Wednesday, April 10, 2019

திராவிட திருமகள்

கலைஞரின் பிள்ளை .. இன்று கனிமொழியை அறிமுகபடுத்திய போது திமுக தலைவர் திரு.ஸ்டாலின் சொன்ன வார்த்தை நெகிழ்ச்சி .. ஆனால் அதுமட்டுமே கனிமொழியின் தகுதி அல்ல அவர் கவிஞர் பகுத்தறிவாளர் சமூக சிந்தனையாளர் என்பதையும்,கடந்து மிக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் திமுக தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் மிக திறமையானவர்கள் ஏராளம் அந்த வரிசையில் இடம்பெறதக்க தகுதியுடையவர் .. பேரறிஞர் அண்ணா, நாஞ்சிலார்,இரா.செழியன் மாறன் வைகோ, ஆ.ராசா..சிவா என்ற வரிசை நீண்டுகொண்டே போகும் அந்த வரிசையில் இடம்பிடிப்பவர் கவிஞர் கனிமொழி .. உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீட்டை ஆதரித்த பேசிய இடதுசாரி ரங்கராஜனை ...என்ன பண்ணுறீங்க என்று இருக்கையிலிருந்து வந்து எதிர்ப்புகுரலை பதிவு செய்தாரே..சமூகநீதிக்கெதிராக செயல்படும் போது தீப்பிழம்பாய் கொதித்தெழுந்தாரே அது ஒன்று போதும் ..கொண்ட கொள்கை மாறாது எந்தநிலையிலும் சமரசம் செய்து கொள்ளாத போராளியாய் திகழ்கிறார். .. மனிதநேயத்தோடு பழகும் தலைவர் .. தன் பிரச்சார வேனுக்கு பின்னால் அணிவகுத்து வரும் இளைஞர்கள் ஹெல்மெட் போடாமல் வருகிறார்கள் என்பதை கவனித்து இறங்கி வந்து கண்டிப்பதும் சந்திக்கிறவர்களிடமெல்லாம் வாஞ்சையோடு அணுகுவதும் வாக்கு சேகரிக்கும் போது அவர் தருகிற உறுதிமொழிகள் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்டு எதையெல்லாம் செய்திட இயலுமென்று அறிந்து கதைப்பதும் .. பெண்களின் கல்வி உரிமைகளுக்காக என்றென்றும் குரல் கொடுப்பதும் ஒரு நல்ல தலைவராக மிளிர்கிறார் .. திமுக தலைமைக்கு கட்டுபட்டு செயலாற்ற வேண்டுமென்பதில் உறுதியோடு நிதானமாக செயல்படுவதை காணமுடிகிறது .. அரசியல் நேர்மையும் தன் மீது சுமத்தபடும் குற்றசாட்டுகளுக்கு நேர்மையாக பதிலளிப்பதும், தன்மீது சுமத்தபட்ட வீண்பழியை சட்டரீதியாக வெல்லும் போர்திறனும் இயல்பாக பெற்றவர் .. கலை இலக்கியத்திலும் அரசியலிலும் புதியதொரு பார்வையை பதித்தவர் .. நளினமாக பேச்சும் அதில் அறிவுகூர்மையும் ..எதற்கும் அஞ்சா திராவிட திமிரும், சமூகநீதிக்கெதிராக பேசுவோருக்கு சிலிர்த்தெழுந்து பதிலடி தருவதும் ... எப்போதும் எதிலும் சமரசம் செய்துக்கொள்ளதா கொள்கை பிடிப்பும் இவரை உயர்த்தில் கொண்டு போகும் .. உயரும் போது பணிவு இவரோடு பிறந்தது .. இவரை சந்தித்த போது நல்லாயிருக்கீங்களா என்ற எந்தவித பகட்டுமில்லாமல் கேட்பார் .. மிக எளிமையான எந்தவிதமாக ஆடம்பரமும் பகட்டும் பேராசையும் இல்லாமல் மக்களுக்கான பணியை செய்பவர் நல்ல சிந்தனையாளர் .. எதையும் அறிவுகொண்டு வெல்ல வேண்டுமென விரும்புகிறவர் நேர்வழியில் அரசியல் அதுவும் அறத்தோடு செயல்படவேணிடுமென்று விரும்புகிறவர் .. கலைஞரின் பிள்ளை என்பது கூடுதல் பலமே தவிர ..அதுவே அவரின் தகுதியல்ல தனி அடையாளத்தோடு வரலாற்று பதிவாவார் .. .. இன்றைய அரசியல் சூழலில் இவரை போன்ற பன்முக திறமையாளர்கள் நாடாளுமன்றத்தை அலங்கரித்தால் அது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும்.. மிக பெரிய வெற்றியை தந்து முத்துநகர் மக்கள் தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார்கள் .. பெரியாரின் பெயர்த்தியாய் கொள்கை முரசாய் இந்த கலைஞரின் பிள்ளை #தமிழர்களின்_குரலாய் நாடாளுமன்றத்தில் திகழ்வார் .. வெற்றி நிச்சயம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment