Wednesday, October 10, 2018

மோடி... பொய்கள்

ராஃபேல் ஒப்பந்தம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட்ருக்கிறது ராணுவ ரகசியம் காக்கப்பட்ட வேண்டியுள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர்கள் வாதாடியும் சீல்வைக்கப்பட்ட கவரில் நடந்த பேச்சு வார்த்தை மற்றும் ராஃபேல் விமானங்கள் வாங்க கோடிடப்பட்ட தொகை ஆகியவை குறித்து தெளிவான அறிக்கை தரும் படி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. இதனால் மத்திய அரசு கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகலாம்.. .. நிதின் கட்கரி நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்ற நம்பிக்கையில் தான் பொய்யான வாக்குறுதிகளை தந்தோம் என்கிறார் .. சிஏஐி அறிக்கையெல்லாம் அரசியலாக்க வேண்டாம் என ஏற்கனவே நிதியமைச்சர் அருண்ஜெட்லி திருவாய் மலர்ந்தார் .. ஒன்றுமட்டும் தெளிவாக தெரிகிறது .. இவர்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது சிஏஜி அறிக்கையை மட்டுமே,நம்பி மிகப்பெரிய பொய்யை (2ஜி) சொல்லி நாடாளுமன்றத்தை முடக்கி காங்கிரஸ் என்றாலே கரப்ஷன் என்று கதைத்தவர்கள் ...ஆட்சிமாற்றம் நிகழ்ந்து நான்கரை ஆண்டுகளாகியும் இந்தியாவை முன்னேற்ற பாதையில் செலுத்தவில்லை .. பொருளாதாரம் வீழிச்சியை சரிசெய்ய தெரியாமல் மெல்ல உண்மையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் .. .. ரஃபேல் ஒப்பந்தம் இந்திய பிரதமரையே திருடனாக்கி நம்மை தலைகுனிய செய்தது இன்றைக்கு உச்சநீதிமன்றம் அறிக்கையை கேட்டதும் ராணுவ ரகசியமென நழுவபார்த்தது அரசு மக்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்தும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது .. நிதி மற்றும் பாதுகாப்பு துறைக்கு இதுவரை இல்லாதவகையில் மிக பலவீனமான அமைச்சர்கள்.. வார்த்தை ஜாலம் மட்டுமே அரசை காப்பாற்றுமென நம்புகிற முதன்மை அமைச்சரால் யாருக்கும் பயனில்லை இந்த நான்கரையாண்டு ஆட்சியில் பார்பனர்களுக்கு மட்டுமே சட்ட பாதுகாப்பும் உயர்பதவிகளும் கிடைத்திருக்கிறது .. இங்கே இந்தியர்களென அவர்கள் மட்டுமே முன்னிறுத்தபடுகிறார்கள்.. இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு இங்கே எல்லாம் மறுக்கபடுகிறது.. இந்நிலை மாறவேண்டும் .. யாரை எங்கே வைப்பது என்று தெரியாமல் போனதால் .. இன்று அவதிபடுகிறோம் .. சிறந்த நிர்வாகிகளை வேண்டாமென வைத்ததின் பலன் நாடு மிகப்பெரிய சீரழிவை சந்திக்கிறது இப்போது கூட உண்மையை பேசுகிறவர்களை ஒடுக்குகின்ற பாசிசம் உக்ரமாக காட்சியளிக்கிறது .. சட்டம் கைது சிறை என மிரட்டல்கள் ஜனநாயகம் பேராபத்தில் இனியும் பொறுப்பதென்பது நாட்டை குட்டிச்சுவராக்கிய கதையாகி போகும்.. இவர்கள் பொய்யர்கள் விரட்டபடவேண்டியவர்கள்.. .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment