Tuesday, April 2, 2019

காங் தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கையில் பொய் வாக்குறுதி இடம்பெறக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்..காங்கிரஸ் தலைவர் ராகுல் .. கை தட்டுகிறேன் ராகுல் இப்போதுதான் நம்பிக்கை வருகிறது ஒன்று முதல் 12 வது வரை இலவச கல்வி.. மொத்த வருவாயில் 6% விழுக்காடு கல்விக்கு .. மாநிலங்கள் விரும்பவில்லையெனில் நீட் ரத்து .. மாநிலங்களே தேர்வை நடத்திக்கொள்ளலாம் கல்வியின் புரிதல் அறிந்து கல்வி மட்டுமே நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுச் செல்லும் என்பதை உணர்ந்து செயல்படுகிறீர் தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்பது நீண்டநாள் எங்கள் போராட்ட கனவு .. அதை ஏற்றுக்கொண்டு அறிவித்திருக்கிறீர்.. தேசவிரோத சட்டபிரிவு 124/A ரத்து செய்வதாக அறிவித்திருப்பது உண்மையிலேயே நல்ல விடயம் ஆங்கிலேய ஆட்சியில் அரசுக்கெதிராக பேச கூடாதென்பதற்காக கொண்டுவரபட்டது தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி உட்பட இதை ரத்து செய்யவில்லை இப்போதுதான் விடிவு பிறக்கிறது உண்மையான புதிய இந்தியாவை நோக்கி சொல்லாமல் நகர்த்தும் செயலை செய்கிறார் ராகுல் .. ஆம்.. இந்த 124/A பிரிவு காழ்ப்புணர்ச்சியில் பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்பட்டதென்பதும் முற்போக்கு சிந்தனையாளர்களை சிறுபான்மையினரை மிரட்டவே இது பயன்பட்டது .. .. முதல்தலைமுறை மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் .. #ஐம்பதாண்டுகளுக்கு முன்பே எங்கள் #பேரருளாளன்_கலைஞர் கொண்டுவந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கபடும் என அறிவிப்பு செய்தார் நாங்கள் ஏன் கலைஞரை கொண்டாடுகிறோம் என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை நவீன இந்தியாவின் சிற்பிகளுள் ஒருவர் .. மானிடத்தை நேசித்த ஒடுக்கபட்ட விளிம்புநிலை மக்களையும் கரைசேர்க்க வேண்டுமென்பதற்காக தொலைநோக்கோடு கொண்டுவந்தார் பேராசான் பெரியாரின் பெருஞ்சீடர் #கலைஞர் .. .. புதிய சிந்தனையோடு தொலைநோக்கோடு இன்னும் சற்று விரிவாக சொன்னால் பெரியாரியத்தை உள்வாங்கியதாய் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை Election manifesto இருப்பதில் மகிழ்ச்சி .. தளபதி அவர்கள் காங்கிரஸ்/ திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தென்ற சொன்னபோது சிரித்தவர்கள் இன்று கலக்கத்தில் இருக்கிறார்கள் .. மாதம் ₹6000 வீதம் 12 மாதம் ₹72,000 என்ற அறிவிப்பு பொருளாதார வல்லுநர்கள் முடியும் வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்களை உயர்த்தும் என்கிறார்கள் .. விவசாய கடன் தள்ளுபடி என .. சொல்லிக்கொண்டே போகலாம் இதெல்லாம் எங்கள் பேரருளாளின் ஆட்சியில் திட்டமாகவும் சட்டமாகவும் தமிழகம் கண்டதுதான் இப்போது இந்தியாவிற்கு வழிகாட்டும் அரசியல் பாடமாக கலைஞரின் திட்டங்கள் இருப்பதை எண்ணி வியப்பளிக்கிறது .. திமுகவின் அரசியல் தான் திராவிடத்தின் சித்தாந்தம் தான் .. பெரியாரின் அரசியல்பார்வைதான் இந்தியாவிற்கு பயன்தரதக்கதாக இருக்குமென்று தேசம் உணர தொடங்கியதின் வெளிபாடுதான் இன்றைக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உணர்த்துகிறது .. விடுதலை இந்தியாவில் முதல் முதலில் தேர்தல் அறிக்கையை Election manifesto அறிமுகம் செய்ததே திமுக தான் என்பதிலும் பெருமை கொள்வோம். காங்கிரஸ் தந்த தேர்தல் அறிக்கை வரலாறு பேசும் .. .. ராகுலின் தெளிவான பார்வை எதையும் உள்வாங்கி அனைத்து தரப்பு மக்களின் நலன் சமநோக்கு சமூகநீதி ஒவ்வொரு மாநிலத்தின் நலன் மற்றும் உரிமை, பன்முக தன்மை மாறாமல் இந்தியாவை உண்மையிலேயே புதியதொரு பாதைக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் .. பொய்யில்லை வாய்வித்தையில்லை வார்த்தை ஜாலமில்லை தேசபக்தி என்று பொய் வேசமில்லை (பெரியார் சொன்னது நியாபகம் வருகிறது அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி).. நேர்மையாய் எது முடியுமென எது சரியென்று ஆய்ந்து தந்திருக்கிறார்கள் இந்த நாடு பாசிச கும்பல்களால் ஏற்பட்ட ரணத்தை ஆற்றி .. புதியதொரு விடியலுக்காக திமுக காங்கிரஸ் கூட்டணியை வெற்றிபெற செய்வோம் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment