Thursday, April 4, 2019
தலைவன் உருவாகிறான்
வழிநெடுக மக்கள் வெள்ளம்
தங்களுக்கான தலைவன் யாரென தீர்மானித்த பெருமக்கள் இன்றைய சூழலில் தமிழகம் கேடுகெட்டவர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருப்பதை கண்டு
உன்னதமான தலைவர்களை தந்து இந்திய தேசத்தில் பெருமைமிகு தமிழராய் இருந்த நிலை மாறி வெட்கங்கெட்ட கூட்டத்திடம் மானத்தை அறிவை அடகுவைக்கும் கயவர்களிடமிருந்து மீட்க மிகப்பெரிய ஜனநாயக ஆயுதத்தை கையிலேந்தி தெளிவோடு நிற்கிறார்கள் .. ஆம் தமிழகத்தின் தலைவராய் தமிழ் மக்களின் அன்பில் அரவணைப்பில் நேசத்தில் பிரகாசிக்கிறார் தளபதி.ஸ்டாலின் .. உண்மையில் பெருமிதம் கொள்கிறோம் நேர்மையோடு நன்னெறியோடு எதையும் மக்களின் ஆதரவோடு பெறவேண்டும்.. வாய்ப்பிருந்தும் குறுக்குவழியில் அதிகாரத்தை அடைய மார்க்கமிருந்தும் மக்கள் அங்கீகாரத்தோடு மட்டுமே அதிகாரத்தில் வரவேண்டும் அந்த நல்வாய்ப்பிற்காக காத்திருப்போம் அதுவரை மக்களுக்காக உழைப்போமென்ற உயர்நோக்கத்தோடு அரசியல் செய்கிறார் ..
..
எனக்கு தெரிந்தவரை இவருக்கு இணையாக யாருமில்லை ...வெற்றிடம் என்ற பிரச்சாரமெல்லாம் பொய் என்பதை மக்கள் கூட்டம் பறைச்சாற்றுகிறது எதிரில்லா தலைவராக வலம் வர தொடங்கியிருக்கிறார் இவரோடு அரசியல் செய்யும் தகுதி கூட சிலருக்கு இல்லை .. அன்புமணி போன்ற வெட்டிபேச்சு வீரர்கள் விவாதத்திற்கு தயாரா என இடைவிடாமல் கேட்கிறார் முதலில் அப்பனும் மகனும் பொதுவெளியில் சொன்னவற்றிக்கும் இப்போது பேசி திரிவதற்கும் சரியான பதிலை தர முடிகிறாதா என யோசிக்கவேண்டும் திமுகவின் கடைநிலை தொண்டனிடம் கூட உம்மால் விவாதிக்க முடியாதென்ற உண்மையை உணர்தல் நலம் .. திமுகவால் தமிழகம் கண்ட பலன் என்ன கேட்பதற்கு முன் வன்னியருக்கும் சேர்த்து இடஒதுக்கீட்டை தந்தது யாரென்று யோசித்தால் புரியும் .. மின் உற்பத்தியெல்லாம் திமுக ஆட்சியில் தொடங்கபட்டது அதிமுகவால் அல்ல என முன்பு பேசியது ஞாபகம் வரவில்லையெனில் நல்ல மருத்துவரை..? அணுகவும் .. அதுசரி எப்போது பேசியது போல் நடந்திருக்கிறார் பெற்ற தாயை கூட அரசியலுக்காக இழிவுபடுத்திய அயோக்கியருக்கு மறதி வரதான் செய்யும் ..
..
எடப்பாடி பன்னீர் இருவருக்கும் மக்கள் மத்தியில் என்ன நிலை என்பதை பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம் கைகோர்த்து கூட்டிவந்த கூட்டத்தை நகரவிடாமல் செய்தும் மக்கள் எழுந்து செல்வதும் காலி இருக்கைக்கு பிரச்சாரம் செய்வதுமாக போகிறது நிலைமை.. சில உதிரிக்கட்சிகள் நிலை தேர்தலுக்கு பிறகு பரிதாபகரமாக போகுமென்பதை அறிய முடிகிறது பாசிசத்தின் குரலாய் சில பேசி நடித்தாலும் .. சொந்த சமுதாயத்தின் வாக்குகளை சில கோடாரிகளை கொண்டு வெட்டி பிரித்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் .. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை தான் ஆதரிக்க வேண்டும் .. வடமாநிலங்களிலும் காங்கிரஸின் கை ஓங்குவதாக சமீபத்திய செய்திகள் வர தொடங்கியிருக்கின்றன .. பாசிசத்தை வேரறுக்க..
நாட்டின் ஒற்றுமையை நிலைநாட்டிட மக்களின் பன்முக கலாச்சாரத்தை காத்திட மதசார்பற்ற சோஷலிச (பொதுவுடமை) ஜனநாயக நெறிகளோடு கூடிய அரசை அமைத்திட திமுக காங் கூட்டணியை ஆதரிப்போம் வெற்றி பெற செய்வோம் ..
..
தமிழகத்தின் பாசிசத்தின் ஊதுகுழலாய் பாசிசத்தின் அடிமைகளாய் தலையாட்டி பொம்மைகளாய் தமிழகத்தின் உரிமைகளை ஒன்றொன்றாய் அடகுவைக்கும் காவுகொடுக்கும் களவாணிகளை விரட்டிட ..பேராசான் பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளனும் கட்டி காத்த சமுகநீதியை நிலைநாட்டி தமிழகத்தின் நலன், உரிமையை காத்திட .. தமிழக மக்களின் பேராதரவை பெற்ற பெருமகன் தளபதியாரை அறியணை ஏற்றிட நல்லதொரு துவக்கமாய் .. நம்பிக்கையை விதைத்திட தமிழகத்தை சூழ்ந்த இருள் நீக்கி
#உதயசூரியனின் ஒளி பரவ .. ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம் ..
..
நமக்கான தலைவர் தளபதி
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment