Saturday, April 13, 2019
சாந்து கலையத் தொடங்கியிருக்கிறது
நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் .. பொதுவாழ்விற்கு வந்தவர்கள் நடித்துக்கொண்டிருப்பதும் நாம் அறிந்தது தான் .. ஆனால் அரசியலுக்கு வந்து கோபம் வருவதுபோல் நடித்துகாட்டி கைத்தட்டல் வாங்கலாமென்ற நினைத்தது பல்லிளித்தது ..திரையில் நடிப்பை மட்டுமே ரசிப்பவர்கள் இன்று முகம் சுளித்ததார்கள் ..
நீட் தேர்வு பற்றியெல்லாம் இப்போது பேசிகிறார் முன்பு இவர் நீட் பற்றியெல்லாம் பேச திருமா போன்றவர்கள் இருக்கிறார்கள் நான் டெங்குவை பற்றிதான் பேசுவேன் என்றார் .. அனிதாவின் பெற்றோர்கள் சொல்லட்டும் என்று கேட்க .. குடும்பமே திமுக கூட்டணிக்கென்று நடித்துக்கொண்டிருப்பவரின் முகம் கிழித்துவிட்டார்கள் .. இறுதியாய் நானும் உங்கள் ரசிகன்தான் அது கலையோடு சம்பந்தபட்டதென சொல்லி "கமல்ரசிகர்களின்" நிலைபாடு இதுதான் என ஒருசோற்று பதமாய் விளக்கியிருக்கிறார் .. அனிதாவின் சகோதரர்
உண்மையில் இப்போதுதான் எம் மக்களிடையே தெளிவு பிறந்திருக்கிறது .. எழுபதுகளில் சினிமா மோகம் கொண்டு திரிந்த கூட்டமாய் கவர்ச்சியை அழகை நம்பி ..இவர்கள் பொய் பேசமாட்டார்களென பின்துணைத்தவர்கள் இப்போதெல்லாம் தெளிவாய் பேசுகிறார்கள் .. நீ நடிக்கிறார் எம்மை மகிழ்விக்கும் கலைஞன் அதற்கு கைத்தட்டலும் காசும் தருகிறோம்
அதோடு முடிந்தது நமது உறவு என்ற தெள்ளதெளிவாய் சொல்கிறார்கள்
திடீரென்று ஒருநாள் வந்து பாசம் பொங்க பேசுவதும் இன்றிலிருந்து தேசபற்று வந்துவிட்டதாக நடிப்பதும் "வாரிசு அரசியல் " என பழைய கூப்பாட்டை சொல்லி திரிவதும் இதையெல்லாம் மக்கள் ஏற்க தயாரில்லை ..
..
நேர்மை .. சினிமாநடிகரின் நேர்மை என்பது சம்பளத்தில் கருப்பு எவ்வளவு வெள்ளை எவ்வளவென்பதில் இருக்கிறது ஏறக்குறைய முன்னணி நடிகர்கள் கருப்பு வெள்ளையில் காலம் கடத்துகிறார்களென்பது எல்லோருக்கும் தெரியும் வருமானவரி ஏய்ப்பென்பது சின்மாவில் வெளிப்படையானது இதெல்லாம் எல்லோரும் அறிந்ததுதான் .. ஆனால் நாட்டுபற்றையும் நேர்மையையும் பற்றி பேசுவது தான் கொடுமை
அரசியலில் அரிச்சுவடியை கூட கற்காமல் .. மக்களுக்கு எது தேவை எப்படியெல்லாம் அரசால் ஆள்வோரால் பாதிக்கபடுகிறார்கள் .. என்ற பொது அறிவு கூட இல்லை இதுவரை மக்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டிருக்கிறாரா ஆளும் மத்திய அரசை இதுவரை எதிர்த்து பேசியிருக்கிறாரா .. நடப்பது மத்திய அரசிற்கான தேர்தல் தானே .. பணமதிப்பிழப்பை சரியென்று சொன்னவர்தானே .. பிறகு எதிர்ப்பு வந்தவுடன் மாற்றிக்கொண்டவர் ஆனால் அதுபற்றி வாய்திறந்து பேசியிருக்கிறாரா.. நீட் தேர்வு பற்றிய அறிவென்பது கல்வியோடு மட்டுமே சம்பந்தபட்டதில்ல அது சமூகநீதியோடும் தொடர்புடையதென்ற அறிவுண்டா .. பாமரனின் குழந்தைகளும் உயர்கல்விக்கு செல்லும்பாதையை அடைக்க கொண்டு வரபட்டது தானே நீட் அதுபற்றி விவாதிக்க முடியுமா .. யாருக்காக களமிறக்கபட்டிருக்கிறார் கடைசிபடம் வெளியிட்டு பெரும் பொருளிழப்பை சந்தித்தவர் திடீரென ஒருநாள் அரசியல் பேச தொடங்கியதின் பின்னால் கொண்டைகளின் தந்திரம் இருப்பது ஊரறிந்த ரகசியம் .. அதை மறைக்க முயன்று முயன்று ஒவ்வொருமுறையும் மூக்கறுப்பு படுவதே வேலையை போனது ..
..
இப்போதெல்லாம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் எதைப்பற்றி யாரைப்பற்றி சொன்னாலும் அது உண்மையா என்று தேடுகிறார்கள் வலைதள செயல்பாடு அதிகரித்திருப்பதின் பயன் இதுதான். யார் சொன்னாலும் அது சரியானதா என சில நிமிடங்களுக்குள் கிழித்து தொங்கவிட்டுவிடுகிறார்கள் போட்டோஷாப் செய்தே பிரதமரானவரின் நிலை இப்போதெல்லாம் பரிதாபகரமாக போய்க்கொண்டிருக்கிறது பிரபலமான கட்சியின் பின்புலத்தோடு வருபவர்களையே நொடியில் சுவரை உடைத்து ஒடவிடுகிறார்கள் தமிழர்கள் .. இந்த தெளிவெல்லாம் பெரியாரும் அண்ணாவும் கலைஞரின் பாடுபட்டு வளர்த்ததால் வந்தது இந்த மண்ணில் இனியும் அரிதாரங்களுக்கு வேலை இருக்காது .. சினிமா வாய்ப்பின்றி நடிக்கும் படங்களை வாங்க ஆளின்றி போகும் போது கடைசியில் பணம் புகழுக்காக அரசியலுக்கு வந்து வெற்றி பெயரலாம் என்பதெல்லாம் பழங்கதையாகி போனது ..
வேறு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளட்டும் நடித்தது போதும் திரையோடு போனது புகழென்ற நிலை வராமல் காத்துக்கொள்ளட்டும்
..
சாந்து கலையத் தொடங்கியிருக்கிறது
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment