Wednesday, April 17, 2019
ஜனநாயகம் காப்போம்
தேர்தல் அதிகாரி மாவட்ட கலெக்டர்:
மேடம் என் நேர்மையை சந்தேகக்கிறீங்களா?
கரூர் வேட்பாளர் ஜோதிமணி: இல்ல சார் நீங்க நேர்மையா இல்லன்னு நேரா சொல்றேன்..
..
நேர்மையாளர்கள் அஞ்சுவதில்லை ..அதேபோல
அறம் மீது நம்பிக்கையுள்ளவர்களும் எதற்கும் பணிந்து போவதில்லை ஆணையம் நேர்மையோடு நடந்துக்கொள்ளவில்லையென்பதை மக்களே உணர தொடங்கியிருக்கிறார்கள் .. பணபட்டுவாடா ஜோராக நடப்பது அறிந்தும் அதை வீடியோவாக (ஒளிநாடா) வெளிவந்தும், கண்டுகாணததுபோல இருப்பதை மக்கள் உணர்வர் .. நேற்று கனிமொழி வீட்டில் இரவில் சோதனை என்ற பெயரில் நடந்த கூத்து யார் சொல்லி செய்ததென்று வருமானவரித்துறையால் சொல்லமுடியுமா .. ஏதோ ஒரு அழைப்பில் (call) சொன்னதை நம்பி சோதனை செய்வதாக சொல்பவர்கள் ஊரறிந்து பணபட்டுவாடாவை தடுத்து நிறுத்த முயல்வதில்லையே ஏன் .. இதுவரை எதிர்கட்சியினரை குறிவைத்தே சோதனை செய்யபடுகிறதே ..ஆளும் தரப்பில் அவ்வளவு யோக்கியமானவர்களா .. யாரை திருப்திபடுத்த இந்த செயல் அரசியல் சாசன வரம்பிற்குள் நின்று நேர்மையோடு செயல்பட வேண்டாமா.. கலெக்டர் என்னை மிரட்டுகிறார்கள் என்கிறார் புகார் தந்தால் இரவில் வாங்க முடியாதென்று தேர்தல் அதிகாரி சொல்வது
எந்தவகை நியாயம் .. இரவில் சோதனை நடத்தலாம் புகாரை மட்டும் பகலில் தான் வாங்குவோம் ..
தேர்தலை நிறுத்துவேன் என மாவட்ட ஆட்சியர் பேசுவது வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது
தனக்கு பாதுகாப்பில்லையென உணர்ந்தால் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டுமே தவிர வேட்பாளரை தேர்தலை நிறுத்திவிடுவேன் என மிரட்டகூடாது அப்புறம் இவருக்கு இவர் மிரட்டியவர்களுக்கும் என்ன வேறுபாடு மிரட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டுமே தவிர வேட்பாளரை அன்பாக மிரட்ட கூடாது .. ஆட்சியர் ஜோதிமணியை அறிந்திருக்கவில்லை .. அச்சமின்றி நேர்மையோடு செயல்படும் திராவிடச்சி..
இன்னும் நிறைய தில்லுமுல்லுகளை அதிகாரிகள் துணைக்கொண்டு செய்வார்கள் .. பாஜகவை சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அகர்வால் நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லமுடியாதென்று போட்டுடைத்துவிட்டார் எதையும் செய்ய துணிவார்கள் கவனமாக செயல்படவேண்டிய நேரமிது
..
முதல்கட்ட வாக்குபதிவு நடந்த இடங்களில் பலத்த தேசம் பாஜகவிற்கு வருமென செய்திகள் வருவதாக forntline ஆசிரியர் விஜயசங்கர் சொல்கிறார் ..வடமாநில மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் தென்னகமோ பாஜகவிற்கு மரண அடியை தரும் .. தமிழகத்தில் அதிமுக மீதான வெறுப்பு .. தலையாட்டியைப்போல மத்திய அரசு சொல்லுமிடத்தில் எல்லாம் மறுப்பே இல்லாமல் கையெழுத்திட்டு தமிழர்களின் நலன்களை காவுகொடுக்கிற ஆட்சி தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி .. தமிழகத்திற்கெதிராக தொடர்ந்து செயல்படுகிற
பாஜகவை கேட்காமலேயே பின்துணைக்கிற கேடுகெட்டவர்களை விரட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள் .. பாஜக அதிமுகவிற்கெதிரான வாக்குகளை பிரிக்க .. டார்ச்லைட்டை கையில் கொடுத்து ஓவராக நடிக்க சொல்ல.. முழுநீள திரைக்கதையும் கடைசியில் ப்ளாப் ஆன கதையாகி போனது .. சினிமா எடுத்து போண்டியானவர் .. யாரும் படமெடுக்க தயாரில்லை என்றவுடன் நாக்பூரின் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.. மிகப்பெரிய தோல்வி என்றறியாமல் .. சில உதிரிகட்சிகளும் இந்த தேர்தலோடு துடைத்தெறியபடும் ..
மக்கள் தெளிவோடு நாளை தீர்ப்பெழுத இருக்கிறார்கள் .. இனியொரு அனிதாவை இழக்கமாட்டோம் .. மக்கள் விரோத திட்டங்களை (மீத்தேன் ஹைட்ரோ கார்பன்) செயல்படுத்த அனுமதியோம் விவசாயத்தை காப்போம் என உறுதியேற்போம்.. ஒரே நாளில் சிறுக சிறுக சேர்த்த பணத்தை செல்லாதென்று அறிவித்த அதிமடையர்களை அதிகாரத்திலிருந்து கீழிறக்குவோம் .. மதவெறியை தூண்டி மாட்டிறைச்சி அரசியலை கையிலெடுத்து கொன்று குவிக்கும் காவிகளை எம் மண்ணில் நுழைய அனுமதிக்கமாட்டோம் .. அண்ணன் தம்பிபோல் வாழ்ந்த தமிழ் சமுதாயத்தில் மதவெறியை தூண்டும் கயவர்களை இனங்கண்டு விரட்டுவோம்..
தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாட்டை காப்போம்
அயோக்கியர்களை அடையாளம் கண்டு வீழத்துவோம் .. பாசிச பாஜகவையும் அடிமை அதிமுகவையும் அதிகாரத்திலிருந்து விரட்டிட
திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிப்போம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment