Friday, April 19, 2019
திருமா..
கலவரம் செய்ய ஒரு ரௌடி போதும் கூட்டத்தில் ஒருவன் கல்லெறிந்துவிட்டாலே அங்கே கலவரம் ஏற்படும் .. இதை செய்ய எதற்கொரு தலைவன் ..
வன்முறையையும் கலவரத்தையும் தடுப்பவன்தான் தலைவன் ..
தொல்.திருமாவளவன்
..
திருமா மிகச்சிறந்த தலைவராக நடந்துக்கொண்டிருக்கிறார் கலவரத்தை நடத்தியவர்கள் யார் தூண்டியவர்கள் யார் என்று தெரிந்தும் திருப்பி அடிக்க நொடி போதும் உழைத்து உழைத்து வலுவேறிய கரங்கள் உண்டு ஒற்றை சொல் போதும் இருக்குமிடம் தேடி போய் அடிக்கமுடியும் ஆனாலும் கலவரத்தால் அடித்து நொறுக்குவதால் என்ன பயன் .. தன் சமூக மக்களை கல்விக்கொண்டு மேம்படுத்த வேண்டும் சமுகமக்களின் ஏழ்மையை போக்கவேண்டும்
கல்வி வேலைவாய்ப்பில் உயர்த்தை எட்ட தொடர் முயற்சியும் அதற்கான பயிற்சியும் தரவேண்டும்,
விளிம்புநிலையில் நிற்போரை உயர்ந்த சமூக அக்கறையோடு உழைக்க வேண்டுமென எண்ணுகிற தலைவர் திருமா ..
..
சாதிவெறிபிடித்தவர்கள் உங்கள் குழந்தைகளின் கையில் அரிவாளையும் கத்தியையும் தருகிறீர்கள் அவனை ஒரு அடியாளைப்போல உருவாக்குகிறீர்கள் வன்முறை அடிதடி கலவரம் என சிறுவர்களிடத்தில் விஷத்தை விதைக்கிறீர் .. நாளை
கள்ளசாராயம் காய்ச்சுபவனாகவோ.. யாருக்காவது அடியாளாகவோ கூலியாகவோ தான் அவன் வருவான் .. அவனது வாழ்கையை சிறுவயதிலேயே சிதைக்கிறீர்கள் இதை நிலை தொடர்ந்தால் நாளை அவனை சிறைசாலைகளில்தான் காணநேரிடும் ..
உம்மில் சாதிவெறியை தூண்டிவிடுகிறவன்
வீட்டுபிள்ளைகள் உயர்ந்த மாளிகையில் உல்லாசமாய் வாழ்கிறார்கள் .. உயர்கல்வி உயர்பதவி என வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்
உன்னை கலவரம் செய்ய தூண்டிவிட்டு அவன் உல்லாசமாய் வாழ்கிறான் .. நீயோ வழக்கு கைது சிறையென சட்டபோராட்டத்திலேயே காலத்தை கழிக்கவேண்டிவரும் .. வன்முறை எதற்கும் தீர்வாகாது உன்னை திருப்பி அடிக்க தெரியாமல் இல்லை .. அவன் வலி பல கண்டவன் .. அடிக்க அடிக்க கல்வியில் உயர்ந்து உன்னை அதிகாரம் செலுத்தும் பதவியில் அமர வேண்டுமென்ற வேட்கையோடு .. நீ கையெடுத்து கும்பிட வேண்டுமென்று குறிக்கோளோடு வாழ்கிறான் ..
சாதிவெறிபிடித்த மடையனே .. உன் வழிநடத்துகிறவன் உன் சந்ததியின் எதிர்காலத்தையே சீரழிக்கிறான் .. அவன் சுகபோகவாழ்விற்காக உன்னை வழிகெடுக்கிறான்
..
தொல் திருமா
ஒரு சமூதாயத்திற்கு நல்ல தலைவன் கிடைத்துவிட்டால் போதும் அந்த சமூகமக்கள் கல்வியில் அறிவில் மிளிரலாம் வாழ்வில் நிறைய உயரங்களை அடையலாம் .. மக்களை வன்முறை கலவரமென என மடைமாற்றாமல் .. அவனை அமைதிபடுத்தி கல்வியில் சிறந்துவிளங்க செய்வதும் அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி தருவதும் அவனது உரிமைக்காக தொடர்ந்து போராடி பெற்று தருவதும், சமூக முன்னேற்றம் என்ற ஒற்றை குறிக்கோளோடு செயல்படுகிற தலைவர் .. நாட்டின் அமைதி பிற சமூகமக்களிடம் நல்ல மதிப்பும் ,சமூக நீதிக்காக போராளியாக
உயர்ந்து நிற்கிறார் .. இரட்டை பேச்சில்லை.. மாறி மாறி பொய் சொல்வதில்லை தன் சுயநலத்திற்காக சமூதாயத்தை அடகுவைக்கவில்லை பிற சமூகமக்களின் மீது வெறுப்பில்லை என சிறந்த தலைவனுக்குரிய இலக்கணத்தோடு இருக்கிறார்
ஒடுக்கபட்ட மக்களின் உயர்விற்கு பாடுபடுவதென்பது
இந்திய சமூகத்தில் என்னவெல்லாம் இன்னலை தருமென்று அறிந்து மிக நேர்த்தியாக தன் சமூகமக்களை வழிநடத்துகிற தலைவராய்,பக்குவமடைத்தவராய் நிதானமாக செயல்படுகிறவராய்..
மிக சிறந்த தலைவராக தெரிகிறார் திருமா ..
..
எந்தவொரு சமூகமும் நல்ல தலைவனை தலைமுறைகள் தாண்டியும் கொண்டாடும் ..
வழிகெடுத்தால் வாழும்போதே தூற்றும் ..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment