Wednesday, October 24, 2018
சிபிஐ.. பாசிசத்தின் பிடியில்
அலோக் வர்மாவை மாற்றியது ஏன் காங்கிரஸ்
ரஃபேல் ஊழலை விசாரிக்க தொடங்கியதே காரணமென சாடல்..
விடுதலை இந்தியாவில் முதன்முறையாக மத்திய புலனாய்வு துறையில் அரசு நேரடியாகவே தலையிடுகிறது சிபிஐ இயக்குனரை கட்டாய விடுப்பில் அனுப்பி இணை இயக்குனர் நாகேஸ்வராவை பொறுப்பில் அமர்த்தியது சர்ச்சையாக வெடித்திருக்கிறது .. அலேக் வர்மா கட்டாய விடுப்பை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்..
..
மோடி ஆட்சிக்கு வந்தவுடன் மக்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் யுத்தத்தை தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறது அவர்கள் மீது அவர்கள் தாங்கும் சக்தியை மீறிய தாக்குதல்கள் விலையேற்றம் என்ற பெயரில் நடக்கிறது .. கல்வியில் அடித்தட்டு மக்களின் எண்ணங்களில் ஆசிட் ஊற்றியதைப் போல உயர்கல்வி இனி மேட்டிகுடி மக்களுக்கு மட்டுமே என்ற அறிவிக்காத குறையாக மத்தியதர குடும்பங்களின் கனவு நசுக்கபடுகிறது ஒவ்வொரு குடிமகனும் இந்த அரசின் மீது தீராத கோபத்தில் இருக்கிறான் ..ஒரு சில கும்பல்களின் அட்டூழியம் தாங்கமுடியவில்லை 3% விழுக்காடு கூட இல்லாதவர்கள் உயர்பதவி மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் இடைநிலை பணியை கூட ஆக்ரமித்திருக்கிறார்கள் .. நீதி இங்கே மூர்ச்சையாகி கிடக்கிறது .. வலுத்தவனுக்கே நீதி என்ற நிலையையும் தாண்டி நூல் மட்டுமே வாழ தகுதி அவாளுக்கு மட்டுமே விரைந்த அவர்கள் விரும்புகிற நீதி கிடைக்குமென்கிற நிலை .. மதவெறியை தூண்டுவதும் சாதி மோதலை உருவாக்குவதும் .. மக்கள் அமைதியின்றி வாழும் சூழலை உருவாக்கி போதுமடா சாமி என்கிற நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது
ஊழல் எல்லாம் இழப்பாக கருத வேன்டும் ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இழப்பு கூட ஊழலென ஊர்பேச செய்யும் அநியாயம் நடக்கும் .. பெண்கள் பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி கொன்று போட்டாலும் பாரத்மாதாக்கி ஜே போட்டால் தேசபக்தனாய் வலம் வரலாம் யாரும் எதுவும் கேட்கமுடியாது.. அயோக்கியர்கள் மதவெறிபிடித்த கேடுகெட்ட ஜென்மங்கள் தேசபக்தன் வேசம்கட்டி உலாவருகிறார்கள்..
ஒவ்வொன்றாய் மாற்றி மத சாயம் மநுநீதி ஒரே கோட்பாடென்று சொல்லி திரிந்தவர்கள் அடித்த கொள்ளைகள் நாடறிய தொடங்கியதும் .. புலனாய்வு துறையையே கையிலெடுக்கிறார்கள்..
..
நாடே பாசிச கயமையிடம் சிக்கி சீரழிகிறது..
இனி இவர்களை துரத்துவதை தவிர வேறுவழியில்லை ..இந்த மண்ணின் மாண்பு காக்கபடவேண்டும் .. சாதி மத வெறிகொண்ட கேடுகெட்டவர்களின் கையிலிருந்து நாடு மீட்கபடவேண்டும் .. இல்லையேல் சர்வாதிகார நாடாய் போகும் .. எடுத்தேன் கவிழ்த்தேன் என்றாகும்..
மிச்சமுள்ள இயற்கை செல்வங்களும் கொள்ளைபோகும் .. இடுப்பில் துண்டு கட்டுகிற இழிநிலை வரும்,..
எச்சரிக்கை .. பாசிசத்தை வேரறுப்போம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment