Thursday, October 25, 2018

இடைத்தேர்தல் வரட்டும்

ஜனநாயக நாட்சில் 20 தொகுதிகள் காலியாக இருக்கிறதென்பது ஒருவகை அநீதி..மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருப்பது அந்தந்த தொகுதிக்கு ஆற்றவேண்டிய பணிகள் கடமைகள் காலந்தாழ்த்துவது ஏற்புடையதல்ல.. நீதிமன்றங்கள் மக்கள் பிரத்தித்துவ வழக்குகளில் நீண்டகாலம் எடுத்துக்கொள்வது சரியான நடைமுறையல்ல .. சில வழக்குகளில் வெற்றிப் பெற்றது செல்லாதென்ற தீர்ப்பு ஐந்தாண்டு முடிந்து வந்த கேலிகூத்தெல்லாம் நடந்தது .. அதுவரை அவர் அனுபவித்து வந்த பதவி செல்லாது ஆனால் சட்டமன்ற உறுப்பினராக சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறார் என்றுதான் பொருள் அவர் வாங்கிய சம்பளத்தை திருப்பி பெறுவதாலேயே அவர் முன்னாள் உறுப்பினர் இல்லையென்று அழைப்பதாலேயே அவர் செயல்பட்டது இல்லையென்று ஆகிவிடாது.. காலதாமதமான நீதி அநீதி மட்டுமல்ல தகுதியில்லாதவர்கள் கொண்டாட பட காரணமாக அமைகிறது.. ஜனநாயகத்தில் முறைகேடுகள் நடைபெறும் போது நீதிமன்றம் காக்கும்.. மீட்டெடுத்து ஜனநாயக மாண்பா நிலைநாட்டும் என்ற நம்பிக்கை பொய்க்க தொடங்கியிருக்கிறது .. சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விதிமுறைகள் சபாநாயகருக்கான அதிகாரவரம்புகள் குறித்தும் உச்சபட்ச அதிகார அமைப்பான நீதிமன்ற தீர்ப்புகள் நிறைய வழிகாட்டியிருந்தும் மத்தியில் ஆள்வோரின் கண்ணசைவிற்காக காத்திருப்பதும் காலங்கடந்து நீதி கிடைப்பதும் ஜனநாயக நெறிகளின் குரல்வலை நெறிக்கபடுவதெற்கு சமம் .. குற்றவாளிக்கு சாதமாக நீதிமன்றம் தேர்தல் ஆணையமும் நடந்துகொண்ட விதம் நாடறியும் .. இதற்கு ஜெயலலிதா வழக்கும் விசாரணையும் தீர்ப்பும் குமாரசாமி கணக்கும் தேர்தலை நடத்தாமல் காத்திருந்ததும் நாடறிந்தது தான் இவையனைத்திற்கும் ஜெயலலிதா வழக்கின் இறுதி தீர்ப்பே சாட்சியம் வகிக்கும் .. காலதாமதம் தமிழகத்தை அழிவிற்கு இட்டுசென்றிருக்கிறது .. குற்றவாளியை கொண்டாட வைத்திருக்கிறது.. தமிழகத்திற்கு அநீதி இழைத்திருக்கிறது.. .. இருபது தொகுதிகளுக்கு உடனே தேர்தல் நடத்தபடவேண்டும் ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகள் செயலிழந்து கிடக்கின்றன ... தேர்தலை சந்திக்க ஆளும்தரப்பு அஞ்சுகிறது மக்கள் பணிகள் அதிகாரிகளின் அலட்சியத்தால் நிறைவேறாமல் கிடக்கிறது .. ஒரு மினி தேர்தலைப்போல 20 தொகுதி தேர்தல் நிறைய பணம் புழங்கும் மிரட்டல்கள் .. அதிகாரகளின் துணையோடு வாக்கு இயந்திர தில்லுமுல்லு நடக்கும் .. வாக்குசீட்டுமுறையை பின்பற்றி தேர்தலை சந்திக்க எதிர்கட்சிகள் அழுத்தம் தரவேண்டும் .. தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை திரும்ப வாக்குசீட்டுமுறையே சரியானதாக இருக்கும் .. நியாயமான தேர்தலை நடத்த முயற்சிக்கவேண்டும் ஆளும்கட்சி மீதான மக்களின் வெறுப்பு ..மானமுள்ள தமிழ்சமூகத்தின் அறசீற்றத்தின் வெளிப்பாடாய் தெரியும் .. திமுக தலைவர் தளபதி அவர்கள் தேர்தலை நடத்தவேண்டுமென்று கூறியிருக்கிறார் அதுதான் சரியான அணுகுமுறை மீண்டும் வழக்கு மேல்முறையீடென காலந்தாழ்த்துவது ஜனநாயகம் கேலிகூத்தாக்கும் செயல் .. .. அரசிற்கெதிராக வாக்களித்த பன்னீர் கோஷ்டியினர் பதவியில் தொடர்வதும் அவர்கள் மீது நடவடிக்கை இல்லையென்பதும் ஏனென்ற கேள்வி எழும் .. சபாநாயகரின் நடுநிலை நமக்கு விளங்கும்.. தினகரனின் அரசியல் வாழ்வு இந்த அரசு வீழ்வதில் இருக்கிறது இல்லையெனில் சசிகலாவை போல யாரென்று கேட்கும் நிலை வரலாம் எடப்பாடி பன்னீரின் கூட்டுகட்டை பாஜக இயக்குவதும் இனியொரு வாய்ப்பு கிடைக்காதென்பதால் பாஜக இவர்களை வைத்து களியாட்டாம் ஆடுவதும் இப்போதைக்கு தொடரும்,.. இடைதேர்தல் வந்தால் மட்டும் இருபதில் யார் வெல்கிறார்கள் என்பதை பொறுத்து ஆட்சிமாற்றம் இயற்கையாக நிகழ வாய்ப்பு இருக்கிறது அதற்கு திமுக முனைப்போடு கடுமையாக கண்விழித்து உழைக்கவேண்டும்.. .. நாடு நல்லதொரு முடிவை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறது .. வெல்க ஜனநாயகம் .. ஆலஞ்சியார்

No comments:

Post a Comment