Saturday, April 6, 2019

பாஜகவை வீழ்த்துவோம்

முற்போக்காளர்கள் படைப்பாளிகள் நீதியரசர்கள் துணைவேந்தர்கள் நாட்டின்மீது அக்கறை கொண்டவர்கள் என அறிவுடை சமூகம் இந்த தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள் இந்த நாட்டை பாசிசவாதிகளின் பிடியிலிருந்து மீட்க தன்னிச்சையாய் சார்பற்ற நிலையில் கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள் .. இந்த மோடி அரசு பதவியேற்றதிலிருந்து மாற்று கருத்தியலாளர்களை மிரட்டியும் கொலைசெய்தும் .. நீதிபதிகளை மிரட்டியும் தாங்கள் விரும்புகிற தீர்ப்பை தர வலியுறுத்தி பெற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டவிதிகளை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு தங்கள் மநுநீதியை நிலைநாட்ட குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே அரசநிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நிலையை ஏற்படுத்தி சர்வாதிகார சூழலில் நம்மை நிறுத்தியிருக்கிறார்கள் .. இந்த ஆபத்தான போக்கு தொடருமானால் நாட்டை ஜனநாயக பாதையில் மீண்டும் திருப்பமுடியாத நிலைவருமென அஞ்சி ஆன்றோர்கள் அறிவுநிறை படைப்பாளிகள் நாட்டை நேசிக்கிற நல்லவர்கள் ஒன்று கூடி பேச தொடங்கியிருக்கிறார்கள் .. .. அவ்வளவு ஆபத்தானதா ..பாஜக .. பன்முக தன்மையை நசுக்கி பார்பனீய கலாச்சாரத்தை நம்மீது திணிக்க நினைக்கும் செயல்.. பச்சிளங்குழந்தைகள் மீதான வன்புணர்வை கூட கொண்டாடி மகிழ்கிற தேசபக்தர்கள் ..மாட்டிற்கு தரும் பிராணவாயுவை பச்சிளங்குழந்தை தரமறுத்து அதை நியாயபடுத்தும் அயோக்கியத்தனம் ..உயர்கல்வி ஏழைகளுக்கில்லை இன்னும் தெளிவாக சூத்திரனுக்கில்லை என்ற சனாதன செயல்பாடு .. இந்துராஷ்டீரியம் என்ற பெயரில் அவிழ்த்துவிட படும் அராஜகம் நடுத்தர மக்களின் சேமிப்பை கூட பிடிங்கி கார்ப்பரேட்களின் கொடுக்கும் அநியாயம் ..மாநிலத்தின் சுயாட்சி மீது பகிரங்கர போர் .. விவசாயத்தை சிறுதொழில்களை அழித்து அனைவரையும் கார்ப்பரேட் அடிமைகளாக்க செயல்படும் சர்வாதிகார அரசை வீழ்த்த வேண்டும் .. மேனாள் நீதிபதிகள் துணைவேந்தர்கள் அறிக்கையில் "மத்திய அரசு அலுவலகங்களில் பாஜகவின் தலையீடு அதிகரித்துள்ளது. தற்போது வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் இதற்கு முன்னால் இந்தியாவில் நடந்தவை போல் அல்ல. அரசியல் கட்சிகளுக்காகவோ கூட்டணி கட்சிகளுக்காகவோ நடக்கிற அதிகார போட்டி அல்ல. இந்தியா ஒரு குடியரசு நாடாக, ஜனநாயக நாடாக, மனித நெறிமுறைகளை காப்பாற்றிக் கொள்கிற நாடாக தொடர போகிறதா இல்லையா என்பது நம் முன்னால் உள்ள கேள்வி. இந்த கேள்வி எழுவதற்கான காரணங்கள் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வலிமை பெற்றுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும், இந்த 5 ஆண்டுகளாக ஒரு அபாய சங்கு ஒலித்துக் கொண்டே இருந்துள்ளது. அவற்றையெல்லாம் நாம் மறந்துவிட்டு காதில் போட்டுக் கொள்ளாமல் எப்போதும் போல் பொறுப்பற்ற வகையில் நடந்து விட கூடாது என்பதற்காக ஒரு எச்சரிக்கையாக நாங்கள் இந்த அப்பீலை கொடுத்துள்ளோம்" .. 300 எழுத்தாளர்கள் 100 க்கும் மேற்பட்ட படைப்பாளிகள் (இயக்குநர்கள்) நீதிபதிகள் துணைவேந்தர்களென மத்திய அரசிற்கெதிராக அறிக்கை தநிது பாஜகவிற்கு வாக்களிக்காதீர்கள் என சொல்வது வரலாற்றில் இதுவே முதல்முறை .. .. சிந்திப்பீர் வாக்களிப்பீர் திமுக காங்கிரஸ் கூட்டணி .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment