Sunday, October 28, 2018
சமுதாயம்..
இஸ்லாமிய சமூகத்திற்கு சாபமா என கேட்டார்
சாபமல்ல அறியாமை என்றேன்..
ஜாக் தவ்ஹீத் அமைப்பு தொடங்கபட்டிருக்கிறது பழைய தவ்ஹீத் கூட்டாளிகள் மீண்டும் இணைகிறார்கள் ஆனால் பிரிந்ததற்கான காரணம் அறியாமலேயே..
..
தானெனும் அகந்தையும் .. தானே சிறந்தவனென்ற இருமாப்பும் தனக்கே எல்லாம் தெரியும் தான் சொல்வதே சிறந்தபாதை .. நேர்வழியை காட்டுவேன் என்ற நிலைபாட்டை ஏன் என கேட்காமலேயே சிந்திந்துணராமலேயே இடையனின் கம்பிற்கு கட்டுபடும் ஆட்டுமந்தைப்போல ஒரு கூட்டம் பின்னால் சென்றதே ஒரு சமூகத்தின் சீர்கேட்டிற்கு வழிவகுத்திருக்கிறது .. அறிவுடை சமூகமென நம்பபட்ட தமிழக முஸ்லிம்கள் சரியான தலைமையை கூட தேர்வு செய்ய முடியாத நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள் .. எதையும் சட்டென்று நம்பிவிடும் தமிழனின் இயல்பு ஒருகாரணமாக இருக்கலாம் அதிகார போட்டி
கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களுக்கு பிறகு ஒருவித தடுமாற்றமும் தன்னை உயர்வாக எண்ணிக்கொண்டு சமமாக மதிக்காத செயலும் பன்மொழிப்புலவரை பிரித்தது .. தொடர்ந்து அரசியல் கட்சிகளை சார்ந்து மாறி மாறி சவாரி செய்ததும் IUML வீழ்ச்சியில் முடிந்தது .. இந்தியா முழுக்க வியாபத்திருந்த இயக்கம் .. விடுதலை போராட்டத்தில் களம்கண்ட முதல் இயக்கம் சுருங்கி தென்னகத்தில் ஒரு குறிப்பிட்ட நிலபரப்பிற்குள் ஒடுங்கிப்போனது ..
..
தமிழகத்தின் நிலை மிக மோசம் சரியான தலைமையின்றி தடுமாறிய போது ஏகத்துவம் பேசி இளைஞர்களை மூளைச்சலவை செய்து தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பி.ஜே .. அதிகார பகிர்வை தரமறுத்ததும் தன்னை விட யாரும் மேல வரகூடாதென்ற நினைப்பும் தன் கட்டுக்குள் இருக்கவேண்டுமென்ற நிலைபாடு நிறைய இயக்கங்களாக உருவெடுத்தது .. சத்திய மார்க்கம் பேசி திரிந்தவர் தன்னை மகா யோக்கியன் என்று நம்பவைத்தது ..சுயரூபம் வெளிப்பட்டு மக்கள் அரங்கில் பெண்பித்தனாக காமகொடூரனாக அசிங்கபட்டு.. அடுத்தவரை அசிங்கபடுத்த எண்ணி தானே அவமானபட்டு நின்றதும் .. 2000 கோடி சொத்துக்களை விட்டு செல்ல மனமின்றி தனக்கு வேண்டியவர்களை நியமித்து கடைசியில் எதுவும் நடக்காமல் போனது .. முஸ்லிம் விழுக்காட்டை விட அதிக எண்ணிக்கையில் இயக்கங்களாகி இருக்கிறது
..
எந்த இஸ்லாமிய இயக்கமும் நீண்டநாள்கள் நீடித்து நிலைக்க முடியவில்லை அதிகார பகிர்வு ..அடிக்கிற கொள்ளையில் பங்கு என தகராறாய் கடைசியில் தலைமை ஆசை தனிவலையை நோக்கி நகர்த்துகிறது..
Trade mark முத்திரையாகி பலகாலமாகிவிட்டது 20% வரை கமிஷன் என்பதெல்லாம் வேறலெவல் .. நல்ல வியாபாரமாக மாறி தனித்தனி வலை (கணக்கு) என்று சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது .. ஜாக் ..மீண்டும் உடையும் ..காரணம் பங்கு(பதவி புகழ் பணம்) எவ்வளவென்பதில் கலகம் வரதானே செய்யும் ..
..
தவ்ஹீத்v/s சுன்னத் ஜமாத் பிரச்சனை காலத்திற்கும் தீராது.. ஒற்றுமையென்பது சுன்னத் ஜமாத்தை உள்ளடக்காமல் சாத்தியமே இல்லை .. தவ்ஹீத் ஒருங்கிணைப்பு என்பது பங்குபிரிப்பதில் சமாதானம் என்றே கொள்ளவேண்டுமே தவிர ..சமுதாய ஒருங்கிணைப்பாக அல்ல..
கடைசி வரை முஸ்லிம் தனிப்பட்டே கிடப்பான் ..
தலைமையை உருவாக்க தெரியாமல் .. அல்லது நல்ல நேர்மையான தலைவர் கிடைக்காமல் ஒரு சமுதாயம் சீரழிகிறது ..
அவரவருக்கு அவரவர் வழி...
..
ஆலஞ்சியார்
(புகைப்படம் P.c. Abu Haashima..)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment