Sunday, April 7, 2019
ஆபத்தானவர்கள்
எத்தனை பாலியல் கொடுமைகள் நடந்தாலும் மறந்துவிட்டு பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள்
விஜயகாந்த் மனைவி பிரேமலதா ..
..
கேப்டன் விஜயகாந்த், தனது ஆட்சியில் ஏழை மக்களுக்கு நிறைய திட்டங்களைச் செயல்படுத்தினாரு. தம்பிதுரை நான்கு மாவட்டங்களுக்குச் சபாநாயகரா இருந்து, மக்களுக்கு நல்லது பண்ணினாரு. மோடிக்கு ஓட்டுப் போட்டு முதலமைச்சர் ஆக்குங்க.. கஞ்சா கருப்பு
..
பிரேமலதாவின் பேச்சு அறியாமையில் வந்ததல்ல திமிரில் வந்தது தன் மகன் திமுக தலைவரை ஏகவசனத்தில் பேசுவதும் அதை அமோதிப்பதைப்போல பிரேமலதாவின் பேச்சும் இருக்கிறது .. கொஞ்சம் கூட இரக்கம் இல்லாதவர்கள் கூட வறண்ட மனநிலை கொண்டவர்கள் கூட பேச துணியாத பேச்சு சொந்த கட்சியை நல்ல வியாபார நோக்கில் பேரம் பேசி பெரும்தொகைக்கு அடகுவைத்த கேடுகெட்ட செயலை செய்தவர் விஜயகாந்தின் மீதான மக்களின் பரிவை கூட விலைபேச துணியும் பெண்மணி .. பணம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டு செயல்பட்டு விஜயகாந்தின் செல்வாக்கை சீரழித்தவர் .. விஜயகாந்தால் இனி செயல்பட இயலாதென்றெண்ணி .. இருக்கிற வரை சுருட்டிக்கொள்வோம் என்று அவர் மீதான மக்களின் ஆதரவை வைத்து இருக்கிற குறிப்பிட்ட விழுக்காடும் வரும்காலங்களில் இல்லாமல் போய்விடும் என்றறிந்து இப்போதே நாலு காசு சேர்த்து கொள்ளலாம் வருகிற வரை லாபகணக்கு எழுதுகிறவரிடம் .. வேறெதை எதிர்பார்க்க முடியும் ..
ஒரு பெண்ணாய் கடுமையாக எதிர்த்திருக்கவேண்டியதை மிக சாதாரணமாக பாலியல் வன்முறைதானே என கடக்க முடிகிறதென்றால் பணம் எவ்வளவு பாடுபடுத்தியிருக்கிறது என்பது தெரிகிறது இவர்கள் அரசியலில் இருந்தே அப்புறபடுத்த படவேண்டிய அழுக்குகள் / குப்பைகள் இவர்கள் ..
..
கஞ்சா கருப்பு அரசியல் அறியாமையில் ஏதேதோ பேசுகிறார் வியப்பொன்றும் இல்லை அமைச்சராக இருப்பவர்களே நாட்டிய பேரொளி சுதா என்று மேடையில் உளறியவர்கள்தாம் .. முன்னால் அமர்ந்திருப்பவர்களால் பின்னால் எழுந்து போய்விட்டார்கள் அதனால் நாற்காலிகள் காலியாக இருக்கிறதென்ற யாருக்கும் தோன்றாத தத்துவத்தை உதிர்த்தவர்கள் .. கம்பராமாயணத்தை எழுதிய சேக்கிழார் என்ற அறிய உண்மையை தந்தவர்கள்..
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல அன்றே மறப்பது நன்றன்று திருக்குறளை .. தெளிவாக ..? கற்றவர்கள்
தினம் தினம் ஏதாவது உளறி நாங்களெல்லாம் கொள்கை உறுதிபாட்டிலோ அல்லது அரசியல் தெளிவிலோ வந்தவர்கள் இல்லை .. ஏதோ சினிமா கவர்ச்சியில் கட்சியை தொடங்கிய எம்ஜிஆரின் ரசிக கூட்டம் விசிலடிக்க தெரியுமே தவிர விவரங்களை கேட்டால்
கட்சியை நிறுவியருக்கே கொள்கை கோட்பாடு தெரியாது என்பார்கள் உண்மையும் கூட அறியாமைதான் அவர்களின் பலம் ..இரக்கம் கவர்ச்சி பணம் இதுதான் அவர்கள் மூதலீடு பொதுசேவை நாட்டுநலன் மொழி கலாச்சாரம்.. நமது உரிமை நமது எதிரி யார் நமது சித்தாந்த எது நம்மை அடிமையாக்க நினைக்கும் பாசிசத்தைப் பற்றிய அறிவு எதை எதிர்க்க வேண்டும் என்ற தெளிவெல்லாம் இல்லாது அரசியலில் இருப்பவர்கள் இவர்களால் யாருக்கும் பலனில்லை என்பதோடு இவர்கள் அறியாமலேயே நாட்டிற்கு கேடு செய்கிறார்கள் ..
..
மதமும் சாதியும் பதவி பணத்தாசையும்
தலைக்கேறினால் எதை செய்கிறோம் என்றெல்லாம் கவலைபடமாட்டார்கள் .. அறிவோ தெளிவோ அவர்களிடம் வராது நாட்டிற்கு நம்மை அறியாமலேயே தீங்கு செய்கிறோமென்றெல்லாம் புரியாது செயல்படுவார்கள் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் ஜனநாயகத்தின் பலம் எதுவென்று அறியாமல் அதன் குரல்வளையை நசுக்கிவிடுவார்கள் ..ஜனநாயம் தந்திருக்கிற பொறுப்பை கடமையை உணர்ந்திராதவர்கள் இவர்களால் நாடு சீரழிவைதான் சந்திக்கும் இவர்கள் புறந்தள்ளி எழ முடியாதவாறு அரசியலில் துடைந்தெறிந்தால் தான் நாட்டிற்கும் நல்லது நமக்கும் நல்லது
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment