Tuesday, April 16, 2019
வாக்கு விற்பனைக்கல்ல
தேர்தல் பரப்புரை ஓய்ந்தது ..
ஒருநாள் இடைவெளியில் நமது வாக்கை யாருக்கு அளிக்கவேண்டுமென சுயம் ஆலோசித்திருப்பீர்கள்
யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கும் உரிமை உமக்குண்டு ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயகத்தில் அரசன் .. மக்களாட்சியின் தத்துவம் இதுதான் .. கேரளாவில் ஒரே ஒரு வாக்கிற்காக
பலமைல்கள் நடந்து சென்று மலை மேட்டில்
வாக்குசாவடியை அமைக்கும் ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் உரிமையை/ வாக்கை எந்தளவு மதிக்கிறதென்ற உண்மை விளங்கும்,.. யார் நம்மை ஆளவேண்டுமென தீர்மானிக்கும் உரிமையை தவறான பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் கெடுதிகள் தங்களை மட்டுமல்ல தங்களின் சந்ததிகளை மட்டுமல்ல பொது சமுகத்தையும் பாதிக்கும் என்றறிந்து முடிவெடுக்கவேண்டும்..
சாதிமத பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை உருவாக்கவேண்டும் இந்த மண்ணில் எக்காரணம் கொண்டும் மதவெறி தாண்டவமாடுவதையோ.. சாதிபித்து தலைக்கேறி சக மனிதனை அடித்து துன்புறுத்துவதையோ ஏற்கமுடியாது .. குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டுமே கல்வி வேலைவாய்ப்பு உயர்பதவியென அமைவதை ...ஏன் பிற பிரிவினர்களுக்கு மறுக்கபடுகிறதென்பதை அவர்கள் உயர எழ எப்படியெல்லாம் தீய பாசிச சக்திகள் தடையை ஏற்படுத்துகிறதென்பதை இந் நாட்டுமக்கள் உணர்ந்து வாக்களிக்களிக்கவேண்டும்
..
இந்த தேர்தல் இரு வேறு கொள்கைகளின் இடையே நடக்கும் தேர்தல் எளிமையாக சொல்லவேண்டுமெனில்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என்ற அறநெறியோடு கூடிய சமதர்ம கோட்பாட்டிற்கும்
பிறப்பின் அடிப்படையில் பிரிந்து நிற்க சொல்லும் சனாதனத்திற்குமான தேர்தல் .. மக்கள் அனைவரும் சமமான நீதியை தரவேண்டும் தொழில்ரீதியாக பிரித்து அவனை கீழ்மேலென பாகுபாடுசெய்திட எண்ணும் பாசிசத்திற்கு .. அமைதியான முறையில் பதிலடி தரவேண்டும் .. நாட்டின் அமைதியை கெடுத்து அண்ணன் தம்பியாய் வாழ்ந்த பெருமக்களிடையே பகைமூட்டி வெறுப்பதை வளர்த்து சாதியென்றும் மதமென்றும் சிறுபான்மையென்றும் தீவிரவாதியென்றும் சொல்லி நஞ்சை விதைக்கிற நயவஞ்சக கூட்டத்தை நாம் புரிந்துகொண்டு .. இவர்களை இனியும் அனுமதித்தால் நாடுமட்டுமல்ல நம் குடும்பமும் நாளை அடிமைத்தனத்தில் கிடக்கவேண்டி வரும் ..
உங்களிடம் ஒரு நல்வாய்ப்பை தந்திருந்திருக்கிறது ஜனநாயகம் .. அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதில் தான் உங்களின் எதிர்காலமே அடங்கியிருக்கிறது ..
..
வாக்கு விற்பனைக்கல்ல .. சில நூறோ சில ஆயிரமோ உங்கள் வாக்குகளை வாங்க சிலர் வருகிறார்கள் எச்சரிக்கை ஐந்தாண்டுகளில் நீங்கள் அவர்களுக்கு அடிமைசாசனம் எழுதிக்கொடுத்ததைப்போல / அடகுவைத்துவிடாதீர்கள் .. விலைக்கு விற்றுவிட்டபிறகு உங்களின் உரிமைகளை பறித்தாலோ,நசுக்கபட்டாலோ நீங்கள் போராட கேள்விகேட்க தார்மீக உரிமையை இழக்கிறீர்கள்.. சில ரூபாய்களுக்காக தன்மானத்தை இழக்கிறீர்கள்
உங்களின் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விகுறி ஆக்குகிறீர்கள் மிகவும் ஏழ்மையான மக்கள் அதிகம் வசிகிகும் பீகாரில் கூட வாக்கிற்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்குவதில்லை ஆனால் தமிழகத்தில் முன்பெல்லாம் பண்ணையார்களும் நிலகிழார்களும் தங்களின் கூலிகளுக்கு பணம் கொடுப்பார்கள் .. ஆனால் பேரறிஞர் அண்ணாவை தோற்கடிக்க காமராஜர் தொடங்கிவைத்த ஓட்டுக்கு காசு அப்போ ஐந்துரூபாய் .. இன்று பெருகி ₹500 ₹1000 என உயர்ந்திருக்கிறது தமிழன் தலைகுனிந்திருக்கிறான் .. இந்த கேடுகெட்ட நிலைக்கு எல்லா கட்சிகளுக்கும் காரணம் .. ஏன் இன்னும் எங்கள் பக்கம் வரவில்லையென தரவில்லையென மக்கள் கேட்கிற கேடுகெட்ட நிலை ஏற்பட்டிருக்கிறது இது மாறவேண்டும் எந்த சூழலிலும் வாக்கு விற்பனைக்கல்ல என்ற உறுதிபாட்டை கொள்வோம்
யாருக்கு வாக்களிக்க வேண்டு விரும்புகிறோமோ அவருக்கு வாக்களிப்போம் யாரும் நம்மை தடைபோட முடியாது .. நமது வாக்கு நமது உரிமை
..
"the ignorance one voter in a democracy impairs the security of all " // John.F. Kennedy
..
அறியாமையில் செய்கிற தவறு அனைவரையும் பாதிக்கும் என்று உணர்ந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்..
..
நல்லதொரு விடியலை தருவோம்
..,
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment