Friday, April 12, 2019

ராகுல் நாட்டின் எதிர்காலம்

இன்றைய ராகுலின் பேச்சு நம்பிக்கையை விதைக்கிறது .. நல்ல பிரதமரை நாடு பெறுமென்ற நம்பிக்கை வருகிறது இந்திய தேசத்தின் உயிர்நாடி #உழவன் ‍..அந்த உழவன் நடுத்தெருவில் நின்று போராடிய போது கூட பிரதமர் உயர்குடிகளோடு உலாவிக்கொண்டிருந்தார் பெரும்படையாய் தலைநகர் நோக்கி .. கால்கள் ரணமாயும் நடந்தே நீதிகேட்டு வந்த உழவர் குடிமக்களை நக்ஸலைட்களோடு ஒப்பிட்டு பேசிய பாசிசத்தின் குரலாய் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் போராடியபோது .. அவர்களை கொச்சைபடுத்தி தீவரவாதிகளை போல சுட்டு கொன்ற பாசிசத்தின் ஏவலாய் ஆதிக்க திமிரோடும் அடிமைத்தனத்தோடும் செயல்படுகிற மத்திய மாநில அரசுகளை மக்களின் வாக்குகள் மூலம் நீக்கிட வேண்டுமென்ற உயர்நோக்கோடு திமுக தலைமையிலான கூட்டணி அமைக்கபட்டிருக்கிறது .. தமிழக மக்களை நாக்பூரிலிருந்து ஆட்சி செய்வதை அனுமதிக்க முடியாது என்று தெளிவாக பார்பனர்களின் திரைமறைவு ஆட்சியை விரட்டிட வேண்டுமென்கிறார் .. தமிழகத்தின் ஆட்சியை தமிழர்களே தீர்மானிக்க வேண்டுமே தவிர நாக்பூரில்லை .. கல்வி மாநில பட்டியலுக்கு வந்தால் தான் அனிதாக்களின் மரணத்தை தடுத்து நிறுத்த முடியுமென உணர்ந்து செயல்படுத்துவோம் என்கிறார் ராகுல் .. ஆம் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மத்திய பாடத்தில் வரும் கேள்வியை எதிர்கொள்ளவேண்டுமென்பதே தமிழகத்தை உயர்கல்வியில் பின்னுக்கு தள்ளவேண்டுமென்பதற்காகதானெ தவிர வேறில்லை .. உயர்கல்விகளில் தமிழர்கள் பிற மாநிலத்தவரை விட பெருமளவில் தங்கள் திறமையை நிலைநாட்டுவதை பொறுக்காததால் மருத்துவம் பொறியீயல் போன்ற படிப்புகளுக்கு நீட் தேர்வை வைக்க முயற்சிக்கிறார்கள்...,இனி மாநிலமே தீர்மானித்துக்கொள்ளலாமென்ற ராகுலின் அறிவிப்பு தமிழகத்தின் சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி .. கலைஞர் அதனால் தான் நுழைவு தேர்வையே வேண்டாமென்று வைத்தார் .. பெரியார் சொல்வார் அவன் கத்துக்கதானே படிக்கிறான் அவனுக்கு எதுக்கு நுழைவு தேர்வு .. படிக்கதானே வரான் .. பொது மதிப்பெண் அடிப்படையில் தானே இடம் ஒதுக்கவேண்டும் அதுதானே சரியான நடைமுறை .. .. நாட்டுமக்களை நேசிக்க தலைவராக ராகுல் வளர்கிறார் ..பிரதமர் மோடி ஏழைகளுக்கான பிரதமரல்ல அவர் கார்ப்பரேட்களுக்கானவர் .. பார்பனர்களுக்கானவர் பணமுதலைகளுக்கானவர் நாட்டை சுரண்டுகிற கூட்டத்திற்கானவர் ஊழல் செய்கிறவர்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கிறவர்களுக்கானவர் பிரதமர் மோடி பொய்களால் கட்டமைக்கபட்டவர் நாக்பூரின் ஏவலாளி ஆடம்பரமாக மக்கள் வரிப்பணத்தில் ஆடையலங்காரமும் சிகையலங்காரம் செய்துக்கொள்ளும் நிஜவாழிவின் நடிகர் ..ஏழைத்தாயின் மகனென்று கண்ணீர்விட்டு அழுது நடித்து.. ஒன்னரை லட்சத்திற்கு Mont blanc பேனாவை பயன்படுத்துவார் நாடாளுமன்றத்தையே எதிரிகொள்ள பயந்த ஊடகத்தையே முழுவதுமாக சந்திக்க பயந்த ஒரு பிரதமர் உலகிலேயே திரு.மோடி மட்டும் தான் .. குஜராத் படுகொலைகள் சிறுபான்மையினர் மீதான கொடூர தாக்குதலை அரசுதர்மங்களையெல்லாம் நடத்தியதொன்றே உயர்விக்கு வழிவகை செய்தது .. நாடு கண்ட மிகவும் மோசமான முட்டாள்தனமான தான்தோன்றித்தனமான பிரதமர் .. ஒரேநாளில் பணத்தை மதிப்பிழக்க செய்து மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு புதிய இந்தியா பிறந்ததென்று உளறிகொட்டிய அறிவிலித்தனம் வேறெந்த பிரதமரும் செய்யாதது .. .. மோடிக்கு வாக்களிக்காதீர்களென .. அறிவுடை சமூகம் (முற்போக்காளர்கள்,படைப்பாளிகள்,நீதிபதிகள்,சடடவல்லுநர்கள், பொருளாதாரநிபுணர்கள்) அறிக்கை அளித்ததும் பதறிப்போய் இன்று பார்பனர்கள் (பல்துறைசார்ந்தவர்கள் 600 பேர்) மோடிக்கு வாக்களிக்க வேண்டுமென அறிக்கை தந்திருக்கிறார்கள் இதிலிருந்தே இந்த அரசு நாட்டுமக்களுக்கானதில்லை பார்பனர்கள் நலனுக்கானதென புரிந்திருந்திருக்கும் .. இந்த பாசிச பாஜக ஆட்சியை அதிகாரத்திலிருந்து அகற்றவேண்டும் ..இன்றைய சூழலில் ராகுல்காந்தி மட்டுமே மிக சிறந்த பிரதமாக கூடிய தகுதியுடையவராக இருக்கிறார் .. திமுக காங் கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வருவோம் #RahulGandhi 💛❤💙 .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment