Monday, October 15, 2018
வைரமுத்து
ஆண்டாளை பழித்த கவிஞரின் முகத்திரையை ஆண்டாளே கிழிக்கிறாள்.. சிறுவயதில் நானும் பாலியல் தொந்தரவை சந்தித்திருக்கிறேன் சின்மயிக்காக போராடுவேன் தமிழிசை
கோவிலுக்குள் ,
குழந்தையை பாலியல் வன்செயல் செய்தப்போ, தேவநாதன் குருக்கள் சில்மிஷம் செய்தப்போ, சங்கர் ராமனை கொலை செஞ்சப்போ, சிலைகளை திருடினப்போ எல்லாம் சம்பந்தபட்ட தெய்வங்கள்..? என்ன செய்தன .. சின்மயி குற்றம் சுமத்திய பார்பனர்கள் மீது ஏன் இதுவரை யாரும் விவாதிக்கவில்லை அதிலும் பார்பன சங்கத்தலைவர் நாராயணன் மீதான குற்றசாட்டு குறித்து .. திடீர் பெண்ணீய போராளி தமிழிசை குரல்கொடுக்கவில்லையே
..
சின்மயி உடைய கடந்த கால கசப்பான அனுபவங்களை நமக்கு வருத்தத்தை தருகிறது கணவனை பிரிந்த பெண்ணின் வாழ்க்கை போராட்டம் அவருக்கு தன் இசை ஆளுமைகளால் தரப்பட்ட பாலியல் தொந்தரவுகள் மறுக்கபட்ட வாய்ப்புகள் .. தன் வளர்ச்சிக்கான தடைகள் இதைப் பற்றியெல்லாம் பேசியவர் தன் இளமைகால வறுமையும் அதற்காக அவர் சந்தித்த கொடுமைகளையும் பட்டியலிடுகிறார் அதில் வைரமுத்துவும் ஒருவர் .. ஆனால் வைரமுத்துவை மட்டுமே target இலக்காகுவதின் பின்னில் பார்பன சமூகத்தின் கோபமும் இயலாமையுமே தெரிகிறதே தவிர வேறொன்றுமில்லை..
..
14 வருட தாமதம் என்பது மிகப்பெரிய இடைவெளி வைரமுத்து திமுகவிற்கு நெருக்கமானவர் அதிலும் கலைஞர் பிரதமரை சந்திப்பதை கூட தவிர்த்து வைரமுத்து விழாவிற்கு வருகிறாரென்றால் எவ்வளவு பெரிய ஆள் என்கிறார் .. ஜெயலலிதா என்ற பார்பனர் கருணாநிதியையே நள்ளிரவில் கைதுசெய்ய முடிந்ததே.. அதே ஜெயலலிதாவிடம் முறையிட்டிருக்கலாமே.. நல்ல சந்தர்ப்பமாக அதை பயன்படுத்தியிருப்பாரே .. இதையெல்லாம் ஏன் செய்யவில்லையென்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. .. தாயை போல தாமும் புறக்கணிக்கபடும் சூழலில் தன் வெளியே வந்திருக்கிறார்..
..
இப்போது தனிநபர் பிரச்சனையை அரசியலுத்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள் ரேவதி கூட தன் இளமைகால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள போவதாக எம்ஜிஆர் ஆட்சியின் போது தரப்பட்ட அழுத்தங்கள் மிரட்டல்கள் குறித்து பேசபோவதாக சொல்கிறார்..வாய்ப்பு முன்னேற்றத்திற்காக எதையும் இழக்க தயாராகிறவர்கள் பின் புகழ் பணம் வந்த பிறகு அல்லது வாழ்வில் மெச்சபட்டநிலைக்கு வந்த பிறகு நடந்துவந்த பாதையில் விழுந்த சறுக்கல்களை .. அதற்கு தாமும் உடன்பட்டதை மறந்து குற்றம் சுமத்துவது சரியல்ல எல்லாதுறையிலும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் இப்போதும் தொடர்வது வேதனைக்குரியதுதான் .. அதை விரும்பதாவர்கள் உடனடி பதிலடி தந்தால் மட்டுமே இந்த சமூகம் நம்பும் ..
ஆரிய உதடுகள் உன்னது
திராவிட உதடுகள் என்னது.. வைரமுத்து பாடல் வரிகள்
..
தமிழிசை சந்தித்த தொந்தரவுகளை இனி சொல்லலாம்.. கேட்போம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment