Monday, October 8, 2018
கேடுகெட்ட...
வடஇந்திய தொலைக்காட்சிகள் எடப்பாடி உடனான மோடியின் சந்திப்பிற்கு பிறகு அதிமுக பாஜக கூட்டணி உருவாகுவதாக சொல்கிறது
இரண்டு தினங்கள் முன்பு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் தொண்டர்கள் கூட்டம் இல்லை. ஆனால் தினகரன் கூட்டும் கூட்டத்திற்கு அதிகமாக தொண்டர்கள் வருகிறார்கள் என்று கூறியிருக்கிறார்
அதிமுக தொண்டர்கள் தினகரன் பின்னால் நிற்பதாக பொன்னர் சொல்லியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி கவர்னரை சந்தித்து நாங்க பாஜக வுக்கு விசுவாசம் மிக்க அளவில் பங்களிப்பு செய்வோம் என்று கூறியுள்ளார்..
உடனே பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கபட்டதாக செய்திகள் வருகின்றன இதனைத் தொடர்ந்து தான் இன்று அவர் அவசரமாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்..
..
முழுவதுமாக தங்களை அடிமைசாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு வருகிறார் எதைச் சொன்னாலும் கேட்போம் என்கிற ரீதியில் செயல்படுகிறார் .. எம்ஜிஆர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் பாசிசத்தோடு கரம் கோர்த்தாலும் அதற்கொரு எல்லை வைத்து செயல்பட்டார்கள் காரணம் பாஜகவின் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் தமிழர்களால் வெறுக்கபடுவதோடு .. தமிழினத்திற்கு எதிரானதென்பதை உணர்ந்திருந்தார்கள் .. மீதமுள்ள ஆட்சி காலத்தை தக்கவைத்துக்கொள்ள எந்த இழிவையும் சுமப்பேன் எந்த இழிசெயலையும் செய்வேனென்று செயல்படுகிறார்..
அதிகாரத்திலிருந்து இறங்கிய அடுத்த நொடியே அவர் மீது வழக்குகள் பாயும் அவரது சொந்தங்கள் மீதும் நிறைய குற்றசாட்டுகள் வெளிப்படையாகவே பேசபடுவதும் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் திமுகவால் தொடரபட்டிருப்பதும் எடப்பாடியை எதற்கும் தலையாட்ட வைக்கிறது ..
..
எத்தனை வீயூகம் வகுத்தாலும் இந்தமுறை மரண அடி விழும் மக்கள் கோபம் மோடி அரசின் மீது மட்டுமல்ல இந்த எதற்கும் உதவாத எடப்பாடி மீதும்தான் .. அதிமுகவில் ஒரு பகுதியினர் தினகரனை பின்துணைக்கலாம் .. இடைத்தேர்தலைப்போல ஒரு தொகுதியல்ல பொதுத்தேர்தலில் தினகரன் கூட செயல்படமுடியாது .. அதிமுகவின் சரிவு பாஜகவிற்கு பலனளிக்காது மாறாக இங்கே கொஞ்சம் மெச்சப்பட துணைபோகும் .. இதுவரை தமிழகம் கண்ட மோசமான ஆட்சி இதுதான் ..
..
கவர்ச்சியை நிழலை நம்பியதன் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள்.. அறிவின் சுடரை ஏந்த மறுத்ததால் இருட்டில் நிற்கிறார்கள் ..
இனியும் நம்பவோ ஏமாறவே தயாரில்லை தெளிவான பாதையை தேர்வு செய்து யாரால் எப்படி எங்ஙனம் செய்துமுடிக்குமென ஆய்ந்து அவனிடமே விடல் சரியென எண்ணி காத்திருக்கிறார்கள்..
..
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment