Thursday, April 11, 2019
துமுக ஆட்சி.. விரைவில்
ஜூன் 3 .. தமிழகத்தில் ஆட்சி மாற்றம்
திமுக தலைவர் ..
போகிற போக்கில் சொன்னதில்லை.. களம் தெளிவாக அறிந்து மக்கள் மனநிலை புரிந்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையும் நேர்வழி ஒன்றே நிலைத்து நிற்குமென அறத்தோடு அரசியல் செய்கிறவர் திரு.ஸ்டாலின் ..இவர் நினைத்திருந்தால் அதிமுக அடிமைகளை பெரும் விலைகொடுத்து வாங்கியிருக்கலாம் பதவி ஆசைகாட்டி பேரம் நடத்தியிருக்கலாம் ஆனால் அது நீண்டநாள்கள் நீடிக்காது .. இன்னொருவன் அதிகம் பேரம் பேசினால் ஓடிவிடுவார்கள் அது அரசியல் அறமற்ற செயல் எதுவும் மக்கள் தந்ததாக இருத்தல் வேண்டும் என்ற உயர்நோக்கு அரசியல் செய்பவர் தளபதி .. அவர் சொன்னால் சரியாகதான் இருக்கும் மக்கள் விரும்புவதும் அதுதான் ..
..
இடைத்தேர்தலை எப்படியும் தடுத்த நிறுத்த எண்ணி ஆளும் மத்திய அரசை கெஞ்சி ஏறக்குறைய இரண்டாண்டுகள் நகர்த்திவிட்டார்கள் இனியும் தேர்தலை தள்ளிவைத்தால் அது தேர்தல் ஆணையத்தின் மீதான கடும் விமர்சனத்திற்கு வெளிப்படையாக ஆளாக நேரிடும் தேர்தல் ஆணையத்தை இயக்குவது பாஜக என்ற குற்றசாட்டின் குரல் எல்லா திசைகளிலிருந்தும் தொடங்கியதும் வேறுவழியின்றி ஆணையம் தேர்தலை அறிவித்திருக்கிறது .. தளபதி விரும்பியது போலவே மக்கள் இந்த ஆட்சியை அகற்றி திமுகவை அறுதிபெரும்பான்மைக்கு கொண்டுவருவார்கள் வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கையின் வெளிபாடே ..
ஜூன் 3 ஆட்சி மாற்றம் என திரு. ஸ்டாலின்
..
முதல் கட்ட வாக்குபதிவில் 70%முதல் 80% வரை பதிவாகியிருக்கிறது .. பொது தேர்தலில் 60% தாண்டினாலே ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் .. ஆளும் அரசை வெறுக்கிறார்கள் வீட்டுக்கனுப்ப தயாராகிவிட்டார்கள் என்றே பொருள் .. நல்ல தொடக்கம் இன் வரும் வாக்குபதிவிலும் இது தொடரும் மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை மோடி அரசை வீழ்த்துவதே நமது நோக்கம் ..
இன்று ராகுல் தலையை மீது ரேசர் குறிவைத்தது பதட்டத்தை தருகிறது பாசிசம் எதை வேண்டுமானும் நடத்தும் ..ராகுல் நாட்டுக்கு தேவை கவனத்தோடு களமாடவேண்டும் மக்கள் தன்னெழுச்சியை கணிடு என்னதான் ஊடகங்கள் துணையோடு பொய்பிரச்சாரத்தை செய்தாலும் மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள் என்பதால் மத கலவரத்தையோ ஜாதிய மோதலையோ செய்ய துணியும் பாசிசம். அதிகாரத்திற்கு வருவதற்காக 2000 உயிர்களை கொன்று பலியாக்கிய பாவிகள்
எதையும் செய்ய துணிவார்கள் எச்சரிக்கை
..
இன்று விகடன் கனிமொழியை கலைஞரோடு ஒப்பிட்டு கார்ட்டூன் (கருத்துபடம்) வெளியிட்டிருக்கிறது .. கலைஞரின் பன்முக தன்மைகளில் சிலவற்றை தனதாக்கி கொண்டவர் கவிதை இலக்கியம் பேச்சாற்றல் அரசியல் நாடாளுமன்றத்தில் செயல்பாடு கழகத்தவரோடு அணுகுமுறை என கலைஞரை கண்டு படித்தவர்
நல்ல நிர்வாகியும் கூட .. பன்முக ஆளுமை என்பதை மறுக்க முடியாது ஆனாலும் கலைஞரின் ஆளுமையோடு ஒப்பிடவே முடியாது .. கனிமொழி என்றில்லை வேறு எவரையுமே ஒப்பிட முடியாத பேராளுமை கலைஞர்
கலைஞர் பன்முக ஆளுமை ...ஆனால் ஒவ்வொரு ஆளுமையிலும் பேராளுமை அவர் .. கலைஞரின் பன்முகதன்மையில் சில கனிமொழியிடம் உண்டு
சிறந்த ஆளுமையை நிரூபித்துமிருக்கிறார்
மறுப்பதற்கில்லை அவரே கலைஞரோடான ஒப்புமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்
ஆம்
ஒரு சூரியன் தான் ஒரு கலைஞர் தான்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment