Monday, April 29, 2019

பெண்

அழகு பற்றி பலருக்கும் பலவிதமான கருத்து உண்டு அது அவரவர் பார்வை என்கிறார் தோழர் பானு இக்பால் .. Banu Iqbal.. .. எது அழகு தோற்றமா .. அது காலபோக்கில் மாற்றத்தை தரும் விடயம் அது ஒருவர் பார்வையிலும் அழகியலாக தோற்றமளிப்பது மற்றவர் பார்வையில் சுமாராக அல்லது முகம்சுளிக்க வைக்கலாம் புறதோற்றம் என்பது அவரது வாழ்வியலோடு அல்லது அவர் ஏற்றுக்கொண்ட கோட்பாடோடு சம்பந்தபட்டிருக்கும் .. மதம் போதிக்கிற கட்டுபாடுகளோடு கூட அலங்காரம் உடை என அவர்களின் பார்வையில் அழகாய் தோன்றும் .. மறுத்து சில தன் விருப்பத்திற்கேற்ப ஆடை அணிந்தால் கேலி அருவறுப்பு விதிமீறல் என புலம்பல்கள் கேட்கும் .. தன் குடும்பத்தில் கூட சிலர் விரும்புகிறவற்றை செய்ய அனுமதி மறுக்கபடும்.. ஏனென கேட்டால் கட்டுபாடு மீறினால் கெட்டழிந்து போவோமென வியாக்கியானம் வரும் .. .. எதுவும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தால் அதன் மீது தனிஈர்ப்போ அல்லது அருவறுப்போ வராது தன் குடும்பத்து பெண்கள் வீட்டில் தங்கள் சௌகரியம் போல மெல்லி ஆடையணிந்தால் கூட அது அவர்களின் கண்களில் விரசமாக தெரியாது ஆனால் மற்றவர்கள் அணிந்தால் அது விரசமாகவோ காமபார்வையோடோ தான் தெரியும் ஆக உடையிலோ தோற்றத்திலோ இல்லை அவரவர் பார்வையில் தான் விரசம் அழகு எளிமை எல்லாம் .. .. ஒரு பெண் அழகாக இருந்தால் அவள் சந்திக்கும் இடையூறுகள் தொல்லைகள் அதிகமென்கிறார் .. இருக்கலாம் இந்த சமூக சூழல் பெண்களை அப்படிதான் வைத்திருக்கிறது ஆழமான நட்பை கூட கேலி பேசும் பெண் என்றாலே தன்னைவிட தாழே என்கிற மனபான்மையும் தொடர்ந்து பெண்ணா போக பொருளாக தங்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் ஆடுகிற பொம்மையாக.. எளிதில் வீழ்த்திவிடலாமென்ற நினைப்போடு பெண்ணை பலவீனமானவர்களாகவே எண்ணுகிற போக்கு நம் சமூகத்தின் பொது நியதியாக பார்க்கபடுகிறது .. இலக்கியங்களில் கூட பெண்ணை வர்ணனைக்குரிய பொருளாகவே பார்க்கிறது சங்கத்தமிழ் முதல் சமகால இலக்கியங்களில் அப்படிதான் பார்க்கிறது .. "கண்ணல்லவோ, கனியல்லவோ எழுதாத பண்ணல்லவோ விண்ணல்லவோ அதில் நீ வெண்ணிலவல்லவோ ‍‍என்றென்னை அழைத்திட்ட போது அவன் வடித்திட்ட வார்த்தைகள் அருவி தவழ் சோலை .. அழகு மலர் கூட்டம் ..(சங்கத்தமிழ் -கலைஞர்)" .. கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் !.. .. மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா.. ஒன்று வர்ணித்தோ புகழ்ந்தோ பாடி பெண்களை புகழ்ச்சிக்கு மயங்குகிறவர்களென நம்பவைத்திருக்கிறது .. பெண்கள் மீதான ஆண்களின் பார்வை உயரத்தில் எத்துவதை விரும்பாத மனநிலைதான் அது குடும்பம் வேலைசெய்யும் இடம் அரசியல் அதிகாரம் என எல்லா இடங்களிலும் அவர்கள் செய்யும் அரசியல் வெளிப்படையானது அதை பெண்களும் ஏற்றுக்கொள்வது தான் கொடுமை.. .. பெண்களின் புறத்தோற்றமல்ல அழகு .. அவர்களை சுதந்திரமாய் இயங்கவிட்டு அவர்களை சாதனையாளாக்கி .. அவர்களின் திறமையை பறைச்சாற்ற வாய்ப்பளித்து பாருங்கள் அவர் மிளிர்வார்கள் .. எல்லாதுறையிலும் அவர்களால் பிரகாசிக்கமுடியுமென நம்புங்கள் மென்மையானவர்களென நீங்களே முடிவெடுக்காதீர் .. உம்மிலும் பலமானவர்கள் எதையும் திறம்பட வகிக்கும் ஆற்றலுண்டு .. நிறத்தில் இல்லை அழகு அவர்களின் செயல்களில் திறமையில் அவர்களின் வெற்றியில் நிரம்பிக்கிடக்கிறது அழகு .. இயல்பாகவோ ஈகை குணமும் இரக்கமும் எதையும் சாதிக்க முடியுமென நம்பிக்கையும் குடும்பத்தை மட்டுமல்ல தனக்கு தரப்படும் பொறுப்பை மிக நேர்த்தியாக செய்திடும் ஆற்றலுண்டு ..வாய்ப்பை தந்து பாருங்கள் அவர்களின் அழகு தெரியும் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment