாட்டோடு நிறுத்துக்கொள்ளுங்கள் அடுத்தவர் மீது அடித்தமர்த்த செய்வதுதான் பிரச்சனைக்கு காரணம் என்பதை உணருங்கள் பக்கத்திலுள்ளவரை கனிவோடு பாருங்கள் மதம் மனிதனை மடையனாக்கும் என்பதை உணருங்கள் அவரவர் வழி அவரவருக்கு என்ற தெளிவிருந்தால் இது போன்று நிகழாது .. இரக்கமின்றி கொல்பவன் மனிதனே அல்ல .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment