Monday, April 15, 2019
திமுககூட்டணிக்கு வாக்களிப்போம்
இன்னும்.. சிலநாட்கள் யாருக்கு வாக்களிக்க கூடாதென்பதில் கவனமாக இருக்கும் நாம் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதில் கோட்டைவிடுகிறோம்.. இங்கே சில உதிரிகள் நேற்றுவரை யாரென்று தெரியாதவர்கள் திடீரென நாட்டின் மீதும் மக்களின் மீதும் அக்கறை கொண்டவர்களைபோல நடிக்கிறார்கள்.. சில மொழியை காக்க மண்ணை காக்க எங்களை விட்டால் யாருமில்லையென பம்மாத்து செய்கிறார்கள் சிலரோ சாதிய பின்புலத்தை நம்பி நிற்கிறார்கள் .. இவர்களுக்கு வாக்களிப்பது நேரடியாக பாசிசத்திற்கு துணைபோவதற்கு சமம்
..
முதலில்
எதிர்க்கபடவேண்டியவர்கள் அல்லது விரட்டபடவேன்டியவர்கள் இனங்காண்போம் ..பாஜக
அதிமுக நாட்டை மதத்தின் பேரில் பிரித்து பன்முகதன்மையை சிதைக்க நினைப்பவர்கள் ஜனநாயகத்தின் அத்தனை மரபுகளையும் உடைத்தெறிந்து இந்திய அரசியல் சாசனத்தையே கேள்வி கேட்பவர் .. இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையையே தகர்க்க நினைக்கிறவர்கள் .. ஷோசலிசம் மதசார்பின்மை ஜனநாயகம் குடியரசு
(Socialism Secularism democracy Republic ) என்ற அடிப்படையையே தகர்க்க நினைக்கிற பார்பன மேலாதிக்க மத கோட்பாட்டை, சனாதனத்தை திணிக்க முயல்கிற பாசிச பாஜக .. ஆர்எஸ்எஸின் கண்ணசைவில் இயங்குகிற அரசு அனைத்து பதவிகளையும் பார்பன உயர்வகுப்பினருக்கு தாரைவார்க்க நினைக்கிற செய்கிற அரசை வீழ்த்த வேண்டும் அதீத பெரும்பான்மை சர்வாதிகாரத்தையே தருமென்பது ஜனநாயகத்தில் தொடர்ந்து கண்டுவருவதை வரலாறு நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது.அதுதான் கடந்த ஐந்தாண்டில் கண்டது.. தான்தோன்றித்தனமாய் எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்படுகிற மத்திய அரசு..
மாநிலத்தில் இதுவரை இல்லாத அடிமைகளாய் தமிழக நலனை கேட்பதற்கு முன்பே தாரைவார்க்கும் அடிமுட்டாள்களின் கையில் சிக்கி தவிக்கிறது .. இவர்கள் விரட்ட கீழிறக்கபடவேண்டும் ..
..
யாருக்கு வாக்களிப்பது
சிலர் புதியவராய் வந்திருக்கிற கமல் .. இனம்மொழி பேசும் சீமானென இவர்களுக்கு வாக்களிக்கலாமா என கேட்கிறார்கள் .. இவர்களுக்கு வாக்களிப்பது நேரடியாக பாஜக அதிமுகவிற்கு வாக்களிப்பதற்கு சமம் .. இப்போதே வெளிப்படையாக ஒருவேளை வெற்றிப்பெற்றால் (டெபாசிட்) கட்டிவச்சகாசு கிடைக்காதென்பதுதான் உண்மை) பாஜகவிற்கு ஆதரவு என்று தன் சுயத்தை வெளிபடுத்தியிருக்கிறார்..இவர்களை புறந்தள்ளுவோம் தினகரனுக்கும் இதே நிலை பொருந்தும் கூடவே வாக்கை விலைபேசும் ஈனச்செயலை கொஞ்சமும் கூச்சமின்றி அதை பெருமையாக கருதுகிறவர் இவர்களுக்கு வாக்களிப்பது விழலுக்கு இறைத்த நீர் ..
..
இன்றைய நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியை தவிர தமிழகத்தில் பலம்பொருந்திய கூட்டணி வேறில்லை பாசிசபாஜகவையும் அடிமைகளையும் வீழ்த்த பணம் அதிகாரம் மிரட்டல் சோதனை கைதென அச்சுறுத்துகிறவர்களை வீழ்த்த காங்கிரஸ் திமுக அணி ஒன்றுதான் சரி பலம் பொருந்தியவனை பின் துணைத்து சர்வாதிகாரத்தை வேரறுக்கவேண்டும் ..
பலமான அணி என்பது ஒன்றுமட்டும் வாக்களிக்க தகுதியாகிவிடுமா .. ஓட்டுக்கள் சிதறாமல் அதன் மூலம் பாஜக அதிமுகவை தோற்கடிக்க வேண்டுமென்ற நியாயம் புரிகிறது அதுமட்டும் தகுதியாகி விடுமா .. என கேள்வி எழும் ..
காங்கிரஸின் தேர்தல் அறிக்கையும் திமுகவின் வாக்குறுதியும் தொலைநோக்கோடு இந்த மண்ணின் நலன்சார்ந்து மக்களின் உணர்வுகளை மதித்து கல்வி வேலைவாய்ப்பில் நமக்கான உரிமைகளை தர உறுதியளிக்கிறது .. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவருவதென முடிவெடுக்கிறது .. எட்டுவழிச்சாலை ஒரு கட்சி எதிர்ப்பதும் அந்த கட்சியை வைத்துக்கொண்டே மத்திய அமைச்சர் கொண்டுவந்தே தீருவோமென பேசுகிற இரட்டை வேடம் திமுக காங்கிரஸிடம் இல்லை ..நீட் தேர்வை எதிர்ப்பதாக சொல்லிவிட்டு ஆர்எஸ்எஸ்காரனை கல்வி அமைச்சராக்கி யாருக்கும் தெரியாமல் கையெழுத்திட்ட அயோக்கியத்தனம் திமுக காங்கிரஸிடம் இல்லை
வாயை திறந்தால் பொய்யில்லை ..
எதை செய்யமுடியுமென ஆய்ந்து அது மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுமா என அறிந்து செயல்படுகிறார்கள் .. போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டு உலகம்சுற்றி திரியாமல் மக்களோடு கலந்து பயணிக்கிறவர்கள் .. மக்கள் நேசிக்கிற வெற்றி தோல்வி இரண்டிலும் மக்களை நேசிக்கிற தொண்டாற்றுகிற நேர்மை அரசியலை முன்னெடுக்கிறார்கள் .. ஏமாற்று இல்லை பித்தாலாட்டம் இல்லை எதையும் விலைக்கு வாங்கலாமென்ற திமிரில்லை .. மக்களின் ஆதரவோடு வாக்கு கேட்கிறார்கள் ..
நாட்டுமக்கள் நிம்மதியாக வாழ .. ஒன்றுபட்டு பன்முகதன்மையும் .. ஒவ்வொருவரின் தனித்தன்மையும் மாறாமல் .. எதை உண்ணவேண்டும் எதை உடுத்தவேண்டும் எதை பின்பற்றவேண்டுமென்று அவரவர் தீர்மானிக்கும் சுதந்திரத்தை தரும் அரசை அமைப்போம் ..
பாசிசத்தை வீழ்த்துவோம் .. உதிரிகளுக்கு வாக்களித்து பாசிசத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பது உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நீங்க வைக்கிற கொள்ளி ..
ஆம் .. விழலுக்கு இறைத்த நீரைப்போல வீணாகாமல்..
திமுக காங்,கம்யூனிஸ்ட் மா.கம்யூ.இ.யூ.முஸ்லிம்லீக் விடுதலைச்சிறுத்தைகளுக்கு
கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை .. நாற்பதும் நமதே நாடும் நமதே..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment