Friday, October 19, 2018

சபரிமலையில் பெண்கள்

சபரியும் ஆர்எஸ்எஸும் .. .. சபரிமலை அய்யப்பனை பெண்கள் தரிசிக்க அனுமதிக்கவேண்டுமென வழக்குபோட்டது ஆர்எஸ்எஸ்.. தீர்ப்பு வந்ததும் அதை நடைமுறைபடுத்த கேரள அரசு முயல்கிற போது .. தடுத்து ஒருவித கலவரத்தை செய்து பதட்டத்தை உருவாக்கிறது .. பாத்திமா என்ற முஸ்லீம் பெண்ணை அனுப்பி அவர் ஏற்கனவே மதம் மாறியவர் பெயரை மாற்ற தேவையில்லையென்றவர் இருமுடியோடு பயணிக்க வைத்ததின் பின் பாஜக தலைவர் சுரேந்திரனை இரண்டுமுறை சந்தித்து ஆலோசித்த பிறகு பயணபட்டிருக்கிறார்.. மன்னர் குடும்பம் கோவிலை சாத்த சொல்கிறது .. தலைமை நம்பூதிரி பூஜை செய்ய மறுக்கிறார் .. தேவசம்போர்ட் திருப்பி அனுப்புங்களென்கிறது .. நாடகம் திட்டமிட்டபடி நடக்கிறது கேரள கம்யூனிஸ ஆட்சியை கலைக்க வேண்டும் மிகப்பெரிய கலநரத்தை நடத்தவேண்டுமென்ற பாஜகவின் கனவை தோழர் பிரணாய் மிக சரியாக கணித்து தடுத்து நிறுத்தியிருக்கிறார் .. ராஜஸ்தானிலிருந்து குண்டர்கள் ஆர்எஸ்எஸ் இருக்கியிருக்கிறது நிலக்கல்லில் கைது செய்யபட்டவர்கள் ஆர்எஸ்எஸில் பயிற்சி பெற்றவர்கள் என்ற செய்திகள் வருகின்றன.. .. சில கேள்விகள்.. மன்னராட்சி ஒழித்து இத்தனை காலமாகியும் ஏன் இன்னும் சுவாமி நகைகள் அவர்கள் பாதுகாப்பில் இருக்கவேண்டும்,.. இங்கே முன்னாள் ஜனாதிபதிக்கே அதிகாரமில்லை என்கிறபோது முன்னாள் மன்னருக்கு ஏன் அதிகாரம் தரவேண்டும் .உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறுகிற .. செயல்படுத்த தடுக்கிறவர்கள் மீது ஏன் வழக்குகள் பதவி செய்யபட்டு கைது நடவடிக்கை இல்லை .. காந்தியை கொன்ற கோட்சே கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்தி கொண்டு மதகலவரத்தை தூண்ட நினைத்தார்களே அதே வழியை பயன்படுத்தி பாத்திமா என்ற பெயரை முன்னிலைபடுத்துவது ஏனோ.., அதை ஊடகங்கள் ஏன் எடுத்து சொல்லவில்லை.. .. நாத்திகனுக்கு இங்கென்ன வேலை என்கிறார்கள் தோழர் பிரணாய் மாநில முதல்வர் அவர் உச்சநீதிமன்ற தீர்ப்பை நடப்பிலாக்க வேண்டிய அவரது கடமை அவருக்கு நம்பிக்கையில்லை என்பதால் தலையிட கூடாதென்பதை எ ஏற்கமுடியும்,.. பண்பாடு முக்கியமென்கிறார் தமிழிசை அடுக்குமொழியில் .. பெண்பாடு பரவாயில்லையாம் எது பண்பாடு எது கலாச்சாரம் எது வழிபாடு என்று தெரியவில்லை.. மத நம்பிக்கையில் அரசு ஏன் தலையிட வேண்டும் ..நல்ல கேள்வி.. முத்தலாக் சட்டத்தில் அவசர சட்டம் கொண்டுவந்து இஸ்லாமிய பெண்களை காப்பாற்றியதாக சொன்ன பாஜக மோடியின் அரசு .. இதோ பெண்கள் சபரி ஐயப்பனை ஒரு எட்டுபார்ப்பதற்கு ..அய்யகோ எங்கள் கலாச்சாரம் என்னாவது கட்டுகாத்த ஒழுக்கம் என்னாவது .. எங்கள் மத நம்பிக்கை என்னாவதென்கிறார்கள் .. பிற மத நம்பிக்கையில் பெண்களின் உரிமை பேசலாம் ஆனால் இந்துமதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லையா.. ஆணும் பெண்ணும் சரிக்குநிகரென்பதை தீட்டு தடுத்திடுமா.. தீட்டு இயல்பான விடயமென்பதை எப்போது உணர்வோம்.. தீட்டான பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்று அருள் சொன்ன காஞ்சி சரஸ்வதிசுவாமிகளை கூற்றையே அவர் சாந்த சமூகமே குப்பையில் போட்டது .. சொத்தில் பங்கு கொடுத்தால் இந்து குடும்பம் சிதறிவிடுமென்றார் .. வேலைக்கு செல்லும் பெண்களை விபச்சாரி என்று தெய்வத்தின் குரலாய் சொன்னார் காஞ்சி பெரியவர்.. அந்த பெரியமனுஷனை புறந்தள்ளி இந்திய மங்கைகள் உயர்பதவிகள் கூட கோலோச்சுகிறார்கள் .. பெண்களை ஐயப்பன் தரிசனத்திற்கு இப்போது தடுக்கலாம் ஆனால் நீண்டகாலம் தடுத்துக்கொண்டே இருக்கமுடியாது .. இயல்பாக மாற்றம் நிகழ்ந்தே தீரும்.. .. எல்லா மதங்களுமே பெண்களை கீழடிமைத்தனத்திலேயே வைத்திருக்கிறது ஆச்சாரம், விதி,ஷரியத்,கட்டளை.. சட்டமென்று சொல்லி ஒருவித ஏற்றதாழ்வோடே நடத்துகிறது .. மதம் கடந்த மனிதமே பெண்கள் சகஜீவியாக சமமாக மதித்திடல் உரிமைகளை வழங்கிட முனைகிறது.. மதம் தவிர்த்து மனிதம் சமைப்போம் .. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment