Sunday, April 21, 2019
மோடி.V/S பிரியங்கா
குறுகிய சிந்தனையிலிருந்து நாட்டை காப்பாற்றுங்கள் பிரியங்கா ..
..
12 ஏவுகணைகளை வைத்திருந்தேன் அபிநந்தன் விடுவிக்காவிட்டால் பாகிஸ்தான் நிலை அவ்வளவுதான் மோடி .
..
இரு கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்
அபிநந்தனை பெருந்தன்மையாக நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் சொன்னபோது மறுத்து எங்கள் மிரட்டலுக்கு பயந்துதான் விடுவித்தாரென சொல்லாத பிரதமர் நாடெங்கும் மக்கள் கடுங்கோபத்தில் பாஜகவிற்கெதிராக தனக்கெதிராக வாக்களிக்கிறார்களென முதல்கட்ட தகவல் வந்தவுடன் வேறு வழியின்றி பாகிஸ்தானை இழுக்கிறார் .. நான் இதுவரை செய்தது என்ன என்றெல்லாம் பேச வக்கின்றி .. செய்ததெல்லாம் மக்கள் விரோத போக்காக இருப்பதால் கடைசி ஆயுதமாக இந்திய பாகிஸ்தான் விரோதபோக்கை கையிலெடுக்கிறார் .. பாவம் இந்த முறையும் தோற்கபோகிறார் சாது ஒருவர் பாபர் மஜ்ஸிதை இடித்ததில் பெருமை கொள்வதாக சொல்லி வாக்கு கேட்கிறார் ராமனுக்கு கோவில் கட்டியே தீருவோமென பழைய பாடலை மீண்டும் பாடுகிறார்கள் சுருதிபிழையோடு .. மக்கள் மீதான பொருளாதார தாக்குதல்கள் .. நடுத்தர குடும்பங்களின் விலைவாசி உயர்வு கேஸ்விலை ₹1000த்தை தாண்டுகிறது .. ₹400 கடந்த போது நடுரோட்டில் போராட்டம் நடத்தியவர்கள் இன்று கள்ளமௌனம் காக்கிறார்கள் .. வாக்குபதிவு சாதாகமாக இல்லையென்றவுடன் பெட்டியை திருடலாமா என பார்க்கிறார்கள் ரெக்கார்ட் ரூமிற்கு பலத்த பாதுகாப்பு.. ? மீறி சென்று வருகிற நிலை தேர்தல் ஆணையம் இதையெல்லாம் கண்டும்காணததைப்போல நடந்துக்கொள்கிறது ..
இதையெல்லாம் மீறி மக்களின் மோடி எதிர்ப்பு அலை சுருட்டிக்கொண்டு போகுமென அஞ்சி தீவிரவாதம் பாகிஸ்தான் என கதையளக்க வருகிறார் மோடி ..
..
குறுகிய சிந்தனைகளில் இருந்து நாட்டை காப்பாற்றுங்கள் என்கிறார் பிரியங்கா
''ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடவில்லை.
நாட்டின் மிகப்பெரிய #கருத்தியலான ஜனநாயக சக்திகளின் பலத்தை பெருக்குவதற்காக போட்டியிடுகிறது. நாம் எல்லோரும் ஒருவரையொருர் நேசிக்கவும், ஒருவரையொருவர் நம்பவும் இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவே இத் தேர்தல் நடைபெறுகிறது.
நாம் அனைவரும் சமம், கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம், நமது மதம், நம் உணவுமுறைகள், நம் வாழ்க்கைப் பாதைகள் எல்லாவற்றிற்கும் இந்த நாட்டில் இடம் உண்டு.
ஒரு குறிப்பிட்ட தலைவரின் பெயரைச் சொல்லி விமர்சிப்பதற்குக் கூட பயமாக இருக்கிறது. ஆளும் இந்த அரசாங்கத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் "
..
எவ்வளவு நேர்த்தியான உரைவீச்சு .. பன்முகதன்மை சிதையாமல் நாட்டின் இறையாண்மைக்கு கேடுவராமல் பயமின்றி மக்கள் வாழ எல்லா சமுகமக்களும் ஒற்றுமையோடு இந்த மண்ணில் தங்கள் உரிமையை பெற்றிட சாதிமத பேதமற்ற சமத்துவம் மலர காங்கிரஸ் ஒன்றே தீர்வு
நாட்டின் நலன் கருதி மதவெறி பிடித்தவர்களிடமிருந்த நாட்டை காக்கவேண்டும்
அதற்கு பாசிச பாஜகவை வீழ்த்தியே ஆகவேண்டும்
இரு கட்சிகளுக்குமான நோக்கம் புரிந்திருக்கும் .. யார் தேவை என்பதை இந்திய மக்கள் உணர்வார்கள் .. மோடி ஆட்சியை வீழ்த்துவார்கள்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment