Tuesday, October 16, 2018
நேற்றை விமர்சனம் செய்யாமல், அலசி ஆராயாமல்
#நல்லநாளை இல்லை..
..
அப்துல்கலாம்..
கனவுகாண் என்றார்..
கனவு மட்டுமே செயலாகாது.. கலாம் என்கிற பிம்பம் எதிர்கால சந்ததியை சோம்பேறிகளாக்கிவிடும்..
மரம் நடு என்றார்..
வனம்சார்ந்த குடிமக்களிடம் ஒருபழமொழிஉண்டு
உன்னால் மரத்தை காக்கமுடியுமெனில்.. மரம் நடு
அதாவது குறிப்பிட்டகாலம் வரை செடியை நன்கு பராமரிக்கவேண்டும் ஆடுமாடுகளிடமிருந்து ..
இயற்கை அழிவிலிருந்து.. சரியான உரம்தந்து வளர்க்க முடியுமெனில் மரம் நடு..இதுவரை கோடிக்கணக்கான மரங்கள் நட்டும் பராமரிக்க முடியாமல் போனதுதான் மிச்சம்..
..
கலாம் என்கிற பிம்பம்..
இந்திய ஜனநாயகத்தில் இந்துத்துவா கொள்கைகளின் சார்பில், குறிப்பாக ஆர்எஸ்எஸ் ஸின் தத்துவங்களை மேலெடுக்கிற.. அவர்களின் கோட்பாட்டோடு ..ஒத்துபோகிற..
உயர்தட்டுவர்க்கத்தினரின் கவ்விசூழலில் உரையாற்றுகிற, நாட்டில் நடக்கிற அக்கிர அநியாங்களை கண்டும் காணாமல் போகிற..
குறைந்தபட்ச எதிர்ப்பை கூட பதிவுசெய்யாத. ..
இந்துத்துவாவின் கைப்பாவையாக இருக்க சொல்கிற ..மாயபிம்பம் இதுகாலபோக்கில் தகர்ந்துபோகும்..
..
கலாம் என்னும் தனிமனித ஒழுக்கமும் அதிகம் ஆசைப்படாத நேர்மை, இடைவிடா உழைப்பும் ..அடையவேண்டிய லட்சியத்தை நோக்கிய பயணத்தின் தடைகளையெல்லாம் படிகளாகமாற்றி வெற்றிநடை போட உத்வேகமாய் செயலாற்றும் திறனும் எல்லோராலும் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று..
மற்றபடி..
#கலைந்துபோகும்_கனவு...
..
மன்சூர்.பக்கம்..
..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment