Tuesday, October 23, 2018
அநீதி..
வைரமுத்து காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரர்
..
பிரபலங்கள் ஆளுமைகள் மதம் மார்க்கம் பேசுவோர் .. ஜெகத்குரு.. என வரிசைகள் நீளும்
காமம் தனிமனிதனை அவன் அதுவரை போற்றி காப்பாற்றி வந்த நன்னடத்தையை கேள்விகுறியாக்கும்.. தனிமனித ஒழுக்கம் இங்கே யாருக்குமில்லை வாய்ப்பு கிட்டும்வரை யோக்கியனாய் வலம் வரலாம் ..
ஆனால் தொடர் குற்றசாட்டும் திரும்ப திரும்ப மறுப்பதும் சம்பந்தபட்டவர்களின் முகத்தை தோலுரிக்கிறது.. தனிதனியே அயோக்கியன்தான் என்ற சொல் பொருந்துகிறது..
..
வைரமுத்துவை வளைக்கிற கூட்டம் அவரை போல குற்றம் சாட்டபட்ட பிராமண சங்க தலைவர் நாராயணனையைப்பற்றி பேசுவதில்லை ..இவ்வளவிற்கும் சின்மயியை .. அய்யங்கார் தேவடியா என்று வெளிப்படையாக பேசிய ஆடியோ ஆதாரம் இருந்தும்.. எந்த பெண்ணீய அமைப்பும் எதிர்க்கவில்லை குறைந்தபட்சம் .. metoo க்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் யாருமே பேசவில்லை..
அதேபோல அன்று காஞ்சி ஜெயேந்திரருக்கு எதிரான குற்றம் சாட்டிய அனுராதாரமணனை .. சோ உள்ளிட்ட பார்பன பத்திரிக்கையாளர்கள் கூட முற்போக்கு சக்திகளின் தூண்டுதலில் காஞ்சி மடத்தை கேவலபடுத்த பயன்படுகிறாரெனசொன்னார்கள்.. அவருக்கு மிரட்டல்கள் வந்தன .. யாருமே அனுராதாவின் பேச்சை கேட்கவில்லை இவ்வளவிற்கும் அவள் காலங்தாழ்த்தாமல் உடனே வெளியே சொன்னார் .. தொடர்ந்து அவரது உரிமைகள் பறிக்கபட்டன பத்திரிக்கைகள் அவரது எழுத்துகளை வேண்டாமென தள்ளிவைத்தது ..
அவருக்காக பேசவே அஞ்சினார்கள்
இன்றைக்கு சின்மயிக்காக பேச முன்வந்திருப்பது ஒருவகையில் நல்லமுன்னேற்றம் .. ஆனால் சம்பந்தபட்டவர் மீதான குற்றசாட்டிற்கான ஆதாரங்கள் இதுவரை தராதது கேள்வியாகிறது..
..
இருபாலாரும் விரும்பியதென்கயில் அது கள்ளஉறவென்றாலும் தகாதென்றாலும் சட்டம் ஏற்கிறது .. ஆனால் விரும்பும்வரை அமைதியாக இருந்துவிட்டு பிறகு குற்றம்சாட்டுவதை ஏற்கமுடியாது இப்போது அமைச்சர் ஜெயகுமார் விடயத்தில் கூட பெண்ணின் தாயார் சம்பந்தத்தோடு நடந்ததாக இருவரின் பேச்சில் நாம் உணரலாம் ஆனால் அதை மறுப்பதும் பிறகு மன்னிப்பு கேட்பதும் இப்போது பேஷனாகிவிட்டதால் அமைச்சரோ முதல்வரோ பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. தினகரன் தரப்பு ஒருவகை மிரட்டல் விடுவதாகவே தெரிகிறது.. கொங்கு மண்டல ஆடியோ விரைவில் வெளிவரலாமென்கிற செய்தி ஒருவித நிர்பந்தத்தை எடப்பாடிக்கு தருவதற்காகவே என்று தெரிகிறது..
..
வைரமுத்து, காஞ்சி ஜெயேந்திரன், பி.ஜெய்னூலாபுதீன் .. நாராயணன் ஜெயகுமார்.. என பட்டியல் நீள்கிறது.. பொதுவெளியில் யோக்கியன் சாது நேர்மையானவன் வேசம்கட்டுபவர்களின் லீலைகள் .. அவர்களின் தனிப்பட்ட விடயமென்றாலும் பாதிப்பிற்குள்ளாகிறவர்களின் நிலை .. கடைசியில் வேசிபட்டம் .. எதிர்க்கிறவர்கள் மிரட்டபடுவதும், அல்லது பணம் அதிகாரம் கொண்டு மறைப்பதும் அநீதியானது..
..
பெண்கள் மோக பொருளாக பார்க்கபடுகிற நிலை மாறும்வரை அநீதியே இங்கே பேசுபொருளாகும்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment