Wednesday, October 17, 2018

தலித்= கம்யூனிஸம்..

தலித் என்றோ ஹரிஜன் என்றோ அழைக்ககூடாது பிரணாய் விஜயன் .. தலித் என்ற சொல்லின் பொருள் ஏழை ..ஹரிஜன் என்றுதான் அழைக்கவேண்டுமென காஞ்சிமட ஜெயேந்திர சுவாமிகள் (காஞ்சிமடம் என்பதே தவறு அது கும்பகோணம் மடம் ..இடம்பெயர்ந்து காஞ்சி சங்கரசுவாமிகள் ஆனார்).. ஹரிஜன் என்றாலி கடவுளின் குழந்தை என்றார்.. தலித் எனும் சொல் சாதியை குறிப்பதல்ல ஒடுக்கபட்டவர்களை அடையாளபடுத்த வழங்கிநின்ற சொல் .. ஹரிஜன் என்பது ஏமாற்றுவேலை.. தோழர்.பிரணாய் எண்ணம் சரியானதாக கூட இருக்கலாம் பட்டியலினத்தவர்கள் என்றழைப்பது பொறுத்தமென்று நினைத்திருக்கலாம் .. ஆனால் பொதுவுடமைவாதிகளிடையே கூட இன்னும் பட்டியலினத்தவர்கள் அங்கீகரிக்கபடாதவர்களாக இருக்கிறார்கள்.. .. இடது கம்யூனிஸ்ட் .. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ மத்திய குழுவில் தலித்துகளை இணைத்துக்கொள்ளவேண்டுமென்ற கருத்தை டாக்டர் வசந்திதேவி அவர்கள் தொடர்ந்து சொல்லி வருக்கிறார்கள்.. பொலிட்பீரோ.. இடது கம்யூனிஸ்ட் கட்சியின் உச்சபட்ச அதிகாரபீடம் .. அதில் இத்தனை ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் இடம் பெறவில்லையா என கேட்காதீர்.. .. விடுதலை இந்தியாவிற்கு பிறகு இடதுசாரிகள்..மிகப்பெரிய பலமாக நாடாளுமன்றத்தில் இருந்த போதுகூட அதில் பிராமணர்கள் தான் அதிகம் இருந்தார்கள்.. கேரளத்திலும் வங்கத்திலும் கம்யூனிஸத்தை நிலைநாட்டியவர்களில் பெரும்பாலானோர் அவர்கள்தான் நம்பூதிரிகளின் கையில்தான் இருந்தது.. வங்கத்திலும் டாங்கே தொடங்கி பிரகாஷ்காரத் வரை... அவர்களின் கை ஓங்கிதான் இருந்தது இப்போதுமிருக்கிறது.. பொலிட்பீரோவில் 95% விழுக்காடு பார்பனர்கள் என்றால் ஆச்சர்யமாக இல்லை.. இது யதேச்சையாக நடந்ததாக நாம் நம்புவோம்.. ஏனெனில் பொதுவுடைமை சித்தாந்த்தை நேசிக்கிற ஆராதிக்கிற நம்மால் வேறு எப்படி உட்கொள்ளமுடியும்.. .. தகுதியுள்ளவர்களுக்கே வாய்ப்புக்கள் அல்லது பதவிகள் என்ற நிலைபாடு கட்சியின் பிரதான கொள்கையெனில் ஏன் இதுவரை தகுதியான தலித் தலைவர்களை உருவாக்கவில்லையென்ற கேள்வி கூடவே எழும்.. தலித்களுக்காக போராடுகிற கட்சி என அடையாளபடுத்திக் கொள்கிற கட்சியின் நிலை இதுதான்.. டாக்டர். பேராசிரியை வசந்தி தேவி அவர்களின் கோரிக்கை பரிசிலிக்கபடவேண்டும்.. நிறைய பொறுப்புக்களை தலித் பிரதிநிதிகள் வகித்தாலும் நாடு விடுதலையடைந்து இத்தனை ஆண்டுகளாகியும்... உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியாக, குடியரசு தலைவராக நாடாளுமன்ற சபாநாயகராக கூட வரமுடிந்த நிலையில் பொலீட்பீரோவில் இடமளிக்கப்படவில்லையென்பது உண்மையில் வருந்ததக்க விடயம்.. .. இந்திய அரசியல் வரலாற்றில் நிறைய தவறுக்களுக்கு துணை போன விடயங்களை எல்லாம் ஆராய்ந்தால் (குறிப்பாக மூன்றாம் அணி போன்ற) பாசிசத்திற்கு துணை போகிற செயலைதான் அல்லது வழித்தடம் அமைத்து தந்த நிகழ்வுகள் தான் அதிகம் காணமுடியும்.. இதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு அளப்பெரியது.. இவர்களின் பலம் தொழிலாளர் நலன் பேசுவதும்.. தலித் மக்களுக்காக போராடுவதும் என்ற கட்டமைப்பை தவிர சரிக்குமான கம்யூனிஸம் இவர்களிடத்தில் இல்லை என்பதுதான் நிஜம்.. .. #The_absence_of_Communism… .. லால்சலாம்.. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment